Monday, April 15, 2019

வாக்குச் சீட்டும் ஆயுதம்தான்! சரியாகப் பயன்படுத்தினால்!



மு.க.அழகிரி வெளியில் மூச்சுவிடாமல் இருந்தாலும், உள்ளுக்குள் தனது நண்பர்களோடு உட்கார்ந்து அடிக்கடி அரசியல் பேசுகிறாராம்.கடந்த வாரம் நெல்லைக்குப் போய்விட்டுத் திரும்பியவர், வீட்டில் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “மீடியாக்காரங்கள எல்லாம் சபரீசன வெச்சு சரிபண்ணி வெச்சுக்கிட்டு ‘திமுகதான் பெருவாரியா ஜெயிக்கும்’னு பேச வைக்கிறாங்க.
ஆனா, உண்மை நிலவரம் என்னன்னு அவங்களுக்குத் தெரியல, எனக்குத் தெரிஞ்சு தென் மாவட்டங்கள்லயே தூத்துக்குடியும், திருநெல்வேலியும்தான் திமுக கூட்டணி ஜெயிக்கும். மத்த இடங்கள்ல மண்ண கவ்வப் போகுது பாருங்க” என்று சொன்னாராம் என்று முணுமுணுக்கிறது இந்து தமிழ்திசை 
 

களநிலவரங்களை சரியாக உள்வாங்கிக்  கொள்வதிலும் அதன் மீதான தன்னுடைய அனுமானங்களைச் சரியாகச் சொல்வதிலும் மு க அழகிரியின் சாதுர்யத்தை ஒரு மதுரைக் காரனாக நான் குறைத்து மதிப்பிட்டதே இல்லை. 
                                                       


கனிமொழி ஏப்ரல் 18ஆம்  நாள்வரை கூடக் காத்திருக்காமல், தான் என்றைக்கும் பெரியார் கொள்கையிலிருந்து விலகமாட்டேன் என்று கொள்கை மறுமுழக்கம் செய்திருக்கிறார்.
                                                     

துண்டுச்சீட்டில் எழுதிக்கொடுப்பதைக் கொஞ்சம் கூட யோசிக்காமல்     அப்படியே வாசிப்பதில் அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்தபிள்ளை என்பதை மூன்றாம் கலீஞர் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். இந்தத்தேர்தலில் பிஜேபி திமுகவைப் போல 20 மடங்கு இடங்களில் போட்டியிடுகிறது என்பதை யாரும் சொல்லித் தர மாட்டார்களோ? 
ஏன் மீண்டும் மோடி வேண்டும் மோடி
குஜராத் மாநிலத்தில், 18 ஆண்டுகளாக வசிக்கும் நான், தற்போது ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு, வேளாண்மை நிறுவனத்தின் திட்டங்களில் பணியாற்றி வருகிறேன். கர்நாடகா, மகாராஷ்டிரா கடலோர பாதுகாப்பு மற்றும் மணல்மேடுகள் மேம்பாட்டு திட்டம், இந்தியா, வடகொரியா மியான்மர், வங்கதேசம், தாய்லாந்து, இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் ஒருங்கிணைந்த காடுகள், மீன் வளம், விவசாயம், வேளாண் காடு வளர்ப்பு, மணல் மேடுகள், உணவு பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், கடலோர சூழலியல் பாதுகாப்பு புனரியக்கம், பேரிடர் மேலாண்மை போன்ற பலதரப்பட்ட இயற்கை வள மேம்பாட்டு பிரிவுகளில், ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை வல்லுன ராக பணிபுரிந்து வருகிறேன்.மோடி குஜராத்தின் முதல்வராகும் முன்பிருந்தே, நான் வதோதராவில் வசித்து வருகிறேன். 'குஜராத் எனர்ஜி கமிஷன்' என்ற அரசாங்க நிறுவனத்திலும் பணிபுரிந்ததால், அவருக்கு பிற்பாடு மாநிலத்தில் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்களும், வளர்ச்சியும் எனக்குநன்றாக தெரியும். பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் குஜராத். படித்த திறமைசாலிகளுக்கும், பெண்களுக்கும் தகுந்த மரியாதையும் பாதுகாப்பும் அதிகம் கிடைக்கும் இடம்.மோடி, பரம்பரை வழி வராத, தனித்தலைமை, தகுதியின் பொருட்டு தலைவராக கண்டு எடுக்கப்பட்டவர். மோடி, இந்தி யாவை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்ல தேவையான தெளிவான பார்வையும் நெடுங்காலப் பயனளிக்கும் திட்டங்களையும் கொண்டவர். எடுத்த திட்டத்தை குறித்த காலத்துக்கு முன்பே கச்சிதமாக, வெற்றியுடையதாக முடிக்கும் திறன், அவரிடம் எப்போதும் வெளிப்பட்டிருக்கிறது.அது, மாநிலத்தில் முதல்வராக இருக்கும்போதும் சரி, இப்போது தேசத்தின் பிரதமராக இருக்கும்போதும் சரி; எடுத்த காரியத்தை செவ்வனே செய்து முடிப்பவர் மோடி.எப்போதும் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து நோக்கில் ஊக்கமளிக்கின்ற, நேர்மையான, கடின உழைப்பாளி. அவருடைய தனித்திறம் மற்றும் செயலாக்கத்திறம், பெரும்பான்மை மக்களை அவர் மீது நம்பிக்கை கொள்ள செய்துள்ளது.



