Thursday, March 21, 2019

10 சீட் வாங்கியென்ன? யாரைக் களமிறக்குவது? விழிக்கும் காங்கிரஸ்!

இங்கே பிஜேபிக்கு அஞ்சுசீட்டா என்று வெந்தவர்கள் ஏராளம்! 10 சீட் வாங்கிய காங்கிரஸ் என்னபாடு படுகிறது என்று தெரிந்தால் இன்னும் நொந்து போவீர்கள் என்று நக்கலாக ஒரு செய்தியை இந்து தமிழ் திசை நாளிதழ் இப்போது வெளியிட்டிருக்கிறதோ?


தொகுதியை கேட்டு வாங்கிவிட்டு விழிக்கும் காங்கிரஸ்: இடியாப்ப சிக்கலால் குஷ்பு, ஈவிகேஎஸ்ஸூக்கு அடிக்கிறது ஜாக்பாட்?

காங்கிரஸ் கட்சியில் தொகுதியை வாங்கிவிட்டு வலிமையான வேட்பாளரை தேடும் குழப்பத்தால் வேட்பாளர் அறிவிக்க  தாமதமாகிறது என்று கூறப்படுகிறது. கரூர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை முடிவு செய்வதில் குழப்பம் நீடிப்பதாக கூறப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதிக்குப்பின் காங்கிரஸை மிகவும் மதித்து கேட்டதொகுதிகளை கொடுத்தார் ஸ்டாலின். கரூர், கிருஷ்ணகிரி, திருச்சி, விருதுநகர், தேனி உள்ளிட்ட தொகுதிகளை காங்கிரஸுக்கு கொடுத்ததில் திமுகவினருக்கு ஏக வருத்தம். ஆனாலும் ஏற்றுக்கொண்டார்கள்.
கரூர், கிருஷ்ணகிரியில் காங்கிரஸுக்கு வலுவான வேட்பாளர் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் பிடிவாதமாக இந்த தொகுதிகளை கேட்டு வாங்கியதாக காங்கிரஸ் வட்டாரத்திலேயே பேசப்பட்டது.
ஜோதிமணிக்காக கரூர் தொகுதியையும், டாக்டர் செல்லக்குமாருக்காக கிருஷ்ணகிரி தொகுதியையும் கேட்டு வாங்கியது டெல்லி தலைமை என்கிறார்கள். இதில் மாநில தலைமையை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் கிருஷ்ணகிரியில் ஏற்கெனவே தோற்றுப்போன டாக்டர் செல்லக்குமார், இந்த முறை அதைவிட வலுவான கே.பி.முனுசாமியை எதிர்கொள்ள முடியாது என்றும், கரூரில் தம்பிதுரையை எதிர்த்து நிற்கும் அளவுக்கு ஜோதிமணி பலம் இல்லாதவர் என்ற கருத்தும் காங்கிரஸுக்குள் ஓங்கி உள்ளது.
இதனால் தொகுதிகளை சண்டைப்போட்டு வாங்கிய காங்கிரஸார் இப்போது கரூரில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என யோசித்து வருவதாக கூறப்படுகிறது. பழையபடி ஈவிகேஎஸ் இளங்கோவனை கேட்க அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
கரூரில் செல்வாக்குமிக்க தம்பிதுரைக்கு எதிராக குஷ்புவை களமிறக்க யோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று தேனியில் ஜே.எம்.ஹாரூண் வேண்டாம் என்பதில் அங்குள்ளவர்கள் உறுதியாக இருக்க அந்த இடத்தில் சிறுபான்மை பிரிவு அஸ்லம்பாஷா கேட்கிறார். அஸ்லம் பாஷாவை நிறுத்துவதா? அல்லது அங்கும் குஷ்புவை நிறுத்துவதா? அல்லது ஹாருணுக்கே கொடுக்கலாமா? என்கிற கடும் குழப்பம் ஓடுகிறதாம்.
அதேபோன்று சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடும் வாய்ப்பு வழக்கு காரணமாக குறைந்து வருவதால்   விருதுநகரில் போட்டியிட உள்ள மாணிக் தாகூரை அவரது தொகுதியான சிவகங்கையில் நிறுத்தலாம் என எண்ணுகிறார்களாம்.அங்கு சுதர்சன நாச்சியப்பனும் கேட்கிறார், சிவகங்கையில் மாணிக்தாகூர் நிறுத்தப்பட்டால் ஈவிகேஎஸ் இளங்கோவனை விருதுநகரில் நிறுத்தலாம் என எண்ணுவதாகவும் தகவல்.

