Pages

Sunday, August 4, 2019

கதை கேளு கதைகேளு! இது கொஞ்சம் கதைக்கிற நேரம்!

ந்த நாட்களில் அக்பர் பீர்பால் இந்த இரண்டு கேரக்டர்களை வைத்து இங்கேயும் டில்லியிலும் தங்களை பாதுஷாக்களாகக் கற்பனை செய்துகொண்டு ஆட்டம்போட்டுக் கொண்டிருந்த சமீபத்தைய அரசியல்வியாதிகளைக் கலாய்த்து Consent to be......nothing! தளத்தில் கதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அதேபோல இப்போதைய ஆட்சியாளர்களையும்  கலாய்த்து, கதை எழுதலாமென்றால் எவரோடு பொருத்திக் கதை சொல்வது என்பதில் இன்னமும் தெளிவுபிறக்கவில்லை. நண்பர்கள் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டுகிறேன்! சிக்காமலா போய்விடும்?

க்பருக்குத் தன்னோட ஆட்சியில மக்களெல்லாம் எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க ஒரு நாள் ஆசை வந்துச்சாம்.தினசரி தனக்கு சவரம் செய்கிற ஒத்தன்கிட்ட கேட்டாரு.ராஜாவுக்கு சவரம் செய்கிறவனுக்குத் தங்கக் காசுல்ல கிடைக்கும்உடனே அவன் சொன்னானாம்: "ராஜாராஜாஉங்க ஆட்சியில சமத்துவம் மலருதுவேற என்னென்னவோ எப்படி எப்படியோ வளருது!மக்களெல்லாம் நீங்க ஊட்டி விட்ட இலவசங்களில் அப்படியே மெய் மறந்துவாயப் பொளந்து,மூடக் கூட முடியாம அவ்வளவு சந்தோஷமா இருக்காங்கஒரு கொறையுமில்லேஎன் தருமநிதியே !தயாநிதியேதுரைநிதியே!"

ன்னுடைய ஆட்சியில் கூட  மக்கள் இவ்வளவு சவுக்கியமா இருக்காங்களான்னுட்டுராஜாவுக்கோ பெருமை தாங்கவில்லை!சவரம் செய்ததற்கு கூலி போகஇப்படி விவரம் சொன்னதுக்காகவும் கூடுதலாத் தங்கக் காசை அள்ளி அள்ளி வீசினாராம்தங்கக் காசு கூடக் கெடச்சாஎன்ன வரும்அப்படி வர்றதுக்குஇன்னிக்குப் பேர் இலவசம்நாகரீகமாச் சொன்னாப் புள்ளிவிவரம்! உண்மையை உடைச்சுச் சொன்னாக் கலவரம்!

ராஜாவுக்குப் பெருமை தாங்க முடியாமபீர்பால் கிட்ட சொன்னாராம்: "பீர்பால் நீயும் இருக்கியேஎப்பப் பாத்தாலும் அது இருந்தா இது இல்லஇது இருந்தா அது இல்லைன்னுட்டு!பாருஎனக்கு சவரம் செய்கிற நாவிதனுக்குத் தெரிந்தது கூட உனக்குத் தெரியலையே?அய்யகோ என் தாழ்ந்த தங்கத் திருநாடே!" 

ம்ம பீர் பால் இருக்காரே அந்த ஆள் மகா குசும்புலொள்ளு,கூடவே புத்தியும் இருக்கறவர்ராஜா கிட்ட உடனே சொன்னா ஏறாதுன்னு, "எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கநான் தீர விசாரிச்சுட்டுச் சொல்றேன்அப்படீன்னு சொன்னாராம். 

க்பருக்கு இந்த மட்டிலாவது பீர்பால் எதுத்து விவரம் சொல்லாமஎதிர்க்கேள்வி கேக்காம ஒப்புத்துக்கிட்டாரேன்னு சந்தோஷம்சரின்னுட்டுடைம் கொடுத்தார். 

