Friday, October 19, 2012

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனும் பின்னே ஸென்னும் கீபோர்டு எலியும்

கொஞ்சம் பிறவேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டதில் இந்தப் பக்கங்களில் எழுதுவதே அனேகமாக மறந்து போய்விட்டது! புதிய விஷயங்களைத் தேடிக் கொண்டிருந்த முனைப்பில், வழக்கமாக வாசித்துக் கொண்டிருந்த சில இழைகள் படிக்கும் வரிசையில் பின்னுக்குப்போயின. நல்லவேளை, வெறும் எட்டு-பத்து நாட்களுக்குள்ளானவைதான்!வாசிப்பதை எட்டிப் பிடித்து விடலாம் என்று திறந்தபோது, ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனின் இந்த இழை கொஞ்சம் கட்டிப் போட்டு விட்டது.

படியுங்களேன்! நீங்களும் கட்டுப் படுகிறீர்களா, அல்லது........!!
.



ஸான் மோட்ஸு மிகவும் கண்டிப்பானவர்.

யார் எந்த விதத்தில் தங்கள் இஷ்டத்துக்குக் கத்தினாலும் அதை ஒருநாளும் சூ சூ என்று தலையிட்டு அடக்கமாட்டார். காரணம் தெரியாமலேயே பலர் தாமாக அடங்குவர்.

பல கிராமங்களிலிருந்து வந்த இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து பயிற்சி எடுப்பதைப் பார்த்தால் வியப்பாக இருக்கும்.

புதுவிதமான சண்டைப் பயிற்சிகள். அதற்கு ஏற்றாற்போல் புதுவித அடிவயிற்று ஒலிகள்.

பெரிய யந்திரத்திற்குள்ளே வித வித கோணங்களில் ப்ளெடுகள் திரும்பி திரும்பிச் சுழல்வதைப் போல் சீடர்கள் கைகளை விதவிதமான கோணங்களில் கரணை மட்டை போல் ஆக்கித் திருப்புவதைப் பார்க்கும் போது கடலில் பெரிய மீன்கள் சுழன்று அடிப்பது போல் இருக்கும்.

ஆனால் இவ்வளவு ரகளையிலும் மோட்ஸு தூங்குபவர் போல் அமர்ந்திருப்பார்.

சரி கிழம் தூங்கிடிச்சு என்று முன் வரிசை மூன்றைக் கடந்த நாலாவது வரிசையில் ஒருவர் அசிரத்தையாக முதுகைச் சொரிந்தாலும் போதும் அந்தச் சீடரின் பெயர் உச்சத்தாயியில் அவரிடமிருந்து வரும்.

தலையைக் குனிந்தபடி இருக்கும் கிழம் எப்படிக் கண்டுபிடிக்கிறது?

சீடர்கள் தூக்கத்தில் கூட களரிக் கூக்குரல்களைக் கத்த ஆரம்பித்து விட்டனர்.

ஒரு நாள் பின் ஜாமத்தில் மோட்ஸு நட்ந்தார். அப்பொழுது இளம் மாணிகள் தங்கி இருந்த கூடத்திலிருந்து பயிற்சி ஓலங்கள் கனவில் வாய்குளறி வந்து கொண்டிருந்தது.

மோட்ஸுவிற்கு கவலை. மாணிகளுக்கு மௌனம் என்றால் என்ன என்றே தெரியாமல் போய்விடுமோ!

மறுநாள் ஒரு வினோத பயிற்சியை ஆரம்பித்தார்.

யாரும் எதுவும் செய்யக் கூடாது; பேசக் கூடாது.

மௌனம் அதைப் பழக வேண்டும்.

அண்டை அயல் கிராமங்களில் இருந்த பழைய ஸென் முதியவர்களுக்கு அது வேடிக்கையாய் இருந்தது.

மௌனத்திற்குப் பயிற்சியா?

முதல் நாள் பயிற்சி முடிந்தது. மறுநாளும்.

பிறகு அவர்களைக் கூப்பிட்டு மௌனம் கடைபிடித்த காலத்தில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? என்ன நினைத்துக் கொண்டிருந்தீர்கள்? என்றார்.

