Saturday, May 22, 2010

The Fever..! சுரம்! ஒரு விமரிசனப் பார்வை!

பிடிக்கவில்லை என்று சொல்வதைவிட என்னை அதிகமாக மிரட்டிய ஒரே எழுத்தாளர் ராபின் குக் தான்!

நீண்ட நாட்களுக்கு
முன்னால் நண்பர் டாக்டர் சுந்தரவடிவேல் இதைப் படியுங்கள் சார் என்று சிபாரிசு செய்து கொடுத்த புத்தகம், மருந்துக் கம்பனிகளின் தில்லுமுல்லு வேலைகளைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லியே கொடுத்த புத்தகம் தி ஃபீவர்!  (The Fever by Dr.Robin Cook)

ப்போது படிக்கிற மாதிரிக் கற்பனை செய்தாலே கூட சுரம் வந்து விடும்! அயன் ராண்ட் முதல், லியோன் யூரிஸ், போரிஸ் பாஸ்டர்நாக் இப்படி எத்தனையோ எழுத்தாளர்களை சகித்துக் கொள்ள முடிந்தவனை, படிக்கப் படிக்க வெறுப்பேற்றிய புத்தகம் அது

ழுதியவர் ஒரு மருத்துவர்! நிறைய தொழில்நுட்ப விவரங்களை, சாதாரணமாகப் படிக்க வருகிறவர்களுக்குக் கொஞ்சமும் புரியாத வகையில் அடுக்கிக் கொண்டே போனது தான் கோளாறு! தவிர, விவரங்களைச் சொல்லிவிட்டு நாசூக்காகத் தன்னுடைய தரப்பை எடுத்துச் சொல்வதற்குப் பதிலாக நேரடியாகவே ஒரு பிரச்சாரம் மாதிரி இருந்ததும் ஆரம்பநிலை வாசகருக்குப் புரிவதும், பிடிப்பதும் மிகக் கடினமான ஒன்றாகவே இருந்தது.

பொதுவாகவே துறை சார்ந்த கதைகளை எழுதுவதில் ஆங்கில எழுத்தாளர்கள் முன்னணியில் இருக்கிறார்கள். மிகக் கடுமையான உழைப்பு, ஆராய்ச்சி, அடிப்படை விவரங்களைச் சேகரித்துக் கொண்டு, புறம் அதில் இருந்து ஒரு கதைக் களம், கதாபாத்திரங்கள் உருவாக்குவது என்பது மேற்கே கதை எழுத முனையும் அத்தனை எழுத்தாளர்களுக்குமே உரித்தான ஒரு பொதுவான பண்பாக இருக்கிறது.  

ர்தர் ஹெய்லி எழுதிய The Moneychangers புதினத்தைப் பற்றி இந்தப் பக்கங்களில் எழுதும்போது, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வங்கிகள், இயங்கும் விதம், நடைமுறைகள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து அப்புறம் கதைக் களத்தை உருவாக்கிய விதத்தைச் சொல்லியிருக்கிறேன். புத்தகத்தைப் படிக்கும்போதே, ஒரு கதையைப் படிப்பதோடு, வங்கித் துறை சார்ந்த நிறைய விஷயங்களை தெரிந்துகொள்கிற மாதிரி இன்றைக்கும் பொருத்தமாக அந்தப் புதினம் இருப்பதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான் சொல்ல முடிகிறது!

முதலாவதாக, கதாசிரியர் வெறும் கதைதானே என்று அலட்சியமாக நம்மூர் பாலகுமாரன்கள் மாதிரி சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகாமல், எழுத  எடுத்துக் கொண்ட துறையைப் பற்றிய விவரங்களை முழுமையாகத் தெரிந்து கொண்டு, கதையோட்டத்தில் பொருத்தமான இடங்களில் அந்தத் தகவல்களை வாசகர்களும் தெரிந்து கொள்கிற மாதிரிக் கொடுத்திருந்தது!

ரண்டாவதாக, அவர் அந்தப் புதினத்தில் எடுத்துக் கொண்ட வங்கித் துறையின் பேராசை, நிர்வாகக் குளறுபடிகள், அதனால் பாதிப்புக்கு உள்ளாகும்  சாதாரண மக்கள் என்பது இன்றைக்கும் மாறாமல் அச்சு அசலாக அப்படியே திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருப்பது!

