Monday, January 25, 2021

ஊதிப் பெரிதாக்கப்படும் சசிகலா புராணம்!

குருமூர்த்தி துக்ளக் ஆண்டுவிழாவில் குறிப்பிட்டுப் பேசிய பிறகே V K சசிகலா இங்கே தமிழக ஊடகங்களில் மிகவும் பரபரப்பான விவாதப்பொருளாகியிருக்கிறார். நாளை மறுநாள் (27 ஜனவரி) சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலா என்ன செய்யப்போகிறார் என்பதை ஆளுக்காள் மனம்போன போக்கில் என்னென்னவோ ஊகமாகச் சொல்லிக் கொண்டிருக்கிற விந்தைக்கு ஒரு 41 நிமிட சாம்பிள் வெட்டி ஊகங்களுக்குச் சிறகுகள் ஆயிரம் என்பதற்கு மேல் சொல்வதற்கொன்றுமில்லை.  


ரங்கராஜ் பாண்டே தனது சாணக்யா சேனலில் அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தியுடன் நேற்று நடத்திய 47 நிமிட நேர்காணல், மற்ற ஊடக விவாதங்களிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்ததைக் கவனித்தேன்.

ரங்கராஜ் பாண்டே இந்த நேர்காணலில் கூர்மையான கேள்விகளை புகழேந்தியிடம் முன்வைக்கிறார். அவரும் எரிச்சலடையாமல் பொறுமையாக பதில் சொல்கிறார். அதுமட்டுமல்ல சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அதிமுகவில் பிளவு வருமா, அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவாரா என்ற கேள்விகள் நேரடியாகக் கேட்கப் படவில்லை என்றாலும், புகழேந்தி கொஞ்சமும் தயங்காமல் அதிமுகவின் இன்றைய நிலைபாட்டை சொல்கிறார். ஏதாவது சதி இருந்ததா. பாஜகவின் அழுத்தம் இருந்ததா என்று திரும்பத் திரும்ப  பாண்டே கேள்வியெழுப்பியதற்கும் பொறுமையாக  பதில் சொல்கிறார் புகழேந்தி! பொய்யான பதிலில்லை, ஆனால் உண்மையை உடைத்துச் சொல்லவில்லை. ஒரு திறமையான ஊடகக்காரரிடம் முரண்படாமல் சமாளித்த புகழேந்தியின் சாமர்த்தியத்தைக் கண்டு வியக்கிறேன். அதிமுகவின் தற்போதைய மனநிலை  என்ன என்பதைப் புரிந்துகொள்ள உதவும் நேர்காணல். நண்பர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.  
  


Saturday, January 23, 2021

அட, வாங்க ஒரு கை பாப்போம்! இது சோனியா காங்கிரசோட வாய்ச்சவடால்!

இன்றைக்கு காலையில் மிகவும் ரசித்துப் பார்த்த அரசியல் காமெடி, செய்தி சோனியா காங்கிரசின் தமிழகக்கிளை ஏற்பாடு செய்திருக்கிற வாங்க ஒரு கை பாப்போம் என்கிற வாய்ச்சவடால்   நிகழ்ச்சிதான்! 


ராகுலோட ஒண்ணா  கை கோர்ப்போம் - அட வாங்க ஒரு கை பாப்போம் என்று சொல்கிறார்களே, யாரை ஒரு கை பார்க்கப்போகிறார்களாம்? இவர்கள் கூட்டணி வைத்திருக்கிற திமுக, தனியாகவே தேர்தல் பரப்புரை செய்ய ஆரம்பித்துவிட்டது.புதுச்சேரியில் ஜெகத் ரட்சகனை வைத்துக் கொளுத்திப்போட்ட விஷயத்தை திமுக, அப்படியே உல்டாவாக மாற்றிவிட்டது ஆனாலும் அதிக சீட் கேட்க, வேண்டாம், செரிமானமாகாது என்று எச்சரிக்கை கொடுத்தாகி விட்டது 2011 இல் கருணாநிதி 63 தொகுதிகள் கொடுத்தார், 2026 இல் 41 சீட் கிடைத்தது என்ற பழங்கணக்கெல்லாம் வேண்டாம், ஒரு 15 சீட் வேண்டுயுமானால் கொடுக்கலாம் என்று திமுக தரப்பில் சொல்லப்பட்ட நிலையில் ராகுல் காண்டி இன்றைக்கு கோவை வருகிறார்! ஷோ காட்டப்போகிறார் என்று காங்கிரஸ் கட்சி சொல்லியிருக்கிறது என்ன ஷோ, ஜனங்களிடம் எடுபடுமா என்பதைவிட திமுகவிடம் ஜம்பம் பலிக்குமா என்பது தான் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்! தனி ஆவர்த்தனம் செய்யலாம் என்று துணிந்து இறங்கியிருக்கிறார்களே அதற்காகவே சோனியா காங்கிரசின் தமிழ்நாடு கிளையைப் பாராட்டலாம்! ஆனால் இந்திராவிடமிருந்து பிரிந்து போன காமராஜர் படத்தை? எதற்காகப் பயன் படுத்துகிறார்களாம்? 

