Pages

Sunday, March 24, 2019

சண்டே போஸ்ட்! சாணக்யா Leaks! சதிவேலைகள்!

நேற்றிரவு ரங்கராஜ் பாண்டேவிடமிருந்து இப்படி ஒரு செய்தி வந்திருந்ததைக் காலையில் தான் கவனித்தேன்.

கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜை பிரதீப் என்பவர் சந்தித்து, 'முதலமைச்சர் எடப்பாடி பெயரை இழுத்துவிட்டால் தான் நீங்கள் தப்பிக்க முடியும்; நாங்கள் சொல்கிறபடி சொன்னால், டில்லியில் இருக்கும் பத்திரிக்கையாளர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்' என சொல்லிக் கொடுக்கும் அதிர்ச்சி வீடியோ...! இதன் பிறகு தான், சாம் மாத்யூவின் வீடியோ வெளியே வருகிறது.
அப்படியானால்...? மேல் விவரங்கள் அடுத்த வீடியோவில்...! என்ற முன்னோட்டத்துடன் முதல்வீடியோ இன்று காலை 11.30
மணிக்கு முதல் வீடியோ வெளியாகியிருக்கிறது.

ஆடியோ கொஞ்சம் சுமார் ரகம்தான்! தமிழில் subtitle கொடுத்து ஈடுகட்டியிருக்கிறார்கள்.

அரசியல் சித்துவிளையாட்டுகளை இப்படி அம்பலப் படுத்துவதால் என்ன மாற்றங்கள் நிகழும் அல்லது நியாயம் கிடைக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம். தா கிருஷ்ணன், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்சா என்று பலகொலைகளில் சம்பந்தப்பட்டிருப்பது யாரென்பது பொதுவெளியில் தெரிந்த விஷயமாக இருந்தும் கூட, இங்கே என்ன நடந்துவிட்டது?     

இருந்தாலும் ரங்கராஜ் பாண்டே முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் தெரிவிக்க வேண்டியது நம்முடைய கடமை! 

நல் வாழ்த்துகள் ரங்கராஜ் பாண்டே!

தொடர்புடைய  இன்னொரு பதிவு: 

உள்ளடி வேலைகள்! கான்ஸ்பிரசி தியரி! நம்மூர் ஊடகங்கள்!

     

4 comments:

  1. எல்லா இடங்களிலும் உளவாளிகள் இருப்பார்கள் போல...

    ஆனால் இது அப்படியே காணாமல் போகுமே தவிர பெரிய பின்விளைவு ஏதும் வருமா, தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த விவகாரம் எப்படிப்போகும் என்று கணிக்க முடியவில்லை. திமுக தரப்பில் டமாரங்கள் எண்ணிக்கை அதிகம் .பூசி மெழுகவும் மூடி மறைக்கவும் வசதி வாய்ப்புள்ள தரப்பு அது.

      Delete
  2. Paid News என்று ஒன்று உண்டு. சம்பந்தப்பட்டவர்கள் பற்றி ஏதாவது செய்தி - சாதாரண செய்தி- தினமும் வந்துகொண்டே இருக்குமாம். எங்கோ படித்தேன் சமீபத்தில். இங்குத்தானோ!

    ReplyDelete
    Replies
    1. #paidnews பற்றி 2009 இலிருந்தே எழுதிவருகிறேனே ஸ்ரீராம்!

      Delete