க, அறிவியல் அல்லது ஏதாவது ஒரு துறை சார்ந்த புதினத்தை எழுதும் கதாசிரியருக்கு வெறும் கற்பனை மட்டுமே இருந்தால் போதாது! அவருக்கு அந்தத் துறையை பற்றி நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்! தெரிந்து கொண்ட அத்தனை விஷயத்தையும் கதையில் அப்படியே கோர்த்து விட முடியாது,  துறை சார்ந்த விஷயங்களை மைஒயமாக வைத்து ஒரு சுவாரசியமான கதைக் களத்தை எடுத்துக் கொண்டு, கதையை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிற கதா பாத்திரங்களை உருவாக்கவேண்டும், உடலுக்கு ரத்த ஓட்டம் எவ்வளவு அவசியமோ, அதேமாதிரி, துறை சார்ந்த தகவல்களைக் கதையின் ஓட்டமாகவும் அவசியமாகக் கலந்து படைக்க வேண்டும். அதில் வெற்றி காணும் போது, துறைசார்ந்த ஒரு புதினம் வெற்றிகரமாக, வாசகர்களால் கொண்டாடப் படுகிற விதத்தில் உருவாகிறது.

வாசகருக்குப் புரிய வேண்டும் என்பதையே மறந்து விட்டு எழுதிய மாதிரியிருக்கும் இந்தப் புதினத்தில், இந்த அடிப்படைக் கோளாறை மறந்து விட்டு வாசித்தால், உண்மையிலேயே மிடவும் அருமையான புத்தகம் தான்! சொல்லப் பட்ட விதம், உபயோகிக்கப் பட்ட தொழில் நுட்பச் சொற்கள், ரசாயனப் பெயர்கள் அதிகமாக இருப்பது, இன்னும் கொஞ்சம் பயமுறுத்துவதாக இருந்தது.

The Fever கதையின் நாயகன்,  சார்லஸ் மார்டெல் ஒரு மருத்துவர். லுகேமியா என்ற ரத்தப் புற்றுநோய்க்குத் தனது மனைவியை பறிகொடுத்தவர். அதை அடுத்து புற்றுநோய்க்கு மருந்து கண்டு  பிடிக்கும் ஆராய்ச்சியில்  தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.  மருத்துவருடைய மகளுக்கும்அதே மாதிரியான மிக அரிதான புற்று நோய் இருப்பதைக் கண்டறிகிறார். 

சாயனக் கழிவை சுத்திகரிக்கிறேன் என்ற பெயரில் அந்த சிறுமி விளையாடும் இடத்தின் அருகே இருந்த சிறு குட்டையில் பென்சைன் என்ற புற்றுநோயைத் தூண்டுகிற காரணியாக இருக்கும் நஞ்சை, ஒரு மருத்துவக் கழிவை சுத்திகரிக்கும் ரசாயனக் கம்பனி தொடர்ந்து கொட்டிக் கொண்டிருப்பது தான் காரணம் என்று தெரிய வருகிறது.

ன் மகளை மருத்துவமனையின் அனுமதியில்லாமல் வெளியே கொண்டு வந்து மாற்று மருத்துவ முறையில் சிகிச்சையைத் தொடருகிறார். மருந்து ஒன்றையுமே கூடக் கண்டுபிடித்து விடுகிறார்.வில்லனாக, ஒரு மருந்துக் கம்பனி வந்து குறுக்கிடுகிறது. மருத்துவர் என்ற தகுதியையும், மகளுடைய உயிரையும் காப்பாற்றிக் கொள்வதற்காக முயற்சிகளைச் செய்வதில்  பேராசை பிடித்த அந்த மருந்துக் கம்பனியின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்கிறார்.  

பெரும்பகுதிக் கதையில்  சார்லஸ் மார்டெல் எதன் மீதோ, எவர் மீதோ கோபத்தைக் கக்கிக் கொண்டிருப்பவராகவே சித்தரிக்கப் படுவதும், நிறைய ரசாயனக் கூட்டுப் பெயர்கள், விளைவுகள் என்று அடிக்கடி குறிப்பிடப் படுவதால், அடிப்படை ரசாயனம் அறியாதவர்களுக்குக் கொஞ்சம் கூடப் புரியாத வகையிலும், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை, பக்கத்திலேயே ஒரு அகராதியை வைத்துக் கொண்டு பொருள் தெரிந்துகொண்டு படிக்க வேண்டியதாக இருந்ததும் , இந்தப் புத்தகத்தைப் படிக்கக் கையில் எடுத்த அந்த நாட்களில் மிகவும் எரிச்சல் ஊட்டுவதாகவும், சோர்வடையச் செய்வதாகவும் இருந்தது.

ராபின் குக் மருத்துவராக இருந்து கொண்டே தன்னுடைய துறையில் நடக்கும் கொஞ்சம் அதீதமான அக்கிரமங்களை அம்பலப் படுத்துகிற வகையில் பல புதினங்களை எழுதியிருக்கிறார்.

