tag:blogger.com,1999:blog-3470093017839928781.post7917979859584546627..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: S M S எம்டன் 22-09-1914 ! படித்தது, பிடித்தது, விமரிசனம்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-89523055271473774452010-01-07T00:26:28.379+05:302010-01-07T00:26:28.379+05:30எம்டன் கதாசிரியருடைய பிழை எதுவுமில்லை ஸ்ரீராம்! செ...எம்டன் கதாசிரியருடைய பிழை எதுவுமில்லை ஸ்ரீராம்! செய்தியில் தவறு இருந்தால், அது முழுக்க முழுக்க என்னுடையது தான். என்னுடைய குறிப்புக்களில் இருந்து எழுதியதை மறுபடி சோதித்த பொது, தமிழக அரசின் இந்த வலைப் பக்கங்களில் இருக்கும் செய்தி, இந்திய தேசீய ராணுவம் உருஆஅவதர்கு முன்னோடியாக செண்பகராமன் பிள்ளை அமைத்த இந்திய தேசீயத் தொண்டர் படை இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தளபதி என்ற வார்த்தை வேண்டுமானால் தவறாக இருக்கலாம், மற்றவை மறுபடி சோதித்து உறுதி செய்யப்பட்டவை.<br /><br />http://www.tn.gov.in/pressrelease/archives/pr2008/pr170708/pr170708_tyagi_shenbagaraman.pdf<br /><br /> இதில் இருக்கும் தகவலுமே, 1914 இல் முதல் உலகப் போர் மூண்டபோது எம்டன் கப்பலை இயக்கிவந்தார் என்று தவறான செய்தியோடு இருக்கிறது. செம்பகராமன் எம்டனில் இருந்தார் என்ற வதந்தியோடு, பாண்டிச்சேரி வந்தார் பாரதி, வ வே சு ஐயரைச் சந்தித்தார் என்றெல்லாம் ஏகப்பட்ட தவறான சமீப கால "வரலாற்றுத் தொடர்களில்"இருக்கின்றன. . திரு திவாகர், தன்னுடைய புத்தகத்தில், செம்பகராமன் எம்டனில் ஆரம்பகாலங்களில் இருந்திருக்கலாம், ஆனால், 1914 தருணத்தில் அந்தக் கப்பலில் இல்லை என்ற தகவலைஉறுதி செய்து எழுதியிருக்கிறார்.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-59458915871272662682010-01-06T21:30:13.462+05:302010-01-06T21:30:13.462+05:30எம்டன் பற்றிச் சொல்லும்போது நேதாஜியின் இந்திய தேசி...எம்டன் பற்றிச் சொல்லும்போது நேதாஜியின் இந்திய தேசிய ராணுவ தளபதி என்று சொல்லப் பட்டிருக்கிறது...<br />புத்தகத்தில் எப்படி சொல்லப் பட்டுள்ளது என்று தெரியாது...<br />இந்திய தேசிய ராணுவம் அமைக்கப் பட்டது 1942. நேதாஜி அதன் தலைவரானது 1943. செம்பகராமன் (செண்பகராமன் அல்ல!) எம்டனில் வந்தது 1914. எப்படி அவர் INA யின் தளபதியாக இருக்க முடியும்? 'ஜெய் ஹிந்த்' கோஷத்தின் முன்னோடி, INA முன்னோடி, என்றெல்லாம் நெட்டில் தகவல் அறியக் கிடைக்கிறது. 1934 இல் நாஜிகளால் செம்பகராமன் சித்ரவதை செய்யப் பட்டு இறந்தார். <br />இந்தத் தகவல் தவிர கதை பற்றி தங்கள் விமர்சனங்கள் கதையைப் படிக்கத் தூண்டுபவையாய் அமைகின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-74089458782786983112010-01-04T15:29:52.661+05:302010-01-04T15:29:52.661+05:30நீங்கள் சொல்வது போல சாண்டில்யன் கதைகளில் தமிழர் வர...நீங்கள் சொல்வது போல சாண்டில்யன் கதைகளில் தமிழர் வரலாறு வெளிப்படும். ஆதாரங்களும் தருவார். அவர் கதைகளின் வெற்றி என்பது ஒரு MGR, ரஜினி பாணி போல Hero வின் சாகசங்கள் வெளிப்படும் அழகு...அவனைப் பற்றி குறைவாக மதிப்பிடும் எதிரியை அனாயசமாக அலட்சியமாக கதாநாயகன் சந்திக்கும் அழகு...போர்த் திட்டங்கள் பற்றி விரிவான அலசல்...நாயக நாயகி சரசங்கள்...யவனராணி, கடல்புறா, ஜலதீபம் போன்ற கதைகளையும் பாத்திரங்களையும் மறக்க முடியாது. மைவிழிச்செல்வி, டைபீரியஸ், இதயச்சந்திரன், கனோஜி ஆங்கரே..