Pages

Monday, November 4, 2019

வெட்டி அக்கப்போர்களால் ஆனது தமிழக அரசியல்!

அரசியலை வைத்து மட்டுமே பதிவுகள் எழுதுவதில் உள்ள சிக்கலே அப்படி எழுதுகிற ஒவ்வொரு தருணத்திலும் சுவாரசியமான பரபரப்புச் செய்தி எதுவுமே இருக்காது என்பதுதான்! அதனால்தானோ என்னவோ தமிழக அரசியல்வாதிகள் குறிப்பாகத் திராவிட அரசியல்வாதிகள் கோமாளித்தனங்கள் செய்வதிலேயே இல்லாத பரபரப்பையும் செய்திகளையும் தொடர்ந்து உருவாக்க முயற்சிக்கிறார்களோ?


பிஜேபிகாரர்கள்  திருவள்ளுவருக்கு காவியாடை அணிவித்து விட்டார்கள் என்று கொதித்தெழுந்தார் இசுடாலின்! ட்வீட்டரில்தான்! அதையே அவர் பேசிய வீடியோவாக வெளியிட்டு  இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்!


ஒழுங்கால் ஓரே ஒரு திருக்குறளைப் பிழையில்லாமல் சொன்னால் நாங்கள் போட்ட பதிவை நீக்கி விடுவோம் என்கிறது பிஜேபி! ஆக, இசுடாலினுடைய கோமாளித் தனங்கள் தான் இங்கே அரசியல், பரபரப்பு, செய்திகள் என்றே போய்க் கொண்டிருந்தால், தமிழக அரசியலைப் பற்றி என்னதான் எழுதுவது?


பாவம்! ஐம்பது வருடங்களுக்கும் மேலாக திராவிட இயக்கம் செய்து வந்த நச்சுக் கலப்பு அம்பலமாகி நிற்கிற வேளை இது!  இசுடாலின் கோமாளியாகி நிற்பதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?  

 

வெட்டி அக்கப்போர்களால் ஆனது தமிழக அரசியல் என்பது அப்பட்டமாகத் தெரிந்த விஷயம்தான்! திருச்சி வேலுச்சாமி ராஜீவ் காண்டி கொலைவழக்கு பற்றிப் பேசுகிற authority ஆகியிருப்பது இன்னொரு விதமான அக்கப்போர். ரங்கராஜ் பாண்டே நடத்துகிற இந்த விவாதம் அல்லது அக்கப்போர் வீடியோ 51 நிமிடம்.

கேள்வியே இதுபோன்ற வெட்டி அக்கப்போர் அரசியல் நடத்துகிறவர்களை எப்போது புறக்கணிக்கக் கற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?

குறைந்தபட்சமாக எப்போது உங்களை இந்தக் கேள்வி கேட்டுக்கொள்ளத் தயாராகப் போகிறீர்கள்?

மீண்டும் சந்திப்போம்.  

4 comments:

  1. புதிதாக ஒரு திருமண விழாவில் மணப்பையன் பெயரை மாற்றி, மணப்பையனின் தந்தையை மணப்பையனாக்கி மகிழ்ந்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியடைகிற விஷயமா அது ஸ்ரீராம்? உளறல் என்பது மிகப்பெரிய திராவிட வியாதி!

      Delete
    2. 1970 களில் மயிலையில் ஒருவர் திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்று ஆதாரங்களை அரசிடம் சமர்ப்பித்ததாக அப்போது செய்திகள் வந்தன... அப்புறம் அவையெல்லாம் போலியானவை என்று தகவல்கள் வெளியாகின..

      Delete
    3. வாருங்கள் துரை செல்வராஜூ சார்!

      மேலே தெய்வநாயகம் அப்படி எழுதிய புத்தகம் மற்றும் கருணாநிதி அதற்கு எழுதிய முன்னுரை படமாகத் தரப்பட்டிருக்கிறதே! ஆனால் திருவள்ளுவரைக் கிறித்தவராக்கும் திருப்பணியை முதன்முதலில் ஆரம்பித்தது கால்டுவெல் பாதிரி!

      Delete