Pages

Monday, January 27, 2020

தமிழருவி மணியன் ஒருவரே போதும்! #damager

பழ.கருப்பையா, தமிழருவி மணியன் போன்றவர்கள் காமராஜரின் தொண்டர்களாக இருந்தது, காந்தியம் பேசிக் கொண்டே எந்தெந்தக்குட்டிச்சுவர்களில் போய் நின்றார்கள் என்பதையெல்லாம் திரும்பிப் பார்த்தால் குமட்டிக் கொண்டு வருகிறது. காந்திய மக்கள் இயக்கம் என்று தனிக்கடை போட்டவர் இன்றைக்கு ரஜனிக்கு அரசியல் ஆலோசகர் என்கிறார்கள். இவர் போன இடம் எதிலும் நிலைத்து நின்றவர் இல்லை, போன இடம் எதுவும் உருப்பட்டதில்லை! #வைகோ மாதிரி ஒரு ராசி! இப்போது நிறையப்பேச ஆரம்பித்து இருக்கிறார்! காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்!

  
இந்த வீடியோவை சாணக்யா தளத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பேச்சு வியாபாரிகளை நம்பித் தமிழகம் இத்தனை நாள் கெட்டது போதாது என்று ஒரு புது ப்ராண்டைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு மணியன் புதிதாகக் கிளம்பியிருக்கிறார் என்பதில் சந்தோஷப்பட எதுவும் இல்லை.  திமுக, காங்கிரசைச் சாடுகிறார்,  பொன்னாரைப் புகழ்கிறார், பிஜேபிக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதில் எல்லாம் எனக்கு, எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது என  இவருடைய கடந்த காலம் மட்டுமே கண்முன் வந்து நிற்கிறது. 

இவரை, இவர் பேச்சை இன்னமும் நம்புகிறவர்களை, இவருடைய ஆலோசனைகளைக் கேட்பவர்களைப்  பார்க்க மிகவும்  பரிதாபமாக இருக்கிறது.

விதியே விதியே! தமிழ்ச்சாதியை என் செய நினைத்தாய்?

மீண்டும் சந்திப்போம்.                

2 comments:

  1. வாழ்ந்து முடிந்த இறந்த பின்பு அவமானப்படுவார்கள். மறைந்து போனவர்களின் பட்டியல் உங்களுக்குத் தெரியும். வாழும் போதே சிலர் அவமானப்பட்டு இறப்பார்கள். நீங்கள் குறிப்பிட்டவர்களின் வாழ்க்கை, உரைகள், நடவடிக்கைகள் பார்த்து நான் இதையே தான் மனதில் நினைத்துக் கொள்வதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      இங்கே மணியன் மட்டுமல்ல, சுபவீ செட்டியார், வைகோ உட்படப் பேச்சுவயாபாரிகள் அத்தனை பேர்களுடைய பட்டியல் தெரிந்தால் மட்டும் போதுமா? இந்தத்திண்ணைப்பேச்சு வீரர்களிடம் ஏமாந்துவிடாமல் எப்போது எச்சரிக்கையாக இருக்கக் கற்றுக் கொள்ளப்போகிறோம்?

      அது அல்லவா முக்கியம்!

      Delete