நேற்றோ முன்தினமோ ஆசியாநெட் தமிழ் ஊடக முகநூல் பக்கத்தில் ஆனந்தவிகடன் மீது இசுடாலின் மானநஷ்ட வழக்கு என்று செய்திக்கு லிங்க் இருந்தது. லிங்க் மீது க்ளிக் செய்தால் திரும்பத்திரும்ப home page இற்கே போய்க்கொண்டிருந்ததில் எத்தனையோ அபத்தம், இதுவும் அதில் ஒன்றாக இருக்கும் என்று அமைதியாகக் கடந்துபோய்விட்டேன்.
இன்று காலை மறுபடியும் ஒரு எழுத்தாளர் முகநூல் பகிர்வில் அதேசெய்தி! இன்னும் கொஞ்சம் விவரங்களோடு, ஒருகோடியே பத்து லட்சரூபாய் இழப்பீடு கேட்பு, லாட்டரி மார்ட்டினிடமிருந்து திமுக 500 கோடிரூபாய் நிதி பெற்றதாக ஜூவி செய்திக் கட்டுரை விஷயத்தில் என்றிருந்தது.
மான நட்டம்
1.1 கோடி நட்ட ஈடு கேட்டு ஆனந்தவிகடன் மீது ஸ்டாலின் வழக்கு
அப்படி என்ன சொல்லிட்டான் அந்த திமுக விகடன்
லாட்டரி கிங் மார்ட்டின் 500 கோடி திமுகவுக்கு தேர்தல் நிதி குடுத்ததாலதான் மார்ட்டின் மேல ஐடி ரெய்டுனு எழுதிட்டானாம்
கலைஞரா இருந்தா, ஜெயமோகன் மேட்டர் மாதிரி பாப்பார விகடன்னு திட்டி முரசொலில ‘கவிதை’ எழுதிட்டு விட்டிருப்பாரு. பார்த்துப் பேசுற ஸ்டாலின் வழக்கு போடாம வேற என்ன பண்ணமுடியும் பாவம். அதுசரி, பகுத்தறிவு சமூகநீதி உடன்பிறப்புகளின் கூடாரமாகிடுச்சினு பாப்பான் எவனுமே பல வருஷமா விகடன் வாங்கறதில்லையே
அட நீ வேற. விகடன்ல இருந்த மொத்த உடன்பிறப்புகளும் திருமாவேலன் தலைமைல கலைஞர் டிவிக்குப்போயே எவ்ளோ நாளாவுது
கலைஞர் டிவினா
ஜெயா டிவி மாதிரி இது இன்னோரு உப்புமா சேனல்
இது இன்று மதியம் ப்ரியங்கா திருமூர்த்தி என்பவர் எழுதி The NewsMinute தளத்தில் வந்த செய்தியின் ஸ்க்ரீன் ஷாட்.
எனக்கொரு #டவுட்டு
இப்படி மானநஷ்டம், அதுக்கு இத்தனை இழப்பீடு என்று கேட்டு வழக்கு என்று அடிக்கடி பார்க்கிறோமே, மொதல்ல மானம்னு ஒண்ணு இருந்துச்சா, அப்படி இருக்குமானால் அவங்க கேக்கறாங்களே அவ்வளவுதான் அதுக்கு மதிப்பா? இந்த ரெண்டையும் எதைவச்சு தீர்மானிக்கறதாம்? தீர்ப்பு எதைவச்சு சொல்வாங்களாம்?
தெரிஞ்சவங்க தெரியாதவங்களுக்கு சொல்லுங்களேன்!
மீண்டும் சந்திப்போம்.

