Pages

Wednesday, February 27, 2019

ஊடகங்கள்! ஒவ்வொன்றும் ஒருவிதக் குழப்பம்!

இங்கே ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொருவிதமாகக் குழப்புவதையே தொழிலாகச் செய்து கொண்டு வருகிறது என்பதைத்   தொடர்ந்து உதாரணங்களுடன் இந்தப்பக்கங்களில் பார்த்துவருகிறோம்! இங்கே ,  இன்னும் ஒரு உதாரணமாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியராகவும், இப்போது The Print தளத்தை நடத்துகிறவராகவும்.. சேகர் குப்தா! இந்தக் காணொளியில் குழப்பவில்லை, இம்ரான் கானுக்கு உபதேசம் செய்கிறார் என்பது சுவாரசியம்! 

இந்த வீடியோவில் அயூப் கான் முதல் இப்போது இம்ரான் கான் வரை, பாகிஸ்தான் தலைவர்களை, ஒவ்வொருவர் கதையாகக்  கொஞ்சம் சுருக்கமாக  சொல்லிவிட்டு, அவர்களுடைய முடிவு என்னமாதிரியானது என்பதையும் சொல்கிறார்! அந்த ஒரு காரணம் போக, இந்த யூட்யூப் வீடியோவுக்கு வந்திருக்கிற ஒரு கமென்ட், அதற்கு ஒரு பதில் கமென்ட் புன்னகைக்க வைத்தது.

Nishant Shrivas
I would say print is best media company now ..much better balanced ...the wire is propoganda media ..
145
Abhilash Sarangi
Wire is no smaller than a communist mouthpiece and the quint is a congress mouthpiece. Both left winged. This channel however, has been vacillating in it's choice of political colour BUT it's atleast pragmatic and Shekhar Gupta in particular is excellent in giving a no nonsense straight to the point news report.  இங்கே தமிழகச் சூழல் எப்படியிருக்கிறது? விவாத வீடியோக்களுக்கு வருகிற கமென்ட்  பெரும்பாலும் ஆபாச வசவுகள், கீழ்த்தரமான விமரிசனங்கள்! கொஞ்சம் கூர்ந்து கவனித்தீர்களானால் தமிழேண்டா கோஷ்டியும், திராவிட கோஷ்டியும் எப்படிப்பட்ட நச்சுச்சூழலை இன்னமும் விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதும் புரியும்! விதைத்தது அவர்கள், ஆனால் விளைவுகளை அனுபவிக்க வேண்டியது நாமா என்ற ஒருகேள்வியை மிக அழுத்தமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்!

ஒரு சரியான பதில்  வழி நிச்சயமாகக் கிடைக்கும்!


இந்த வீடியோவில் சேகர் குப்தா பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியா முற்றிலும் உறுதியான நிலைபாட்டை எடுத்திருப்பதைச் சொல்கிறார்!
ஜூல்ஃபிகார் அலி புட்டோவின் பிரசித்தமான வசனம் 'bleeding India with a thousand cuts'! நேரடி யுத்தத்தில் ஜெயிக்க முடியாதென்பதால் பாக்.  ராணுவம் தீவீரவாதிகளைப் பயிற்சி கொடுத்து, இந்தியாவுக்குள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்தி வந்ததும் இனிமேல் செல்லுபடியாகாதென்பது மிகத்தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக சவூதிகள் உட்பட எந்த நாடுமே முன்வரவில்லையென்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரே குறைப்பட்டுக் கொண்டிருக்கிறார்!
CPEC கூட்டாளி சீனாவும் பாகிஸ்தானுக்காகக் குரல்கொடுக்கவில்லை!

தோசையை வைத்து அந்தநாட்களில் பொருளாதாரத்தை விளக்கிய தோசானாமிக்ஸ் ரகுராம் ராஜன் கூட  நேற்று இந்திய விமானப்படை காட்டிய அதிரடி குறித்து என்னமோ பேசுகிறார்!

நன்றாகப்பேசட்டும்!  காதுல பூ சுற்ற எவருக்கும் இடம் கொடுக்க மாட்டோமென்பதில் நாம் தெளிவாக இருந்தால் அது போதும்!

அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதில் ஒரு வழி, தெளிவு தானாகவே பிறக்கும்! 
   

No comments:

Post a Comment