டனேபீர்பாலும் அந்த நாவிதனை ஆளை விட்டு என்ன செய்கிறான்ன்னு கண்காணிக்க ஏற்பாடு செஞ்சார்ராஜாவுக்கு மனம் குளிர்ற மாதிரியேஎடுப்புத் தொடுப்பாகச் சொல்லியே நெறையத் தங்கக் காசு சேர்ந்துபோச்சுகாசை வச்சு என்ன பண்றதுன்னு கூடத் தெரியலைதினசரிராத்திரி எல்லாரும் தூங்கினப்புறம்தங்கக் காசுகளை எடுத்து எண்ணுறதும்,அடுக்கி வச்சு விளையாடுறதுமாகவே பொழுது போக்கினதையும் தெரிஞ்சுகிட்டார்ஆறாம் நாள்நாவிதன் சேத்துவச்சுபாத்துபாத்துப் பூரிச்சுகிட்டிருந்த தங்கக் காசை ஆளைவைத்து லபக்கிட்டு வரச் செய்தாராம். 

ஏழாம் நாள்அக்பர் சவரம் செய்து கொள்வதற்கு முன்னாலேயே பீர்பால் போயி, "ராசா ராசாஇன்னிக்கு உங்க நாவிதரு என்ன சொல்றாருன்னு கேளுங்க"ன்னு சொன்னாராம். 

தேபடிக்குஅக்பரும் நாவிதன்கிட்ட "நம்ம ஊர் நிலவரம் எப்படிமாதம் மும்மாரி பெய்கிறதாகாத்தடிச்சு காத்தடிச்சு ஏத்தி வச்ச தீபங்களில் இருட்டு இல்லாம [இன்னிக்கு பவர்கட்னு ஏதோ சொல்லிக்கிறோமே அந்த மாதிரிஇருக்கா?" அப்படீன்னு வரிசையாநம்ம வால்பையன் மாதிரித் தொடர் கேள்விகளாகக் கேட்டாரு. 

மிழ் வலைப் பதிவர்கள் மாதிரிவேறென்ன போனாலும் கவலையில்லேஆஹாவடை போச்சேன்னு மட்டும் இருக்க அந்த அப்பாவி நாவிதனுக்குத் தெரியலசேத்து வச்ச தங்கக் காசெல்லாம் போச்சேன்னு வருத்தம்கோபம்சோகம்,ஏமாற்றம் இப்படி எல்லாம் சேர்ந்து புலம்பினான்: "என்ன ஆட்சி நடக்குதுஏழை எளியவர்களுக்குக் கொஞ்சம் கூடப் பாதுகாப்பே இல்லை. 

மத்துவம் பேசி இருக்கறதையும் பிடுங்கிக் கொள்கிற ஆட்சியெல்லாம் ஆட்சியாபாதுஷான்னு இங்க ஒருத்தர் இருக்காராபாத்துகிட்டு சும்மா இருக்காரா?மானாடும்,மயிலாடும்னாங்கநரியும் எலியும் தான் ஆடுதா இந்த ஆட்சியிலநா சொல்லலேசனங்க பேசிக்கறாங்கஊரெல்லாம் ஒரே ஏச்சுஒரே அழுகை!" ன்னு கண்ணீரோட கதறினானாம்

க்பருக்கு ஒண்ணும் வெளங்கலைநேத்து வரைக்கும் இந்த ஆட்சியில மானாடமயிலாடன்னு சிங்கமும் நரியும் கூடி எலிகளும் பூனைகளும் கூட சமத்துவமா இருக்கறதாச் சொன்னவன்இன்னைக்கு இப்படிக் கேக்கறானேன்னு அதிர்ச்சி.என்ன ஆச்சுன்னும் தெரியலஎப்படிப் பதில் சொல்றதும்னும் புரியலவழக்கம் போல சவரம் பண்ணி முடிச்சதும் ரெண்டு தங்கக் காசை வீசிவிட்டுநீ போநான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டுபீர்பாலைக் கூப்பிட்டு அனுப்பிச்சாராம். பீர்பால் வந்தாருங்கஅக்பருக்கு அடக்க முடியவில்லைபுலம்ப ஆரம்பிச்சிட்டார்: 


"நேத்து வரை உங்க ஆட்சி மாதிரி வருமான்னான்சாதனைத் திலகம்சமத்துவ நாயகன்னு சொன்னான்உங்க ஆட்சியில் மட்டும் தான் ஏழ்மையின் சிரிப்பில் இறைவனைக் காண முடிஞ்சதுன்னு வேற சொன்னான்இப்ப எல்லாத்தையுமே மாத்திச் சொல்றான்." 

