Pages

Tuesday, February 2, 2021

#2021தேர்தல்களம் பாஜகவின் காவடிக்குப் போட்டியாக அங்கப்பிரதட்சிணமா?

தாத்தா கருணாநிதி பிரசார நாடகங்களில் நடித்தார்! மகன் இசுடாலின் குறிஞ்சிமலர் டிவி சீரியலில் நடித்தார். பேரன் உதயநிதி திரைப்படங்களில் நடித்தார். ஆனால் இவர்களுக்கு நடிப்பு சுட்டுப்போட்டாலும் வராதென்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான்! ஆனால் அசல் அக்மார்க் அரசியல்வாதிகளாக இவர்களுடைய நடிப்பு மகான் கவுண்டமணி சொல்கிற மாதிரி உலகமகா நடிப்புடா சாமீ என்பதை அறிந்திருக்கிறீர்களா?


முரசொலி தளத்துக்குப் போகாமலேயே என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதை இங்கே படிக்கலாம். 

தேமுதிக தொண்டன் பிரேமலதாவுக்குக் கடிதம் ஒன்று எழுதுகிற மாதிரி நேற்றைய முரசொலியில் சிலந்தி என்கிற புனைபெயரில் ஒரு மித்ர பேதம் செய்கிற கட்டுரை வெளியாகியிருக்கிறது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் ஆழுததாம்! அந்தமாதிரி நீலிக்கண்ணீர் வடிப்பது முரசொலியில் அந்த நாட்களில் கருணாநிதியின் ஸ்பெஷாலிட்டி! இப்போது இசுடாலின் துண்டுச்சீட்டைப் பார்த்து உளறுவதற்கே நேரம் சரியாக இருப்பதால் யாரோ மண்டபத்தில் எழுதிக்கொடுத்ததை முரசொலியில் போட்டு நிரப்பவேண்டியிருக்கிறதென்ற பரிதாபம் ஒருபக்கம் இருந்தாலும், திமுகவின் அரசியல் நாடகத்தனமானது,, நயவஞ்சகங்கள் நிறைந்தது! இதைத் தமிழ்நாட்டு மகாஜனங்கள் என்றுதெரிந்து கொள்கிறார்களோ அன்றுதான் தமிழகத்தைப் பிடித்த பெருவியாதிக்கு விமோசனம்! 

முழுச்செய்தியும் இங்கே   ஆதாரமில்லாமல் உதயநிதி ஏன் இப்படிப்பேச வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை அடுத்தே இப்படி ஒரு அந்தர்பல்டி. திமுகவினர் எந்தக்காலத்தில் உண்மையை, ஆதாரத்தோடு பேசியிருக்கிறார்கள்? கொஞ்சம் அரசியல் தெரிந்தவர்களுக்குக் கூட திராவிடங்கள் செய்வதெல்லாம் பொய்ச்செய்தியைத் தெரிந்தே பரப்புவதுதான் என்பது புரியுமே! நான் அதிமுக ஆதரவாளன் அல்ல, இரண்டு கழகங்களுமே தமிழ்நாட்டைப் பிடித்த சாபக்கேடுகள் தான் என்பதை உறுதியாக நம்புகிறவன். 

அதிமுக கூட்டணியில் சரத்குமார், லொடுக்குப்பாண்டி கருணாஸ் இருவரும்  2+ சீட்டுகளைக் கேட்கிறார்கள், AC சண்முகம் 8 சீட் கேட்கிறார், பாஜக, பாமக இரண்டும் சமமான சீட்டுக்களை கேட்கின்றன தேமுதிக பிரேமலதா 41 சீட் கேட்கிறார் இப்படி அதிமுக கூட்டணியில் விரிசல் என்ற செய்தியைப் பரப்பி, திமுக ஆதரவு ஊடகங்கள் திமுக கூட்டணியின் நிலை என்ன என்பதை சாமர்த்தியமாக மறைத்தாலும், இந்தவார முடிவுக்குள் இரண்டு கூட்டணிகளிலுமே என்ன நிலைமை என்பது ஏறத்தாழத் தெரிந்துவிடும். நாளை பாமக அதிமுக இடையிலான பேச்சுவார்த்தை என்னவாகும் என்பதிலிருந்தே அணிமாற்றம் இருக்குமா இருக்காதா என்பதும் ஒருவாறாகத் தெளிந்துவிடும்!  அங்கே திமுக, காங்கிரசைத் திருப்திப் படுத்தத் தவறினால் பெயரளவிலான மூன்றாவது அணி ஒன்று உருவாகலாம் என்ற பூச்சாண்டி நிஜமாகக்  கூட ஆகிவிடலாம்! 


திமுக என்ன லேசுப்பட்டவர்களா? பாஜகவின்  காவடிக்குப் போட்டியாக அங்கப்பிரதட்சிணம், மடிப் பிச்சை இப்படி சென்டிமென்டாக  எதையாவது செய்து ஓட்டுக்கேட்கத் தெரியாதா என்ன? !!

ஹிந்து ஓட்டுவங்கி என்று இன்னமும் உருவாகவே இல்லை என்கிற போதே இப்படியென்றால் ......?  

மீண்டும் சந்திப்போம்.              

4 comments:

  1. அங்கப்ரதட்சணம் ... அதுபோக,
    அலகு, அக்கினிச் சட்டி எல்லாம் இருக்கின்றனவே!...

    ReplyDelete
    Replies
    1. ஓட்டுப்பிச்சை எடுப்பதென்று வந்துவிட்டால் இப்படி வரிசையாகச் செய்துதானே ஆகவேண்டும் துரை செல்வராஜூ சார் !

      Delete
  2. மண்டையை உடைத்துக் கொண்டு அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்கள்.  என்ன ஆகும் என்று தெரிய இன்னும் சில மாதங்களே!

    ReplyDelete
    Replies
    1. நம்முடைய மண்டையை உடைக்காமல் இப்படி அவர்களே மண்டையைப் பிய்த்துக் கொள்ளட்டும் ஸ்ரீராம்! ஆனாக்க அந்தக்கழகம் ஆகாட்டி இந்தக்கழகம் என்று 2021 ரிசல்ட்டும் கூட ஏற்கெனெவே தெரிந்ததுதானே!

      Delete