காங்கிரஸ் கட்சிக்கு மட்டும்தான் இப்படி அரசியல் செய்யத் தெரியுமா? பாட்டாளி மக்கள் கட்சி இதோ நாங்களும் இருக்கிறோமே என்று அவர்கள் பங்குக்கு அதிமுகவுக்கு கொஞ்சம் மிரட்டலாகவே பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்  நோட்டு விஷயம் ஓகே, சீட்டு எவ்வளவு என்பதை நாங்கள்தான் முடிவுசெய்வோம் என்று அதிமுக கறாராக இருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன.அப்படியானால்  2015 போலத் தனித்தே களம் இறங்குவோம் என்று சொல்வதாக வெளிவரும் செய்திகள்??

மருத்துவர் ராமதாசை நன்றாக அறிந்த  எவரும் அந்தச் செய்தியை சீரியஸாக எடுத்துக்கொள்ளவே இல்லை!  ஆக தேர்தல் களத்தில், கழைக்கூத்தாடிகள் வித்தை காட்டுவதுபோல, காங்கிரஸ், பாமக போன்ற உதிரிக்கட்சிகள் இப்படியுமல்லாமல் அப்படியும் இல்லாமல் வெறும் ஷோ காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதைத் தாண்டி தமிழகத் தேர்தல் களம் இன்னமும் களைகட்ட ஆரம்பிக்கவில்லை!

மீண்டும் சந்திப்போம்          

Friday, January 22, 2021

#மீள்பதிவு சோதனையும் சாதனையும்!

கவியோகி சுத்தானந்த பாரதியார்!அன்பே சிவமாகிக் கனிந்த துறவி, பன்மொழிப் புலமை, துறவையும் மீறித் தமிழில், இலக்கியங்களின் மீது காதல் கொண்டு,  ஆயிரக்கணக்கான நூல்களை எழுதியவர், அதே போலப் பாடல்கள்எழுதியவர், சுதந்திரப் போராட்ட வீரர், ரமண மகரிஷி, ஸ்ரீ அரவிந்தர், காவ்யகண்ட கணபதி முனி முதற்கொண்டு எண்ணற்ற ஞானிகளோடு கூடவே இருந்து அவர்களுடைய சாதனையை நேரடியாகவே அறியும் பேறு பெற்றவர், ரமண சரிதம், அரவிந்த விஜயம் என்று அவர்களுடைய சரிதையை நாம் அறியத் தந்தவர்.



என்ன காரணமோ, உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்களை இந்த தேசம் அறிந்துகொள்ளத் தவறிக் கொண்டே இருக்கிறது. நடிப்புச் சுதேசிகளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழ், தமிழ், தனித்தமிழ் என்று மூக்கினால் பேசிக் கொண்டே தமிழ்வளர்த்த பெரியோர்களை உரிய மரியாதையோடு நடத்தத் தவறியிருக்கிறது. வெறுப்பில் எரியும் மனங்களாகப் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. உண்மையைப் பார்க்கவொட்டாமல், வம்பு செய்து கொண்டே இருக்கிறது.

சுத்தானந்த பாரதியாரை, தமிழ் கூறும் நல்லுலகம், அவருக்குரிய இடத்தில் மரியாதையோடு வைக்கத் தவறியதை என்னுடைய குமுறலாக, ஏற்கெனெவே இங்கே பார்த்திருக்கிறோம் 


கவியோகியார் தனது சுயசரிதையை இரண்டு பகுதிகளாக வெளியிட்டதில் . முதல் பகுதி ஆத்ம சோதனை என்ற பெயரில் வந்தது. 

இதை என்னுடைய  சிறு வயதிலேயே படித்திருக்கிறேன். இரண்டாவது பகுதி, சோதனையும் சாதனையும் என்ற புத்தகமாக வெளி வந்திருக்கிறது. தற்போது இரண்டு பகுதிகளையும் ஒரே புத்தகமாக, சோதனையும் சாதனையும் என்ற தலைப்பில், சுவாமிகளிடம், வடலூரில் அருட்பணி, கல்விப்பணி செய்து வந்த நாட்களில் அவரிடம் பயின்ற இரு சகோதரர்கள், திரு நாகராஜன், திரு. நாக சுப்பிரமணியம், கவியோகியாரது படைப்புக்களை சுத்தானந்த நூலகம் என்ற பெயரில் மறுபடி வெளியிடுகிற செய்தியை திரு சந்திர சேகரன் ஏற்கெனெவே தெரிவித்திருந்தார்.

