tag:blogger.com,1999:blog-3470093017839928781.post8734256923033890911..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: வாசிக்கிற பழக்கம் உள்ளவரா நீங்கள்? என்னமாதிரி விஷயங்களை வாசிப்பீர்கள்? கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-66608709322290945582021-04-24T12:14:07.894+05:302021-04-24T12:14:07.894+05:30ஸ்ரீராம் ! எல்லோருக்கும் ஒரேமாதிரியான விருப்பம் என...ஸ்ரீராம் ! எல்லோருக்கும் ஒரேமாதிரியான விருப்பம் என்றிருந்தால் போரடித்துவிடும்! லோகோ பின்ன ருசி என்று தெரியாமலா சொன்னார்கள்? !!<br /><br />என்னுடைய வாசிப்புப்பட்டியலில் ஒரு நீண்டபட்டியலே காத்திருக்கையில் பழங்கதையை இன்னொரு வித்தக கந்தலாக எழுதுகிறவரிடம் வீணடிப்பதற்கு என்னிடம் நேரமில்லை . ஆயிரம் பக்க அபத்தம் என்று எஸ்ரா சொன்னதுதான் நிஜம்! எஸ்ரா அப்படிச் சொன்னதற்காகவே, நூலை ஆதரித்து. எழுதின ஜெமோவை என்னவென்று சொல்வீர்கள் ஸ்ரீராம்? கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-67396063003091770562021-04-24T12:02:51.804+05:302021-04-24T12:02:51.804+05:30ஒருவருடைய விருப்பம் இன்னொருவருக்குப் பொருந்தாது. ...ஒருவருடைய விருப்பம் இன்னொருவருக்குப் பொருந்தாது. ஆயினும் காலச்சக்கரம் நரசிம்மாவின் படைப்புகளை நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம். இது என் யோசனை மட்டுமே. குறிப்பாக காலச்சக்கரம், குபேரவனக்காவல், போன்றவை.<br /><br />காவல்கோட்டம், அப்படி என்னதான் இருக்கிறது என்று முழுவதும் படித்தேன். அந்த நூல் பற்றி எஸ்ரா சொன்னது நாகரீகம் இல்லை என்றாலும் அதில் ஓரளவு உண்மை இருந்தது. வேள்பாரி படிக்கும் துணிவெல்லாம் இல்லை.<br /><br />இதைத்தான் படிக்கவேண்டும் என்கிற சுவாரஸ்யங்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன. நிலையாக எதிலும் சுவாரஸ்யம் இருக்காது. <br /><br />படைப்புகளின் நம்பகத்தன்மை நமக்கே படிக்கப் படிக்கப் புரியும். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-83386793662338696922021-04-24T11:22:50.361+05:302021-04-24T11:22:50.361+05:30உடல் நலம் நன்றாகத் தேறியபின்பு உங்களுடைய பார்வை என...உடல் நலம் நன்றாகத் தேறியபின்பு உங்களுடைய பார்வை என்ன என்பதை எழுதுங்கள் சரவணன்! அவசரமே இல்லை. கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-12245099027339243792021-04-24T11:19:53.420+05:302021-04-24T11:19:53.420+05:30இந்தப்புத்தகத்தைக்குறித்து எங்கள்blog இல் நீங்கள் ...இந்தப்புத்தகத்தைக்குறித்து எங்கள்blog இல் நீங்கள் எழுதிய அறிமுகக்குறிப்பை வாசித்திருக்கிறேன், அதற்குப்பின்னூட்டமும் எழுதியிருக்கிறேன். தன்வரலாறு சுயமாக எழுதத்தெரிந்த நிறையப்பேரை வாசித்திருக்கிறேன். நல்லவேளையாக ஆட்டோசங்கர் மாதிரியானவர்கள் வரலாறெல்லாம் என்னுடைய வாசிப்பில் இருந்ததில்லை. கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-49121251428748522872021-04-24T11:14:09.669+05:302021-04-24T11:14:09.669+05:30இங்கே பெரும்பாலான எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் ப...