Wednesday, April 14, 2010

சோதனையும் சாதனையும்-சுத்தானந்த பாரதியார்!

சோதனையும் சாதனையும்
 
கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார்
 
சுத்தானந்த நூலகம், திருவான்மியூர், சென்னை வெளியீடு.
மேல்விவரங்களுக்கு  shuddhashakthi@gmail.com  

434 பக்கங்கள் விலை ரூ.120/-
 

தமிழை நேசித்த கவியோகி! பன்முகத் திறமை கொண்ட துறவி! சுதந்திரப் போராட்ட வீரர்! கவியோகி சுத்தானந்த பாரதியார், தன்னுடைய சுய சரிதையை "ஆத்ம சோதனை" என்ற பெயரில் வெளியிட்ட பழைய பதிப்பைச் சிறுவயதில் படித்திருக்கிறேன்.இந்தப் பதிப்பு, அதன் இரண்டாம் பகுதியையும் உள்ளடக்கிய பதிப்பாக, 434 பக்கங்களில் எண்பது அத்தியாயங்களுடன் வெளிவந்திருக்கிறது.

சோதனையும் சாதனையும் என்று தலைப்பில் உள்ள மாதிரியே, கவியோகி தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும், சாதனைகளையும் 1975 ஆம் ஆண்டு இதை வெளியிடும் தருணம் வரை உள்ள பல நிகழ்ச்சிகளைச் சுவையோடு விவரித்திருக்கிறார். நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிற நூல் இது!



இன்றைக்கு சாதிக்கொரு சிலை, என்ற அளவில் சாதியைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் தேச விடுதலை ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கைப் பார்க்கிறோம்.

இன்றைக்கு டமில் பேசுகிறவர்கள், மூக்கினாலே முக்கி முக்கிப் பேசுகிறவர்கள், எலும்பைக் கடிப்பது போல வார்த்தைகளைக் கடித்துக் குதறிப் பேசுகிறவர்கள் தான் தமிழ்,தனித் தமிழ் என்று மேடையில் பேசுவது ஒன்றே தமிழுக்குச் செய்யும்  சேவை என்றிருக்கும் நிலையில், உண்மையாகவே தமிழ் வளர்த்த பெரியோர்களை மறந்து போனதும், அவர்களுக்கு உரிய மரியாதை செய்யத் தோடர்ந்து தவறிக் கொண்டிருப்பதும் ஒரு கேவலமான அரசியலாகவே ஆகிக் கொண்டிருக்கிறது.

அப்படி மறந்துபோய்விடக் கூடாதே என்ற ஆதங்கத்தில், தமிழ் வளர்த்த பெரியோர்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வைக்கும் பதிவு இது. ஒரு யோகி, அன்பிலே பழுத்த துறவி, ரமண மகரிஷி, ஸ்ரீ அரவிந்தர், காவ்யகண்ட கணபதி முனி இப்படிப் பல ஞானிகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர், சுதந்திரப் போராட்ட வீரர், கவிஞர், பன்மொழித் திறமை பெற்றவர் கவியோகி சுத்தானந்த பாரதியார், தூத்துக்குடிக்குச் சென்றிருந்தபோது, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையைச் சந்தித்ததன் முதற் பகுதி இங்கே. இன்றைக்குக் காணும் அத்தனை குழப்பங்களுக்கும் வித்து, 1937--1942  கால கட்டத்திலேயே ஊன்றப் பட்டு விட்டது என்பதையும் சொல்லும் பகுதி இது.  

இன்றைய இளைய தலைமுறைக்கு, உண்மையைப் பார்க்கவொட்டாமல், வெறுப்பில் எரியும் மனங்களாக அவர்களையும் மாற்றுவதற்குப் பல முனைகளில் இருந்தும் வரலாறு திரித்துச் சொல்லப் பட்டுக்கொண்டே இருக்கிறது சமீப கால வரலாற்றைக் கூட அறியாதவர்களாக, இருக்கும் இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இந்தப் புத்தகத்திலே நிறைய உண்டு.