பதினைந்து நாட்களுக்கு முன்னால், நான் நீண்ட நாட்களாகப் படிக்க ஆர்வம் கொண்டிருந்த பாரத சக்தி மகா காவியம், சோதனையும் சாதனையும் என்ற இரு நூல்களையும்  எனக்கனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தபடி வந்து சேர்ந்தது. படிக்க ஆரம்பித்தேன், கவியோகியின் தமிழில் தோய்ந்திருந்தது சிலநேரம், அதில் கண்ட அனுபவச் சிதறல்களை உள்வாங்கிக் கொள்ள ஆரம்பித்தது சிலநேரம் என்று போய்க் கொண்டே இருந்தது 

மற்ற நூல்களைப் போல, படித்து விட்டு, அந்த நேரத்தில் தோன்றுகிற எண்ணங்களை முடிவாகச் சொல்கிற விதத்தில் இந்தப் புத்தகங்களைப் பற்றி எழுத முடியாது. விமரிசனம் என்று எழுத முடியாத அளவுக்கு, சத்தியக் கனல், அனுபவச் சிதறல்கலாகக் கொழுந்து விட்டெரிகிற தன்மையைப் பார்த்தேன், பிரமித்தேன்!

ஒரு சிறு பகுதி, இங்கே நூல் அறிமுகமாக!

சுதந்திரப் போராட்டம் நடந்த போது, அதில் பங்கு கொண்ட எவரும் தங்களுக்கு மாலை மரியாதை வேண்டுமென்றோ, அரசு வழங்கும் கட்டாந்தரை பூமி ஐந்து ஏக்கர் மானியத்துக்காக ஏங்கித்  தவித்தோ, போராட்டத்தில் குதிக்கவில்லை! தங்களுடைய ஜாதி, அந்தஸ்து, தொழில், குடும்பம் எல்லாவற்றையும் உதறிவிட்டு,தேச விடுதலை ஒன்றில் மட்டுமே குறியாக இருந்தார்கள். அப்போதெல்லாம் கூட வராத சொந்த பந்தம், ஜாதியெல்லாம், இப்போது சமீப காலங்களில் அவர்களை ஜாதிக்குள் குறுக்கி வைத்துச் சிலை வைத்துத் தகராறு வளர்க்கும் கூத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே!

இது 1937-1942 காலங்களிலேயே ஆரம்பித்து விட்டதை இந்தப் பகுதி உறைக்கும்படி சொல்கிறது. கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையை, இன்றைக்குப் பிள்ளைமார் சமூகம் தத்தெடுத்துக் கொண்டு சிலை வைத்து, தங்களுடைய சொந்த லாபங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. காமராஜர், நாடார் சமூகத்தின் சொத்தாகிப் போனார்!

 "சோதனையும் சாதனையும்" என்ற தனது சுயசரிதையில் கவியோகி சுத்தானந்த பாரதியார், தூத்துக்குடிக்குப் போனபோது, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையைச் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதில் முதல் பகுதியை இங்கே பார்க்கலாம்!

சமீப கால வரலாறு கூடத் தெரியாமல் வளர்க்கப் படும் இன்றைய இளம் தலைமுறைக்காக இந்தப் பதிவு சமர்ப்பணம்! இது புத்தக மதிப்புரையோ, விமரிசனமோ இல்லை! இந்த மண்ணை நேசிக்கும் ஒருவனின் ஆதங்கமாக....குமுறலாக,,,,!


சிதம்பரம் பிள்ளையுடன்....!

தூத்துக்குடியில் மாசிலாமணிப் பிள்ளை என்னை வரவேற்றார். அரசியல் உலகின் கோழிச்சண்டையைத் தூத்துக்குடியில் கண்டேன். அங்கே இரண்டு கட்சிகள், ஒத்துழையாமைக் கட்சி என்னைத் தலைவனாக்கி விளம்பரம் செய்திருந்தது. ஸ்வராஜ்யக் கட்சி வரதராஜுலு நாயுடுவைத் தேர்ந்தது. அதை நானும் ஆமோதித்து எழுதினேன். நான் வந்ததுமே ஒத்துழையாமைக் கட்சி, நமது தலைவர் வந்து விட்டார் என்று தண்டோராப் போட்டது.காங்கிரஸ் மாநாட்டைக் கூட்டியவர் "என்ன சுவாமிகளே" என்றனர். சில்லறைக் கட்சியாட்கள் எங்கள் பக்கமே பேசவேண்டும் என்றனர். நான் மாநாட்டுக்குப் பொதுவாகப் பேசுவேன் என்றேன்.

