tag:blogger.com,1999:blog-3470093017839928781.post556499471332525995..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: மாற்றங்களை எதிர்கொள்வது-3கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-4408151327653461062010-12-12T20:56:02.775+05:302010-12-12T20:56:02.775+05:30வாருங்கள் ஜீவி சார்!
இங்கே கூட ஆரம்ப நாட்களில் யு...வாருங்கள் ஜீவி சார்!<br /><br />இங்கே கூட ஆரம்ப நாட்களில் யுரேகா போர்பெஸ் வாக்குவம் க்ளீனர்களை நேரடியாக சந்தைப் படுத்த ஆரம்பித்த காலங்களில், குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்தி இல்லை என்றால் விற்ற பொருளை எந்தக் கேள்வியும் கேட்காமல் வாபஸ் வாங்கிக் கொண்டிருந்தார்கள். தவிர டைரக்ட் மார்கெடிங் என்று தயாரிப்பு நிறுவனமே வாடிக்கையாளரைத் தேடி வந்த முதல் சம்பவமும் இந்தியாவைப் பொறுத்தவரை அது தான்.<br /><br />இப்போது கால் சென்டர், பி பி ஒ, சர்வீஸ் பிரான்சைஸ் என்று வாடிக்கையாளர் சேவையைத் துரிதமாகவும், திருப்திகரமாகவும் செய்து முடிக்க என்று ஆரம்பித்த ஏற்பாடு, வெற்றுச் சடங்காக மட்டும் குறுகிப் போய் விட்டது என்னவோ வாஸ்தவம் தான்! அதே நேரம், வாடிக்கையாளர் குறைகளைக் காது கொடுத்துக் கேட்கவும், அவர்களுடைய எதிர்பார்ப்புக்களை சரியாகப் புரிந்துகொண்ட, உரிய நேரத்தில் செய்து கொடுக்கவும் டெமிங்ஸ் ஆரம்பித்து வைத்த டோடல் க்வாலிடி மூவ்மெண்டை, இன்னும் செழுமையாக்கி ஜப்பானியர்கள் கைஜென், டொயோட உற்பத்தி முறை என்று விரிவாக்கினார்கள்.<br /><br />சமீப காலம் வரை ஜப்பானியர்களுடைய தரக் கட்டுப் பாடு, விரையங்களை அறவே தவிர்த்தல், உற்பத்தி நிலையிலேயே குறைகளைக் களைதல் என்பவை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டுப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டும் வந்தன. சீனாவின் வளர்ச்சி என்பது, தரம் குறைந்த பொருட்களை மிக மலிவாக சந்தையில் கொண்டுவந்து கொட்டுவதாக மாறி வரும் சூழலில், தரம், விரையத்தைத் தவிர்த்தல் என்பவை பின்னுக்குத் தள்ளப் பட்டு விட்ட மாதிரித் தோன்றுகிறது.<br /><br />இந்த அம்சங்களைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக, நிறுவனப் பண்புகளைப் பற்றிப் பேசும்போது விவாதிக்கலாம்.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-3483914408661958402010-12-12T12:24:57.492+05:302010-12-12T12:24:57.492+05:30//மாற்றம் என்பது தலைமையில் இருந்து வரவேண்டிய இனிஷி...//மாற்றம் என்பது தலைமையில் இருந்து வரவேண்டிய இனிஷியேடிவாக இருக்கிறது. வெறும் மேனேஜராக நின்று கொண்டு உத்தரவு மட்டும் போட்டு விட்டு நின்று விடுகிற பழைய ஏற்பாட்டைப் புறம் தள்ளிவிட்டு, களத்தில் முன்னின்று தலைமை ஏற்று வழி நடத்துகிற தலைமைப் பண்பு இருக்கிறது. அதற்கடுத்துத் தலைமையின் இடைவிடாத, சலிப்பில்லாத, தொய்வடையாத முயற்சி, அதற்குத் தோதான நிறுவனப் பண்புகள் என்று மூன்று முக்கியமான விஷயங்கள் சொல்லப்படுகின்றன.