இங்கே பெரும்பாலான எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் புத்தகங்களைப் பற்றிய நேர்மையான சிறுகுறிப்பைக்கூடத்தருவதில்லை. நேர்மையான விமரிசனங்களை விரும்புவதுமில்லை. சரக்கில் சரமிருக்கிறதோ இல்லையோ, வாசிப்பவன் தலையில் கட்டிவிடுகிறார்கள் என்பது உண்மைதான் நெல்லைத்தமிழன் சார்!<br /><br />பொது நூலகங்கள் வாசிப்பை ஊக்குவிப்பதில் மிகவும் முக்கியமானவை. இங்கே உள்ள அரசியல் சூழல் நூலகத்துறையை.க் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறது.<br /><br />புத்தகங்கள் செய்கிற மாயமே நம்முடைய ரசனையை மேம்படுத்திக்கொண்டே இருப்பதுதான்! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-59184013975249694802021-04-24T11:05:57.917+05:302021-04-24T11:05:57.917+05:30விரிவான பதிலுக்கு நன்றியும் சந்தோஷமும் ஸ்ரீராம்!
...விரிவான பதிலுக்கு நன்றியும் சந்தோஷமும் ஸ்ரீராம்!<br /><br />ஒரு நூலாசிரியருடைய நம்பகத்தன்மை பெரும்பாலான தருணங்களில் அவர் எழுத்திலேயே வெளிப்பட்டுவிடும் ஸ்ரீராம்! எல்லாவற்றையும் நம்பித்தான் ஆகவேண்டுமென்கிற கட்டாயம் இருக்கிறதா என்ன? காவல்கோட்டத்தை வாங்கிப் பொறுமையாகப் படிக்க முடியவில்லை. இந்தலட்சணத்தில் வேள் பாரி இரண்.டு பாகத்தையும் மகன் வாங்கி அனுப்பினான். எழுத்தின் லட்சணம் தெரிந்ததனால் புரட்டிக்கூடப்பார்க்கவில்லை. இதெல்லாம் நிறைய வாசிப்பதனால் வாசகரே தன்னனுபவத்தில் தெரிந்து சொல்லக்கூடியதுதான்!<br /><br />காலச்சக்கரம் நரசிம்மா எழுதுவதை விரும்பி ரசித்து எபியில் நீங்கள் எழுதியதை மட்டுமல்ல முகநூலிலும் அவ்வப்போது குறிப்பிடுவதை, அவருடைய FB பக்கங்களில் கமெண்ட் எழுதுவதைப் பார்த்திருக்கிறேன் ஆனாலும் அவருடைய புத்தகம் எதையும் வாசிக்க விருப்பம் எழுந்ததில்லை. <br /><br />ஆனால் நான் புத்தகங்களை எந்த அளவுக்கு வாசிக்கிறேன், நேசிக்கிறேன் என்பதை சு வெங்கடேசன் காலச்சக்கரம் நரசிம்மா போன்றவர்கள் தீர்மானிப்பதில்லை. கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-33230852643207721442021-04-24T08:26:32.059+05:302021-04-24T08:26:32.059+05:30என் ஆல் டைம் ஃபேவரைட், ஶ்ரீ எம் எழுதிய இமயமலையில்...என் ஆல் டைம் ஃபேவரைட், ஶ்ரீ எம் எழுதிய இமயமலையில் ஒரு இதய குரு, சுவாமி ராமாவின் புத்தகம், அவரைப்பற்றி இன்னொருவர் எழுதிய புத்தகம்.<br /><br />இது தவிர தங்கள் வரலாற்றை எழுதிய வாலி, சிவகுமார், என்று பெரிய லிஸ்ட் உண்டு, ஆட்டோ சங்கர் உட்படநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-8220138541992132552021-04-24T08:23:14.423+05:302021-04-24T08:23:14.423+05:30புத்தகத்தை நான் விலைக்கு வாங்கிப் படிப்பேன். சிலசம...