Pages

Tuesday, January 15, 2019

எது சமூக நீதி? தொடரும் விவாதங்கள்!

கனிமொழி, என்ன அநியாயம் இது என்று ஒரே ஒரு கேள்விதான் சூடாகக் கேட்டார்! அதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் TK ரங்கராஜன் பரபரப்பான, பேசும் பொருளாகி விட்டார்! ஓசி விளம்பரமாகக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்! ஆனால் தெளிவான விடைகள் கிடைக்கிறதா என்பதை பார்க்கும் மக்கள் தான் வந்து சொல்லவேண்டும்!


red publicly

2 comments:

  1. ரங்கராஜன் அவர்களின் நிலைப்பாடு சரியாகத்தான் தோணுது. தொலைக்காட்சி சேனல், தங்களுடைய முதலாளிகளின் நிலைப்பாட்டைத் திணிக்க முயற்சி செய்வதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

    கம்யூனிஸ்ட் கட்சியும், இட ஒதுக்கீடு பெற்ற சாதியினரிடையே, மூன்று முறை முன்னுரிமை பெற்றவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முன்னுரிமை வேண்டும் என்றும் போராடணும். மூன்று தலைமுறையா பயன் பெற்றும், தங்கள் சாதியின் மற்றவர்களுக்கு உரிமை போய்ச்சேர வேண்டும் என்று எண்ண வேண்டாமா?

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழன்! முந்தைய பதிவில் நீங்கள் சொல்லியிருந்த ஐடியா ஒர்க் அவுட் ஆவுமா ஆவாதா என்றொரு கேள்வியை உங்கள் முன் வைத்திருந்தேனே!

      மார்க்சிஸ்டுகள் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்கிற தங்கள் நிலையில் நிற்கிறார்கள் என்பது வரை சரி! ஆனால் விபி சிங் மண்டல் கமிஷன் பூதத்தைத் திறந்து விட்டபோது அதற்கும் ஆதரவு என்று தங்கள் நிலைபாட்டில் ஒரு மழுப்பலான இரண்டுங்கெட்டான் நிலையை எடுத்ததைப் போலவே, இப்போதும் பூசி மெழுகுகிறார்கள் என்பது புலப்படவில்லையா? தங்கள் நிலையை இங்கே தமிழகத்தில் வெளிப்படையாக அறிவித்து, அதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டியதுதானே? தனியாக விடப்படுவோம் என்பதாலா?

      Delete