நான் வந்த நாளே சிதம்பரம் பிள்ளை, மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்றுப் பழைய கதைகளெல்லாம் பேசினார்--உரம் பெற்ற வீரவுள்ளம், கம்பீரமான கருமேனி, முரசம் போன்ற தமிழ் பேச்சு, பெச்சுக்கேற்றபடி துடிக்கும் மீசை, வக்கீல் உடை, அன்பான மனம், புலமை நிரம்பிய சொல்--எல்லாம் என் மரியாதையை அதிகரிக்கச் செய்தன. "வீரச் சிதம்பரம் பிள்ளை" என்ற பாட்டைப் பாடினேன்.

(வ. உ.சிதம்பரம் பிள்ளை  இந்த சம்பாஷணை முழுதும் சித என்றே குறிப்பிடப் படுகிறார்) 

நான் :  தங்களைக் காணவே மகாநாட்டிற்கு  வந்தேன். எந்தாய் வாழ்க!

சித :     பாட்டு கம்பீரமாயிருக்கிறது. பாரதி கேட்டால் மகிழ்வார். ஸ்வராஜ்யாவில் தங்கள் தலையங்கம் பார்த்தேன். நடையில் பழைய விறுவிறுப்பும் புதிய மறுமலர்ச்சியும் உள்ளன. ஆனால் எல்லாம் காந்தி மயமாயிருக்கிறது. திலகரும்  உமது நண்பர் தாமே!

நான் :  எனக்குத் திலகரிடமும் உள்ளன்புதான். அந்த மராட்டிய வீரம் தங்கள் தமிழ் மீசையில் துடிக்கக் கண்டேன். வெள்ளையரை விரட்டியடிக்க அவர் வீரம் பேசினார். தாங்கள் வெள்ளையன்  வெட்கக் கப்பல் விட்டீர்கள். தங்கள் தியாகத்தை சுதந்திர பாரதம் பொன்னெழுத்தில்  பொறிக்கும்.

சித  :   நான் சிறையை விட்டு வந்தபோது, எனக்கு மாலை சூட்டி வரவேற்கக் கூட ஒரு தமிழன் இல்லை. எண்ணெய்க் கடை வைத்தும் பிழைத்தேன். வறுமையால் வாடினேன், வாலஸ் துரை எனது சன்னதை  மீட்டுத் தந்தார். அந்த நன்றிக்கே என் பிள்ளைக்கு வாலேசன் என்று பெயரிட்டேன். அதற்கொரு குறள்:

"கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும் "

இன்று எனக்கு மாதம் முன்னூறு ரூபாய் தந்தாள், இப்படியே அரசியல் மேடையில் குதிக்கிறேன். நான் ஒருவன் கிளம்பினால் போதும், நாட்டை உரிமைக்கு அழைத்துச் செல்வேன்.

நான் :  இந்தக் காலம்
 கதர் கட்டினாலே மேடையில் மதிப்பு.

சித :      ஹார்வி மில் முன், ராட்டையும் கதரும் எந்த மட்டு ஐயா?  இந்தியர் மான்செஸ்டருடன் போட்டி போட மின்சார யந்திரம் வேண்டும். கொட்டை நூற்று, முப்பது கோடிக்குக் கோவணம் கட்டவாவது முடியுமா? நான் என் ஊரில் நோற்று நெய்த கைத்தறி ஆடையை அணிகிறேன். நான் காந்தியை வெறுக்கவில்லை. திலகரை மதிக்கிறேன். எனது குருநாதன் சுதந்திரச் சங்கூதினான். விடுதலை, பிறப்புரிமை என்று உணர்த்தினான். பாரதி வாக்கில் திலகர் உணர்ச்சியே வெடித்தெழுகிறது.

நான் :  தங்கள் உணர்ச்சிதான், பாரதி வாணியாகப் பாடியது. தங்கள் பேச்சு, பாரதி பாட்டு,  (வ வே சு )ஐயர் எழுத்து, சிவாவின் ஆவேசம்---இந்நான்கும் தமிழுலகைத் தட்டி எழுப்பின. இன்று வகுப்பு வாதம் நாட்டைப் பிளந்தது.

சித :     எனது குருநாதன் காலத்தில், வகுப்புவாதமே கிடையாது. இன்று நாடு வகுப்புக் கந்தலாயிருக்கிறது. இந்து-முஸ்லீம்,பார்ப்பான்-அல்லான்,
வைதீக ஒத்துழையாமை-ஸ்வராஜ்யக் கட்சி என்ற பிரிவெல்லாம் தற்கால அரசியல் ஊழலையே காட்டுகின்றன. எனக்கு மட்டும் வாய்ப்பளித்தால், தமிழரை ஒன்று சேர்ப்பேன். நாயக்கரும், நாயுடுவும் ஐயங்காரும் ஐயரும் என்னுடன் கைகோத்து நடக்கச் செய்வேன்.

