Pages

Monday, September 2, 2019

சின்னதா பீஸ் பீசா செய்திகள்! ச்சும்மா ஜாலிக்கு!

ஆ!ராசா, கனிமொழியெல்லாம் ஜெயிலா பெயிலா என்று திஹார் சிறையில் தவித்துக் கொண்டிருந்த நாட்களில், பின்னணியில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தவர்கள் பானாசீனா மற்றும் KDசகோதரர்கள் என்பது சிதம்பர ரகசியமாகத்தான் அந்தநாட்களிலேயே இருந்தது. ஆ!ராசா அந்தவிஷயங்களையெல்லாம் தான் எழுதிய ஒரு புத்தகத்தில் வெளிப்படையாகவே எழுதியிருந்ததாகவும்  சொல்லக் கேள்வி. இப்போது கர்மா தியரி சீனாதானாவை அதே திஹார் சிறையை வைத்து, கடுமையான நிபந்தனைகளுடன் வீட்டுச் சிறையில் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள், 74 வயதானவரை திஹார் சிறைக்கு மட்டும் அனுப்பிவிட வேண்டாம் என்று மூன்று நாள் தவணை கேட்டு #திஹார்பயம் வந்து ஆட்டுகிறது என்றால் என்னத்தைச் சொல்ல?! 


 

சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனெரல் துஷார் மேத்தா, சிபிஐ காவலைநீட்டித்த விதம்  தவறானது என்று அப்பீல் செய்திருப்பதில் இந்த ஆட்சேபணை மனுமீதான விசாரணை நாளை மதியம் நடக்கவிருக்கிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்று சொல்வது உண்மைதானோ?  #ஜாமீன்பசி 


சீனாதானா விஷயத்துக்கும் இந்தச் சின்னக்குழந்தை பற்றிய செய்திக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. சீனாதானா மாதிரி மேட்டிமைத்திமிர் பிடித்தவர்  பற்றிப் பேசும்போது, ஒரு நல்ல மாறுதலுக்காக ஒரு டைவர்ஷன், அவ்வளவுதான்! #குழந்தையும்தெய்வமும் 


பழ கருப்பையா செட்டியாருக்கு எங்கே போனாலும் ஒரு கெட்ட வழக்கம்! இருக்கிற இடத்துக்கு எதிராகக் கலகக் குரல் எழுப்புவது! எதிர்பார்த்தது கிடைக்கவில்லையென்றால் என்ன தான் செய்வார் பாவம்?! #காமெடிப்பீஸ் 
    
மீண்டும் சந்திப்போம்.
                  

No comments:

Post a Comment