Pages

Tuesday, November 24, 2020

இன்று வெற்றித்திருநாள்! ஸ்ரீ அரவிந்தரும் ஒளி பொருந்திய பாதையும்!

இன்று நவம்பர் 24. ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் வெற்றித் திருநாள் (Sidhdhi Day) என்று அழைக்கப்படுகிற தரிசன நாள். 1926 இல் ஸ்ரீ அரவிந்தருக்குள்  ஸ்ரீ கிருஷ்ண சைதன்யம் புகுந்து நிறைந்த தினம். கிருஷ்ணனுடைய ஒளி ஒரு மானுட உடலில் புகுந்து நிறைந்ததான அந்த அனுபவமே ஸ்ரீ அரவிந்தர் அடுத்த 24 ஆண்டுகள் மேற்கொண்ட தவமாக விரிந்து அதிமானச ஒளி Supramental Light ஸ்ரீ அரவிந்தருடைய ஸ்தூல உடலில் தங்கிய அற்புதமாகவும் ஆகியது.


இன்று புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் வழங்கப் பட்ட தரிசன நாள் செய்தி

ஸ்ரீ அரவிந்தாசிரமம் உருவான விதத்தை ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்த அன்னை வார்த்தைகளிலேயே சென்ற ஆண்டு தரிசன நாள் செய்தியாக வெளியிடப்பட்டதை இந்தப்பக்கங்களில் பார்த்தது நினைவிருக்கிறதா? 

இந்த நாளுடைய அருமை என்ன என்பதைப் பிந்தைய நாட்களில் ஸ்ரீ அரவிந்தர் சொன்னது இப்படி 

ஸ்ரீ அரவிந்தருடைய திருவடிகளைச் சரணடைகிறேன். 

ஸ்ரீ அரவிந்த அன்னையின் திருவடிகளைச் சரணடைகிறேன்   

1 comment: