tag:blogger.com,1999:blog-3470093017839928781.post7510061064718709194..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: கோழைச் சோழன்....! சாண்டில்யன்கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-8015217318314761512010-10-04T18:40:52.631+05:302010-10-04T18:40:52.631+05:30அங்கப்பன் சார்!
உங்களுடைய உண்மையான பிரச்சினைதான்...அங்கப்பன் சார்!<br /><br />உங்களுடைய உண்மையான பிரச்சினைதான் என்ன?<br /><br />விமரிசனத்துக்காக இங்கே நான் வருந்தவில்லை. இந்தப்பக்கங்களே விமரிசனங்கள், என்னுடைய மனதில் பட்டவைகளைச் சொல்வதற்காகத் தான்! பொருந்தாத இடத்தில் பொருந்தாத வாக்குவாதம் ஒன்றை நீட்டிக் கொண்டே போவானேன் என்பதும், விமரிசனங்களை சகித்துக் கொள்ள முடியாததும் ஒன்றல்ல.<br /><br /><br />தற்காலிகமாகக் கூட சோழனைக் கோழை என்று சொல்லக் கூடாது என்பது உங்கள் நிலைபாடு. அவ்வளவு தானே! உங்கள் வரை அப்படியே வைத்துக் கொள்ளுங்களேன்! எந்த ஒரு அரச பரம்பரை அல்லது சமுதாயமாக இருக்கட்டும், அதில் அத்தனை பேருமே வீரர்கள் இல்லை; அதே போல அத்தனை பேருமே கோழைகளும் இல்லை.<br /><br />தற்காலிகமாகக் கூட எந்த ஒரு சோழனையும் கோழை என்று சொல்லக் கூடாது....! வரலாறு சோழர்களுக்கு அப்படி ஒரு blank certificate கொடுக்கவில்லை. சோழர்களுக்கு மட்டுமே இல்லை, வேறு எவருக்குமே அப்படி ஒரு ஐ எஸ் ஐ முத்திரை இருந்ததில்லை!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-84579042259316963372010-10-04T14:58:00.020+05:302010-10-04T14:58:00.020+05:30I had to ask that question because you brought in ...I had to ask that question because you brought in the name of the great man as though in your support, I have myself no doubt about my statement.I have all praise for SriSamdilyan as <br />a novelist.I thought it was unjust to give the title<br />'Kozhai' even temporrily to a chola prince.<br />Let us close this discussion with the remarks,<br />'It is necessary to give due praise to a writer<br /> but any criticism need not be resented'vsangappanhttps://www.blogger.com/profile/14090431532662614421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-15645947237781699292010-10-01T20:40:43.329+05:302010-10-01T20:40:43.329+05:30அங்கப்பன் சார்!
படுத்துகிறீர்களே! உவேசா என்ன சொன...அங்கப்பன் சார்!<br /><br />படுத்துகிறீர்களே! உவேசா என்ன சொன்னார் என்பதை நீங்களே தேடித் பார்த்துக் கொள்ளலாமே! இந்தப் பதிவு, கிடைத்த ஒரு சிறு விவரத்தை வைத்துக் கொண்டு ஒரு திறமையான கதாசிரியர் எப்படிக் கதை பின்னுகிறார் என்பது! கூடவே, சங்கப்பாடல்களை வைத்துக் கொண்டு எந்த அளவுக்கு சரித்திரத்தை வரையறை செய்ய முடியும் என்ற கேள்வியையும் எடுத்துக் கொண்டு பேசியிருக்கிறேன்.<br /><br />இங்கே புத்தக, நூல் விமரிசனங்கள் மட்டுமே! தமிழாராய்ச்சி செய்வது இந்தப் பதிவின் உள்ளடக்கத்துக்கு அப்பாற்பட்ட விஷயம்.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-16248460864023140282010-10-01T15:02:19.682+05:302010-10-01T15:02:19.682+05:30Has u.ve.saa read the name as Porvaikko?Has u.ve.saa read the name as Porvaikko?vsangappanhttps://www.blogger.com/profile/14090431532662614421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-71119205022635135172010-09-27T21:17:08.521+05:302010-09-27T21:17:08.521+05:30புறநானூறு ஓலைப் பிரதிகள் இருந்த நிலையைக் கீழ்வருமா...