புத்தகத்தை நான் விலைக்கு வாங்கிப் படிப்பேன். சிலசமயங்களில் வாங்கின புத்தகம் திராபையாக இருந்தால் (விகடன் வெளியீட்டில் எம்பி ஒருவர் மொழிபெயர்ப்பு படு கேவலமாக இருந்தது... என் காசு வேஸ்ட்) பதிப்பகத்தைத் திட்டுவேன், ஏமாற்றி காசை அபேஸ் செய்யறாங்களேன்னு.<br /><br />நான் சின்னவனாக இருந்தபோது பொது நூலகம் பயன்படுத்தியிருக்கேன்.<br /><br />எனக்கு தன் அனுபவங்கள் போன்ற புத்தகங்கள்தான் பிடிக்கும், ஆன்மீகமோ இல்லை வாழ்வியல் அனுபவமோ. கவிதை பக்கமே போகமாட்டேன். <br /><br />நான் வேகமாகப் படிப்பவன். தமிழ் என்றால் 200 பக்கங்கள்லாம் சர்வ சாதாரணமாகப் படிப்பேன், புத்தகம் ரசனைக்குரியதாக இருக்கடும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-45121142980785228182021-04-24T07:06:02.148+05:302021-04-24T07:06:02.148+05:30பல் வலி, அதனால் ஏற்பட்ட காய்ச்சல் என்று அவதியுற்று...பல் வலி, அதனால் ஏற்பட்ட காய்ச்சல் என்று அவதியுற்றுக் கொண்டிருக்கிறேன். உடல்நிலையை சரி செய்து கொண்டு தங்களது மற்ற கேள்விகளுக்கும் விரைவில் பதில் அளிக்கிறேன்... திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/03960637232031324854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-68991939397909687792021-04-24T06:35:37.243+05:302021-04-24T06:35:37.243+05:30எந்தப் புத்தகத்தை, எந்த புத்தக ஆசிரியரை நம்புவது எ...எந்தப் புத்தகத்தை, எந்த புத்தக ஆசிரியரை நம்புவது என்றும் குழப்பம் வந்துவிடும் , அவரவர் மன எண்ணங்களுக்கு ஏற்ப வரலாற்று நிகழ்வுகளை எழுதினால்! ஆனால் ஒரு பொதுவான அவுட்லைன் புரியும். சசி தரூர் புத்தகம் வாங்கி வைத்திருக்கிறேன், படிக்கத்தான் ஓடவில்லை. அழகிய மரம் வாங்கி வைத்திருக்கிறேன், இன்னும் ஆரம்பிக்கவில்லை. ரொம்ப விரும்பி வாங்க நினைத்த விலை உயர்ந்த புத்தகம் ஒன்று பரிசாக வந்தது. ஆனால் அதை ஓரளவுக்குமேல் படிக்க முடியவில்லை!<br /><br />//ரசித்துப்படித்த புத்தகம் என ஒன்று இருக்குமானால், அதைப்பற்றி அதிகம் வேண்டாம், ஒரு நாலுவரி கருத்துரை சொல்லக்கூடவா முடியாது//<br /><br />நாலுவரி என்ன, பதிவே எழுதி இருந்தேன். சமீபத்தில் ரசித்துப் படித்த புத்தகம் அத்திமலைதேவன் ஐந்து பாகம்! ஆனால் ரசனைகளை, பிடித்ததை சட்டென ஒரு புத்தகத்தில் முடித்துவிட முடியுமா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-67670016562492895302021-04-23T21:38:06.503+05:302021-04-23T21:38:06.503+05:30புத்தகங்கள் எவைகுறித்தவை என்பதை விட எப்படிச் சொல்ல...புத்தகங்கள் எவைகுறித்தவை என்பதை விட எப்படிச் சொல்லப்படுகிறது என்பதில் தான் வாசிப்பின் அருமை இருக்கிறது என்பது என்னுடைய அனுபவம் ஸ்ரீராம்! தாலிபன் பிரச்சினையைப் புரிந்து கொள்ள நான் படித்தவை மேலும் மேலும் குழப்பின. பாகிஸ்தானில் உள்ள மாகாணங்கள் ஒவ்வொன்றிற்கும் பிரத்யேகமான பிரச்சினைகள் இருப்பதைப் புரிந்துகொண்டபிறகுதான் தாலிபன்களை பாகிஸ்தான் ஏன் அத்தனை செலவு செய்து கொம்புசீவிவிடுகிறது என்பதே ஒருவாறாகப் புரிந்துகொள்ள முடிந்தது. சமீபகால வரலாற்றை பிரிட்டிஷ்காரர்கள் நன்றாகவே குழப்பிவைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டபிறகு எனக்கு நம்மூர் சரித்திரக்கதையாளர்கள் பலரும் சலித்தே போனார்கள்! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-5724480708543055912021-04-23T21:29:03.702+05:302021-04-23T21:29:03.702+05:30வாருங்கள் பந்து! பொறுமையாக எல்லாக்கேள்விகளுக்கும் ...வாருங்கள் பந்து! பொறுமையாக எல்லாக்கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறீர்கள். <br /><br />கிண்டில் வாசிப்பு இப்போது வாச்கர்களுடைய எண்ணிக்கையை அதிகரித்துவிட்டது என்று நன்கு புரிந்தாலும், எனக்கென்னவோ இன்னமும் கிண்டில் வாசிப்பு கைகூடவில்லை! <br /><br />தெய்வத்தின் குரல் தொடராக வந்துகொண்டிருந்த நாட்களில் படித்தது ரமணருடைய நான் யார் என்கிற விசாரம், நேதி நேதி இது இல்லை இது இல்லை என்று ஒவ்வொன்றாகக் கழித்துக் கொண்டே வந்து, கடைசியில் கழிக்கமுடியாமல் ஏதுமிஞ்சுகிறதோ அதுவே நான் என்கிறமாதிரி ஒரு கடினமான மலைப்பாதை. எல்லோருக்குமானதல்ல என்பதைப் புரிந்து கொள்ளவே எனக்கு ஏகப்பட்ட காலமாயிற்று. பைரப்பா இனிமேல்தான் படிக்க வேண்டும். தேவன் எழுத்துநடை மிகவும் எளிமையானது இன்றைக்கும் வாசிப்பவரை வசீகரிப்பது. மிகவும் நல்லதேர்வைச் சொல்லியிருக்கிறீர்கள். மிகவும் சந்தோஷம். கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-8273211292711616062021-04-23T21:14:50.746+05:302021-04-23T21:14:50.746+05:30ஸ்ரீராம்! கடைசிக்கேள்விதான் இருப்பதிலேயே மிக எளிமை...ஸ்ரீராம்! கடைசிக்கேள்விதான் இருப்பதிலேயே மிக எளிமையானது. ரசித்துப்படித்த புத்தகம் என ஒன்று இருக்குமானால், அதைப்பற்றி அதிகம் வேண்டாம், ஒரு நாலுவரி கருத்துரை சொல்லக்கூடவா முடியாது? கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-25121934618690522102021-04-23T20:34:36.566+05:302021-04-23T20:34:36.566+05:30Kindle Unlimited -இல் iPad மூலம் படிக்கிறேன். எந்த...Kindle Unlimited -இல் iPad மூலம் படிக்கிறேன். எந்த சமயத்திலும் பத்து புத்தகங்கள் எடுத்துக்கொள்ளும் வசதி. இப்போது படித்துக்கொண்டிருப்பது தெய்வத்தின் அருள் - பெரியவாவிடம் பக்தர்கள் அனுபவங்கள், நாரத புராணம், பைரப்பாவின் உத்தரகாண்டம், ரமணர் அருளிய நான் யார், தேவனின் லக்ஷ்மி கடாக்ஷம் மற்றும் தொழில் முறை புத்தகங்கள்.<br /><br />பல பல வருடங்களுக்கு பிறகு iPad மற்றும் Kindle Unlimited மூலம் தொடர்ந்து படிக்கிறேன். <br /><br />சென்னையில் சிலவருடங்கள் இருந்த மொபைல் லெண்டிங் லைப்ரரி மிகவும் அனுபவித்தேன். தென் சென்னையில் 1990 களில் , மாதம் 200 ரூபாய் என நினைக்கிறேன். 