Pages

Saturday, April 27, 2019

எதில்தான் அரசியல் செய்வது? விவஸ்தையே இல்லையா?

நம்மூர் திமுக, மற்றும் முட்டுச்சந்து போராளிகளிடம் சிக்கிக் கொண்டிருப்பது விளையாட்டு வீராங்கனை கோமதி மாரிமுத்து. அவரேதான் இவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டாக வேண்டும். இதற்குமுன்  சில அமீரகப் போராளிகள் ரீஷேர் செய்த பதிவுகளில் தினமலர் மீதான வன்மம் கொட்டப்பட்டுக் கிடந்தது. வெள்ளி வென்ற வீராங்கனைக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கம் வென்ற கோமதியைப் புறக்கணித்த மாதிரி திரிசமன் வேலை அது! 


செல்வி கோமதி அவர்கள், கிழிந்த ஷூ உடன் ஓடினேன் என்றது இந்தப்போட்டியில் இல்லை ஐயன்மீர். அவருடைய கடந்த காலங்களைச் சொல்கிறார். சொந்தக்காசில் தான் போட்டிகளுக்காக விமானத்தில் செல்வதாகச்சொன்னதும் கடந்த காலங்களே. அவர் தற்போது sports quota வில் மத்திய அரசுப்பணியான வருமான வரித்துறையில் பணி கிடைத்து, பெங்களூரில் வருமான வரித்துறை அலுவலகத்தில் பணி புரிகிறார்.

இவர் தங்கம் வென்றிருப்பது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில். அதற்கு இவரை அனுப்பியது இந்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகம் கிடையாது. தடகளப் போட்டிகளை நடத்துவதற்கென்றே இருக்கும் Athletic Federation of India - AFI என்கின்ற அமைப்பு. இந்த AFI என்பது, அரசு உதவி பெற்று, அரசு அனுமதியோடு, விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க, பயிற்சி கொடுக்க, போட்டிகள் நடத்த அமைக்கப் பட்டது. அதேபோல இதே சகோதரி கோமதி அவர்கள், இதே ஆசிய போட்டிகளில், 2013ல் 7வது இடத்திலும், 2015ல் 4 வது இடத்திலும் வந்தவர். அப்போதும் இவர் AFI சார்பில் அனுப்பி வைக்கப்பட்டார்.
ஷூ பஞ்சாயத்துக்கு வருவோம். எந்தவொரு international போட்டிகளிலும், கிழிந்த ஷூ உடனெல்லாம் ஓட முடியாது. அதேபோல வேறு வேறு ஷூவும். எல்லாமே தரம் பரிசோதிக்கப் பட்டு சரிபார்க்கப்பட்டே அனுமதிக்கப்படும். அதேபோல வீரர்களுடைய உடை, காலணிகள் என அனைத்திற்கும் ஏகப்பட்ட விதிகள் & கட்டுப்பாடுகள் இருக்கிறது.
செல்வி கோமதி உண்மையில் வாய்ப்புக்காக சிரமப்பட்டது, கடந்த காலங்களில். தன்னுடைய தந்தை, தாய் மற்றும் ஏழ்மை நிலையோடு போராடி வென்றிருக்கிறார். ஆனால் அதையெல்லாம் புரிந்துகொள்ளாமல், தன்னுடைய கடந்த கால சிரமங்களைப் பற்றி சொல்லியிருப்பதையும், இரண்டு நிறங்களில் இருக்கும் ஷூக்களையும் தவறாக எடுத்துக்கொண்டு ஏகப்பட்ட நண்பர்கள் அறச்சீற்றம் கொள்கிறீர்கள் என்று ரா.புவன் குமுதம் தளத்தில் எழுதி இருக்கிறார். குமுதம் தளத்தின் முகநூல் பகிர்வில் பார்த்தது  



அதற்கு வந்த இரு பின்னூட்டங்கள் 

DrDhana Pathy #போராளிஸ்


கோமதிமாரிமுத்து பிஞ்ச காலணியை போட்டுட்டு ஓடினார்
கோமதிமாரிமுத்து இரண்டு வேறு காலணிகளை போட்டுட்டு ஓடினார்.
ஆக.. இவனுக எவனுமே படிப்பறிவில்லாத முட்டாப்பயலுகன்னு தெளிவா தெரியுது

உசைன் போல்ட் என்ன பஞ்சத்துக்கு பொறந்தவரா?