//<br /><br />இதற்கு எடுத்துக்காட்டாக இப்பொழுது பெருவாரியாக ஏற்பட்டிருக்கின்ற ஒரு மாற்றத்தைக் குறிப்பிடலாம்.<br /><br />பல பெரிய பெரிய நிறுவனங்கள் தாம் ஈடுபட்டிருக்கின்றன தொழிலை தானேச் செய்வதில்லை. வாடிக்கையாளரிடம் அந்த வேலையை முடித்துத் தருவதற்கான பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு அந்த வேலையைச் செய்யும் வேலையை அதற்காக அமைந்த வேறு நிறுவங்களின் காண்ட்ராக்ட்டுக்கு விட்டு விடுகின்றன. காண்ட்ராக்ட் நிறுவனம் எந்த லட்சணத்தில் அந்த வேலையை முடிக்கின்றனவோ அந்த தரத்தின் அடிப்படையில் அந்த வேலை முடியும். வேலை முடிந்த பிறகு ஆரம்பத்தில் பணம் பெற்றுக் கொண்ட நிறுவனம், முடிந்த வேலையை கண்காணித்து சரிவரச் செய்யாதப் பணியைப் பற்றியும் கவலைப்படாது. கேட்டால் அதற்கேற்பவான ஏதாவது சமாளிப்பு இல்லை சால்ஜாப்பு இல்லை இப்பொழுதெல்லாம் இப்படித்தான் என்று ஏதோ ஒன்று. இதற்குள் எப்படியோ வேலை முடிந்தால் போதும் என்கிற நிலைக்கு மொத்தப்பணம் கொடுத்தோரும் வந்திருப்பார். <br /><br />காண்டிராக்ட்காரரையும் சொல்லிப் பயன் இல்லை. அவர்களும் பெற்ற தொகைக்கேற்ப வேலை முடித்திருப்பர். முதலில் பணம் பெற்றவரைச் சொல்லியும் பலன் இல்லை. அவருக்கு ஏற்ற-- தாழ்வான சந்தை நிலை, வியாபாரப் போட்டி, இன்னும் எத்தனையோ.எல்லாம் நுகர்வோர் தலையிலேயே விடிகின்ற நிலை.<br /><br />ஏ.ஸி., ஃபிரிட்ஜ், டி.வி. போன்ற சமாச்சாரங்களில் கூட உற்பத்தியாளர் வேறு,பழுதுகளைக் கவனிக்கின்ற அவர்களால் அமர்த்தப்பட்ட நிறுவனங்கள் வேறு என்று வந்தாகி விட்டது. யாரிடம் பணம் கொடுத்து பொருளை வாங்கினார்களோ அவர்களை நேரிடையாக குற்றம் சொல்ல முடியாத நிலை. <br /><br />மேற்கத்திய நாடுகளில் இருக்கின்ற, ஜான் பி கோட்டர் சொன்ன-- சவால்களை சந்தித்து புடம் போட்ட தங்கமாக மீண்டு வருகிற நிலை இங்கு இல்லை.<br />அங்கெல்லாம் எந்தப் பொருளை வாங்கினாலும் உபயோகித்துப் பார்த்து சரியில்லை என்றால் அல்லது அது நமக்கு சரிப்பட்டு வரவில்லை என்றாலும் மூன்று மாதங்களுக்குள் திருப்பிக் கொடுத்து விடலாம். 'வால்மார்ட்'களில் திருப்பிக் கொடுப்பதற்கெனவே பிர்மாண்டமான கவுண்ட்டர்கள் உண்டு. எந்தக் கேள்வியும் கேட்காமல் வாங்கிக் கொண்டு அதற்காக பெற்ற பணத்தை திருப்பித் தந்து விடுவர். <br /><br />ஆம். ஜான் பீ கோட்டர் சொன்னது முற்றிலும் சரியே.<br />எல்லாம் மேலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். எந்த பெரிய மாற்றமும் சாதாரண எளிய மக்களைக் கேட்டுக் கொண்டு வருவதில்லை. எந்த மாற்றத்திற்கும் ஆட்படுகிற நிலையிலேயே, அவன் இருக்கிறான். மாற்றங்கள் அவனுக்கு செளகரியத்தையும் பயனையும் அளித்தால் மனம் மகிழ்கிறான். அளிக்கவில்லை என்றால் நொந்து நூலாகிப் போகிறான். அவ்வளவு தான்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com