Saturday, May 8, 2010

மின்னுவதெல்லாம்...நட்சத்திரமாகிவிடுமா?

ப்போதெல்லாம்  இணையத்தில், தமிழ் வலைப் பதிவுகளில் சிறுகதை அல்லது சிறுகதை மாதிரியான முயற்சியை நிறையவே பார்க்க முடிவதில் சந்தோஷமாக இருக்கிறது.

வார, மாத இதழ்களில் தொடர்கதை, குறுநாவல் வருவது அனேகமாக நின்றே போய்விட்டது என்றே சொல்ல வேண்டும்! வாசகர்களுக்குப் பொறுமை இல்லையா, அல்லது தொடர்ந்து எழுதத் தெரிந்தவர்கள் இல்லையா என்பதை ஒரு பட்டி மண்டபமே நடத்தி விடையைத் தேடலாம்!

ந்த நாளில் பத்திரிகைகளில் தவறாமல் ஒரு விளம்பரத்தைப் பார்க்க முடியும்! 777 கணேஷ் ராமின் திடீர் சாம்பார் மிக்ஸ், திடீர் புளியோதரை மிக்ஸ்  இப்படி இன்ஸ்டன்ட் சமாச்சாரங்கள்! இப்போது டூ மினிட்ஸ் மாகி  நூடில்சுக்கெல்லாம் முன்னோடி! அந்த மாதிரி சிறுகதைகளும் கூடச் சிறுத்துக் கொண்டே வந்து ஒரு பக்கம், ஒண்ணேகால் பக்கம் என்று கடைசியில் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிப் போன கதைதான்!

யிரத்துக்கும் மேலான பக்கங்களில் ஒரு கதையை எழுதி விட முடியும். ஆனால், ஒரு சிறுகதையாக அதே கருத்தைச் சொல்வது மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாலேயே பலநேரங்களில் முடியாமல் போகும் விஷயம்! 


உதாரணத்துக்கு, பாலகுமாரன் மாதிரி எழுத்தாளர்களால்  உடையார் மாதிரி ஆறு என்ன அறுபது பாகங்களாகக் கூடச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி எழுதி விட முடியும். அதே மையக் கருத்தை, ஒரு சிறுகதையாக அல்லது குறுங்கதையாகச் சொல்ல முடியுமா என்றால் ஞே என்று முழித்துக் கொண்டு நிற்பதைத் தவிர, வேறு ஒன்றுமே செய்ய முடியாது!

சிறுகதையின் பலமே, அது சொல்லவருவதைச் சுற்றி வளைக்காமல், நேரடியாகச் சொல்லி விடுவதுதான்! இன்னொரு விதமாகச் சொல்ல வேண்டுமென்றால், வீணையின் தந்தியை  மீட்டி முடித்த பின்னாலும், அதன் நாதம் கொஞ்ச நேரத்துக்கு அதிர்வலைகளாக சுற்றி வருவதைப் போல, ஒரு நல்ல சிறுகதையைப் படித்த தாக்கம், படித்து முடித்த வெகுகாலத்துக்குப் பின்னாலும் இருக்க முடியும்! 


அப்படி நினைவில் நின்ற ஒரு சிறுகதையை இந்தப் பக்கங்களிலேயே பார்த்திருக்கிறோம்!

சிறுகதைகளைப் பற்றிக் கொஞ்சம் எழுதவேண்டும் என்று நினைத்த போது, எப்போதோ படித்த கதைகள் பல நினைவுக்கு வந்தன.

ப்படி நினைவுக்கு வந்த கதைகளில் இரண்டைப் பற்றி சுருக்கமாக இங்கே!  கதையின் தலைப்போ, கதாசிரியரின் பெயரோ நினைவில் இல்லையென்றாலும்  கதை மட்டும் நினைவுக்கு வருகிறது.கதையின் மையக்கருத்து, நினைவில் இருப்பதை அப்படியே தருகிறேன்.


