Saturday, February 13, 2010

எண்ணங்களை மேம்படுத்துங்கள்! வாழ்க்கையை வெற்றி கொள்ளுங்கள்!

இன்று காலை,டொயோடா  கார் தயாரிப்பு நிறுவனம் சந்தித்து வரும் பிரச்சினைகளைக் குறித்து வெளியாகி இருந்த செய்திக் கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். அதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவுட்சோர்சிங் பற்றி திரு டோண்டு ராகவன் எழுதிய ஒரு பதிவில் என்னுடைய பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு, இரு வேறு பதிவர்கள் தங்களுடைய அரசியல் காழ்ப்புணர்வு, பதிவில் பேசப்பட்டிருந்த விஷயத்தை முழுக்க மறந்து விட்டு, விவாதங்களைத் திசைதிருப்புகிற மாதிரியாக எழுதியிருந்ததைப் படிக்கவும் நேர்ந்தது.

நேற்றுத் தான் மனிதவளம் என்ற  குறியீட்டில் Just Enough Anxiety என்ற தலைப்பில் திரு ராபர்ட் ரோசென் எழுதியிருந்த புத்தகத்தைப் பற்றிய எனது மதிப்பீட்டை, கொஞ்சம் மறுபடியும் திருத்தம் செய்து மீள் பதிவாக எழுதியிருந்தேன்.

சுய முன்னேற்றம், மனித வளம், எண்ணங்களை மேம்படுத்துதல், மேலாண்மை, நிர்வாகம், சந்தைப் படுத்துதல் முதலான எனக்குப் பிடித்தமான துறைகளில் படித்ததும் பிடித்ததுமான புத்தகங்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்ற எண்ணம்,  இந்த மாதிரி எதிர்மறையான கருத்துக்களைப் படித்த பிறகு, இன்னமும் வலுவானது.

எசைப்பாட்டு என்ற அளவில் அவர்கள் தொனியிலேயே நிச்சயமாக இந்தப் பதிவுகளைத் தொடரப்போவதில்லை என்பதோடு, இந்தப் பக்கங்கள் புத்தகங்களுக்காக மட்டும், வாசித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே என்ற உறுதியை இங்கே பதிவு செய்கிறேன்.

டொயோடா வே என்ற புத்தத்தை  என் சேகரத்தில் தேடிக் கொண்டிருந்தபோது, பதினேழு வருடங்களுக்கு முனனால் வாங்கிய "எண்ணங்களை மேம்படுத்துங்கள்" என்ற புத்தகம் கையில் கிடைத்தது. டாக்டர் மரியான் ரூடி காப்மேயர் எழுதிய Thoughts to build on புத்தகத்தின் தமிழ் வடிவம் 
இது.

திரு பி சி கணேசனின் சரளமான மொழிபெயர்ப்பில் கண்ணதாசன் பதிப்பக வெளியீடாக வெளி வந்தது. நீண்ட நாட்களாகிவிட்ட படியால், மறுபடியும் இந்தப் புத்தகத்தை இன்று படித்துமுடித்துவிட்டேன்.

படித்தவுடனேயே, இந்தப் புத்தகம் தோற்றுவித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு!

எண்பது சிறு அத்தியாயங்களாக, புத்தகம் என்றால் ஒரே  தொடர்ச்சியாக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவுமில்லாமல், ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு மாறுபட்ட சிந்தனையை அறிமுகப் படுத்துகிற விதத்தில் சுமார் முன்னூறு பக்கங்களில் இந்தப் புத்தகம் எழுதப் பட்டிருக்கிறது.

உங்களுக்காகச் சிந்திப்பதாக, அல்லது உங்களை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுவதாக எந்த ஒரு பொய்யான வாக்குறுதியும் இல்லாமல், படிக்கும்போது, உங்கள் அனுபவங்களைத் தொட்டு நீங்களே தொடர்ந்து யோசிக்கத் தூண்டுகிற விதத்தில் எழுத பட்டிருக்கும் புத்தகம் இது!