2 தமிழ், 3 ஆங்கிலம் வார மாத இதழ்களை வீட்டுக்கு கொண்டு வந்து தருவார்கள். வாரம் இரு முறை. சுழற்சி முறையில். நான் நிறைய படித்தது அப்போது தான்! <br /><br />தினம் ஒரு பத்து முதல் இருபது பக்கங்களாவது படித்துவிடுவேன். <br /><br />பிடித்த எழுத்தாளர் பைரப்பா. பிடித்த புத்தகங்கள் பருவம் மற்றும் ரமணர் அருளிய நான் யார் - பேரா க மணி அவர்களின் விளக்க உரையோடு வேகமாக படித்தது - பருவம் - சென்னையிலிருந்து சான் பிரான்சிஸ்கோ வரையான 24 மணி நேர பயணத்தில் கிட்டதட்ட 12 மணிநேரம் படித்தேன். தொடர்ந்து அதிகம் படித்தது அப்போதுதான்!<br /><br />கதைகளில் விருப்பம் குறைந்துவிட்டது. தத்துவம் மற்றும் புராணங்கள் மட்டுமே அதிகம் படிப்பது. பங்கு சந்தை பற்றியும் படிப்பேன். நடு நடுவே அரசியல்..bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-27471899736184315012021-04-23T20:07:43.462+05:302021-04-23T20:07:43.462+05:301) காசு கொடுத்து வாங்குவது அதிகம். ஏற்கெனவே அப்ப...1) காசு கொடுத்து வாங்குவது அதிகம். ஏற்கெனவே அப்பாவின் கலெக்ஷன் வேறு இருக்கிறது. அதைத்தவிர pdf வகையறா...<br /><br />2) நூலகங்கள் - 1980 களில் சென்றது! தொண்ணூறுகளில் கொஞ்ச காலம்!<br /><br />3) முன்பு கதைகள் படித்ததுண்டு. சுஜாதா, சாண்டில்யன், கல்கி, பாபா என்று எல்லா வகையிலும்.. இப்போது சரித்திரம் சம்பந்தப்பட்ட மற்றும் கொஞ்சம் அரசியல் கலப்பிலான புத்தகங்கள் <br /><br />4) புத்தகத்தைப் பொறுத்து. மூவாயிரத்து ஐநூறு பக்கங்கள் கொண்ட அந்திமாலை தேவனை ஒரு மாதத்தில் முடித்தேன். இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட சில புத்தகங்கள் பக்கம் பக்கமாக.. மெதுவாக...<br /><br />கடைசிக் கேள்விக்கு பதில் "கஷ்டங்க..."ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-46476014693908153862021-04-23T20:00:09.176+05:302021-04-23T20:00:09.176+05:30சௌகரியமாகக் கடைசிக் கேள்விக்கு மட்டும் பதிலெழுதிவி...சௌகரியமாகக் கடைசிக் கேள்விக்கு மட்டும் பதிலெழுதிவிட்டு மற்றதை சாய்ஸில் விட்டுவிட்டீர்களோ சரவணன்? நான்குவரிகளுக்குள் உங்களுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை இங்கே அறிமுகம் செய்திருக்கிறீர்கள் நன்றி <br /><br />கொஞ்சம் மற்றக்கேள்விகளுக்கும் விடைசொல்ல முன்வந்தால் மகிழ்வேன் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-20822883831614559232021-04-23T19:12:45.630+05:302021-04-23T19:12:45.630+05:30ஆனந்த யாழ் என்ற கட்டுரைகள் புத்தகம் தற்போது படித்...ஆனந்த யாழ் என்ற கட்டுரைகள் புத்தகம் தற்போது படித்துக் கொண்டிருக்கிறேன். புத்தகத்தின் அட்டையில் மனதை நனைக்கும் கண்ணீர் மழை என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது வெறும் அலங்கார வார்த்தைகள் அல்ல என்பது புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும்போதே புரிகிறது. மிகவும் மனதை கனக்கச் செய்யும் புத்தகம் இது. (நா.முத்துக்குமார் - அவரைப்பற்றி பலரும் எழுதிய நினைவலைகள் கொண்ட கட்டுரை தொகுப்பு)திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/03960637232031324854noreply@blogger.com