ந்தப் பக்கங்களில்  போலி மருந்து, கலப்படம் செய்யப்பட மருந்துகளை அரசு மருத்துவ மனைகளிலேயே வழங்கப்பட்டதை மத்தியப் புலனாய்வுத் துறை திடீர் சோதனை நடத்தியதில் கண்டுபிடித்த விவரத்தைப் பற்றிய  பதிவாக எழுதிய பிறகு, சேகரத்தில் இருந்த ராபின் குக் எழுதிய  The Fever  புதினத்தை தேடியெடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

யிர் காக்கும் மருந்துகள் என்று நம்பித்தான், மருத்துவர்கள், மருந்துக் கடைக் காரர்கள் சொல்வதை நம்பித்தான், என்னவென்றே தெரியாத ரசாயனக் கலவைகளை வாங்கி உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். கலப்படம் செய்யப் படாத சுயம்பிரகாசமாக இருக்கும் நிலையிலேயே, இந்த ரசாயனக் கலவைகள், ஒரு
வலியைக் குணப் படுத்தி வேறு பல திருகுவலியைக் கொண்டு வந்து சேர்ப்பதாகத் தான் இருக்கின்றன.

தாரணமாக, இதய நோய்க்குப் பரிந்துரை செய்யப் படும் மருந்துகளில் பெரும்பாலானவை, காலப் போக்கில் சிறுநீரகத்தைக் காலி செய்து விடுவதாகத் தான் இருக்கின்றன. மாரடைப்பு வருவதைத் தடுப்பதற்காகக் கொடுக்கப் படும் ஆஸ்பிரின், வயிற்றில் ஓட்டை போட்டு விடுவது  சர்வ சாதாரணமான பக்க விளைவு. 

ப்படி அலோபதி மருத்துவத்தில், ரசாயன மருந்துகளின் பக்க விளைவுகளைப் பற்றி எந்த மருந்துக் கம்பனியும், பரிந்துரை செய்யும் மருத்துவரும் நோயாளிகளுக்கு உரிய முறையில் எச்சரிக்கை, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை, தடுப்பு வழிகளைச் சொல்வதே பெரும் பாலான தருணங்களில் இல்லை. மாறாக  கொசு அடிக்க பீரங்கி மாதிரி, ஓவர் டோஸ் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதே நிறைய இடங்களில் நடக்கிறது.

ந்த லட்சணத்தில், இந்தத் திருநாட்டில், அரசின் அலட்சியத்தால், காலாவதியான மருந்துகளை மறுபடி தேதி பேக்கிங் மாற்றி மறுவிற்பனைக்கு அனுப்புவதும், மருந்துகளிலுமே கூடக் கலப்படமும், போலி லேபிள்களும் நிறையவே புழக்கத்தில் இருப்பதை ஏதோ அந்த நேரத்துத் தலைப்புச் செய்தியாக மட்டும் படித்துவிட்டுப் போய்விடாமல் எச்சரிக்கையாக இருக்கக் கற்றுக் கொள்ளப் போகிறோமா?

மைச் சனங்களாகவே இருந்துவிடுவது தான் சௌகரியமாக இருக்கிறது என்று  இலவச டீவீக்களில், காசு கொடுத்துக் கேபிள் கனெக்ஷன் வாங்கி, மானாட மங்கையர்கள் மார்பாடப் பார்ப்பதிலேயே பிறவிப் பயனை அடைந்து விட்ட திருப்தியில் இருந்துவிடப் போகிறோமா?

ன்ன செய்யப் போகிறோம்? ங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? 

 

4 comments:

  1. //என்ன செய்யப் போகிறோம்?

    நல்லது செய்வார்களென நம்பி ஓட்டு போடுகிறோம்.



    இதென்னமோ இப்போதுதான் காலாவதியானதென்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தது போல கூப்பாடு போடுகிறார்கள். அப்படியே அதை தின்று செத்து கன்ஸ்யூமர் கோர்ட்டில் கேஸ் போட்டாலும் 1500 ரூபாய் ஃபைன் என்று 10 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பெழுதுவார்கள் இந்த லட்சணத்தில் கெட்டுப்போன பொருட்களை பதுக்கி கோடோன் எல்லாம் எடுத்து ஏலம் விட்டு காசு பார்கிறார்கள் என்றால்..

    //எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?//

    சுடுகாட்டுக்கு!

    :(

    ReplyDelete
  2. இவ்வளவு விரக்தி வேண்டாமே! காலம் மாற்றும்! நம்பிக்கை முதலில் மிகவும் அவசியம்!

    ReplyDelete
  3. அன்புள்ள திரு மோகன்!

    "நிழல்களாக" இருப்பதில் இருந்து கொஞ்சம் வெளிச்சத்துக்கும் வாருங்களேன்! எது அல்லது எதை நல்ல செய்தி என்று சொல்ல வருகிறீர்கள் ?

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)