பொய் தேவையே இல்லை என்ற சூழ்நிலையை வைத்திருந்தார் ஆகையாலே மாணிகள் தயங்காமல் கூறினார்கள்.

“மற்ற மாணிகள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த முதல் வரிசையில் இருக்கும் மூன்றாவது மாணி என்னை அன்று எப்படித் திட்டினான்; அதற்கு அவனை மலையிலிருந்து உருட்டிவிடுவதுதான் வழி. ஒரு நாள் அப்படிச் செய்தால்....இவ்வாறுதான் எண்ணம் இட்டுக் கொண்டிருந்தேன்” என்றான் ஒரு மாணி.

இப்படி ஒவ்வொருவரும் சொல்லுவது மொத்தத்தில் அடுத்தவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதிலும், அடுத்தவர் சொன்னதை மனத்தில் போட்டு சினம் வளர்த்து கறுவுவதிலுமாக இருந்தது.

“நீங்கள் மௌனமாக இருக்கச் சொன்னால் முன்னிலும் அதிகமாக சத்தம், இரைச்சல் என்று அவதிப்பட்டிருக்கிறீர்கள்.

புரிகிறதா?....” என்றார்.

ஆம் ஐயனே!

“நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உணர்ந்து திருத்திக்கொண்டு முன்னேறும் வழிகளைப் பார்க்காமல்...அடுத்தவரைப் பற்றி எண்ணியும், கறுவியுமே உங்கள் தியானம் கழிந்திருக்கிறது.”

தலையைக் கவிழ்ந்து அமர்ந்திருந்தனர் சீடர்கள்.

”சரி. நாளை ஒரு நாள் அவகாசம் தருகிறேன். முழு மௌனம். நல்லபடியாகப் பயன் கொள்க” என்று சொல்லிப் போகவிட்டார்.

நாளை மறுநாள் கூப்பிட்டுக் கேட்டார்.

“மௌன காலத்தில் என்ன சிந்தனை?” என்று.

சீடர்கள் உற்சாகமாக இருந்தனர்.

அநேகமாக அனைவரும் மோட்ஸுவினுடைய உபதேசத்தை நினைத்துக் கொண்டிருந்ததாகவும், மௌனம் எவ்வளவு முக்கியம் என்று மோட்ஸு கூறியதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்ததாகவும், மோட்ஸு எப்படி மௌனத்தில் இருப்பார் என்று கற்பனை பண்ணிக் கொண்டிருந்ததாகவும் -- இப்படித்தான் மாறி மாறி கூறினார்கள்.

ஒரு சிலர் தாங்கள் பக்கத்து கிராமங்களில் பழைய கிழங்கள் மௌன பயிற்சியைக் கிண்டல் அடித்ததை நினைத்துக் கொண்டதாய்க் கூறினர்.

மோட்ஸு கவலை தோய்ந்த குரலுடன் கூறலானார்,

“பார்த்தீர்களா! மௌனம் என்பது இப்பொழுதும் உங்களுக்கு எட்டவில்லை. அதைபற்றி நான் செய்த உபதேசமும், நானும்தான் உங்கள் சிந்தனையில் இருந்திருக்கிறது. கிராமத்து ஏச்சுகள் இருந்திருக்கின்றன. ஆனால் மௌனத்தில் இருக்க வேண்டியது இல்லை.”

ஒரே ஒரு சீடன் மட்டும் தயங்கிக் கொண்டு சொன்னான், தன் மௌனத்தில் தான் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததாக.

சிறிது முகம் மலர மோட்ஸு அவனைப் பார்த்தார்.

அவன் மேலும் சொன்னான், “ஆம் மௌன காலத்தில் நான் என்னைப் பற்றியே சிந்தித்தேன். எதிர்காலத்தில் நான் மோட்ஸுவின் இடத்தில் அமர்ந்ததும் சீடர்களுக்கு என்ன பயிற்சி அளிக்கலாம், மௌனப் பயிற்சியையே ஏதாவது மலை குகைகளில் ஏற்பாடு செய்யலாம் என்றெல்லாம் திட்டம் போட்டுக் கொண்டிருந்தேன்” என்றான்.