புறநானூறு ஓலைப் பிரதிகள் இருந்த நிலையைக் கீழ்வருமாறு உ.வே.சா. கூறுகிறார் :<br /><br />‘உரையில்லாத மூலங்கள் எழுத்தும் சொல்லும் மிகுந்தும், குறைந்தும், பிறழ்ந்தும், திரிந்தும் பலவாறு வேறுபட்டிருந்ததன்றி இவற்றுள் சில பாடல்களின் பின் திணை எழுதப்படாமலும், சிலவற்றின் பின் துறையெழுதப்படாமலும் சிலவற்றின் பின் இரண்டுமெழுதப்படாமலும் சிலவற்றின் பின் பாடினோர் பெயர் சிதைந்தும், சிலவற்றின் பின் பாடப்பட்டோர் பெயர் சிதைந்தும், சிலவற்றின் பின் இருவர் பெயருமே சிதைந்தும், சில பாடல்கள் இரண்டிடத்து எழுதப்பெற்று இரண்டு எண்களை ஏற்றும், வேறு வேறிடத்தில் இருத்தற்குரிய இரண்டு பாடல்கள் ஒருங்கெழுதப்பட்டு ஓரெண்ணை ஏற்றும், சில முதற்பாகம் குறைந்தும், சில இடைப்பாகம் குறைந்தும், சில கடைப்பாகம் குறைந்தும், சில முற்றும் இன்றியும் ஒரு பாடலின் அடிகளுள் ஒன்றும் பலவும் வேறு பாடலின் அடிகளோடு கலந்தும், ஓரடியே ஒரு பாட்டுள் சிலவிடத்து வரப்பெற்றும் பொருளுண்மை காணாவண்ணம் இன்னும் பல வகைப்பட மாறியும் கையெழுத்துப் பிரதிகளில் இருந்தன.’<br /><br />நன்றி:டாக்டர் உவே சா நூல் நிலையம் <br />http://uvesalibrary.org/UVS_tamilThondu.htm<br /><br />போர் வைக்கோ, போர்வைக்கோ போரவைக்கோ இதில் எது சரி என்பதை உவேசா அளவுக்கு சிரமப்பட்டுத் தேட முனைந்தவர்கள் வேறு எவருமில்லை என்பதைக் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-2050536261036156832010-09-26T12:20:07.580+05:302010-09-26T12:20:07.580+05:30அங்கப்பன் சார்!
நான் ப்ராஜக்ட் மதுரை தளத்தில் இரு...அங்கப்பன் சார்!<br /><br />நான் ப்ராஜக்ட் மதுரை தளத்தில் இருந்து இந்தப்பாடல்களை சுட்டி கொடுத்து, எடுத்தாண்டிருக்கிறேன். வர்த்தமானன் பதிப்பக வெளியீடு பிழை இல்லாதது அல்லது பிழைதிருத்தம் செய்யப்பட்டதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.<br /><br />வர்த்தமானன் வெளிய்டுகளைக் கொஞ்சம் பார்த்த வகையில் திருப்தி இல்லாததால் பயன் படுத்துவதில்லை.<br /><br />போர்வைக்கோ அல்லது போரவைக்கோ, போறாமைக்கோ இப்படியே பேசிக் கொண்டிருப்பதைக் கடந்து கொஞ்சம் வெளியே வாருங்கள்! இந்தச் சிறுகதை, கிடைக்கும் ஒரு சிறு விஷயம் கூட நல்ல எழுத்தாளனின் திறமையை பட்டை தீட்டுவது போலாகிவிடுகிறது என்பதைச் சுட்டிக் காட்டத் தான் இங்கே பேசுபொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது. <br /><br />இந்த வலைப்பதிவை, வாசிப்பு அனுபவத்திற்காக மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறேன், தமிழ்ப் பண்டிதர்கள் வெட்டி அரங்கமாக நடத்திக் கொண்டிருப்பது போல விவாதத்தை, எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு விலகி நடத்துவதற்காக அல்ல!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-36460765778679242442010-09-26T10:47:34.012+05:302010-09-26T10:47:34.012+05:30The name of the prince is actually PORAVAIKKO and