நான்:  தடையென்ன? தமிழன் தன்நாட்டு வீரரை மதிக்கத் தொடங்கினாலே, அந்த அற்புதம் நடக்கும். இப்போதுள்ள நிலையை இங்கே வந்ததுமே கண்டேன். பொதுக் கூட்டத்தில் பேச வேண்டாம் என்று பார்க்கிறேன், நீங்கள் பேசினாலே போதும்.

சித :    தாங்கள் பேச வேண்டும், நான் கேட்க வேண்டும்.

இச்சமயம் டாக்டர் வரதராஜுலு வந்தார். எலாரும் வட்டக் கிணற்றிற்குப் பவனி சென்றோம். அங்கே பதினாயிரம் பேர் கூடினர். சிதம்பரம் பிள்ளை தலைமை வகித்தார். நாயுடுகாரு, எம் எஸ் 
சுப்ரமணிய ஐயர்குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை, சுப்பையர்---எல்லாரும் பேசினர்.

கடைசியில், "சுவாமி சுத்தானந்த பாரதியார் பேசுகிறார், பேசத்தான் வேண்டும், பேசும் பாரதியார்" என்று அழைத்தார் தமிழ்ச் சிங்கம். நான் ஒருமணி நேரம் பேசினேன்.


நூலின் 70 ஆவது அத்தியாயத்தின் முற்பகுதி. 2003 ஆம் ஆண்டுப் பதிப்பின் பக்கங்கள் 337-339 நூலை அறிமுகம் செய்வதற்காக மட்டும்.வணிக அல்லது வேறெந்த உள்நோக்கமும் இல்லாமல் எடுத்தாளப் பட்டது. 

சோதனையும் சாதனையும்
 
கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார்
 
சுத்தானந்த நூலகம், திருவான்மியூர், சென்னை வெளியீடு. மேல்விவரங்களுக்கு  
shuddhashakthi@gmail.com  

434 பக்கங்கள் விலை ரூ.120/-
 

தமிழை நேசித்த கவியோகி! பன்முகத் திறமை கொண்ட துறவி! சுதந்திரப் போராட்ட வீரர்! கவியோகி சுத்தானந்த பாரதியார், தன்னுடைய சுய சரிதையை "ஆத்ம சோதனை" என்ற பெயரில் வெளியிட்ட பழைய பதிப்பைச் சிறுவயதில் படித்திருக்கிறேன்.இந்தப் பதிப்பு, அதன் இரண்டாம் பகுதியையும் உள்ளடக்கிய பதிப்பாக, 434 பக்கங்களில் எண்பது அத்தியாயங்களுடன் வெளிவந்திருக்கிறது.

சோதனையும் சாதனையும் என்று தலைப்பில் உள்ள மாதிரியே, கவியோகி தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும், சாதனைகளையும் 1975 ஆம் ஆண்டு இதை வெளியிடும் தருணம் வரை உள்ள பல நிகழ்ச்சிகளைச் சுவையோடு விவரித்திருக்கிறார். நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிற நூல் இது!

**2010 ஏப்ரலில் இன்னொரு பக்கத்தில் எழுதியதன் மீள்பதிவு.     

Monday, January 18, 2021

#துக்ளக் ஆண்டுவிழா! குருமூர்த்தி பேசியதும் தொடரும் சர்ச்சைகளும்!

துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சிகளை நேரலையில் பார்ப்பதோடு, சுடச்சுட அதை என்னுடைய பதிவிலும் கொடுக்கிற வேலையை இந்த வருடம் செய்ய முடியாத படி இந்த ஜனவரி 14 இல் சுணக்கம் ஏற்பட்டது. முன்பு கலாகேந்திரா நிறுவனம் செய்துகொண்டிருந்த நேரலை ஒளிபரப்பு, இந்த வருடம் துக்ளக் டிஜிட்டல் என்ற புது அமைப்பின் வழியாகச் செய்யப்பட்டது. ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா  சேனலின் நேரலையில் தான் நிகழ்ச்சியைப் பார்த்து முடித்தேன். 


துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் எப்போதும் இடம் பெறுகிற நிகழ்வுகள் தான்! ஆனாலும் ஆடிட்டர் குருமூர்த்தி மீது முன்னெப்போதுமில்லாத அளவுக்கு வன்மமும்,வெறுப்பையும் கக்குகிற மாதிரி முகநூல் ட்வீட்டர், ஊடக விவாதங்கள் என்று இந்த வருடம் கிளம்பியிருப்பதில், கொஞ்சம் அர்த்தமுள்ளதாக இருந்த ஒரே ஊடகவிவாதம் தந்திடிவியில் கடந்த 15ஆம் தேதி ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சி மட்டும்தான்.