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-70612899759576523052010-01-04T14:33:10.572+05:302010-01-04T14:33:10.572+05:30அலுத்துப் போனது சாண்டில்யன் எழுத்தில் இல்லை! கொஞ்...அலுத்துப் போனது சாண்டில்யன் எழுத்தில் இல்லை! கொஞ்ச அதிகமான வர்ணனை, சிருங்காரம் என்று ஒரே மாதிரி எழுதிக் கொண்டிருந்தார் என்று தான் தோன்றும்! ஆனாலும் விளக்கெண்ணெய் குடிக்கிற மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு சரித்திரத்தைப் படமாகப் படிக்க வேண்டுமே என்று தயங்குபவர்களுக்கு சாண்டில்யன் மாதிரி, ஒரு அற்புதமான ஆரம்பத்தை அவர் போலச் செய்தவர் இல்லை!<br /><br />பாரதம் எத்தனையோ வரலாற்று நிகழ்வுகளைச் சந்தித்திருக்கிறது. பன்முகத் தன்மை கொண்ட, பலதரப்பட்ட மொழி, இனங்களை உள்ளடக்கியது. சாண்டில்யனுடைய கதைகளுமே, பாரதத்தின் பன்முகப்பட்ட வரலாற்றைச் சொன்னவை தான்! உதாரணமாக, மலைவாசல் என்ற அவருடைய கதையை எடுத்துக் கொண்டால், ஹூணர்கள் சாரி சாரியாகத் தொடர்ந்து நடத்திய படையெடுப்பில், வலுவிழந்த குப்த சாம்ராஜ்யம், ஹூணர்களும் கூர்ஜர மக்களும் சேர்ந்து உருவான கலப்பு இனம், இன்றைய ராஜபுத்திரர்கள் என்று நிறையத் தகவல்களைச் சொல்கிறது.<br /><br />அது மட்டும் தானா? Devaluation of the currency என்பது இன்றைய காகிதப்பணம் வந்த பிறகுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் இல்லையா? அந்த நாணய மாற்றுக் குறைவுகூட குப்த சாம்ராஜ்யம் சரிய ஆரம்பித்தபோது நடந்தது தான் என்பதை, ஆதாரங்களோடு சொல்கிறது!<br /><br />வர்ணனைகள் அலுத்துவிட்டால், அந்தப் பத்தியை மட்டும் ஒதுக்கி விட்டு, சாண்டில்யனை இன்னும் ஒரு தரம், அடுத்து ஒருதரம் வாசித்துப் பாருங்கள்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-78874949104953513292010-01-04T12:31:05.317+05:302010-01-04T12:31:05.317+05:30அருமையான அறிமுகம்.. நிச்சயம் வாசிக்க வேண்டும் போல்...அருமையான அறிமுகம்.. நிச்சயம் வாசிக்க வேண்டும் போல் இருக்கிறது... ebook ஆக கிடைக்கும் வசதியேதும் உள்ளதா!! முன்பெல்லாம் நூலகங்களில் எடுத்து வந்து வாசித்து கொண்டிருந்தேன், கடந்த 3 வரடமாக நூலகத்துக்கு செல்லவே நேரமில்லாதது போன்று கம்பியுற்றரே கதி என்று கிடக்கும் நிலை....<br /><br />வாசிக்க ஆரம்பித்தபோது வசிகரித்த சாண்டில்யனின் புத்தகங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் அலுத்துவிட்டன எனக்கு.. கிட்டத்தட்ட அவருடைய இருபது நாவல்களையாவது படித்திருப்பென்.. அதன் பின் புதிதாக ஒரு நாவலை ஆரம்பித்தால் கூட அடுத்த வரி என்னுமளவுக்கு தொடர்ந்து அவருடைய நாவல்களை வாசித்திருக்கிறேன்...Think Why Nothttps://www.blogger.com/profile/16313661524631297774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-77020053278503232012010-01-04T09:30:28.335+05:302010-01-04T09:30:28.335+05:30வாருங்கள் திரு கோவி கண்ணன்!
இது புத்தாண்டுக்காக ஆ...வாருங்கள் திரு கோவி கண்ணன்!<br /><br />இது புத்தாண்டுக்காக ஆரம்பிக்கப் பட்ட புது வலைப்பதிவு இல்லை! புத்தகங்களைப் பேசுவதற்காக, பார்த்ததில், கேட்டதில் மனதில் தங்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, ஒரு வாசகனாக வெளிப் படும் முயற்சி! கிறிஸ்துமஸ் அன்றே நுழைவாயில்திறந்தாயிற்று!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-88367669024389194162010-01-04T07:49:19.096+05:302010-01-04T07:49:19.096+05:30புத்தாண்டில் புது வலைப்பதிவுக்கு வாழ்த்துகள் !புத்தாண்டில் புது வலைப்பதிவுக்கு வாழ்த்துகள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com