Thursday, April 11, 2019

ஒரு கடிதம்! சிலபல நையாண்டி! அரசியல் களம் இன்று!

நடிகை கஸ்தூரி இப்போது அரசியல் விமரிசகர் ஆகிவிட்டார்! கூர்மையான வார்த்தைகளில் தன்னுடைய கருத்தைச் சொல்வதில் கொஞ்சம்கூடத் தயக்கமோ பயமோ இல்லாமல் என்பதுதான் கூடுதல் விசேஷம். ஒரு பெண் இத்தனை துணிச்சலோடு பேசினால் தமிழேண்டா திராவிட வசவாளிகள் தாக்குதல் இல்லாமல் இருக்குமா? போடா ஜாட்டான் என்று அவைகளை புறந்தள்ளி விட்டுப்போகிற தைரியமும்  அவருக்கு இருப்பதை பார்க்கையில் ஒரு #Salut சல்யூட் அடிக்கவும் தோன்றுகிறது! 

  


முகநூலில் சில பதிவுகள் மேலோட்டமாக நையாண்டி செய்கிற மாதிரி இருந்தாலும் கொஞ்சம் யோசிக்க வைப்பவை. பின்னூட்டங்களோ பதிவை விட இன்னும் ஆழமான நையாண்டியுடன்! சமூகவலைத்தளங்களில் எப்படியெல்லாம் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள் என்பதைப் பார்க்கும்போதே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்பதையும் மறக்காமல் சொல்லிவிட வேண்டும்!