தந்திடிவியிலா? அர்த்தமுள்ள விவாதமா? சந்தேகம் எழுவது இயற்கைதான்! இந்த விவாதத்தைப் பொருட் படுத்தக்கூடிய ஒன்றாக மாற்றியதே தேவையான விவரங்களை எடுத்துச் சொல்லிய துக்ளக் இதழின் முதன்மை நிருபர் ரமேஷும், பிஜேபியின் K.T. ராகவனும் தான்! இன்றைக்கு முகநூலில் நண்பர் K.G. ஜவர்லால் கூட குருமூர்த்தி பேசியதைக் கண்டிக்கிற மாதிரி ஒரு பகிர்வை எழுதியிருக்கிறார். அவர் மட்டுமல்ல, பிஜேபியை ஆதரிக்கிற பல பதிவர்களே, குனாமூனாவும் சுனா சாமியும் ஆணியே புடுங்க வேண்டாம் என்று கொதித்துப் போய்க் குமுறியிருப்பதையும் பார்த்தேன் 

குருமூர்த்தி துக்ளக் இதழின் ஆசிரியர். சோ ஆசிரியராக இருந்த நாட்களிலிருந்தே துக்ளக் தேர்தல் காலத்தில் யாருக்கு வாக்களிப்பது என்பதைக் காரண காரியங்களோடு ஒரு பரிந்துரையாகச் சொல்வது வாடிக்கைதான்! அதையே குருமூர்த்தியும் இப்போது செய்திருக்கிறார். பிடிக்காவிட்டால் விட்டுவிடலாம், அவ்வளவுதானே! அப்புறமும் ஏன் கொந்தளிக்கிறார்கள்?

மந்திரி ஜெய்குமாரோ டிடிவி தினகரனோ சொல்வது ஒருபுறம் இருக்கட்டும்! 2021தேர்தலின் முக்கியமான கேள்வி, பிரச்சினை என்ன?

ஊழல் திமுகவை மறுபடியும் தமிழகத்தை ஆளவிடப் போகிறோமா? 10 வருடங்களாகக் காய்ந்து கிடந்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வருமேயானால் என்ன நடக்கும் என்பது தெரியாதா? 

அதிமுகவும் ஊழலில் திமுகவுக்குச்  சளைத்தவர்கள் இல்லை! திமுக குடும்பமாகக் கொள்ளை அடிக்கிறார்கள் என்றால், அதிமுக கூட்டுக்கொள்ளை அடிப்பவர்கள் தான்!  

வேறு மாற்று எதுவும் இங்கே வளர்ந்து விடாமல் இரண்டு கழகங்களும் இங்கேயுள்ள உதிரிக்கட்சிகளைக் கூட்டு சேர்த்துக் கொண்டு , திமுக அல்லது அதிமுக இரண்டு தான்! எது உங்கள் சாய்ஸ் என்று மக்களுக்கு கெக்கலி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.இனியும் அப்படியே இருக்க விட்டு விடப்போகிறோமா என்ற கேள்விக்கு குருமூர்த்தி 2026 தேர்தலில் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் என்று சொன்னார். அதன் பொருளே இங்கே திமுக அல்லது அதிமுக என்கிற சாய்ஸ் தவிர வேறு வழியில்லாதபோது என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் குருமூர்த்தி சொன்னார். தவறென்ன?

துக்ளக் ஆண்டுவிழாவில் குருமூர்த்தி என்னதான் பேசினார்? வீடியோ 140 நிமிடம்  பார்த்துவிட்டு நீங்களே ஒரு அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்வது மிகவும் சரியானது என்பதை மட்டும் அழுத்தமாகச் சொல்வேன் 

நான் குருமூர்த்தியைக் கண்ணை மூடிக்கொண்டு  நம்புகிறவன் அல்ல! உண்மையைச் சொல்லப்போனால் குருமூர்த்தி தவிரவும் வேறு   யார்யார் எல்லாம் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனித்துக் கொண்டிருப்பவன்! 

வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுக தோற்கடிக்கப் பட்டே ஆக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லாதவர்களுக்கு என்ன சாய்ஸ் இருக்கிறது? நண்பர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்!  

மீண்டும் சந்திப்போம்.       

Thursday, January 14, 2021

கண்டுகொள்வோம் கழகங்களை!


நண்பர்கள் அனைவருக்கும் சங்கராந்தி பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! பொங்கும் மங்களம் எங்கும் தங்குக! வாழி நலம் சூழ!   

திமுகவின் 3ஆம் கலீஞர் என்று சொல்லப்படுகிற உளறல் நிதி, வெகுசீக்கிரமாகவே தமிழகத்தின் பாப்புலர் காமெடிப் பீஸ் ஆகிவிட்டார் என்று அங்கிங்கெனாதபடி எங்கும் பரவும் மீம்ஸ், முகநூல் பகிர்வுகளிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது இந்தப் பொங்கல் தின சிறப்பு விசேஷம்.


