Pages

Monday, February 17, 2020

வலதுசாரி தேசியவாதம் எதனால் ஜெயிக்கிறது? -2

வலதுசாரி தேசியவாதம் எதனால் ஜெயிக்கிறது? ஒரு பத்துநாட்களுக்கு முன்னால் இந்தப் பக்கங்களில் எழுதியது ஞாபகமிருக்கிறதா? இடது சாரிகள் சொல்லிவைத்தமாதிரி உலகின் பெரும்பாலான நாடுகளில், இந்தியாவிலும் தேய்ந்து வழக்கொழிந்து போய்க்கொண்டிருப்பதும், வலது சாரிகள் குறிப்பாக வலதுசாரி தேசியவாதம் எல்லா இடங்களிலும் வளர்ந்துகொண்டிருப்பதும் தற்செயலானது அல்ல. வலதுசாரி தேசியவாதம் எதனால் ஜெயிக்கிறது என்ற கேள்வியைக் கொஞ்சம் ஆழமாகப் பரிசீலிப்பது, இடதுசாரிகள் எல்லாக் காலங்களிலும்  மாற்றம் முன்னேற்றத்துக்கான அடையாளமாக இருப்பதில்லை என்பதோடு வலதுசாரி தேசியவாதம் என்பது இடதுசாரிகள் கூவுவதுபோல ஃபாசிச பூச்சாண்டியுமல்ல என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.


இந்த 77 நிமிட விவாதத்தைப் பொறுமையாகப் பார்க்க முடியுமானால், வலதுசாரி தேசியவாதம் எதனால் ஜெயிக்கிறது என்ற கேள்வியை இந்தியச் சூழ்நிலையோடு பொருத்திப் பார்த்துப் புரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.

பதிவுகள் எழுதுவது ச்ச்சும்மா ஜாலிக்கு, ஜஸ்ட் டைம் பாஸ், இப்படி அரட்டை மடமாக மாற்றுவதில் எனக்கு சிறிதும் வல்லமை இருந்ததில்லை. இங்கே எழுதுவது கொஞ்சம் உரத்த சிந்தனையாகத்தான் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்!

கேள்வியின் பரிமாணமும், உதவியாகக் கொடுத்திருக்கும் வீடியோவும் பெரியது என்பதால் பதிவை சுருக்கமாக இங்கே முடித்துக்கொண்டு .....

மீண்டும் சந்திப்போம்.       

 

2 comments:

  1. எழுத்தாளர்கள் மனதில் என்ன தான் இலக்கியவாதி என்று பேசினாலும் திரைப்பட வாய்ப்பு என்றால் மடங்கி விடுவார்கள். மனதை மாற்றிக் கொள்வார்கள். அதே இடதுசாரி வலதுசாரி என்பதும் பணம் என்ற நோக்கில் அவர்கள் இலக்கும் மாறிவிடுகின்றது. திருப்பூரில் நான் பார்க்கும் உண்மையிது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      திருப்பூர் அனுபவம் ஒருசிறுதுளி தான்! அதைமட்டும் வைத்து உலகத்தை எடைபோடுவது பெரும்பாலும் தவறான முன்முடிவுகளுக்குக் கொண்டுபோய்விடும்.

      Delete