உடன்பிறப்பே, 

எனது இதயம் கனத்து விட்டது; கண்கள் பனித்து விட்டது!
சற்றொப்ப,ஆத்திக அடிப்பொடியாகவே நீ மாறிவிட்டதைக் கண்டிடும் போது, எனது மனம் நடுங்குகிறது! பகவான் கிருஷ்ணனின் பாதம் தாங்கியாக நீ மாறியது கண்டு குமைந்து போய்க் கல்லறையின் வெளிவாசலில் அமர்ந்து இந்த மடலை வரைகிறேன்!
நம்மை எல்லாம் வளர்த்து விட்ட தந்தை - பெரியார் என்று நம்மாலும், ஈவேரா என ஆரிய வந்தேறிகளாலும் அழைக்கப்படும் கிழவனார் - எனது ஆட்சி நடைபெற்ற போது சேலம் மாநகரில் ராமர், கிருஷ்ணர் சிலைகளைச் செருப்பாலடித்து ஊர்வலம் நடத்தினார் ; அதைப் புகைப்பட ஆதாரத்துடன் சோ தனது 'துக்ளக்' ஏட்டில் வெளியிட்ட போது அத்தனைப் பிரதிகளையும் பறிமுதல் செய்து 'பத்திரிகை சுதந்திரத்தை' நிலை நாட்டியவன் நான்!
ஆனால், ஐயகோ வீரமணி சொன்ன ஒரு வாசகத்துக்கு வந்த எதிர்ப்பைக் கண்டு நீ பின்னங்கால் பிடரிபட ஓடிப்போய் கிருஷ்ணன் காலில் விழுந்தாயே!
தமிழனை உனக்குத் தெரியாதா? அவன் சோற்றால் அடித்த பிண்டம்! வாழை மட்டை! அவனுடைய கடவுளை எவ்வளவு கேவலப் படுத்தினாலும் நமக்கு வோட்டுப் போடுவான்!
அவனுக்குப் புரியாத வகையான மொழியில் ஆறுதலும் கூறவேண்டும்: அதே நேரத்தில் நாத்திகத்தையும் வளர விட வேண்டும்! 'கோயில் கூடாது என்பதல்ல கொள்கை - கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகி விடக் கூடாது'- என்றால் கை தட்டுவான் தமிழன்! 'எங்கள் அம்பாளின் முன், எங்கள் முருகனின் முன் சகல பாவங்களும் பொடி பட்டுப் போகுமே - பிறகு எப்படியடா கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகும்?"- என அப்பாவித் தமிழன் கேட்கவே மாட்டான்!
அவனை நம்பி நீ எதுவும் பேசலாம்! நெற்றிக் குங்குமத்தை ரத்தமா எனக் கேட்கலாம்! தீ மிதிப்பது காட்டுமிராண்டித் தனம் என்று கூறலாம்! அத்தனையும் பொறுத்துக் கொண்டு தமிழன் நமக்குதான் வோட்டளிப்பான்! அவன் என்ன இஸ்லாமியனா - எங்கோ பாரீஸ் நகரப் பத்திரிகையில் வரையப்பட்ட கார்ட்டூனுக்கு இங்கே மவுண்ட் ரோடில் பொங்கி எழும் இஸ்லாமிய வல்லமை இந்துவுக்கு உண்டா?
அந்த இஸ்லாமிய வல்லமைக்கு உள்ளேதான் நமது 'மதச்சார்பின்மை' மடங்கிக் கிடக்கிறது என்பது நீ அறியாததா உடன் பிறப்பே? அதனால்தானே குல்லா போட்டோம் - ரம்ஜான் கஞ்சி குடித்தோம் - நமது தொலைக்காட்சிகளில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை 'விடுமுறை தின' நிகழ்ச்சி ஆக்கி மகிழ்ந்தோம்!
ஆனால் ஐயகோ இப்போது நீ ஒரே அடியில் சுருண்டு போய் 'கிருஷ்ண பரமாத்வை' கழக மேடையில் இடம் பெறச் செய்து விட்டாயே! "ஆரியம் இருக்கும் இடம் அக்ரஹாரம் மட்டுமல்ல"- என்று நமது அண்ணா கூறியதை மெய்ப்பித்து விட்டாயே!
சரி போகட்டும் விடு - தலை முழுகியே தீராத பாவம் கால் கழுவியா போய்விடப் போகிறது? திராவிடக் கொள்கைக்கு ஒவ்வொரு தேர்தலிலும் திவசம் செய்ய வேண்டி உள்ளது!
ஒன்று கூறுகிறேன் - உற்றுக் கேள் உடன்பிறப்பே! 'சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்'- என்று கீதையில் அந்தக் கிருஷ்ணன் கூறி உள்ளான்! அதனைக் கொள்கை வாசகமாகப் போட்டு, எனது பாணியில் எடுத்து இயம்பத் தயங்காதே! நடந்தது நடந்துவிட்டது - சமாளிக்கக் கற்றுக் கொள் உடன்பிறப்பே!
அதாவது 'நான்கு வகை வேலைப் பிரிவுகளை நானே உண்டாக்கினேன்'- என்று கிருஷ்ணன் கூறுவது நமது கழகத்துக்கு அப்படியே பொருந்துவதைக் கண்டாயா?
சிந்திப்பவன், அறிவுத் துறையில் ஈடுபடுபவன் எவன் ஆயினும் பிராமணன் - இன்று ஆங்கிலமும் இந்தியும் பயின்று சரளமாகப் பேசுபவர்களே நமது பல வேட்பாளர்கள்! இவர்கள் கழக அளவில் பிராமணர்கள்!
டீக்கடை, பஜ்ஜிக் கடை, அழகு நிலையம்... எல்லாவற்றிலும் புகுந்து, CCTV காமிரா இருப்பதையும் கவனிக்காமல், தங்கள் வீரத்தைக் காட்டும் நமது 'செயல் வீரர்கள்' - அவர்களை ரவுடிகள் எனக் கூறுவது ஆரிய சூழ்ச்சி - அந்த வீரமிக்க உடன்பிறப்புகள் நமது கழக அளவீடுகளின்படி சத்ரியர்கள்!
கட்டுக்கட்டாகப் பணம் பிடிபடுகிறதே - வோட்டு வியாபாரத்தில் சிறந்து விளங்குகிறார்களே - அவர்கள் கழக அளவிலான வைசியர்கள்!
எனது மூன்றாம் தலைமுறை இளவட்டம் பிரசார ஊர்திக்குள் சொகுசாக அமர்ந்திருக்க, வெளியே கம்பியைப் பிடித்தபடி தொங்கி அடிமை ஊழியம் புரிபவன் முதல், ஐந்தாவது தலைமுறையாக போஸ்டர் ஒட்டியபடியே உள்ளானே அந்த உடன் பிறப்பு - அவனே நமது கழகத்தின் சூத்திரதாரி!
நான்கு வர்ணங்களை நானே படைத்தேன் - சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் - என்ற மகா வாக்கியத்தின் அடியில், 'அதையே நாமும் படைத்தோம்'- என்று பெருமை பொங்க எழுதிடு தம்பி! 'நமக்கு நாமே - சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்!'
கல்லறையில் இருந்து 
மு.க   


கொஞ்சம் இடம்கொடுத்தால் தலைக்குமேலேறி உட்கார்ந்து கொள்கிற திராவிட மாயை எப்படிப்பட்டதாம்?  


இசுடாலின் அம்பூட்டு திறமைசாலியா? சந்தேகமே வேண்டாம் என்கிறார் ஒருவர்!

  
மாரிதாஸ் சிவகங்கைத் தொகுதி வாக்காளர்களுக்கு மட்டும் இப்படிச்  சொல்லலாமா? 


ஊழலைத் தவிர வேறொன்றும் தெரியாத கூட்டணிதர்மம்! திமுக காங்கிரஸ் விசிக மதிமுக இடதுசாரிகள் எவருக்கும் வாக்களிக்காமல் இருப்பதொன்றே தேசம் காக்கும் வழி!

நாம் தப்பிப்  பிழைத்திருக்க உதவுகிற வழியும் கூட!
   

2 comments:

  1. >>> ஊழலைத் தவிர வேறொன்றும் தெரியாத கூட்டணிதர்மம்! திமுக காங்கிரஸ் விசிக மதிமுக இடதுசாரிகள் எவருக்கும் வாக்களிக்காமல் இருப்பதொன்றே தேசம் காக்கும் வழி!

    நாம் தப்பிப் பிழைத்திருக்க உதவுகிற வழியும் கூட!...<<<

    அருமை.. அருமை...

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)