மோட்ஸு முக மலர்ச்சி எல்லாம் மறைந்து ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்.

சிறுவயதில் அவர் குரு கூறியது ஞாபகத்திற்கு வந்தது -- “கிடைத்தற்கரியது மௌனம். மனத்திலும் பிறரைக் கொண்டு சத்தம் செய்தே வாழ்பவன் பரிதாபத்திற்கு உரியவன்” 

ஒரு கூகிள் குழுமத்தில் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் எழுதியது. அவருக்கு நன்றியுடன்!

*****


இன்று மாலை மனிதர் பேசுகையில் ஒரு கட்டளை போட்டார்.மீற முடியவில்லை, ஆனால், எனக்கோ வேறு விதமான சூழ்நிலை! இருக்குமிடமே வைகுந்தம், கைகூப்பித் தொழும் திசையே ஸ்ரீரங்கம் என்ற மாதிரி, நவராத்ரிப் பொழுதில் தக்ஷிணேஸ்வரியை , இங்கிருந்தே கைகூப்பி நமஸ்கரிக்கிறேன். சரணடைகிறேன்.


வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே



Thursday, July 19, 2012

ஆலமரமும் விழுதுகளும்!



(சு)வாசிக்கப் போறேங்க என்ற தலைப்பில் புத்தக வாசிப்பில் எனக்குக் கிடைத்ததை சொல்கிற வலைப்பக்கங்களாக கொஞ்சம் எழுத ஆரம்பித்ததில் கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளி!புதிய பதிவுகள் எதுவுமில்லாமல் இருந்தாலும்  இந்த ஒருவருடத்தில், வந்து எட்டிப்பார்த்துவிட்டு, அப்படியே கொஞ்சம் பழைய பகிர்வுகளை (சு)வாசித்துச் சென்றவர்கள் கொஞ்சம்பேர் இருக்கிறார்கள்!வாசிப்பனுபவம் உள்ளவர்களால் கவனிக்கப்படுவதில் மகிழ்ச்சியே! அவர்களுக்கு  என்னுடைய நன்றிகலந்த வணக்கங்கள்.

2009 இல் என்னுடைய மகன் சென்னைப் புத்தகக் கண் காட்சிக்குப் போய் விட்டு வந்த அனுபவத்தைத் தொட்டு ஆரம்பித்ததில், புத்தகங்களை வாசிப்பது என்பது ஒரு அனுபவமாக வளராமல், நானும் புத்தகக் கண்காட்சிக்குப் போனேன், இத்தனை ஆயிரம் ரூபாய்க்குப் புத்தகங்களை வாங்கினேன், மூன்றாம் வருடம் வாங்கிய புத்தகங்களே இன்னமும் வாசிக்கப்படாமல் இருக்கின்றன என்று பெருமையாக டம்பம் அடித்துக் கொள்கிற போக்கைப் பார்த்தபோது,(சு)வாசிப்பது எப்படி என்றே நமக்குத் தெரியவில்லை என்ற உண்மை மிகப்பலமாக உறைத்தது.

வலைப்பதிவுகளை வாசிப்பவர்களில் பெரும்பாலானோர்  நீளமான பதிவுகளை வாசிப்பதில்லை, அப்படியே வாசிக்கிற பதிவுகளிலும் மிக மேலோட்டமான வாசிப்புத்தான் என்பதும், வாசித்த விஷயத்தில் பாதியைக் கூட உள்வாங்கிக் கொள்வதில்லை. பின்னூட்டங்களில் பெரும் பாலானவை கூட, பதிவில் அங்கே இங்கே ஓரிரு வரிகளை உருவி எடுத்துப்போட்டு, ஆஹா! அருமை என்றோ இல்லை என்றோ முடித்து விடுகிற அவசரத்தின் அள்ளித்தெளித்த கோலம் தான்! 
எதையும் முழுமையாக வாசிப்பதில்லை என்பது போய், ஒரே நேரத்தில் ஒரு நூறு இடங்களில் எதையாவது பின்னூட்டமாக எழுதித் தங்களுடைய இருப்பைக் காட்டிக் கொள்வதென்பதே, வாசித்ததாகக்கருதப்படுகிறது! இதெல்லாம் நன்றாகத்   தெரிந்த விஷயம் தான் என்றாலும், இந்த போலித் தனத்தின் முழுப் பரிமாணத்தைக் காணும் போது நிறையவே அதிர்ச்சியாக இருக்கிறது.