...The name of the prince is actually PORAVAIKKO and<br />not PORVAIKKO Por + avai = poravai stands for the <br />place where the wrestling match is conducted.<br />Please see the text published by Pulavar<br />A.Manikkanar,M.A.(Varthamanan Pathippakam}for the<br />correct name of the prince.vsangappanhttps://www.blogger.com/profile/14090431532662614421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-58551480873365853792010-09-26T01:19:44.751+05:302010-09-26T01:19:44.751+05:30I now find in my book that the name of the prince...I now find in my book that the name of the prince<br />was poravaikko and not porvaikko. It is por + avai<br />Poravai refers to the place where the wrestling <br />match is conducted. With this name he cannot be<br />called a 'kozhai' It is obvious that the whole <br />confusion is due a different edition of the text<br />referred to by the author,in which the name is<br />given as porvaikko.<br /> I am using the edition given by Pulavar <br />A.Manikkanaar {Varthamaan Pathippakam)in which<br />the name is given as poravaikkovsangappanhttps://www.blogger.com/profile/14090431532662614421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-47714676928148032062010-09-25T18:12:15.148+05:302010-09-25T18:12:15.148+05:30அங்கப்பன் சார்!
போர்+வைக்கோ என்று பதம் பிரித்து அ...அங்கப்பன் சார்!<br /><br />போர்+வைக்கோ என்று பதம் பிரித்து அர்த்தம் கொள்கிறீர்களா என்ன! அப்படியாயின்,வைக்கோ, வைக்கோலின் மரூஉ என்று வைத்துக் கொள்ளலாமா?<br /><br />:-)))<br /><br />தற்போதைய தமிழ்ப்பண்டிதர்கள், வித்தகர்களை விட சாண்டில்யன் தமிழ், வடமொழி இரண்டையும் நன்கு கற்றவர். பரந்த வாசிப்பு அனுபவம் உள்ளவர். இந்தக் கதைக்கே திரு ராஜ கோபால ஐயங்கார் என்பவர் எழுதிய சங்க சிந்தாமணி என்ற நூலைத் தான், புறநானூற்றுப் பாடல்களுக்குப் பொருள் கொள்வதில் எடுத்தாண்டதாக தனது கதையின் அடிக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு ஆசிரியனிடம் பாடம் கற்றுக் கொள்ளப் பிள்ளையை அனுப்புகிற சோழ மன்னன், அங்கே ஆசிரியர் தமிழ் அல்லது வேறு பாடம் சொல்லித் தந்தாரா, அல்லது மற்போர் சொல்லித் தந்தாரா என்பதை அறியாமல் இருந்தததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே!<br /><br />ஒரு சிறுகதையை விவாதித்தே நாம் இருவரும் முனைவர் பட்டத்திற்குத் தயார் செய்துகொள்ளப் போகிறோமா என்ன!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-29024905216108686262010-09-25T16:58:13.665+05:302010-09-25T16:58:13.665+05:30por probably refers to the prowess of the prince i...por probably refers to the prowess of the prince in wrestling which is murrppor and vaikko is a given name like killi<br />sakuni is brought in because of pakadai which is accounted for by 'mukkadu' which is nesessary for this meaning for 'porvaikko'.<br />It is amazing that a poet taught wrestling to the prince without the king knowing about it.<br />However I am all praise for the manner which <br />a romance is built up with a happy endingvsangappanhttps://www.blogger.com/profile/14090431532662614421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-40590106009589095822010-09-25T11:34:03.822+05:302010-09-25T11:34:03.822+05:30முதல் வருகைக்கு நன்றி திரு.அங்கப்பன்!