"பீர்பால்பைத்தியம் பிடிச்சது அவனுக்காஎனக்கான்னே தெரியலையேஉனக்காச்சும் தெரியுதா சொல்லு." 

பீர்பால் இடையில் நடந்த கதையைச் சொல்லி விட்டு,ஒவ்வொருவனும் தன்னை வைத்தே உலகத்தை எடை போடுகிறான்இந்த நாவிதனும் தான் சௌகரியமாக இருந்ததாக நினைத்தபோது எல்லோருமே அப்படி இருந்ததாகவும்தன்னுடையது களவு போனதும்ஊரே திருடர்களால் நிறைந்து போனமாதிரியும் சொன்னான் என்பதைச் சொன்னார். அக்பருக்கு அப்பவும் நம்பிக்கை வரலேபாத்தார் பீர்பால்.

"கேப்பையிலே சுவை மணம் காரம் நெறைஞ்ச நெய் வடியுதுன்னு சொன்னாக்ககேக்கறவனுக்கு எங்க போச்சு புத்தி?கேக்கறவன் கேணையனா இருந்தாக்ககேப்பையில் மட்டுமில்லபாக்கறது எல்லாத்துலயுமே நெய் வடியும்!"அப்படீன்னு பீர்பால் சுருக்குன்னு சொன்னதும் தான்,இதுக்கு மேலயும் கேள்வி கேட்டா தனக்கு மண்டையில ஒண்ணும் இல்லேங்கிற அரசாங்க ரகசியம் வெளியாயிடும்னு ராசா கப்சிப்னு ஆயிட்டாராம்!

கதை முடிஞ்சதுகத்தரிக்காய் காச்சுதுமுத்திச் சந்தைக்கும் வந்தாச்சு!    

ஒரு கதை சொல்லட்டான்னு ...........

என்னை மாதிரி அரசியல் பிராணிகளிடம் கதை எழுதக் கேட்டால் இப்படித்தான் இருக்கும் என்பதாவது புரிகிறதா?  

மீண்டும் சந்திப்போம். 

4 comments:

  1. கதை கதையாம் காரணமாம்...
    கதைக்குள்ள ஆடுறதெல்லாம்
    உப்பு மொளகா தோரணமாம்!....

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! கதைலவந்த கத்தரிக்காய்க்கு உப்பு மொளகா வந்தாச்சு! தாளிக்க எண்ணெயும் சேந்தாக்க எண்ணெய்க் கத்தரிக்காயா வதக்கிடலாம் துரை செல்வராஜூ சார்!

      Delete
  2. ஹா ஹா ஹா கதை வாசித்து சிரித்துவிட்டேன்.

    சார் தாளிக்க எண்ணெய்தானே?!!! ஸ்ரீராம காணலையே! ஸ்ரீராம் இங்க பாருங்க கிருஷ்ண மூர்த்தி சார் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சுருக்கார். கதையும் திங்கவுமாக!!! விடாதீங்க சாரை...ஹிஹி...(பின்ன கதை படிச்சா தின்னுக்கிட்டே படிச்சாத்தானே ஸ்வாரஸ்யம்!!)

    ரசித்தேன் சார்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கதையை (அல்லது கதை மாதிரி ஏதோ ஒன்று) எழுதி ஒன்பது வருடங்களுக்கும் மேலாகிறது.

      எங்கள் ப்ளாகில் அரசியல் கலந்த கதைகளை ஸ்ரீராம் அனுமதிக்க மாட்டாரே! எனக்கோ நடப்பு அரசியலைத் தவிர்த்து விட்டு எழுத முடியாது!

      Delete