இரு வேறு விதமான காலணிகள் அணிய காரணம் என்ன?

ஒவ்வொரு ஓட்டப்பந்தய வீரருக்கும் இரு கால்களிலும் உந்து சக்தி வேறுபடும்.ஓடத்தொடங்கியவுடனும், கடைசி கோட்டை தொட தாண்டும்பொழுதும் இரு கால்களில் ஏதோ ஒரு காலை மட்டுமே அதிகமாக பயன்படுத்தி உந்தித் தள்ளுவார்கள்,

உந்து சக்தி அதிகமாக உள்ள காலில் பிடிமானம் அதிகமாக உள்ள காலணி அணிவார்கள்.காலணிகள் இரண்டும் தடகள வீரரின் உயரம், இரு கால்களின் அளவு/உந்து சக்தி ஆகியவை கணக்கில் கொண்டு பயிற்சியாளர் துனையுடன் கவனமாக தேர்ந்தெடுக்கப்படும்

சமீப காலமாக State meet களிலேயே  இரண்டு நிற ஸ்பைக்ஸ் (Spikes running shoes) போட்டு ஓடுவது வழக்கமாம்.

அரசு ஒரு உதவியும் செய்யவில்லை என்ற பொய்யும் நேற்றிலிருந்து பரப்புகிறார்கள்.
#போராளிகளை போல முட்டா புண்ணாக்குகளாக இருக்க வேண்டாம். 

Madhu Ramachandran  சரவணன் சுவாமி என்பவர் எழுதிய பகிர்வை எடுத்துக் போட்டிருக்கிறார். 

பக்கா திமுக-காங் தயாரிப்பான கோமதி மாரிமுத்துவுக்கு செருப்பு வாங்க பணமில்லையாம்! உள்ளூர் போட்டிகளில் வென்றதால் மத்திய அரசு பணி.. மாதம் 4 நாட்கள் வேலைக்கு முழு சம்பளம்.. அரசு செலவில் வெளிநாட்டுப் பயணம்... இலவச வீடு புதுப்பித்தல்..

பாஜக மீது அவதூறு பரப்ப திமுக தந்தது 10 லட்சம். காங்கிரஸ் தந்தது 15 லட்சம்.. இவர்களின் பிண அரசியலுக்கு அனிதா பலியானது போல் இல்லாமல் உஷாராக இருப்பது கோமதிக்கு நலம்! 

வெற்றி கிடைக்கும் போது பணிவு தேவை... வீண் பகட்டு, விளம்பரம், அரசியல் செய்தால் விரைவில் திறமையற்று ஏதாவது ஸ்கூலில் பிடி டீச்சராக வேண்டியிருக்கும்! திமுக-காங் பிண அரசியல் குறித்து கோமதி தெரிந்துகொள்வது நல்லது. காரியம் முடிந்துவிட்டால் திமுக-காங் திரும்பி கூட பார்க்க மாட்டான்.. மத்திய அரசின் மீது அவதூறு பரப்பவைக்கும் சதிவலையில் விழாமல் இருப்பது கோமதியின் எதிர்காலத்திற்கு நல்லது!

பல லட்சம் பணம் செலவழித்து அனிதாவை சுப்ரீம்கோர்ட் வரை சென்று வாதாட வைத்த திமுகவுக்கு தாங்கள் நடத்தும் மருத்துவக்கல்லூரியில் ஒரு மேனேஜ்மெண்ட் கோட்டா சீட் கொடுத்திருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார்.. இதுதான் திமுக பிண அரசியல்.

முகநூலில் ஜவஹர் புருஷோத்தமன் எஸ்ரா சற்குணம் பாட்டுக்குப் பாட்டு மருத்துவர் ராமதாசிடமிருந்து வந்திருப்பதைச் சொல்லி இப்படி நகைக்கிறார் 


இதுக்கு அந்தாள செருப்பாலயே அடிச்சிருக்கலாம் 😀
பேராயர் எஸ்ரா சற்குணம் விடுதலை சிறுத்தையாக இருப்பதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. அதற்கான அனைத்துத் தகுதிகளும் அவருக்கு உண்டு!
-மருத்துவர் ராமதாஸ்

நம்மூர் அரசியல் என்பது விவஸ்தைகெட்டதனம் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்! அதற்காக இந்த அளவுக்கா விவஸ்தைகெட்டு நடந்து கொள்வது?  

No comments:

Post a Comment