Pages

Saturday, May 2, 2020

பார்த்தது! கேட்டது! படித்ததில் பிடித்தது!

இன்றைக்குப் பார்த்த செய்திகளில் முக்கியமானதாக எனக்குப் படுவது #MakeChibaPay என்ற ஒற்றை முழக்கத்துடன் சில நாடுகள் முன்னெடுத்திருக்கிற சில விஷயங்கள்தான்! சீனா தன்னுடைய ஆதிக்கவிஸ்தரிப்புக் கனவுகளில்  நிறையவே தப்புக்கணக்குப் போட்டதுதான் மூலகாரணம், nCov 19 வைரஸ் சீனாவின் கனவுகளை மொத்தமாகவே முடமாக்கிவிடும் போலத்தான் நிலவரம் இருக்கிறது.

   

இந்தியா இந்தவிஷயத்தில் மிகவும் நிதானமான போக்கைக் கடைப்பிடிப்பது உசிதம்தானா? கேள்வி கேட்கலாம் தான்! ஆனால் பதில் சொல்வாரைத்தான் காணோம்! சீனாவிலிருந்து வளர்ந்த  நாடுகள் பலவும் தங்களுடைய தொழிற்சாலைகளை மூடிவிட்டுவெளியேறத் தயாராகி வருவதில் இந்தியாவுக்கு ஆதாயம் என்று பேசப்பட்டவை கூட வெறும் ஊகங்களாக மட்டுமே நின்று போயின. சீனாவை விட்டு வெளியேறும் உற்பத்திக்கூடங்களில் பெரும்பாலானவை வியட்நாமைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன. இன்றைக்கு உலகின் மிக மலிவான 
உற்பத்திக்  கூடமாக இருக்கும் சீனாவை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் இந்தியாவை கொண்டுபோய் வைக்கிற அளவுக்கு இந்தியத் தொழிலதிபர்கள் எவரும் தயார் நிலையில் இல்லை. அரசின் வரிச் சலுகைகளில் மட்டுமே ஒட்டுண்ணிகளாக உயிர்வாழப் பழகியவர்களிடம் புது முயற்சிகள், தயாரிப்புக்கள் என்று சந்தைக்குத் தகுந்தபடி மாறுங்கள் என்று சொன்னால் எப்படி? குறைந்தபட்சம் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் கூடத் தங்களை புதுப்பித்துக்கொள்ள, உளநாட்டிலேயே தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளத்  தயாராக இல்லாத ஒரு தொழில்துறையை என்னவென்று மதிப்பிடுவீர்கள்?  சீனாவும் இன்னும் பல நாடுகளும் முன்னெடுத்த RCEP பிராந்திய அளவிலான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இந்தியா ஒதுங்கி கொண்டது இந்தியத் தொழில்துறை இன்னமும் மாற்றத்துக்குத் தயாராக இல்லை என்பதனால் தான் என்பதைக் கசப்போடு நினைவு படுத்திக்கொள்ள வேண்டி வருகிறது. இப்போது இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தியிருக்கிற நெருக்கடி பலபுதிய வாய்ப்புக்களையும் சேர்த்தே கொண்டுவந்திருக்கிறது. 


இந்தக்கூத்து பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில்தான்! 

இன்றைக்கு படித்ததில் மிகவும் பிடித்தது: 

குட்டி தமிழ்வாணன்

ஒரு எழுத்தாளர் பற்றி மிகையாக அந்த காலத்தில் கற்பனை கதைகள் சிறுவர்கள் மத்தியில் இருந்தது.
தமிழ்வாணனுக்கு ஒரு கண் கிடையாது. ஒரு கை கிடையாது. இப்படி.
பள்ளிக்கூட லைப்ரரிகளில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் புத்தகங்களுக்கு செம டிமாண்ட்.
சங்கர்லால் துப்பறிகிறார். அப்புறம் துப்பறியும் கதைகள் தமிழ்வாணன் துப்பறிகிறார்.

’கல்கண்டு’ தமிழ்வாணன் ஒரு pompous person.
தன்னைப்பற்றி எப்போதும் மிகப்பெரிய அளவில் பில்ட் அப் பண்ணுவார். எம்.ஜி.ஆர் காவல்காரன் படத்தில் நடித்ததற்கு பிறகு தொப்பியுடன் எப்போதும் பொது இடங்களுக்கு வர ஆரம்பித்தார். தொப்பி, கூலிங் க்ளாஸ் சகிதம் தான் எப்போதும் இருக்க ஆரம்பித்தார். கல்கண்டு பத்திரிக்கையில் தமிழ்வாணன் கேள்வி பதில்கள் பிரபலமானவை.