அதில் இருந்து கொஞ்சம்! நூல் அறிமுகமாக...!  


சிதம்பரம் பிள்ளையுடன்....!

தூத்துக்குடியில் மாசிலாமணிப் பிள்ளை என்னை வரவேற்றார். அரசியல் உலகின் கோழிச்சண்டையைத் தூத்துக்குடியில் கண்டேன். அங்கே இரண்டு கட்சிகள், ஒத்துழையாமைக் கட்சி என்னைத் தலைவனாக்கி விளம்பரம் செய்திருந்தது. ஸ்வராஜ்யக் கட்சி வரதராஜுலு நாயுடுவைத் தேர்ந்தது. அதை நானும் ஆமோதித்து எழுதினேன். நான் வந்ததுமே ஒத்துழையாமைக் கட்சி, நமது தலைவர் வந்து விட்டார் என்று தண்டோராப் போட்டது.காங்கிரஸ் மாநாட்டைக் கூட்டியவர் "என்ன சுவாமிகளே" என்றனர். சில்லறைக் கட்சியாட்கள் எங்கள் பக்கமே பேசவேண்டும் என்றனர். நான் மாநாட்டுக்குப் பொதுவாகப் பேசுவேன் என்றேன்.

நான் வந்த நாளே சிதம்பரம் பிள்ளை, மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்றுப் பழைய கதைகளெல்லாம் பேசினார்--உரம் பெற்ற வீரவுள்ளம், கம்பீரமான கருமேனி, முரசம் போன்ற தமிழ் பேச்சு, பெச்சுக்கேற்றபடி துடிக்கும் மீசை, வக்கீல் உடை, அன்பான மனம், புலமை நிரம்பிய சொல்--எல்லாம் என் மரியாதையை அதிகரிக்கச் செய்தன. "வீரச் சிதம்பரம் பிள்ளை" என்ற பாட்டைப் பாடினேன்.

(வ. உ.சிதம்பரம் பிள்ளை  இந்த சம்பாஷணை முழுதும் சித என்றே குறிப்பிடப் படுகிறார்) 

நான் :  தங்களைக் காணவே மகாநாட்டிற்கு  வந்தேன். எந்தாய் வாழ்க!

சித :     பாட்டு கம்பீரமாயிருக்கிறது. பாரதி கேட்டால் மகிழ்வார். ஸ்வராஜ்யாவில் தங்கள் தலையங்கம் பார்த்தேன். நடையில் பழைய விறுவிறுப்பும் புதிய மறுமலர்ச்சியும் உள்ளன. ஆனால் எல்லாம் காந்தி மயமாயிருக்கிறது. திலகரும்  உமது நண்பர் தாமே!

நான் :  எனக்குத் திலகரிடமும் உள்ளன்புதான். அந்த மராட்டிய வீரம் தங்கள் தமிழ் மீசையில் துடிக்கக் கண்டேன். வெள்ளையரை விரட்டியடிக்க அவர் வீரம் பேசினார். தாங்கள் வெள்ளையன்  வெட்கக் கப்பல் விட்டீர்கள். தங்கள் தியாகத்தை சுதந்திர பாரதம் பொன்னெழுத்தில்  பொறிக்கும்.

சித  :   நான் சிறையை விட்டு வந்தபோது, எனக்கு மாலை சூட்டி வரவேற்கக் கூட ஒரு தமிழன் இல்லை. எண்ணெய்க் கடை வைத்தும் பிழைத்தேன். வறுமையால் வாடினேன், வாலஸ் துரை எனது சன்னதை  மீட்டுத் தந்தார். அந்த நன்றிக்கே என் பிள்ளைக்கு வாலேசன் என்று பெயரிட்டேன். அதற்கொரு குறள்:

"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும் "

இன்று எனக்கு மாதம் முன்னூறு ரூபாய் தந்தாள், இப்படியே அரசியல் மேடையில் குதிக்கிறேன். நான் ஒருவன் கிளம்பினால் போதும், நாட்டை உரிமைக்கு அழைத்துச் செல்வேன்.

