tag:blogger.com,1999:blog-3470093017839928781.post7840600350445654727..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: எழுத்தும் விமரிசனமும் !கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-38937984913907036732010-01-30T08:56:36.340+05:302010-01-30T08:56:36.340+05:30வாருங்கள் காவிரிமைந்தன்!
நிறையவே உணர்ச்சி வசப்படுக...வாருங்கள் காவிரிமைந்தன்!<br />நிறையவே உணர்ச்சி வசப்படுகிறீர்கள்!<br /><br />உங்களுடைய ஆதங்கத்தைப் புரிந்துகொண்ட பிறகே ஜெயகாந்தனை, எது எழுத்து என்ற கேள்விக்குப் பதில் சொல்லும் விதத்தில் மேற்கோளாகக் காட்ட முனைந்தேன். நீங்கள் அவருடைய அபிமானியாகவும், கூட்டாளியாகவும் இருந்திருக்கலாம், என்னை விட நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கலாம், அதைப் பற்றி எல்லாம் நானோ, ஜீவீ சாரோ எதுவும் பேசவில்லை.<br /><br />உங்களுடைய பதிலில் இருந்து, தகுதி இல்லாதவர்களிடம் கையேந்துகிற அளவுக்குத் தாழ்ந்து விட்டாரே என்ற ஆதங்கம் தான் கோபமான வார்த்தைகளில், சிங்கமாக இருந்த ஜெயகாந்தன் என்று உங்களைச் சொல்ல வைத்திருக்கிறதென்று நன்றாகப் புரிகிறது.<br /><br />ஜெயகாந்தன் என்ன செய்திருக்கவேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை. அதேபோல, ஜெயகாந்தனும், எவர் எதிர்ப்ப்பார்கள், ஆதரிப்பார்கள் என்று கணக்குப் போட்டு எதையும் செய்வதாகவோ, பேசுவதாகவோ கூட எனக்குத் தோன்றவில்லை. அப்போதும் கூட, ஜெயகாந்தன் சொன்னது செய்தது சரியா, தவறா என்பதைப் பற்றியோ, ஒரு வாசகராக, அபிமானியாக உங்களைத் தொட்டுக் கூட தனிப்பட்ட விமரிசனம் எதையும் முன்வைக்கவில்லை.<br /><br />அவர் தன்னுடைய இயல்பிலேயே இருக்கிறார். அதைச் சொல்வதற்காகத் தான், மாதவராஜ் வலைப் பக்கங்களில் இருந்த அவரது பேட்டியில் ஒரே ஒரு கேள்விக்கான பதிலை மட்டும், அதன் பொருத்தம் கருதிச் சொல்லியிருந்தேன். இப்போது கூட ஜெயகாந்தனுக்கு எதிராக மாதர் சங்கங்கள் போர்க்கொடி என்று ஒரு விவாத இழையில் படித்தபோது என் மனதில் பட்டதை மட்டுமே என்னுடைய இன்னொரு பதிவில் சொல்லியிருக்கிறேன்.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-77016571261162766182010-01-30T00:13:39.947+05:302010-01-30T00:13:39.947+05:30நண்பர் கிரிஷ்ணமூர்த்தி மற்றும்
ஜிவி அவர்களுக்கு,
...நண்பர் கிரிஷ்ணமூர்த்தி மற்றும்<br />ஜிவி அவர்களுக்கு,<br /><br /><br />உங்களுக்கும் மேலாக ஜெயகாந்தனின் எழுத்தை<br />ரசிப்பவன் நான்.கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன்<br />ஜெயகாந்தன் முதல் முதலில் எழுதி இயக்கிய <br />திரைப்படத்தை அவரே ஊர் ஊராகக்<br />கொண்டு சென்று காலைக்காட்சிகளில்<br />திரையிட்டுக் காண்பித்த போது இந்த முயற்சி<br />எப்படியாவது வெற்றி பெறவேண்டுமே என்று ஆவலோடு<br />வேண்டி விரும்பி கூடவே அலைந்தவன்<br />தான் நானும்.<br /><br />என் கட்டுரையை மீண்டும் ஒரு முறை படித்துப்<br />பாருங்கள். அவர் எழுத்தை எங்கேயாவது குறை<br />கூறி இருக்கிறேனா ?<br /><br />நான் குறை கண்டது ஜெயகாந்தன் என்கிற மனிதரில் தான் !<br />தன்மானச்சிங்கமாக இருந்த, யாருக்கும்<br />பணியாதவராக இருந்த ஜெயகாந்தன் -<br />இன்று கனிமொழியை அண்ணாவுடனும், பெரியாருடனும்<br />ஒப்பிட்டு பாராட்டிப் பேசும் அளவிற்கு இறங்கி<br />வந்து விட்டதைப் பற்றித்<br />தான் நான் விமரிசனம் செய்தேன்.