Pages

Thursday, June 27, 2019

திருட்டு திராவிடம்! பானாசீனா! குமாரசாமி! காஷ்மீர்!

வலைப்பதிவுகள் எழுதுவதை விட்டுவிட்டு கூகிள் பிளஸ்சில் வெகு மும்முரமாய்ச் செய்திகளையும் அதன்மீது சின்னச் சின்ன விமரிசனங்களாகவும் எழுதிக் கொண்டிருந்த கடந்த காலத்தில் சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை இத்தனையாவது முறையாக சரிந்து விழுந்தது என்ற தகவலை நக்கலாகக் குறைந்தது பத்துப் பதினைந்து முறையாவது பகிர்ந்து கொண்டதுண்டு. ஆனால் பானாசீனா விவகாரத்தில் இந்தக் குறிப்பிட்ட நீதிபதி எத்தனையாவது முறை கைது செய்யத் தடை என்று நீட்டித்துக் கொண்டே போகிறார் என்பதைக் கணக்கு வைத்துக் கொள்வது கடினமாக இருக்கும் போல! 


யாரை எங்கே எப்படிச் சரிக்கட்டுவது என்பதில்  சால்வை அழகர் பானாசீனாவுக்கு இருக்கிற   சாமர்த்தியம் இங்கே வேறெந்த கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதிக்கும் இருந்ததில்லை. அடுத்து எவரையாவது சொல்லலாம் என்றால் அது தயாநிதி மாறன் தான்! இன்றுவரை கைதுநடவடிக்கையை சந்திக்காமலேயே இந்த இரண்டுபேர்தான் சமாளித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த இருவருக்கும் உள்ள இன்னொரு ஒற்றுமை, ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ!ராசா, கனிமொழி இருவரையும் சிக்க வைத்தது, இதுவும் கூட ஊரறிந்த ரகசியம் தான். நண்பர் திருப்பூர் ஜோதிஜி எழுதியிருக்கும் இந்தப்பதிவைப் படித்துவிட்டு நம்மால் பெருமூச்சு மட்டும்தான் விடமுடியும்! 


நரேந்திர மோடிக்குத்தானே ஓட்டுபோட்டீங்க? அங்கேயே போங்க என்று சொல்கிற குமாரசாமி, சட்டசபைத்தேர்தலில் கூட ஜனங்கள் அவருக்கோ காங்கிரசுக்கோ ஓட்டுப் போடவில்லை, அவர்கள் ஒரு ஒட்டுப்போட்ட  கூட்டணியை அமைத்துத்தான்ஆட்சியில் இருக்கிறார்கள்    என்பதை மறந்து விட்டு ஜனங்களிடம்  கோபப்படுவது ஏன்? 

   
உள்துறை அமைச்சர் காஷ்மீருக்குப் போயிருக்கிறார். முப்பது ஆண்டுகளில் இதுவரை காணாத அதிசயமாக, வழக்கமாக வீரமுழக்கம் கடையடைப்பு கல்லெறிதல் என்று தெருவில் இறங்கிப் போராடுகிற போராளிகள் எவரையும் காணோமாம்  இயல்பு வாழ்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப் படவில்லை என்பது ஒருபுறம்! மறுபுறம்  இதுவரை எல்லாவிதமான அடாவடிகளிலும் இந்திய அரசை பிளாக்மெயில் செய்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த ஹூரியாத் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது என்று கெஞ்சிக் கேட்கிறதென்பது. 18 நிமிட விவாதம்தான்!  கொஞ்சம் பாருங்களேன்!  

திராவிட மாயை, திருட்டு திராவிடம் என்று அடிக்கடி கேள்விப் படுகிறோமே, அப்படியென்றால் என்ன? 


இதுக்கு மேலே சுருக்கமாகச் சொல்ல முடியாதுதான்! இல்லையா?   

மீண்டும் சந்திப்போம்.
  

3 comments:

  1. கலைஞ்சர் தான் தமிழையே கண்டுபுடிச்சார்...ந்னு சொல்லாம விட்டாங்களே....

    அந்த வரைக்கும் தப்பிச்சோம்....

    ReplyDelete
    Replies
    1. முழுசாத் தப்பிச்சுட்டோமா துரை செல்வராஜூ சார்? இரண்டாம் கலீஞர் மூணாம் கலீஞர்ன்னுட்டு 23 ஆம் புலிகேசி கணக்காப் போயிட்டே இருக்கே! :-)))

      Delete
    2. அதுவும் சரிதான்...

      கணக்கு வழக்கில்லாம
      போய்க்கிட்டுத் தான் இருக்கு!..

      Delete