நான் :  இந்தக் காலம்
கதர் கட்டினாலே மேடையில் மதிப்பு.

சித :      ஹார்வி மில் முன், ராட்டையும் கதரும் எந்த மட்டு ஐயா?  இந்தியர் மான்செஸ்டருடன் போட்டி போட மின்சார யந்திரம் வேண்டும். கொட்டை நூற்று, முப்பது கோடிக்குக் கோவணம் கட்டவாவது முடியுமா? நான் என் ஊரில் நோற்று நெய்த கைத்தறி ஆடையை அணிகிறேன். நான் காந்தியை வெறுக்கவில்லை. திலகரை மதிக்கிறேன். எனது குருநாதன் சுதந்திரச் சங்கூதினான். விடுதலை, பிறப்புரிமை என்று உணர்த்தினான். பாரதி வாக்கில் திலகர் உணர்ச்சியே வெடித்தெழுகிறது.

நான் :  தங்கள் உணர்ச்சிதான், பாரதி வாணியாகப் பாடியது. தங்கள் பேச்சு, பாரதி பாட்டு,  (வ வே சு )ஐயர் எழுத்து, சிவாவின் ஆவேசம்---இந்நான்கும் தமிழுலகைத் தட்டி எழுப்பின. இன்று வகுப்பு வாதம் நாட்டைப் பிளந்தது.

சித :     எனது குருநாதன் காலத்தில், வகுப்புவாதமே கிடையாது. இன்று நாடு வகுப்புக் கந்தலாயிருக்கிறது. இந்து-முஸ்லீம்,பார்ப்பான்-அல்லான்,
வைதீக ஒத்துழையாமை-ஸ்வராஜ்யக் கட்சி என்ற பிரிவெல்லாம் தற்கால அரசியல் ஊழலையே காட்டுகின்றன. எனக்கு மட்டும் வாய்ப்பளித்தால், தமிழரை ஒன்று சேர்ப்பேன். நாயக்கரும், நாயுடுவும் ஐயங்காரும் ஐயரும் என்னுடன் கைகோத்து நடக்கச் செய்வேன்.

நான்:  தடையென்ன? தமிழன் தன்நாட்டு வீரரை மதிக்கத் தொடங்கினாலே, அந்த அற்புதம் நடக்கும். இப்போதுள்ள நிலையை இங்கே வந்ததுமே கண்டேன். பொதுக் கூட்டத்தில் பேச வேண்டாம் என்று பார்க்கிறேன், நீங்கள் பேசினாலே போதும்.

சித :    தாங்கள் பேச வேண்டும், நான் கேட்க வேண்டும்.

இச்சமயம் டாக்டர் வரதராஜுலு வந்தார். எலாரும் வட்டக் கிணற்றிற்குப் பவனி சென்றோம். அங்கே பதினாயிரம் பேர் கூடினர். சிதம்பரம் பிள்ளை தலைமை வகித்தார். நாயுடுகாரு, எம் எஸ்
சுப்ரமணிய ஐயர், குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை, சுப்பையர்---எல்லாரும் பேசினர்.

கடைசியில், "சுவாமி சுத்தானந்த பாரதியார் பேசுகிறார், பேசத்தான் வேண்டும், பேசும் பாரதியார்" என்று அழைத்தார் தமிழ்ச் சிங்கம். நான் ஒருமணி நேரம் பேசினேன்.




நூலின் 70 ஆவது அத்தியாயத்தின் முற்பகுதி. 2003 ஆம் ஆண்டுப் பதிப்பின் பக்கங்கள் 337-339 நூலை அறிமுகம் செய்வதற்காக மட்டும்
வணிக அல்லது வேறெந்த உள்நோக்கமும் இல்லாமல் எடுத்தாளப்பட்டது. 



7 comments:

  1. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. திரு.கபீஷ்,

    பகிர்வுக்கு நன்றி என்பது வெறும் சம்பிரதாயமான வார்த்தை! அதை வைத்து, நீங்கள் இந்தப் புத்தகத்தைத் தேடிப் படிக்கப் போகிறீர்களா என்பதை, தெரிந்து கொண்டு விட முடியாது. அப்படியே போகிற போக்கில் என்று எழுதப்படும் விஷயமும் இல்லை இது.