தவிர, ஒரு வலைப்பதிவு என்பது, ஒரு மனிதன் தன்னுடைய எண்ணங்களைத் தன்னுடனும், பிறருடனும் ஒரேசேரப்பகிர்ந்து கொள்கிற ஒரு பொது வெளி! Open and Loud thinking!இந்தக் கருத்துடன் உடன்பட முடிகிறதோ இல்லையோ,பதிவுகள் நிச்சயமாக ஒரு கை ஓசை அல்ல!ஒரு கருத்துடன், உடன் படுகிறவர்கள் அல்லது முரண்படுகிறவர்கள் என்று எப்படியானாலும் ஒரு விவாதத்தை முன்வைப்பது தான் வலைப்பதிவுகளின் சாரமே!

ஏதோ ஒரு ஆவல் உந்த, ஒரு வலைப்பதிவைத் தொடர ஆரம்பித்து விடுகிறோம், சரி!இப்படிப் பின்தொடர்பவர்களாக இருந்து, அல்லது இத்தனை  நூறு அல்லது ஆயிரம் பின்தொடர்பவர்களைப் பெற்ற பதிவராக இருந்து விடுவதால் மட்டும் என்ன இருக்கிறது?பின்தொடர்கிறவர்கள் என்றால் எதில்? எதுவரை?

தொடர்பவர்களுக்கும் தொடரப்படுகிறவர்களுக்கும் ஒரு நேரடியான உரையாடல், ஒரு உயிரோட்டமான தொடர்புகள் இல்லாமல் இந்த ஃபாலோயர்ஸ்  பட்டியல் அல்லது எண்ணிக்கையில் ஒரு பயனும் இரு தரப்புக்குமே இல்லை!அப்படியானால், நாம் பதிகிற பதிவுகளால், ஒரு சிறிய சிந்தனை, உரையாடல், தாக்கத்தைக் கூட ஏற்படுத்த முடியவில்லை என்றால் எழுத்து நம் கைவசப் படவில்லை என்று ஒப்புக் கொண்டு, மௌனமாக இருந்து விடவேண்டியது தானா?

வால் நீளமாக இருப்பது நல்லது என்று ஆரம்பித்து ஒரு பதிவு, சுமார் முப்பது மாதங்களுக்கு முன்னால் எழுதியதை மீள்வாசிப்புச் செய்ததில், பல விஷயங்கள் தெளிவாகின.

எந்த ஒரு பெரிய சாதனை, முயற்சி, வெற்றி என்று சொல்லப்படுவதற்கும் பின்னால், இந்த மாதிரி ஆயிரம் உண்மையான பின்தொடர்ந்து வரும் நண்பர்களைச் சம்பாதிப்பதில் தான் ஆரம்பமாகிறது. ஆயிரம் என்பது ஒரு எண்ணிக்கை. இப்படிப்பட்டவர்களை உங்களோடு இணைத்துக் கொள்வதில் இருந்துதான், அவர்கள் நீங்கள் காட்டும் பாதையை ஏற்றுக்கொள்வதும், உங்களோடு கூட வருவதுமான வெற்றிப் பயணம் ஆரம்பிக்கிறது.

கெவின் கெல்லி தன்னுடைய பதிவில் இப்படி ஆரம்பிக்கிறார்:

"வால் நீண்டு கொண்டே போவது இரண்டு  விதமான தரப்பை ரொம்பவுமே மகிழ்ச்சியடையச் செய்யும். அதிர்ஷ்டக்காரர்களான சந்தையைக் கைப் பற்றுகிறவர்கள், சந்தையில் வாங்குகிறவர்கள் இப்படி இரண்டு தரப்பையுமே!"



