Pages

Thursday, April 25, 2019

செந்தமிழர் சீமான் உதவியாளர் செந்தமிழில் ...!

செந்தமிழர் சீமான் உதவியாளரோடு யாரோ ஒருவர் பேசுகிற ஆடியோ வைரலாகி வருசிறதாம்! நல்ல செந்தமிழில் இருப்பதாக பொன்மாலை பொழுது பதிவர் மாணிக்கம் முகநூலில் பட்டியல் போட்டு சொல்கிறார். சஸ்பென்ஸ் தாங்க முடியாமல் ஒன்றிரண்டைக் கேட்டதில் திராவிடங்கள் என்ன செய்தனவோ அதையேதான் தமிழ்த் தேசியமும் பின்பற்றி வருகின்றன என்பது தெளிவாகப் புலப்படுகிறது.  


இந்தமாதிரி  அருவருப்பான உரையாடல்களுக்கு இந்தப் பக்கத்தில் இடம் கொடுத்திருப்பதற்காக உண்மைலேயே வருத்தப்படுகிறேன். ஆனால் எப்படிப்பட்ட சீரழிவில் சிக்கி இருக்கிறோம் என்பதைச் சொல்வதற்காக, இதற்கும் இடம் கொடுத்தாக வேண்டியிருக்கிறது.
   
#நாடகத்தமிழ் என்று சங்கரதாஸ் சுவாமிகளும் அவரது அடி ஒற்றி வந்தவர்களும் வளர்த்த தமிழும்  வள்ளிதிருமணம் மேடை நாடகமும்  இவர்களிடம் சிக்கிக் கொண்டு என்ன பாடு படுகிறது என்பதைக் கொஞ்சம் பாருங்கள்!


ஆடியன்ஸ் ரசித்துச் சிரிக்கிறார்கள் என்பதற்காக இவ்வளவு கொச்சையாகப் பேசவேண்டுமா என்ன? குற்றம் அவர்களிடம் இல்லை, இதையெல்லாம் சகித்துக் கொண்டு அல்ல, ரசிக்கவே பழகிவிட்ட நம்மிடமல்லவா இருக்கிறது! எப்போது இதை நாம் புரிந்துகொள்ளப் போகிறோம்?

செய்திகளின் உண்மைத்தன்மை என்ன என்பதை அறியாமல் அப்படியே நம்பிவிடுவதோ, ஆவேசப்படுவதோ இல்லாமலிருக்கப் பழகுவது முதல்படி!  #திராவிடமாயை #திராவிடப்புரட்டு களிலிருந்து முழுமையாக விடுபடுவது அடுத்த  படி!  
பிரதமர் நரேந்திரமோடியுடன் நடிகர் அக்ஷய் குமார் நடத்திய நேர்காணலின் வீடியோ இப்போதுதான் கிடைத்தது. இதன் தமிழ்வடிவத்தை இன்று இன்னொரு வலைப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தென்ன என்பதைச் சொல்லுங்கள்!    





2 comments:

  1. //இந்தப் பக்கத்தில் இடம் கொடுத்திருப்பதற்காக // - Does not add value to this site.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார்! யூட்யூப் லிங்குகளை நீக்கிவிட்டேன். அவை இல்லாமலேயே சொல்லவந்த கருத்து இங்கே வருகிறவர்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன்!

      Delete