    அவசியம் படித்தே ஆக வேண்டும் என்று நெஞ்சைத் தொட்டுச் சொல்ல முடிகிற நல்ல புத்தகங்களில் சுத்தானந்த பாரதியாரின் சுய சரிதையும் ஒன்று. நீங்களும் படித்துவிட்டு, உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைச் சொல்லுங்களேன்!

    ReplyDelete
  3. தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத விக்கி என்பவரிடமிருந்து இந்தப் புத்தகத்தைப் படிக்க முயற்சிப்பதாக ஒரு பின்னூட்டம் வந்திருக்கிறது. அடையாளம் தெரியாத, அல்லது அறிவித்துக் கொள்ள விரும்பாதவர்களிடம் இருந்து வரும் பின்னூட்டங்களை ஏற்பதற்கில்லை

    ReplyDelete
  4. சரிதை/சுயசரிதைகளை விரும்பிப் படிப்பவள். நான் இருக்கும் ஊரில் உள்ள நூலகத்தில் சுத்தானந்த் பாரதியார் மொழிபெயர்த்த் ஒரு நூலைப்பார்த்தேன் (பெயர் ஞாபகமில்லை. படிக்கணும்னு தோணலை ஏனோ. வ.வே.சு ஐயர் சரிதம் புத்தகம்,(ஐயர் த க்ரேட் ) படிச்சபோது, சுத்தானந்த பாரதியைப் பத்தியும் கொஞ்சம் பகுதி இருந்தது. அப்போ இவர் சரிதம்/சுயசரிதம் புக் கிடைச்சா நல்லதுன்னு நினைச்சேன்.லைப்ரரியில் தேடினேன், கிடைக்கல. உங்க இடுகை படிச்சவுடன் பதிப்பகம் பெயர் தெரிந்துகொண்டேன். லைப்ரரியில் புத்தகம் பெயர், பதிப்பகம் பெயர்/ஐஎஸ்பிஎன் நம்பர் சொன்னா வாங்கி வைப்பார்கள். நானும் படித்துக்கொள்ளலாம் என்று நினைத்து பகிர்வுக்கு நன்றி என்று சொன்னேன். :) இந்தியாவில் இருந்திருந்தால் சென்னையில் இருக்கும் நண்பர்களிடம் சொல்லி வாங்கியிருந்திருப்பேன்/ பதிப்பகம் மூலம். இங்கே லைப்ரரியில் சொன்னால் விரைவில் கிடைக்கும். படித்தவுடன் புத்தகம் பத்தி என் கருத்தைத் தெரிவிக்கறேன்.

    ReplyDelete
  5. நல்லது அம்மா!

    சுத்தானந்த பாரதியாருடைய சுயசரிதை, சமீப காலத்திய வரலாற்றின் சில பக்கங்களை, அதில் நேரடியாகப் பங்கு கொண்ட ஒருவரது பார்வையில் இருந்து எழுதப் பட்டதாக, வரலாற்றைத் திரித்துச் சொல்லாத இயல்போடு பார்க்க முடியும்.

    வ வே சு ஐயர் அவர்களைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள் இல்லையா! காங்கிரசில் தீவீரமாக இருந்த பெரியார் ஈவெரா, காங்கிரசில் இருந்து விலகி காங்கிரசுக்கு எதிராகக் கலகக் கொடி எழுப்பியது வ வே சு ஐயர் சேரன்மாதேவியில் நடத்திய குருகுலத்தைப் பற்றிய ஒரு தவறான சித்திரத்தை ஏற்படுத்தித் தான்! வருணாசிரமத்தைக் கடைப்பிடிப்பதாக வவேசு ஐயர் மீது குற்றம் சாட்டி, காங்கிரஸ் நிதியில் இருந்து அதற்கு மூவாயிரம் ரூபாய் நன்கொடை கொடுக்கலாமா என்பதாகத் தொடங்கிய அந்தக் கலகக் குரலின் சத்தத்தின் பின்னால், வவேசு ஐயரின் நேர்மையான விளக்கம், அவருடைய நேர்மையான பணி களங்கப் படுத்தப் பட்டது. ஒரு பிரச்சினையில் ராஜாஜி, தன்னுடைய தரப்பை ஆதரிக்கவில்லை என்பதற்காக ராஜாஜி மீது கொண்ட வன்மம் பார்ப்பன எதிர்ப்பாகப் பரிணாம வளர்ச்சி கொண்டது என்பது இங்கே நிறையப் பேருக்கு இன்னமும் முழுமையாகத் தெரியாத ஒன்று.