வெற்றி வாய்ப்புள்ள கன்னியாகுமரியிலும் ராபர்ட் புரூஸ் மீது சிஎஸ்ஐ வாக்காளர்கள்கோபத்தில் இருப்பதால் பழைய காங்கிரஸ் எம்.பி.மறைந்த டென்னிஸ் குடும்பத்தில் ஒருவரை நிறுத்தலாம் என்று பேசி வருவதாக கூறப்படுகிறது. ரூபி மனோகரனும் திருநாவுக்கரசர ்மூலம் முயல்வதாகவும் அதற்கு வாய்ப்பு குறைவு என்கின்றனர்.
இடியாப்பச்சிக்கலைவிட மிகப்பெரிய சிக்கலாக காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு உள்ளது. வேட்புமனு தாக்கல் இறுதி நாளுக்கு முன் வேட்பாளர் பட்டியல் வெளியாகுமா? என்று கேட்டபோது இன்றுதான் ராகுல் பட்டியலை பார்வையிடுகிறார், நாளை கட்டாயம் வெளியாகும் என தெரிவித்தனர்.
இறுதியாக கரூரில் குஷ்புவுக்கும், கிருஷ்ணகிரியில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், சிவகங்கையில், விருதுநகரில், தேனியிலும், கன்னியாகுமரியிலும் மாற்றம் வரலாம் என்கின்றனர்.
பேசாமல் கிருஷ்ணகிரியையும், கரூரையும் திமுகவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு கௌரவமாக 7 தொகுதிகளில் நிற்கலாம் என காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அரசியலில் எதுவும் நடக்கலாம்.
பொதுவாக எந்தவொரு செய்தித்தளத்திலிருந்தும் அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிற வழக்கமில்லாத என்னையும் கூட  அப்துல் முத்தலீப் எழுதியிருக்கிற இந்த writeup, உள்ளே இழையோடும் நகைச்சுவை அறுந்துவிடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ள வைத்திருக்கிறது  நன்றி! கரூர் காங்கிரசார் போர்க்கொடி 
காங்கிரசுக்கு விழுகிற ஓட்டுக்களை விட, இருக்கிற கோஷ்டிகள் அதிகம்!  

தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் வாயைப்பார்த்தால் சட்டி சுட்டதடா! கை  விட்டதடா! என்று அழுகிற மாதிரியே தோன்றுவது எனக்கு மட்டும் தானா?  
இந்தவார ஜுனியர்விகடன்! எது நிஜம் எது புருடா என்று எடிட்டருக்கே புரியாமல் செய்திகளை முந்தித்தருகிற குப்பைற்தொட்டியாக மாறி நீண்டகாலமாகிவிட்டதே!  
இதெல்லாம் அநியாயம்! கருணாநிதி அந்த வசனம் பேசியபோது, தேர்தலா வந்தது? இந்தப்படத்தைத் தயார் செய்தவர் ஓட்டு வாங்கக்  காலில் கூட விழுகிற பகுத்தறிவுக் கலாசாரம் தெரியாத ஆளாய் இருப்பாரோ?
முகநூலில் KG கள்ளபிரான் காஷ்மீர் பண்டிட்டுக்களைப் பற்றிய ஒரு புத்தகத்தையும், அங்கே தற்போதைய நிலைமைக்கு காரணமென்ன என்பதையும் கொஞ்சம் சுருக்கமாகப் பகிர்ந்திருக்கிறார். தெரிந்துகொள்வோமே!    
“ஹிந்து காஷ்மீர்” என்றொரு புத்தகம் உள்ளது. எழுதியவர் எஃப்.எம்.ஹஸ்னைன் ( F.M. Hassnain). இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியவர் அப்போது ஜம்மு காஷ்மீரின் முதல்வராக இருந்த ஷேக் அப்துல்லா. இவரே ஃபரூக் அப்துல்லாவின் தந்தையும் ஓமர் அப்துல்லாவின் தாத்தாவும் ஆவார்.
இந்த முன்னுரையில் ஷேக் அப்துல்லா மிகவும் விஸ்தாரமாக காஷ்மீரத்தில் இருந்த வேத கலாசாரத்தைப் பற்றியும், அங்கிருந்த சைவ தத்துவங்களைப் பற்றியும், பரம்பரை பரம்பரையாக எடுத்துச் செல்லப்பட்ட ஹிந்து ரிஷிகளின் அமைப்புகளையும் புகழ்ந்து தள்ளியுள்ளார். அதுவே உண்மையும் கூட..!
பல ஹிந்துக்களுக்கும் பாரதீயர்களுக்கும் காஷ்மீர் என்பது காஷ்யப முனிவரின் இடம் என்பதும், அது ஒரு அதி முக்கியமான ஹிந்து பூமி என்பதும், தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக அங்கு சைவம் தழைத்தோங்கியது என்பதும் தெரியவே தெரியாது.
தற்போது அங்குள்ள காஷ்மீரிகள் கடந்த 400 வருடங்களுக்கு முன்னால் கட்டாயப்படுத்தி முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்டவர்களே. இவர்களுடைய குடும்பப் பெயர்கள் அல்லது பட்டப் பெயர்களான வானி, ஃபட், பண்டிட் (Wani, Bhatt, Pandit) போன்றவைகளிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவின் மற்ற பாகங்களைப் போல் இல்லாமல் இங்கிருந்த மதம் மாறிய காஷ்மீரி முஸ்லீம்கள் தங்கள் குடும்பப் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை.
காஷ்மீரி முஸ்லீம்கள் தங்களின் சகோதரர்களான ஹிந்து காஷ்மீரி பண்டிட்களுடன் மிகவும் மரியாதையுடனும், ஒற்றுமையுடனும்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவையனைத்தும் இந்திரா காந்தி ஷேக் அப்துல்லாவின் பெரும்பான்மை அரசை கலைக்கும் வரை சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆட்சி கலைந்த பிறகு... இந்த நிலமையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தானியர்கள், காஷ்மீரில் ரத்த களரியை உண்டாக்கி மக்களிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தினர்.
தற்போது காஷ்மீரில் இருக்கும் தீவிரவாத சிந்தனை 40 ஆண்டுகளுக்கு முன்னால் பொறுக்கித்தனமான காங்கிரஸ் கயவர்களால் ஏற்படுத்தப்பட்டதே. இதே காங்கிரஸ்தான் அஸ்ஸாமிலும், பஞ்சாபிலும் பிரிவினைவாதத்தை விதைத்தது. அஸ்ஸாமிலும், பஞ்சாபிலும் அதன் பிறகு தொடர்ந்த அரசால் பிரிவினைவாதம் பெருமளவு ஒடுக்கப்பட்டாலும் இந்திரா காந்தியால் பற்ற வைக்கப்பட்ட பிரிவினைவாத, தீவிரவாத நெருப்பு இன்னமும் காஷ்மீரில் மட்டும் எரிந்து கொண்டே இருக்கிறது.
சர்வாதிகாரத்தனமான, பொறுக்கித்தனமான, ஒரே குடும்பம் மட்டுமே அதிகாரம் செலுத்த வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட இந்திரா கால்கிரஸ் கட்சி இது நாள் வரை இந்தியர்களை தங்கள் அடிமைகளாக மட்டுமே எண்ணியிருந்தார்கள். பாரதத்தைக் கொள்ளையடித்து, இங்கிருக்கும் ஜனநாயக முறையை தவறாகக் கையாண்டதன் விளைவே தற்போது காஷ்மீரில் உள்ள பிரச்னைகளுக்கு மூலக் காரணம்.
நாம் ஒன்றை மட்டும் மறக்கவே கூடாது. இந்திராகாந்தி தனக்கு அடங்காத மாநிலத்தில் ஆர்டிகிள் 356 ஐ அமுல்படுத்தி பெரும்பான்மை பலமுடைய மாநில அரசைக் கூட கலைக்கத் தயங்காத ஒரு சர்வாதிகாரப் பெண்மணி. அதோடு தன் தவறுகளை மூடி மறைக்க, தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஒட்டு மொத்த தேசத்திலும் அவசரநிலையைப் பிரகடனம் செய்தவர் என்பதையும் அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
தற்போது... முதன்முதலில் ஓட்டுப் போடப் போகும் இளைய தலைமுறையினர் நம் சரித்திரத்தை நன்றாகப் புரிந்து, அறிந்து கொண்டு ஓட்டளிக்க வேண்டும். ஏனெனில்.. காங்கிரஸுக்கு அளிக்கும் ஓட்டு கொள்ளிக் கட்டையால் நம் தலையை சொறிந்து கொண்டதற்குச் சமம்.
நடக்காது.. இருந்தாலும்... காங்கிரஸ் கட்சி ஒருவேளை ஆட்சியைப் பிடிக்குமானால்.. வளர்ச்சி என்பதை முழுமையாக நாம் மறந்து விடலாம்.அதோடு இன்றைய காங்கிரஸ் தலைமையில் இருப்பவர்களுக்கும் இந்திய தேசத்திற்கும் எந்தசம்பந்தமும் இல்லை. நம் தேசத்தவர்களே இல்லாத அந்த கட்சிக்கும் நம் கலாசார பாரம்பரியத்திற்கும் ஸ்னானப் ப்ராப்தி கூடக் கிடையாது.
எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரமாக காங்கிரஸை விரட்டி அடிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு பாரதத்திற்கும் அதன் மக்களுக்கும் நன்மையுண்டாகும்..!
“ஹிந்து காஷ்மீர் “புத்தகத்தின் லிங்க் 👇👇இங்கு இணைத்துள்ளேன்.
நன்றி - Narenthiran PS ஜி பதிவின் மொழிபெயர்ப்பு
படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை
    

1 comment:

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)