வரப்புயர நீர்  உயரும்னு தானே நாமெல்லாம் படிச்சிருக்கோம்! கெவின் கெல்லி கொஞ்சம் வித்தியாசமா, வால் நீள, தலை நிமிரும்னு சொல்லியிருக்காரு! படத்தைப் பாருங்க!வாலைத் தேடவேண்டாம்!

இங்கே கெவின் கெல்லி சொல்வது தலை-வால் என்ற இரண்டு அம்சத்தைப் பற்றி! வேறு எதனோடும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்!

இப்படி ஆயிரம் உண்மையான நண்பர்களைச் சம்பாதிப்பது, முடியக் கூடிய ஒரு விஷயம் தான்! அவர்களுடைய நம்பிக்கையைப் பெறுகிற விதத்தில் உங்களுடைய தயாரிப்பு இருக்க வேண்டும்! இங்கே உதாரணத்துக்கு வலைப் பதிவுகளையே எடுத்துக் கொள்வோமே, அவர்களுடைய கனவுகளை நனவாக்கும் வழியைக் காட்ட உங்களால் முடியும் என்றோ, அவர்களுக்கு பயன் படுகிறவிதத்தில் உங்களுடைய பதிவுகளை அவர்களை அடையாளம் கண்டு கொள்கிற மாதிரியோ ஆரம்பித்து, அந்த நம்பிக்கையைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொள்ளவும் உங்களால் முடியுமானால், ஆயிரம் பேர் மட்டுமல்ல இன்னும் அதிகமாகவே உங்களைப் பின்தொடரத் தயாராக இருப்பவர்களாக மாற்ற முடியும்!

இப்படி உண்மையான நண்பர்கள் கிடைப்பது மிக மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். இந்த மாதிரி நண்பர்களை சந்தோஷப்படுத்துவதே கூட ஒரு சந்தோஷகரமான அனுபவமாகவும், வாழ்க்கைக்கு உயிர் ஊட்டுவதாகவும் இருக்கும் இல்லையா!


புத்தகங்களைப் பேச வந்த தளத்தில் இதெல்லாம் எதற்காக என்கிறீர்களா? புத்தகங்களை என்ன செய்வது என்ற இந்தப்பக்கத்தை ஒருதரம்  வாசித்து விடுங்கள்!

புத்தக வாசகனுக்கு தான் வாங்கிய புத்தகங்களோடு உள்ள உறவு அது ஒரு புத்தகம் என்பதைத் தாண்டியது, அது  ஒரு விதமான தோழமை உணர்வு, படிப்பின் வழியாக உணர்ந்த நெருக்கம் அவனைப்பற்றிக் கொள்கிறது, அவன் புத்தகங்களை வெறும் அலங்காரப்பொருளாக நினைப்பதில்லை, ஒரு புத்தகம் திறக்கப்படும்போது ஒரு உலகம் திறக்கபடுவதை உணர்கிறான், அது தன் வாழ்வை புரட்டி போடுவதை தானே அனுபவிக்கிறான், ஆகவே அதை உயிருள்ள ஒன்றாகவே கருதுகிறான், புத்தகங்களை தன்னை மேம்படுத்த துணை செய்யும் ஆசானாக, நண்பனாகவே கருதுகிறான், ஆகவே புத்தக வாசகன் ஒரு புத்தகத்தை இழப்பதை எப்போதுமே தனது அந்தரங்க வலியாக உணர்கிறான்,

எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தவரிகளில், புத்தகம் என்ற இடத்தில் பின் தொடர்பவர்கள் என்று வைத்துப் பாருங்கள்! அப்படியான நெருக்கம், கைவரப் பெறுமானால், ஃபாலோயர்ஸ், எண்ணிக்கை, அதனால் சாதிக்க முடிந்தது என்று வாழ்க்கை ஒரு அர்த்தமுள்ள நதிப்பெருக்கு மாதிரி ஓடிக் கொண்டே இருக்கும்! இலக்கை அடையும் வரை ஓயவே ஓயாது!



ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் விழுதுகளாய் உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறதே,! கொஞ்சம் இந்தப் பக்கத்தையும் பாருங்களேன்!
 

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)