** நட்சத்திரம் **

வள், புகழ் பெற்ற சினிமா நட்சத்திரம். அவன், அவளையே கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று பிடிவாதமாக இருந்த அவளுடைய பரம ரசிகன்!
அவனுடைய பிடிவாதம், காதல் ஜெயித்து, திருமணமாகி அவர்களுக்கு அது முதல் இரவு!

ன்னுடைய கனவுக் கன்னியாக இருந்தவள், இன்று மனைவியாய்...! ஒரு படத்தில், இதே மாதிரி முதலிரவுக் காட்சியில் எவ்வளவு அழகாக, நளினமாகக் கதாநாயகனைப் பார்ப்பாள்! அதே மாதிரி இன்று என்னையும்..! இன்னொரு படத்தில், ஒரு பாடல் காட்சியில் அவள் நடந்து வரும் ஒய்யாரம்..! இப்படிக் கனவுகளோடு, எதிர் பார்ப்புக்களோடு, அவளை முதலிரவில் சந்திக்கிறான்.

வளோ, சினிமாத்தனம் இல்லாத இயல்போடு வருகிறாள். சினிமாவில் பல திருமணக் காட்சிகளில் நடித்திருந்தாலும், நிஜமாகவே திருமணம் என்பது புதிய அனுபவம் தானே! கணவன் ஆசையோடு, அவள் நடித்த திரைப்படக் காட்சிகளைச் சொல்லி, அப்படி நீ என்னைப் பார்க்கவேண்டும், பேச வேண்டும் என்கிற மாதிரித் தன்னுடைய விருப்பத்தைச் சொல்லும் போது தடுமாறுகிறாள்.

தெல்லாம் வசனம் பேசச் சொல்லி, எப்படி நடிக்கவேண்டும் என்று நடித்துக் காட்டிய இயக்குனர்கள் உதவியால் தான், அது இல்லாமல் இப்போது எப்படி என்று உண்மையைச் சொல்கிறாள்.

னதில் கற்பனை செய்து வைத்திருந்த நட்சத்திரம் உதிர்வதைப் பார்த்தமாதிரி சோகத்தில் அவன் ஆழ்கிறான் என்ற மாதிரியாகக் கதை முடிகிறது.

ந்தக் கதையை படித்தது குமுதத்திலா, ஆனந்தவிகடனிலா என்பது இன்னமும் நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது. குமுதம் அந்த நாட்களில், கொஞ்சம் கிருத்திருவம் பிடித்த மாதிரிக் கதைகளை நிறைய வெளியிட்டுக் கொண்டிருந்த நேரம். 


அவற்றில் யதார்த்தத்துக்கும், கனவுக்கும் உள்ள இடைவெளியைச் சொல்லும் அழகான கதைக் களத்துடன்  இப்படி ஒன்றிரண்டு கதைகளும் வந்திருக்க வாய்ப்பு உண்டு.



மின்னுவதெல்லாம்.....!

து நிச்சயமாக ஆனந்த விகடனில் படித்தது தான்!

ரு ஏழை ஆசிரியர்! கையில் நாலணா தான் இருக்கிறது.
பசியும் இருக்கிறது. எதிரே ஒரு மேனாமினுக்கி ஹோட்டல்! விதவிதமான விளக்குகள், வித்தியாசமான மெனுக்களை விளம்பரப் படுத்தும் மெனு போர்டுகள். உள்ளே அவ்வளவு கூட்டம்!

ருநாளாவது இந்த மாதிரிப் பிரபலமான ஹோட்டலில் சாப்பிட்டுப் பார்க்கவேண்டுமென்று ஆசிரியருக்கு நீண்ட நாட்களாகவே ஒரு ஆசை! உள்ளே நுழைந்துவிட்டார். சர்வர் வந்து, ஆசிரியருடைய அழுக்குப் படிந்த கோலத்தைப் பார்த்து விட்டு  அலட்சியமாக  என்ன வேண்டுமென்று விசாரிக்கிறான். அவருக்கோ, எது என்ன விலை என்று தெரியாமல் என்ன சாப்பிட ஆர்டர் கொடுப்பது?