<br /><br />முதுமை காரணமாகவோ, தேவைகள் காரணமாகவோ<br />ஜெயகாந்தன் தன் நிலை தாழக்கூடாது. அவருக்கு<br />தேவை எதுவாக இருந்தாலும் - ஒரு குரல் கொடுத்தால் -<br />உங்களைப்போல், என்னைப்போல் ஆயிரம் ஆயிரம்<br />வாசகர்கள் இருக்கிறோம் - உதவி செய்ய<br />என்று தான் நான் கூறுவேன்.<br /><br />வாசகர்களிடம் உதவி பெறுவதால் அவருக்கு எந்த<br />இழுக்கும் வராது. அதிகாரத்தில் இருப்பவரை<br />அண்டினால் தானே ஏளனம் பிறக்கிறது !<br /><br />அந்தக் கூட்ட அரங்கிலேயே அவருக்கு நிகழ்ந்த<br />அவமானம் பற்றிய ஆற்றாமை தான் <br />என் அந்தக் கட்டுரை.<br /><br />என் வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு<br /><br />நன்றி நண்பர்களே. அடிக்கடி வாருங்கள்.<br /><br />காவிரிமைந்தன் -http://www.vimarisanam.wordpress.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-27631075917723524542010-01-29T15:06:10.604+05:302010-01-29T15:06:10.604+05:30ஜீவி சார் ஆதங்கப்பட்டதிலும் ஒரு நியாயம் இருக்கிறது...ஜீவி சார் ஆதங்கப்பட்டதிலும் ஒரு நியாயம் இருக்கிறது.<br /><br />ஒண்ணாங்கிளாஸ் படம் நடத்துபவரும் ஆசிரியர் தான்! டாக்டரேட் படிப்புக்கு வழிநடத்துவதும் ஆசிரியர் தான்! இரண்டு பிரியும் வாத்தி என்று அழைத்தால் அது சரியாக இருக்குமா? இது அவருடைய ஆதங்கம்!<br /><br />மேம்போக்காகப் பார்க்கும்போது அது சரியாகத் தான் இருக்கும் என்று பட்டாலும்,இரண்டு படிநிலைகளுமே வேறுதான் இல்லையா?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-39886890100186640842010-01-29T15:00:44.237+05:302010-01-29T15:00:44.237+05:30வாருங்கள் சங்கர்!
தி.ஜானகிராமன் தான் படைத்த பாத்...வாருங்கள் சங்கர்!<br /><br />தி.ஜானகிராமன் தான் படைத்த பாத்திரங்கள் வழியாக, அன்பையும் நேசத்தையுமே மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். அங்கே இங்கே ஒன்றிரண்டு வார்த்தைகளை வைத்துக் கொண்டு, அவரைப் பற்றிய நெகடிவான சித்திரங்களை விமரிசனமாக எழுதுவது, உண்மையிலேயே அப்படி எழுதுபவர்களின் இயலாமையையே காட்டுகிறது.<br /><br />ஒரு ஓவியன், சிற்பி, எப்படித் தான் சமைக்க இருக்கும் உருவத்தை மனதில் உள்வாங்கிக் கொண்டு உருவாக்குகிறார்களோ, அதே மாதிரி, தி.ஜா தான் பார்த்த மனிதர்களுடைய அகத்தை, அவர்களுடைய உண்மையான இயல்பை உள்வாங்கிக் கொண்டு பாத்திரங்களாகப் படைத்தவர்.<br /><br />அன்பு, எங்கும் எதிலும் அன்பு இதைத் தவிர தி.ஜாவின் எழுத்தைச் சொல்வதற்கு வேறு வார்த்தைகளே இல்லை! அன்பு சுரக்கும் விதத்தை அவர் மாதிரி வார்த்தைகளில் சொல்ல முடிந்தவர்கள் அனேகமாக இல்லையென்றே சொல்லி விடலாம்.<br /><br />எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது. ஆனால், அதன் ஆழத்தை, ஆத்மார்த்தமான பாவனையை, தி.ஜானகிராமனிடமிருந்து தான் அறிந்துகொண்டேன். அவருடைய வெளிச்சத்தில், கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் நாவலைப் படித்தபோது தான், இசை வேளாலர்களுடைய வாழ்க்கையை எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-46010826268800082462010-01-29T00:03:31.424+05:302010-01-29T00:03:31.424+05:30திஜாவின் படைப்புகளில் முதன்முதலில் (அவரைப் பற்றிய...