Pages

Saturday, September 14, 2019

திருமாவளவன்! ராதாரவி! கார்டூன்! காமெடிகள்

விசிகவின்  திருமாவளவன் இப்போதெல்லாம் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் ரேஞ்சுக்குப் பேசுவதை பார்க்கும் போதே ரொம்பத் தமாஷாக இருக்கிறது! வீடியோ மூன்றரை நிமிடம்.
எல்லாம் எம்பியானதாலா அல்லது டாக்டர் பட்டம் வாங்கியதாலா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம் போல்!


திமுகவிலிருந்து வெளியேறிய பிறகு எப்படி இருக்கிறார்  ராதா ரவி? இந்தக் கேள்வியே கொஞ்சம் அனாவசியம் !எம்ஆர் ராதா மகன் இல்லையா? எப்போதும் போலக்  கலகலப்பாகவே இருக்கிறார்! சினிமா நிகழ்ச்சிகளிலும், நேர்காணல்களிலும் பிசியாகத்தான் இருக்கிறார்.


எம் ஆர் ராதா நாத்திகராக இருந்தாலும் ஒரு வேதாந்தியாகத் தான் வாழ்ந்தார் என்று நேர்காணலில்  ராதாரவி சொல்வதைக் கேட்கையில்  கொஞ்சம் சுவாரசியமாகத்தான் இருக்கிறது.  


யார் யாருக்கோ என்னென்னமோ கவலை! கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யாவுக்கு ராகுல்பற்றிக்  கவலைவந்துவிட்டது  என்றா நினைக்கிறீர்கள்? மனிதர்   கார்டூனில் பொடி வைத்துச் சொல்லியிருக்கிறார்! புரிந்தவர்கள் புரியாதவர்களுக்குச் சொல்லுங்களேன்! அதற்கு நேரம் கொடுப்பதற்காகப் பதிவை சிறுசாக முடித்துக் கொள்வோம்! 

மீண்டும் சந்திப்போம். 
   

No comments:

Post a Comment