1.பிற நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துதல்2.முதலீடுகளை கவர்தல்3.ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இந்தியாவின் நிரந்தர பங்களிப்புக்காக சபை உறுப்பினரின் ஆதரவை நாடுதல்போன்ற மூன்று முக்கிய குறிக்கோள்களுடன் பற்பல நாடுகளுக்கும், துாதரகங்களுக்கும் அயராமல் விஜயம் செய்தார். அவற்றில், குறித்த வெற்றிகளையும் கண்டார். எல்லா குடிமக்களுக்கும் நியாயமான கவுரவம் அளிக்கும் பொருட்டு தனது ஆட்சியில் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே சந்தை, ஒரே வரி போன்ற பல விஷயங்களை முன்னெடுத்துள்ளார். பல பழமையான செயலுக்குதவாத சட்டங்களை களைந்துள்ளார். தன் ஆட்சிக்காலத்தில் அவர் பல சந்தர்ப்பங்களில் அசாதாரணமான முடிவெடுக்கும் தனித்திறமையையும், செயல்படுத்தும் விரைவான செயல்திறனையும் நிரூபித்துள்ளார். இத்திறமைகள் மற்ற எந்த அரசியல் தலைவர்களிடமும் தற்போது காண இயலாதது.இளைஞர்களின் திறமைகளையும், தொழில்நுட்ப அறிவியலையும், மேம்பட்ட உட்கட்டமைப்புகளையும், அடிப்படை வசதிகள் பெருக்கத்தையும், இயற்கை வளங்களின் பாதுகாப்பு, சமூகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டையும் முன்னிறுத்தி, தேசத்தை ஊழலற்ற முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்கிறார்.மோடியே, செயலுாக்கம் உடைய ஆட்சியின் தனித்துவ உதாரணம் ஆவார். அவருடைய செயல்பாடுகள், சில நேரங்களில் பலருக்கு வலித்தாலும், நொதித்த புண்ணுக்கு மருந்திடும் நேரம் போன்றதே அந்த வலிகளும்; 65 ஆண்டுகள் அழுகிய புண்ணுக்கு மருந்திட்டு ஆற்றுவது,இன்றியமையாதது. வலிகளை பொறுப்போம்; நோயற்ற தேசம் செய்வோம்; தேசப்பற்றுடன் காப்போம்; என்றென்றும். இந்த தேசம் இளமையாய், என்றென்றும் ஜொலிக்க, மீண்டும் வேண்டும் மோடி.-என்கிறார் முனைவர் தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி oswinstanley@gmail.com கட்டுரையாளர், ஒருங்கிணைந்த கடல்சார் சூழலியல் மேலாண்மை வல்லுனர்.  நன்றி தினமலர்  
                                                                


ரொம்ப சீரியசான ஆய்வுக்கட்டுரை மாதிரி ஆஸ்வின் ஸ்டேன்லி  சொன்னது இருந்ததோ? காமெடிக்கு கழகங்கள் இருக்கையில் கவலை எதற்கு? இசுடாலினை வைத்துச் செய்கிறார்கள்.