திஜாவின் படைப்புகளில் முதன்முதலில் (அவரைப் பற்றியோ தமிழ் இலக்கிய உலகம் பற்றியோ அறிந்து கொள்ளும் முன், மேல்நிலை வகுப்பில், தமிழ் இரண்டாம் தாளின் பாடப் பகுதியாய் வந்த, அற்புதமான சிறுகதை தொகுப்பில்) படித்தது "முள்முடி" தான்.<br /><br />அன்று, மனதில் ஏற்பட்ட தாக்கம், நள்ளிரவில் பாதியிலிருந்து பார்க்கத் தொடங்கிய மோகமுள்ளால் அதிகமானது. இருந்தும் அப்போதைய கால கட்டத்தில் என்னால் வாங்க முடிந்தது மரப்பசு தான். (என்னை பாதித்த பல புத்தகங்களைப் போலவே) முதல் வாசிப்பு பத்து பக்கங்களைக் கூட தாண்ட முடியாமல் நின்று விட்டது. அடுத்தமுறை தொடங்கிய வாசிப்பு மூன்று முறை மீண்டும் மீண்டும் படித்த பின்பு தான்நிட்றது.<br /><br />2009 புத்தகக் காட்சியில் வாங்கிய மோகமுள்ளோ, ஆறு முறை வாசித்த பின்னும் இன்னும் என்னைக் குத்திக்கொண்டே இருக்கிறது. ராஜமும், அந்த வட நாட்டுப்பாடகரின் ஆலாபனையும் என்றும் மறக்க முடியாததாய் மனதில் உள்ளது. என்னால் ஐந்து நிமிடங்கள் கூட தொடர்ச்சியாய் கேட்க முடியாத கர்னாடக சங்கீதம் பற்றிய திஜாவின் வரிகளைப் படிக்கும் போது, இசைக்கலைஞராய்ப் பிறக்க வேண்டியவர், தவறி எழுத்தாளராகி விட்டாரா, என்று எஸ்ரா கேட்டது சரியென்றே தோன்றுகிறது.சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-13899526554446201232010-01-28T23:52:16.434+05:302010-01-28T23:52:16.434+05:30ஜீவியின் அந்தப் பதிவை இப்போது தான் படித்தேன்,
//ப...ஜீவியின் அந்தப் பதிவை இப்போது தான் படித்தேன்,<br /><br />//பேச்சு, எழுத்து, ஆற்றங்கரை, அல்லது வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு குழந்தைகளுக்குச் சொல்கிற கதை, இப்படி எதுவானாலும், சொல்லப் படுகிற ஒரு விஷயம்-அது எப்படிச் சொல்லப் படுகிறது இந்த இரண்டே அளவீடுகளுக்குள் அடங்கி விடும்போது கதை சொல்லி, எழுத்தாளர், கூத்துக் கட்டுகிறவர், உபன்யாசம் செய்கிறவர், இப்படி எல்லா வகை தொகைககுமே கூட அடங்கி விடுவதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.//<br /><br />உங்களின் மேற்கண்ட பின்னூட்டத்திலும் எனக்கு முழு ஒப்புதல் உண்டு, எழுத்தாளனை கதை சொல்லி என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும், தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராய் கொண்டாடப்படும் கிரா, கரிசலின் கதை சொல்லி தானே!சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-72601357709694251122010-01-28T22:46:29.439+05:302010-01-28T22:46:29.439+05:30வாருங்கள் சரவணன்! தமிழிலேயே பதிவு எழுதுகிறீர்கள்! ...வாருங்கள் சரவணன்! தமிழிலேயே பதிவு எழுதுகிறீர்கள்! பின்னூட்டம் மட்டும் ஆங்கிலத்தில்..?<br /><br />தி.ஜானகிராமன் என்று முழுமையாகச் சொல்லிப் பாருங்கள்! காவிரிக் கரையோரம் வீசும் ஒரு சுகமான காற்றை உங்களால் உணர முடியும்!<br />அவர் எழுதிய எந்தெந்தப் புத்தகங்களைப் படித்திருக்கிறீர்கள், உங்கள் கருத்து என்ன என்பதையும் சேர்த்துச் சொல்லியிருந்தால், பின்னூட்டமும் கூட முழுமையாகஇருந்திருக்கும்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-26515827721479526602010-01-28T22:35:30.353+05:302010-01-28T22:35:30.353+05:30good said. great work about janaki . good effort.good said. great work about janaki . good effort.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com