Pages

Friday, May 31, 2019

வெள்ளிக்கிழமை விடியும் நேரம்! கதம்பமாக அரசியல்!

2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் செம அடி வாங்கிய பிறகு காங்கிரசுக்கு திடீர் ஞானோதயம் வந்திருக்கிறது. ஒரு மாதத்துக்கு காங்கிரஸ் உளறுவாயர்கள் எவரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க மாட்டார்களாம்! பாராட்ட வேண்டிய விஷயம்தான்! இந்த ஞானம் ஜூன் 3 ஆம் தேதியை எதிர்பார்த்து ஏமாந்தவர்களுக்கும் வருமே ஆனால் அதுவே தமிழ்நாட்டுக்கு சுபதினம்!

   
லாட்டரிச் சீட்டில் லட்சம் விழுந்தால் கிடைத்தவர்க்கே அது சுபதினம் என்ற வரிகளை நினைவில் வைத்துக் கொண்டு கான்ட்ராக்டர் நேசமணி மேட்டர் மாதிரி இன்னொரு வடிவேலு மகான் காமெடி தேறுகிற வரையிலாவது அமைதியாக இருந்தார்களென்றால் அது அவர்களுக்கே நல்லது.


ஆறுநாட்கள் வெளியில் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்த ராகுல் காண்டி  நேற்றைக்கு பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார் என்பதோடு NCP தலைவர் சரத் பவாரையும் சந்தித்து ஒன்றரை மணிநேரம் பேசியிருக்கிறார். சரத் பவார் கட்சியைக் காங்கிரசுடன் இணைத்து 52+5 =57 எம்பிக்கள் ஆனால் இம்முறையானது நாடாளுமன்ற எதிர்க்கட்சி அந்தஸ்து பெறலாமே என்ற நப்பாசை பின்னணியாக இருந்திருக்கலாம் என்கிறார்கள். சரத் பவார் அதைப்பற்றி பேச்சே எழவில்லை என்று மறுத்திருக்கிறார்.
  
காரை மறித்து ஜெய் ஸ்ரீ ராம் என முழங்கிய கும்பல்: சரமாரியாக திட்டி சவால்விட்ட மம்தா என்று சாதாரணமாக செய்தி போடுகிறது இந்து தமிழ்திசை. மம்தா பானெர்ஜியை வெறுப்பேற்ற ஜெய் ஸ்ரீராம் கோஷம் ஒன்றே போதுமானதாக இருக்கிறதோ? நிலை குலைந்தவராகப் பொங்குகிறார் பொருமுகிறார் மிதுன் சக்ரபர்த்தி பட வசனம் சொல்லி மிரட்டுகிறார்! ஒருவிதத்தில் பாவமாக இருக்கிறது.
                                                      

                                                     

                                                       
                                                       
                                                        


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேபினெட் அமைச்சர்கள் இவர்கள், என்ன பொறுப்பு என்பது தற்போது வெளியாகி இருக்கிறது.
                                                       
 
ரவிசங்கர் பிரசாத் மூன்று முக்கியமான துறைகளுக்குப் பொறுப்பேற்றிருக்கிறார். அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போது சுமை குறையலாம். முழுப்பட்டியலும் இங்கே   

மீண்டும் சந்திப்போம். 












   
                                                                

Thursday, May 30, 2019

கடைசி வரை சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா தானா?


இளைஞர்கள் விளையாட்டாக செய்வதை கூட அரசியலாக பார்க்கும் கேடு கெட்ட எண்ணம் #திமுக உடான்ஸ் பிறப்புகளுக்கு மட்டுமே வரும் ....
நைட் முழுக்க டுவிட் போட்டு இளைஞர்கள் டிரெண்ட் செய்வார்களாம் ... கடைசியில் "சீனி சக்கர சித்தப்பா இலையை போட்டு நக்கப்பா" என்பதை போல ஒரு ஈ.வே.ராமசாமி நாயக்கன் போட்டோவை கொண்டு வந்து மொத்தமாக நக்கி கொண்டு சென்று விடுவார்களாம் ....
கேடுகெட்ட திமுக ..... என்கிறார் மாரிதாஸ். அதற்கு அவர் சுட்டும் தரவு இது.


Friends படத்தில் வரும் வடிவேலு காமெடியை வைத்து தமிழர்கள் நேசமணிக்காக உருகித்தீர்த்துவிட்டார்கள் என்கிறார்கள். உடன்பிறப்புகளோ பொருமித் தீர்த்திருக்கிறார்கள்! பொருமித்  தீர்த்து .....??

கண்ணை மூடிக்கிட்டா பூனை உலகம் இருட்டுன்னு நினைக்குமாம்.
சீனி சக்கர சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா.
ட்ரென்டிங் என்னவா இருந்தாலும், அவர்தான் பிரதமர்.
அவர் பெயர் மோடி.
2024லும் கூட ட்ரெண்டிங் பண்ணவேண்டி இருக்கும். தம் பிடிச்சி வைங்கய்யா.
#funnyguys 

ஐ சி யூ வில் சாப்பிட இட்லி கிடைக்கவில்லையே! நேசமணி ஏக்கம்.
ரொம்ப அடிபட்டு, ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று தெரிந்தவுடன், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேசமணியை சிபாரிசு செய்வது கொஞ்சம் ஓவர். #saveNesamani
உடன் பிறப்பே! நேசமணி நல நிதி வழங்க, நீ வரிசையில் நின்றிருப்பது கண்டு நெஞ்சம் விம்முகிறது! #Pay_for_Nesamani
குங்குமப் பொட்டும் அந்தரிக்கி நமஸ்காரமுமாக இசுடாலின்  காமெடியை உடன்பிறப்புக்களாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை போல! நேசமணி ட்ரெண்டிங்கை வைத்து ஓட்ட வேண்டிய பரிதாபம்.

பலத்த கவனிப்பில் ஸ்டாலின்.. முதல்வருடன் நெருக்கமான உதயநிதி...! வீடியோ
உடன்பிறப்புகள் விஜயவாடாவில் கிடைத்த கிளாக்காயோடு திருப்தியடைவது அவர்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது.                                                    
மீண்டும் சந்திப்போம்.