ஆங்கில மூலம் வெளிவந்து முப்பத்தொன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன என்ற எண்ணமே எழாமல், இன்றைக்கும் பொருந்துகிற மாதிரிப் பொதுவான நடையில், சிந்தனையில் சுய முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் இருக்கக் கூடிய புத்தகம் இது.

தமிழில், இந்தப் புத்தகத்தின் இன்றைய விலை என்ன என்பது எனக்கு தெரியவில்லை. ஆங்கிலத்தில் 2007 பதிப்பு ரூபாய் அறுபத்தைந்துக்குக் கிடைக்கிறது.  இந்தப் புத்தகத்தில் இருந்து, ஒரு சிறு பகுதி, நீங்களே படித்து, புத்தகத்தின் அருமையை மதிப்பிடுவதற்குஉதவியாக!. 


"பல ஆண்டுகளுக்கு முன், எல்லாமே ஒன்று கருப்பாக இருக்க வேண்டும், அல்லது வெண்மையாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணியது உண்டு. ஒன்று, இந்தக் கோடியில் நிற்பேன். அல்லது, அந்தக் கோடியில் நிற்பேன். அசையாமல் நிற்பேன். என்ன இழப்பு நேரிட்டாலும் அந்த நிலையிலேயே உறுதியாக நிற்பேன்.

என்னுடைய நம்பிக்கைகள் வெறும் நம்பிக்கையாக மட்டும் இருக்காது. மற்றவர்களுக்கு சவால்களாகவும் இருக்கும்.

நிர்வாகி ஒருவர், வேலை செய்யும் தன்னுடைய மேஜையின் மீது ஓர் அறிவிப்பை வைத்திருந்தார். "எதையும் சிந்தித்து முடிவெடுங்கள். நான் சொல்கிறபடி  செய்யுங்கள்!" இது தான் அந்த அறிவிப்பு!

நானும் இந்த ரகம் தான். அது அந்தக் காலம். இப்போது முன்பை விட வயது எனக்குக் கூடி விட்டது. ஆண்டுகள் செல்லச் செல்ல நானும் மாறிவிட்டேன். சரியாகச் சொல்ல வேண்டுமானால், அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டேன்.

மற்றவர்கள் வெற்றி பெறுவதைப் பார்த்துப் பார்த்து....அமைதியாக...நளினமாக...நிச்சயமாக....வெற்றிக்கான வழி எனக்கு விளங்க ஆரம்பித்து விட்டது. முன்னிலும் சிறந்த வாழ்க்கை எனக்குப் புரிய ஆரம்பித்து விட்டது.

என்னைச் சுற்றி நான் எழுப்பிக் கொண்ட கோட்டைச் சுவர்களைத் தாண்டி நான் வளர ஆரம்பித்து விட்டேன். கோட்டையின் அசையாத தன்மையே அதை ஒரு சிறைச் சாலையாக்கி விடுகிறது.

தற்காத்துக் கொள்ள எதுவும் இல்லாதபோது, கோட்டை எதற்காக? லட்சியத்தை நோக்கி முன்னேறிச் செல்வதில் கோட்டையின் பங்கு எதுவும் இல்லை. முன்னேறி நகர்ந்து சென்று கொண்டே இருப்பது தானே வாழ்க்கை!

வாழ்க்கையில், சாம்பல் நிறமான பகுதி ஒன்று இருப்பதையும் புரிந்துகொண்டேன். எல்லாமே, ஒன்று வெள்ளையாகவோ, அல்லது கருப்பாகவோ தான் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. எதுவுமே முற்றிலும் சரியானதாகவோ தவறானதாகவோ இருக்க வேண்டிய அவசியமுமில்லை! எல்லாமே கருப்பாகவோ அல்லது வெளுப்பாகவோ இளைஞர்களுக்குத் தோன்றலாம். முதிர்ச்சி அடையாத வளர்ந்தவர்களுக்கும் தோன்றலாம். வேலை நிறுத்தம், கண்டன ஊர்வலம், உள்ளிருப்பு வேலை நிறுத்தம் போன்ற அனைத்திற்கும் இதுவே காரணம்.

