Pages

Wednesday, May 15, 2019

தலைப்புச் செய்தி! நேற்றும் இன்றும் #கமல்காசர்

நல்லா இருந்த பதிவுலகமும் ஆபாசப்பின்னூட்ட உபிக்களும்! இப்படிப்பதிவெழுதி முழுசாய் இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை! மறுபடியும் ஆபாசமாக பின்னூட்டங்கள் எழுதுவதை சிலர் ஆரம்பித்து விட்டார்கள் என்பதில் இரண்டு விஷயங்கள் தெளிவாகியிருக்கின்றன. அவர்களால் புறக்கணிக்க முடியாதபடி, நாகரீகமாக எதிர் கொள்ளமுடியாதபடி இங்கே அரசியல் விமரிசனங்கள் செய்யப் படுகின்றன என்பது முதலாவது. அடுத்து எழுத்துப் பிழை இல்லாமல் இவர்களால் இரண்டுவார்த்தைகள்  கூடப் பின்னூட்டமாக எழுத முடியவில்லை என்பது இரண்டாவது. . ஆக, #தமிழேண்டா என்று இவர்களை சிரித்துக் கொண்டே கடந்து போயாகவேண்டும் என்பது தமிழ் இணையச் சூழல்!  இல்லையா பின்னே!

      
   

ஒரு இடதுசாரியாக இருந்து, அங்கேயிருந்த போலித்தனத்தை சகித்துக் கொள்ள முடியாமல் வெளியேறிய நாட்களுக்கு முன்னும், பின்பும்  இதே முகங்களை நேரடியாக களத்தில் சந்தித்திருக்கிறேன். அரசியல், தொழிற்சங்கரீதியாக ஏகப்பட்ட கிண்டல் கேலிகள், அவமானங்களை எதிர் கொண்டிருக்கிறேன். பின்னாட்களில் இவர்களில் மிகப்பலரும் என் நலம் விரும்பிகளாகவும், பாதுகாப்பு அரண்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பது கண்முன்னே நினைவுகளாக வந்துபோகிறது. இணையத்தில் பொய்முகம் காட்டமுடிகிறது என்பதாலேயே வெட்டிவீரம், ஆபாசவசவு என்றிருப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது என்கிற காலம் மலையேறி வெகுகாலமாகிவிட்டது என்பதுகூடத் தெரியாமல் இருக்கிறார்களே என்று பரிதாபப் படத்தான் தோன்றுகிறது. 


கமல் காசர் அரவக்குறிச்சி பகுதியில்  வேண்டுமென்றே ஒரு சர்ச்சையைக் கிளப்பி, தனக்கான விளம்பரத்தைத்தேடிக் கொண்டிருக்கிறார் என்பதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீர் ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார் என்பது நிகழ்காலத்தின் நகைமுரண். 
 
KT Raghavan கேட்கிறாரே ஒருகேள்வி 
அமைச்சர் திரு.ராஜேந்திர பாலாஜி இரண்டு நாட்களாக கூப்பிடும் எல்லா தொலைகாட்சி விவாதத்திலும் பங்கு கொண்டு தன்னுடைய நிலைபாட்டை துணிச்சலாக விவாதிக்கின்றார்....
ஆனால் கமல் எங்கே....? அவர் ஏன் பதுங்குகிறார்...? அல்லது மீடியாக்கள் அவரை விவாதங்களில் அழைக்காமல் காப்பாற்றுகின்றனவா...? அல்லது கமலுக்கு துணிவில்லையா?
தமிழக அளவில்..
ஹாசன் ...தமிழக திராவிட அரசியல் கண்டெடுத்த இன்னொரு தி.க. + தி.மு.க. கலவை.
தேசிய அளவில்...இன்னொரு மணிசங்கர் அய்யர்.
தேர்தல் ஆணையத்திடம் முறையீடு என்பதை தாண்டி ..மக்கள் நீதி மய்யம் கட்சியை தடை செய்ய வேண்டும், நீதிமன்ற வழக்கு என்று ஒரே பரபரப்பு..
ஹாசன் பேசியதை விடவும் அதிகமாக, நேரிடையாக பலமுறை பேசிய பல தமிழக அரசியல் தலைகள் உண்டு.
அவர்களுக்கெல்லாம் கண்டனங்கள் மட்டுமே தெரிவிக்கப்பட்டன என்பது கவனிக்க தக்கது.
பல அடுக்குகளை கொண்ட அரசியலில்.. ஹாசன் சம்பவத்தில்...யார் புத்திசாலி ? என்கிற போட்டியாக ..பல காய் நகர்த்தல்கள் நடக்கின்றன .
புத்திசாலி யார் என்பது வெளிப்படும்போது..மக்கு யார் என்பதும் இயல்பாக வெளிப்படுகிறது.
ஹாசனின் பேச்சில்.. தங்களுக்கு வேண்டிய பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு..ஒவ்வொரு அரசியலும் எவ்வாறு அரசியல் காய் நகர்த்தல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை கவனித்தாலே போதும்.
இப்படியாக இரண்டுநாட்களாக தலைப்புச் செய்தி, சேனல் விவாதங்களில் பரபரப்பாக இருந்த கமல் காசரை வெறும் வெட்டி அக்கப்போர் என்று முடித்து விட்டது டில்லி உயர்நீதி மன்றம்    
#Breaking : கமல் சர்ச்சை பேச்சு - டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது ஏன்?
* பா.ஜ.க. வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயாவுக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
* தேர்தல் ஆணையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை - வழக்கறிஞர்
* கமலுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்..
#DelhiHC | #KamalHaasan

1 comment:

  1. கமலஹாசனின் ஒருபக்க மத சார்பு நிலை இதுவரை அறிந்திராத தகவல்கள் பல பாண்டே பேட்டி மூலம் தெரிந்து கொண்டேன்.
    கொலைகளை படுபாதக செயல்களை செய்வோர்களை எந்த சுழ்நிலையிலும் ஏற்றுகொள்ள முடியாது என்ற பாண்டேயின் கருத்து அருமை.

    ReplyDelete