யங்கித் தயங்கி, இட்டிலி என்ன விலை என்று கேட்கிறார்! ஒரு இட்டிலி இரண்டணா என்று அலட்சியமாகப் பதில் வருகிறது.பஸ்சுக்கு இரண்டணா வேண்டும், அதனால்  ஒரே ஒரு இட்டிலி என்று ஆர்டர் கொடுக்கிறார்! சர்வர் ஒரே ஒரு இட்டிலிக்குத் தான் இந்தப்பாடா என்கிற மாதிரிக் கேவலமாகப் பார்த்துவிட்டு, தட்டில் ஒரே ஒரு இட்டிலியைக் கொண்டு வைத்துவிட்டுப் போய்விடுகிறான்.


சாப்பிட்டு விட்டுக் கையைக் கழுவிவிட்டுக் கல்லாவில் காசைக் கொடுக்கும்போதும் அதே மாதிரி ஏளனப் பார்வை, கேள்வி!

சைக்கு உள்ளே நுழைந்து எதையோ சாப்பிட்டோம் என்று பெயர்பண்ணிவிட்டு வந்தாயிற்று! வயிறு கேட்கிறதா? பசி, பசி என்று பொருமுகிறது. எதிரே ஒரு பிளாட்பாரக் கடை,அங்கே ஒரு வயதான பெண்மணி இட்டிலி சுட்டு விற்றுக் கொண்டிருக்கிறாள். இட்டிலி அரையணா தான்! அங்கே போய் நான்கு இட்டிலியை சாப்பிடலாம், வீட்டுக்கு நடந்தே போய்க் கொள்ளலாம் என்று அங்கே போகிறார்,

சூடாக இட்டிலியை அவித்து அந்தப் பெண்மணி தட்டில் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறாள். மேனாமினுக்கி ஹோட்டலில் இருந்து ஒருவன் யாரோ கஸ்டமர் இட்டிலிக்கு ஆர்டர் கொடுத்தாராம், அங்கே தீர்ந்து போய்விட்டதாம்! அத்தனை இட்டிலியையும் மொத்தக் கொள்முதல் செய்து எடுத்துக் கொண்டு போய்விடுகிறான்! எல்லாம் தீர்ந்துபோய்விட்டதே என்று அந்தப் பெண்மணி, பசியுடன் நிற்கும் ஆசிரியரைப் பார்த்துப் பரிதாபப் படுகிறாள்.

வீண் பகட்டுக்கு அலைந்தோமே என்று ஆசிரியர் தன்னைத் தானே நொந்து கொண்டு பசியோடும், வலியோடும் நடக்கிறார்.

சிறுகதைகளில் கட்டாயம் ஒரு மெசேஜ் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைதான்! ஊருக்கு உபதேசம் செய்வதுகூட கதாசிரியனுடைய வேலை இல்லைதான்! ஆனால், தான் வாழுகிற சமூகத்தில், அவன் பார்க்கிற அத்தனை விஷயங்களுமே அவனைப் பாதிக்கிறது.கதையாகவும் பரிணமிக்கிறது.

வாழ்க்கையின் யதார்த்தத்தை விட்டு விலகாமல் இருப்பது, ஒரு நல்ல கதைக்கு முதல் அடிப்படை!

கூடு மாறுதல் என்ற தலைப்பில் விதூஷ் என்கிற வித்யா தன்னுடைய பதிவில் எழுதியிருந்த கதையைப் படித்தபோது, சிறுகதைகளைப் பற்றிய சிந்தனையும், இந்தக் கதைகளைப் பற்றிய நினைவும் சேர்ந்தே வந்தது இங்கே ஒரு பதிவாக!



1 comment:

  1. ஆனந்த விகடன் சிறுகதை நல்லாயிருக்குங்க... பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)