இளம்பருவத்தினரின் நடவடிக்கைகளைப் பார்த்து உலகம் புன்முறுவல்  பூக்கிறது. அவர்களின் செயல்களைத் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்பவர்களைப் பார்த்து அல்ல! ஆனால், உலகம் தன்னுடைய காரியங்களை சாம்பல் நிறப் பகுதிகளில் தான் நிறைவேற்றிக் கொள்கிறது. அனுபவம் போதாத நாட்களில், இந்த உண்மை எனக்குப் புரியவில்லை.

கருமையின் விளிம்பும், வெண்மையின் விளிம்பும் ஒன்றிக் கலக்கிற பகுதிதான், நான் இது வரை சொன்ன சாம்பல் நிறப்பகுதி. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, இணக்கம் ஆகிற பகுதியும் இது தான்!

சாம்பல் நிறப்பகுதியில் தான்  ஒவ்வொருவருடைய கருத்தும் கவனத்துடன், மரியாதையுடன் பரிசீலிக்கப் படுகிறது. இங்கே தான் ஒவ்வொருவரும் மற்றவருக்குக் கொஞ்சம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் பரஸ்பர ஆதாயத்தைப் பெறுகிறார்கள். இந்தப் பகுதியில், பேரங்கள் கொஞ்சம் கடுமையானதாக இருக்கலாம், கொஞ்சம் சாதுர்யமானதாக இருக்கலாம். ஆனால், தொடர்ந்து முயற்சி செய்தால், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும், ஒத்துழைப்பைப் பரிமாறிக் கொள்ளவும் இந்தப் பகுதி தான்  வழிவகுத்துக் கொடுக்கும் இடமாகவும்  இருக்கிறது.

சாம்பல் நிறப்பகுதியில், தொடர்ந்து பேச முயற்சித்தோமேயானால், பயனுள்ள முடிவுகளுக்கு வர முடியும். இல்லை என்றால் கருப்பு-வெள்ளை என்ற நேரெதிர் நிலையில் தான் நின்று கொண்டே இருக்க வேண்டும்.

இந்த சாம்பல் நிறப்பகுதியில் தான், கூட்டுச் சிந்தனை உருவாகிறது. அனைவருக்கும் பொதுவான, ஏற்றுக் கொள்ளக் கூடிய பயனுள்ள முடிவுகளும் இங்கே தான் சாத்தியமாகிறது.

'உலகத்தில் எல்லா விஷயங்களுமே இப்படித்தான்-- ஒன்று கருப்பாகவோ அல்லது வெளுப்பாகவோ தான் இருந்தாக வேண்டுமென்ற அவசியமே இல்லை' என்பதைப் புரிந்துகொள்ளும் முதிர்ச்சி அடைந்ததற்காக சந்தோஷப்படுகிறேன். கருத்துக்கள், அபிப்பிராயங்கள் எல்லாம் சங்கமிக்கிற இடம் தான் சாம்பல் பகுதி.  இங்கே நல்லெண்ணத்தோடு சந்திக்க முடிகிறவர்களுக்கு, தங்களுடைய கருத்து வேற்றுமைகளைப் பேசித் தீர்த்துக் கொண்டு, ஒரே லட்சியத்தை நோக்கிப் பயணிக்கவும் முடிகிறது.

எதிரெதிர் நிலைகள் சந்திக்கும் சாம்பல் நிறப்பகுதியை கண்டு பிடிக்க முடிந்ததில், எனக்கேற்பட்டதைப் போலவே உங்களுக்கும் சந்தோஷம் உண்டாகியிருக்கும் என்றே நம்புகிறேன்." 



நல்ல புத்தகங்களுக்குத் தனி இடம் இருக்கத் தான் செய்கிறது, இல்லையா? 





No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)