கேள்வி : எம்.ஜி.ஆர் இப்போது எப்படியிருக்கிறார்?

தமிழ்வாணன் பதில் : ’எம்.ஜி.ஆர் இப்போது ஒரு குட்டி தமிழ்வாணன் போல் இருக்கிறார். தமிழ்வாணன் தொப்பி வைத்திருப்பது போல அவரும் தலைக்கு ஒரு தொப்பி வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்வாணன் கறுப்பு கண்ணாடி போட்டிருப்பது போல எம்.ஜி.ஆரும் கண்ணுக்கு கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார். மொத்தத்தில் அவர் ஒரு குட்டி தமிழ்வாணன் போல மாறியிருக்கிறார்.’

Worst Arrogance. Thinking too much of oneself. Superiority complex.

அன்று எம்.ஜி.ஆருக்கு இருந்த பிரமாதமான அந்தஸ்து தெரிந்தும் இப்படி ஒரு பீற்றல்.
எம்.ஜி.ஆர் என்ன, எம்.ஜி.ஆர் ரசிகர்களே இதைப்பார்த்து எரிச்சல் படாமல் இருக்க முடியுமா?

கல்கண்டு பத்திரிக்கையில் எப்போதும் எம்.ஜி.ஆர் மலையாளி, கிழவன் என்றெல்லாம் கிண்டல் செய்து கொண்டுமிருந்தார்.

உலகம் சுற்றும் வாலிபன் படத் தயாரிப்பு காலத்தில் எம்.ஜி.ஆர் ஹாங்காங்கில் தமிழ்வாணன் சட்டையைப் பிடித்து மிரட்டி எச்சரித்த போது மிரண்டு போய்விட்டார்.‘துணிவே துணை’ என்று முழங்கியவர் கல்கண்டு ஆசிரியர்.

“நூறு வயது வரை வாழ்வது எப்படி?” என்று விளக்கமாக ஒரு புத்தகம் எழுதினார்.

தமிழ்வாணனுக்கு அப்புறம் தான் ஐம்பது வயது முடிந்தது. அதன் பின் ஐம்பத்தொரு வயதும் முடிந்து ஒரு ஆறு மாதத்தில் செத்துப்போனார். ஐம்பத்தொன்றரை வயது தான் தமிழ்வாணனுக்கு லபித்தது.
அவர் இறந்து நாற்பத்தியொரு வருடங்கள் இப்போது ஓடி விட்டது. நூறு வயதாக இன்னும் எட்டு வருடங்கள் இருக்கிறது.

The advise you tell others is the advice you need to follow.

இவருக்கும் கண்ணதாசனுக்கும் ஏதோ மனஸ்தாபம் இருந்திருக்கிறது.

’கண்ணதாசன்’ மாதப் பத்திரிக்கையில் ‘அடுத்த இதழில் மாஸ்டர்  ஆஃப் ஆல் ஃப்ராட்ஸ் பற்றி ‘ என்று அறிவித்து ஒரு குறிப்பு இருந்தது.தமிழ் வாணன் தான் அது என்று பரவலாக ஹேஸ்யம்.

அப்போது தமிழ்வாணன் அகால மரணம் .

அடுத்த கண்ண தாசன் இதழில் மாஸ்டர் ஆஃப் ஃப்ராட்ஸ் கட்டுரை எதுவும் வெளியாகவில்லை. கப்சிப்.

வலையெழுத்து எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இன்றும் R P ராஜநாயஹம் எழுத்தே சாட்சி.

மீண்டும் சந்திப்போம்.  
  
   

2 comments:

  1. சீனா பற்றிய தன் முந்தைய நிலையை மாற்றிக்கொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா. (ஜெர்மனியோ)

    குர்தாஸ்பூர் சம்பவம் புன்னகைக்க வைக்கிறது.

    தமிழ்வாணனை எம் ஜி ஆர் மிரட்டிய தகவல் புதிது!

    ReplyDelete
    Replies
    1. நிலைமை அப்படி மாறிவிட்டதாகத் தெரியவில்லையே ஸ்ரீராம்! ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் வார்த்தைப்பொருடன் வர்க்கப்போரும் சேர்ந்து கொண்டிருப்பதாகத்தான் நேற்றைய நிலவரம். ஜெர்மனியும் சீனாவை நம்பியிருக்கிற நாடில்லை.

      Delete