  
தம்பி உதயநிதி ஜட்டுகல்லி விளையாட்டு பாக்குறத நானும் பாத்துட்டு இருக்கேன், ஒரு மாடு நமக்கு கிடைச்சிராதான்னு ஆளாளுக்கு கஷ்டபடுறாங்க, மாடு ஓடிருது
உழைப்பவனுக்கே நிலம் சொந்தம், பிடிப்பவனுக்கே மாடு சொந்தம்னு தலைவர் சொல்லிருக்காரு
நாம சொல்றோம், நம் ஆட்சியில அங்க காளைக்கு போராடுற‌ அத்தனைபேருக்கும் ஒரு காளைமாடு வழங்கபட்டு சமத்துவ ஜட்டுகல்லி நடைபெறும்.  


கண்டுகொள்வோம் கழகங்களை என்ற முகநூல் பக்கம் இப்படி திமுகவின் யோக்கியதையைப் படம்போட்டுக் கலாய்க்கிறது 



















யோகி ஆதித்யநாத் அரசு சட்டவிரோதமாக அல்லது லஞ்சம் கொடுத்துப் பணி உயர்வு பெற்ற சிலருக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்திருக்கிறது


இங்கே தமிழகத்தில் போலி ஜாதிச்ச சான்றுகளோடு மாநில அரசுப்பணி, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்கள் மீது இதேமாதிரி நடவடிக்கை எடுக்கப்படுமானால் எத்தனை ஆயிரம் பேர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதில் யாருக்கேனும் ஊகங்கள் இருக்கிறதா?

கண்டுகொள்வோம் கழகங்களை என்று சொன்னால் மட்டும் போதுமா? இரண்டு கழகங்களுமே வேண்டாம் என்கிற உறுதியான முடிவையும் எடுக்க வேண்டாமா?

மீண்டும் சந்திப்போம்   
  

Monday, January 11, 2021

சின்னச் சின்னதாய்க் கொஞ்சம் அரசியல் செய்திகள்!

இசுடாலின் தலையெடுத்ததில் திமுகவுக்கு ஆதாயமோ இல்லையோ, மீம்ஸ் தயாரிப்பாளர்கள், கிண்டல் கேலியாக செய்திகளை உருவாக்கும் யூட்யூபர்கள் என நிறையப்பேருக்கு முழுநேர வேலைவாய்ப்பையும்  உருவாக்கித் தந்திருக்கிறது. சாம்பிளுக்கு இந்த 3 நிமிட வீடியோவைப் பாருங்களேன்!


ஆனால் வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம், வண்ணை ஸ்டெல்லா போன்ற பேச்சாளர்கள், காமெடியன்கள் இல்லாத குறையை 2ஆம் கலீஞரும் 3ஆம் கலீஞருமே நிரப்ப முனைந்துவிட்ட மாதிரித் தெரிகிறதே!

26 நி 
#ஸ்டாலின் - எடப்பாடியாரே, என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா ?
#முதல்வர் - நான் ரெடி!
#ஸ்டாலின் - ராயபுரம் தொகுதிக்கு அமைச்சர் ஜெயகுமார் எதுவும் செய்யவில்லை, முந்திரிகொட்டை மந்திரி ?
#ஜெயகுமார் - ராயபுரம் தொகுதியில் என்னோடு போட்டி போட தயாரா, நான் ரெடி !
#நிருபர் - தேர்தலில் போட்டியிடுவீர்களா ?
#குஷ்பு - கட்சி கேட்டுக்கொண்டால் ஸ்டாலினை எதிர்த்தும் போட்டியிட ரெடி !
#ஸ்டாலின் - அண்ணே, என்னணே, எந்த ball போட்டாலும் எல்லோரும் Sixerஆ அடிக்கறாங்க ?
#துரைமுருகன் - தம்பி, போனமா எழுதி் கொடுத்தத தப்பில்லாம ரெண்டு வார்த்தை பேசுனமானு வராம நீங்களே wantedஆ போய் வண்டியல ஏறரீங்க, பேசாம கொஞ்ச நாளைக்கி Hurt retire ஆயிடுங்க, அது தான் நல்லது.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
5

மாத்துவோம்  எல்லாத்தையும் மாத்துவோம்! இப்போ இல்லைன்னா எப்போவுமே இல்லை என்று யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தைப் பேசியவர் ஜகா வாங்கி விட்டார் ஆனாலும் கர்மா துரத்துகிறதே, என்ன செய்ய?

நேற்று வள்ளுவர் கோட்டத்தில் வா வா தலைவா என்று கோஷம் போட்டவர்கள் மன்றத்தில் இருந்து நீக்கப் பட்டவர்கள் என்று ரஜினி அறிவித்து இருக்கிறார்.
.
ரஜினியும் சரி ரஜினி ரசிகர்களும் சரி அரசியலை வைத்து காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள். 