ஏன் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது என்பதற்கு தஞ்சைப்பகுதியில்                 75 வயதான முதியவர் ஒருவர் மோடி படத்துடன் பேருந்துநிலையத்தில் வாக்கு கேட்டுக் கொண்டிருந்ததில் ஆத்திரமடைந்த  ஒரு உபி அவரை சரமாரியாகத் தாக்கியதில் முதியவர் மரணம் என்கிற ஒரு சோறு பதமான செய்தி ஒன்றே போதும்! விமானத்தில் கோஷம் எழுப்பிய சோபியாவுக்காக வரிந்து கட்டிக் கொண்டு வந்த ஊடகங்கள் இந்தப் பாதகத்தைக் கண்டுகொள்ளவில்லை.
நாமும் அப்படி ஒதுங்கிப்  போய்விட வேண்டுமா? அல்லது ஆட்சியில் இல்லாதபோதே அராஜகம் தலைவிரித்தாடும் திமுக மற்றும் அதன் தேர்தல் கூட்டாளிகளாகிய விசிக, மதிமுக,  இடதுசாரிகள் மற்றும் காங்கிரசை முற்றொட்டாக நிராகரித்துப்பாடம் புகட்டப் போகிறோமா?
இன்னும் மூன்றே நாட்கள் தான்! அமைதியானவழியில் வாக்குச் சீட்டைச் சரியாகப் பயன்படுத்தி திமுக கூட்டணியைக் களையெடுக்கிற வாய்ப்பு கிடைக்கிறதே!    
நழுவ விடலாமா?
                                       

6 comments:

  1. //கோஷம் எழுப்பிய சோபியாவுக்காக வரிந்து கட்டிக்க கொண்டு வந்த ஊடகங்கள் // - விகடன் உள்பட இந்த மீடியாக்களுக்கு விஜயகாந்த் சொன்னதுதான் சரி....

    ReplyDelete
    Replies
    1. இங்கே ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான உபயோகமுண்டு! இப்போது தெரிகிறதா விஜய்காந்த் அருமை? :))))

      Delete
  2. Deiva Oswin Stanley FB friend. Very brave young lady. குஜராத் பற்றி பெருமையாக இருக்கிறது. நம் ஊருக்கும் இந்த பாக்கியம் கிடைக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. முகநூல் அறிமுகம் இருப்பதும் அவர் சொன்னதை வழிமொழிகிற மாதிரி உங்கள் பின்னூட்டமும் மிகவும் நன்று அம்மா! இறையருள் கைகூட்டட்டும்!

      Delete
  3. Dhadhaasthu. இதில் மாற்றுச் சிந்தனை இல்லை ஜி. இறை மறுப்பவர்களோடும்,பழிப்பவர்களோடும்
    சேர்க்கையே கூடாது.
    வளர்க பாரதம்.

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் நாத்திகர்கள் என்பதால் அல்ல, அம்மா! சார்வாகமும் சுக்கிரநீதியும் பேசாத நாத்திகமா? அவர்கள் பேசுகிற நாத்திகம் இந்துமதத்துக்கு எதிராக மட்டுமே இருக்கிறது என்பது ஒன்று. போலி மதச்சார்பின்மை பேசி சிறுபான்மையினர் இந்துக்களை வெறுக்கவும், இவர்கள்மட்டுமே சிறுபான்மைக் காவலர்களாக வேடம்போடுவதும் முக்கியமான காரணங்கள்.

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)