    பெரியாருடைய இந்தப் போக்கை, சுத்தானந்த பாரதியார் தன்னுடைய சுயசரிதையில், போகிற போக்கில் மேலோட்டமாக அதே நேரம், அதன் உண்மையான தன்மை என்ன என்பதைக் கோடிட்டுக் காட்டி விட்டுப் போகிற பகுதியும் உண்டு.

    இந்தப் பதிவிலேயே, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையை, இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட ஜாதி அடையாளமாகப் பயன்படுத்துகிறபோக்கையும், அந்த ஜாதி மக்கள் உட்பட அவரது கூட்டாளிகளே, அவர் சிறைக்குச் சென்ற சமயத்தில் அவர் ஏற்படுத்திய சுதேசிக் கப்பலை ஆங்கிலேயனுக்குத் தாரை வார்த்து விட்டு, தங்களுடைய சுயநலம் ஒன்றிலேயே குறியாக இருந்ததையும் சொல்கிற விதமாகத் தான், ஒரு முன்னோட்டம் இருக்கிறது.

    சுத்தானந்த பாரதியாருடைய நூல்களை , மேல்விவரங்களோடு பெற மின்னஞ்சல் முகவரியும் பதிவின் ஆரம்பத்திலேயே இருக்கிறது.

    ReplyDelete
  6. விரிவான கருத்துப் பகிர்வுக்கு நன்றி!!! ஐயர் த க்ரேட் புத்தகம் மூலமா நீங்க சொன்னது தெரிஞ்சுக்கு முடிஞ்சது. அதுல தேவையான விளக்கம் இருக்கு. கடைசியா ஒரு பையன் தனியாத்தான் சாப்பிடமுடியும்னு சொன்னதால, அவனுக்கு அனுமதி கொடுத்தத வச்சு ப்ரச்னை பண்ணியிருக்காங்க. காங்கிரஸ் 3000 ரூபாய் கொடுத்த பிறகு. ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு அவரோட குருகுலம் அப்படியே போய்டுச்சுன்னு தெரிஞ்சப்புறம், அவரோடவும் குழந்தையோடவும் அகால மரணம் பத்தி படிச்சப்புறம். நினைவை விட்டகலாத புத்தகம்.

    வ.உ.சி மட்டும் இல்ல எல்லா ஜாதி மக்களும், தங்கள் ஜாதியில் பிறந்தவரை தங்கள் ஜாதி தலைவர் ரேஞ்சுக்கு வச்சுக்கறது. இதுல எந்த ஜாதியும் விதி விலக்கு இல்ல. எனக்குத்தெரிஞ்ச வரை.

    வ.உ.சி மொழிபெயர்த்த ஜேம்ஸ் ஆலனின் புத்தகம் நினைவுக்கு வந்தது. நீங்கள் அவரைப் பத்தி சொன்னவுடனே. எண்ணங்கள் நு தலைப்புன்னு நினைக்கறேன். எம் எஸ் உதயமூர்த்தியும் இதை மொழிபெயர்த்தார்.

    ReplyDelete
  7. கவியோகி சுத்தானந்த பாரதியாரின் சுயசரிதை பற்றிய கருத்துக்களைப் பதிவு செய்தமைக்கு நன்றி! தமிழர் மறக்கக்கூடாத ஒரு மகான் சுத்தானந்த பாரதியார்.

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)