புறநானூற்று...முதல் வருகைக்கு நன்றி திரு.அங்கப்பன்!<br /><br />புறநானூற்றுப் பாடல்கள் எண்பதில் இருந்து எண்பத்தைந்து வரையிலான ஆறு பாடல்கள் போர்வைக்கோ பெருநற்கிள்ளி என்ற சோழ மன்னனைப் பாடுவதாக இருக்கின்றன. பாடியவர்கள் இருவர், முதல் மூன்றை சாத்தந்தையார் என்பவரும், அடுத்த மூன்றை நக்கண்ணையார் என்பவரும் பாடியிருக்கிறார்கள்.இதற்கு முந்தைய பதிவில் இதைக் கொஞ்சம் வாசகர் சிந்தனைக்கு வைத்திருந்தேன். இந்த ஆறு பாடல்களில் எந்த அளவுக்கு, என்ன சரித்திரம் இருக்க முடியும் என்பது தான் கேள்வி.<br /><br />கிடைக்கும் ஒரு இழையை வைத்துக் கொண்டு தன்னுடைய கற்பனையையும் சேர்த்துக் கதை பின்னுவது தான் ஒரு கதாசிரியனுடைய பணி. வராலாற்று இழை என்பதால், அதில் சொல்லப்பட்டிருப்பதையும் மீறிப் போய்விடக் கூடாது, அதே நேரம் ஒரு நல்ல கதையையும் சொல்லவேண்டும். இந்த ஒரு சங்கடம் தான், சரித்திரக்கதைகள் எழுதுவதில், இங்கே இன்றைக்கு நிறைய எழுத்தாளர்களை முயற்சி செய்ய விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.<br /><br />போர்வைக் கோ இந்த வார்த்தைக்கு வேறென்ன பெரிய அர்த்தம் தகுந்த ஆதாரங்களுடன் சொல்லி விட முடியும்? அப்படி ஒன்றை நீங்கள் சொல்ல முடிந்தால், இந்த அடைமொழியை சாண்டில்யன் பயன் படுத்தியது அதீதமானது, நியாயமில்லாதது என்று ஒப்புக் கொள்வதில் எனக்குத் தயக்கமே இல்லை. தவிர உயர்வுநவிற்சி என்ற உயர்த்திக் கூறுதல், தமிழ்க்கவிஞர்களால் எவ்வளவு மிகைப்படுத்தப்பட்டது என்பதை நீங்கள் அறிந்திருந்தால். இந்தக் குற்றச் சாட்டுக்கே அடிப்படை இல்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள். <br /><br />தன்னைக் கோழையாகக் காட்டிக் கொண்டு உள்ளுக்குள்ளே வீரம் கனலாக நீறு பூத்திருந்த ஒரு இளைஞன், அவனுக்கு வெளியுலகைத் தனியாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை, இதை நியாயப் படுத்துகிற விதத்தில் பெண்களைப் போல பட்டால் தான் உடல் முழுதையும் மறைத்திருந்தவன் என்ற அர்த்தத்தை வைத்துக் கொண்டு கதையை ஆரம்பிக்கிறார். பாடல் எண்பதில் தான் ஆமூர் மல்லனை வெற்றி கொண்ட விஷயம் பேசப்படுகிறது. அடுத்துக் கதை ஆமூரை நோக்கி நகர்கிறது. மல்லனைப் போருக்கழைக்கவும் ஒரு காரணம் வேண்டாமா?<br /><br />ஆகக் கிடைத்திருக்கிற ஒரே ஒரு சிறு இழையை வைத்துக் கொண்டு ஒரு அழகான கதையாக ஆக்கத் தெரிந்த பக்குவம் சாண்டில்யன் ஒருவருக்கு மட்டுமே இருந்தது என்பது தான் இந்தச் சிறுகதையை வைத்து நான் சொல்ல வந்தது.<br /><br />அப்புறம், சகுனியை இந்தக் கதையில் பேசியிருப்பது பொருத்தமாக இல்லையே என்கிற உங்கள் குறை! பகடை என்று சொன்ன உடனேயே அங்கே அந்தக் கலையில் வல்லவனாக சகுனியும் வந்து விடுகிறான். வீரனாக வில்லும், வாளும் ஏந்த வேண்டிய கைகள் பகடையை பிடித்துக் கொண்டிருப்பதில் வெறுப்புக் கொண்டு தித்தன் தான் மகனை இழித்துச் சொல்லும் வார்த்தைகள் அவை!