Pages

Tuesday, January 1, 2019

இன்று தரிசனநாள்! செய்தி!

(சு)வாசிக்கப்போறேங்க என்று வாசிப்பு அனுபவம் ஒன்றை மட்டுமே பேச வந்த பக்கங்களில் எழுதுவதே நின்றுபோய், மீண்டும் எழுத ஆரம்பித்ததில் வேறுசில விஷயங்களும் கலந்து போனதை நண்பர்கள் கவனித்திருப்பீர்கள்.நம் சுவாசத்தில் என்னென்னவோ கலந்துபோய் இருப்பதைப் போல, புத்தக வாசிப்புடன் வெவ்வேறு ஊடகங்களைக்கவனிப்பதும் இப்போது தவிர்க்க  இயலாதது ஆகிவிட்டது போலத்தான் என்று சகித்துக் கொள்ளவும் வேண்டுகிறேன்.   

புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் ஜனவரி 1, தரிசன நாள் செய்தி!  இறையருள் நம்முடன் இரவு பகல் என எல்லாநேரத்திலும் கூடவே இருப்பதை . அமைதியாக, உள்முகமாகப் பார்க்கப் பழகினால் கண்டு கொள்ள முடியும். இந்த வருடம் முழுவதும் இதுவே நம்முடைய அனுபவமாகவும் இருக்கட்டும் என அன்போடு ஆசி வழங்குகிறார் ஸ்ரீஅரவிந்த அன்னை        
     




ஸ்ரீ அரவிந்த அன்னையின் செய்தியோடு இன்றைய நாள் தொடங்குகிறதே! இதைவிட   அற்புதமான துவக்கம் வேறு உண்டா என்ன?! நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளுடன்!



No comments:

Post a Comment