Pages

Tuesday, November 19, 2019

அக்கப்போர்களில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு!

அதென்னவோ தமிழகத்தில் திராவிடங்கள் கழகங்களாய் அரசியலில் வளர்ந்த பிறகு வெட்டி அக்கப்போர்களிலேயே தமிழ்நாட்டு அரசியலும் இலக்கிய சர்ச்சைகளும் மூழ்கிக் குப்பை அள்ளுவதாகவே ஆகிப்போய் விட்டது என்று சொன்னால் நண்பர்கள் உண்மையைக் காணக் கூசி முகம் சுளிக்கிறார்கள்!


பெயரென்னவோ இந்துசமய அறநிலையத்துறைதான்! ஆனால், அறவுணர்வோ அறிவோ இல்லாதவர்கள் கைகளில் போகுமானால் என்ன நடக்கும்? கொஞ்சம் ரங்கராஜன் நரசிம்மன் சொல்வதைக் கேட்டுத்தான் பாருங்களேன்! வீடியோ 27 நிமிடம் ஸ்ரீரங்கம் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை மோசடிகள் குறித்து இன்னொரு வீடியோ இங்கே 32 நிமிடம்   


சிறீலங்கா தேர்தல் முடிவுகள் அங்குள்ள தமிழர்களுக்கு  சாதகமா? பாதகமா? இதை     இங்கே விவாதிப்பதில் இங்குள்ள தமிழர்களுக்கு என்ன உபயோகம்? இங்கே ஈழத்தமிழ் ஆதரவு வியாபாரம் செய்பவர்களுக்கு பாதிப்பு இருக்கலாம்! அவர்களும் கூடக் கூவி முடித்து விட்டார்களே!


அடுத்தவர்கள் மீது நரகலை வீசுவதில் வல்லவர்கள் கழக உடன்பிறப்புக்கள் என்பது தெரிந்த கதைதான்! ஆனால் சேறு வீசுவது அவர்கள் தலீவர்  பக்கமே சமீப காலமாகத் திரும்பி அடிப்பது  இசுடாலின் வகையறாவுக்கு சங்கடத்தை தோற்றுவித்திருக்கிறது. ஊடகங்களை விலைக்கு வாங்கியிருக்கலாம்! சமூக வலைத்தளங்களில் கிழிகிழியென்று கிழிக்கப் படுவதை நிறுத்திவிட முடியுமா? 
முத்தமிழ்னு சொல்லியே விக்கிற சாமர்த்தியம் 
இருந்த கலீஞனின் மகனா இப்படி? 


வருகிற தைப் பொங்கலோடு 50வது ஆண்டில் துக்ளக். அதையொட்டி வருகிற ஞாயிறு திருச்சியில் ஒரு சிறப்புக் கூட்டம். வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளலாமே!

மீண்டும் சந்திப்போம்.    
      

No comments:

Post a Comment