<br /><br />பாரதத்தில் வரும் சகுனி, கோழையோ, வால் பிடிக்கத் தெரியாதவனோ இல்லை! தன்னுடைய சொந்த தேசமான காந்தாரத்தையும் வெற்றிகொண்டு தங்களுடைய ஆட்சியின் கீஏழ் கொண்டு வந்த குருவம்சத்தவர் மீது அவனுக்குள் இருக்கும் கொதிப்பு, வஞ்சமாக மாறி, தன்னுடைய மருமகனான துரியோதனனைக் கைக்குள் போட்டுக் கொண்டு குருவம்சத்தவரைப் பழிவாங்கும் அளவுக்குப் போகிறது.<br /><br />ஒரு சிறுகதையை, அதன் எல்லைக்குள் நின்று பார்க்கும்போது அதன் அழகே தனி!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-45993539247464746672010-09-25T11:01:21.019+05:302010-09-25T11:01:21.019+05:30chandiyan is famous as a writer of historical fict...chandiyan is famous as a writer of historical fiction in tamil. The way in which he has woven<br />a story based on the 'purananooru' verse is commendable. But I am afraid his interpretation of the title 'porvaikko'as a feminine covering of the head is far fetched and unjust. It is possible to give a fair interpretation of the title as relating relating to the prince's valor as a wrestler. <br /> It was not necessary to refer to Sakuni at all<br />in this connection.vsangappanhttps://www.blogger.com/profile/14090431532662614421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-40659477582730092962010-09-05T09:16:45.590+05:302010-09-05T09:16:45.590+05:30வாருங்கள் திரு சரவணன்!
சாண்டில்யனுக்கு நிகர் அவரே...வாருங்கள் திரு சரவணன்!<br /><br />சாண்டில்யனுக்கு நிகர் அவரே என்பதெல்லாம் சரிதான்! சரித்திரக் கதைகளைப் படிப்பதிலும், பரந்த தளங்களைத் தொட்டும், இந்த தேசத்தின் பலபகுதிகளின் வரலாற்றைத் தொட்டும் கதைகள் எழுதியவர் அவர் ஒருத்தர் தான்! ஆனாலும், கல்கிக்குக் கிடைத்த வெளிச்சம் அவருக்குக் கிடைக்கவில்லை என்பது வருத்தப் பட வேண்டிய விஷயம்! கல்கிக்கு இருந்த நிறுவன பலம் அவரிடம் இல்லை.<br /><br />எல்லாம் சரி!<br /><br />இந்தக் கதைக்கு ஆதாரமாக, புறநானூற்றின் ஆறு பாடல்கள்! அதில் முதல் பாடல் ஒன்றில் தான் ஆமூர் மல்லனை வென்ற நிகழ்வைப் பற்றி பாடியிருக்கிறது. இந்தப் பாடல்களை வைத்து சரித்திரம் எவ்வளவு, புனைவு எவ்வளவு என்ற கேள்விக்கு நீங்கள் இன்னமும் விடை சொல்லவே இல்லையே!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-2221009812822677752010-09-04T23:36:58.694+05:302010-09-04T23:36:58.694+05:30சரித்திரத்துடன் புனைவு அருமை. வாழ்த்துக்கள். பகிர்...சரித்திரத்துடன் புனைவு அருமை. வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி. அவருக்கு இணை அவரே...!மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com