Pages

Monday, July 29, 2019

கொஞ்சம் சினிமா! கொஞ்சம் சுவாரசியம்!

இந்தப்பக்கம் இன்றைக்கு என்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் என்னைப் பற்றி எழுதேன் என்று ஒரு திரைப்படக் காட்சித்துணுக்கு முன்னுக்கு வந்து நின்றது. அதை நீங்களும் கொஞ்சம் பாருங்களேன்!

  
பசங்க படத்தில் வரும் ஒரு அருமையான காட்சி இது. இன்று பார்க்கும்போது கூட மனதைத்தொடும் காட்சியாக! தனது அனுபவத்தையே கொஞ்சம் விவரித்து,  இது என்னுடைய தனிப்பட்ட கருத்துதான் உங்களுக்கான உபதேசம் கிடையாது என்று சொல்கிற இடம்! கொஞ்சம் பார்த்துவிட்டு என்ன தோன்றுகிறது என்பதைச் சொல்லுங்களேன்!


ஒரு சவூதி, ஒரு இந்தியன், ஒரு ஈரானியன் என்று இந்த மூவரும் கத்தாருக்குப்போனால் அதுவும் ஒரு bar என்றால் எப்படி இருக்கும்? ஏழுவருடங்களுக்கு முந்தைய வீடியோதான்! ஆனால் 115 லட்சம் முறை பார்க்கப் பட்ட ஒரு 7 நிமிட வீடியோ என்கிறது யூட்யூப் தளம்! Standup Comedy க்கு நாம் அதிகம் பழகவில்லை, இல்லையா? சிரிக்க முடிகிறதா என்று கொஞ்சம் பாருங்களேன்!


திருமுருகன் காந்தி என்பது தான் இந்த ஆசாமியின் உண்மைப் பெயரா? எனக்கு அது தெரியாது, அக்கறையும் இல்லை! ஆனால் இது மாதிரி இன்ஸ்டன்ட் போராளிகள் தமிழ் நாட்டின் standup comediians   ஆவதற்கு  போட்டிபோட்டுக் கொண்டு அரசியல் பேசுவதைவிட சுவாரசியமான காமெடி இருக்கிறதா? 


வீட்டுக்கு வீடு! 1970 சி வி ராஜேந்திரன் இயக்கத்தில் வந்த ஒரு  
நகைச்சுவைப் படம். ஜெய்சங்கர் லட்சுமி ஜோடி, ஸ்ரீதர் படக்கம்பெனியின் ஆஸ்தான நடிகராக இருந்த முத்துராமனும் இருக்கிறார், நாகேஷ் வி  கே ராமசாமி காமெடி கலக்கல் என்றால் கீழே நாகேஷுக்காக நடிகர் TS பாலையாவின் மகன் சாயி பாபா பாடிய அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ பாடல் இன்னும் சூப்பர் கலக்கல்!
     

கொஞ்சம் ரசிக்க முடிகிறதா?

மீண்டும் சந்திப்போம்.  

4 comments:

  1. திருமுருகன் காந்தி, திமுகவைக் கேள்வி கேட்க என்ன யோக்கியதை இருக்கிறது என்று தெரியவில்லை. திருமுருகன் காந்தி (டேனியல் காந்தி என்று சொல்றாங்க) தேர்தலில் நின்றால் 2 வாக்குகள் கூடப் பெற மாட்டார். அவரவர் தகுதியை அவரவர் முதலில் புரிந்துகொள்ளணும்.

    ReplyDelete
    Replies
    1. திமுக இவர்மாதிரி fringe elements களைத்தானே தன்னுடைய பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது? அந்தவகையில் திமுகவைக் கேள்விகேட்க இவருக்கில்லாத உரிமையா?

      தேர்தலில் நிற்பதற்காகவா மே 17 இயக்கத்தை நடத்துகிறார்? ஈழத்தமிழர் ஆதரவு என்பது இங்கே பலருக்கும் ஆகிவந்த ஒரு வியாபாரம்! திக,மே17 இன்னபிற இயக்கங்களெல்லாம் ஒன்றுபடுகிற ஒரே புள்ளி.அந்த ஒரு வியாபாரத்தில் தானே!

      Delete
  2. திருமுருகன் ஒரு உளறுவாயன். அவருக்கு என்ன நடக்குது என்று ஒன்றும் தெரியாது. அவருக்கு 'இஸ்லாமியர்கள் எல்லோரும் அப்பாவி', 'ஆர் எஸ் எஸ். பயங்கரவாதிகள்' என்று சொல்கிறார். இதையும் இவருக்கு யார் பணம் கொடுக்கிறார்களோ அவர் சொல்படி பேசுகிறார்.

    ReplyDelete
    Replies
    1. இஸ்லாமியர்களோடு ஒன்று பட்டு நிற்கிற மாதிரிக் காட்டிக் கொள்வதும் கூட இங்கே விசிக உள்ளிட்ட உதிரிகளுக்கு ஒரு அஜெண்டாவோடுதானே,நெல்லைத்தமிழன் சார்! லுலுலாயிக்காகப் பேசுகிறவனுக்கு விவரம் தெரிந்திருக்க வேண்டுமா என்ன? ,

      Delete