மய்யத்தின் கதறலாம் இது!!


 

முதல்முறையாக, கூட்டணி முடிவாகாமலேயே இங்கே தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் தேர்தல் பரப்புரை செய்ய ஆரம்பித்து விட்டனவே! கவனித்தீர்களா? இதில் உள்குத்து ஏதாவது இருக்கிறதா? வீடியோ 31 நிமிடம்.


மீண்டும் சந்திப்போம்

Sunday, January 10, 2021

#சண்டேபோஸ்ட் சமூக ஊடகங்கள்! சாபமா வரமா?

Twitter Inc. ஒருபுறம், முகநூல் மறுபுறம் தங்களது இலவச சேவைகள் ஒன்றும் சமூக சேவைக்கானது அல்ல, முழுக்க முழுக்க வியாபாரம், வேறு உள்நோக்கம் கொண்டவை என்பதை அப்பட்டமாக அறிவித்ததோடு 2021 ஆம் ஆண்டு தொடங்கியிருக்கிறது  வாட்சப் தகவல்கள் கட்டாயமாக  ஓனர் முகநூலோடு பகிர்ந்து கொள்ளப்படும், ஒத்துக் கொண்டால் வாட்சப்பைப் பயன்படுத்து இல்லாவிட்டால் வெளியே போ என்று அறிவித்திருப்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள், சர்ச்சைகள் உருவாகியிருக்கின்றன

வீடியோ 14 நிமிடம்  கொஞ்சம் விரிவான தகவல்களோடு.


அரக்கர்களால் ஆட்டுவிக்கப்படும் உலகு என்று கார்ல் சாகன் அன்றே சொன்னார் என்று ஒருவர் பெருமிதப் படுவதா? பொருமுவதா? நிம்மதி உங்கள் சாய்ஸில் தான் இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்!




நண்பர் பந்து ஏற்கெனெவே முகநூல் என்னென்ன விவரங்களை சேகரிக்கிறது, எப்படிப் பயன் படுத்துகிறது என்பதை விளக்கும் நெட்பிளிக்சின்  The Great Hawk  டாகுமெண்டரியை சிபாரிசு செய்திருந்ததில், பார்த்துக் கொஞ்சம் விவரங்களைத் தெரிந்து கொண்டிருந்தேன் ட்வீட்டர் அல்லது முகநூல் தங்களது வாடிக்கையாளர்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பது  முன்பே தெரிந்த விஷயம் என்பதால், வாட்சப்பை முற்றிலும் நிராகரிப்பதில் எனக்குக் கொஞ்சமும் தயக்கமில்லை.


       

வாட்சப்புக்கு மாற்றாக, டெலிகிராம், சிக்னல் என்று பல அப்ளிகேஷன்கள் கிடைக்கும் போது முகநூல் வாட்சப் என்று இன்னமும் கட்டிக்கொண்டு அழவேண்டும்?


மீண்டும் சந்திப்போம்.

Thursday, January 7, 2021

#அக்கம்பக்கம்என்னசேதி வளைகுடா அரசியல்!

டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பது காலம் கடந்ததுதான்! ஆனாலும் அமெரிக்க அரசியலில் டொனால்ட் ட்ரம்ப்பின் தாக்கத்தை டெமாக்ரட்டுகளால் முழுக்க முழுக்கப் புறம் தள்ளிவிட்டுப் போய்விடமுடியாதபடி வளைகுடா நாடுகளில் ட்ரம்ப் சாதித்திருக்கிற பலவிஷயங்களில் கத்தார் மற்றும் இதர வளைகுடா நாடுகளுக்கிடையிலான உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருப்பது. வீடியோ இரண்டரை நிமிடம். 


இதிலென்ன பிரமாதம் என்கிறீர்களா? சவூதி உட்பட அரபுநாடுகள் பலவும் இஸ்ரேலுடன் சமாதானம் செய்து கொண்டிருப்பது, அமெரிக்காவின் எதிர்காலக் கொள்கை எப்படியிருக்குமோ என்பதைப்பற்றிக் கவலைப் படாமல், ஈரானுக்கு எதிரான நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்திருப்பது முதலாவது! இஸ்ரேலுடன் உரசும் போக்கைக் கைவிட்டுவிட்டு, இணக்கமான உறவையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பதுதான்! ஜோ பைடன், வரும் நாட்களில் ஈரானுடன் என்னமாதிரி முடிவெடுப்பார் என்ற கேள்விக்கு, பதிலை முந்திக்கொண்டு சொன்ன மாதிரி இருக்கிறது. டொனால்ட் ட்ரம்ப் காலத்தில் இருந்த மாதிரி ஜோ பைடன் நிர்வாகம் இருக்காது என்பதால். இப்படி சவூதி அரேபியாவும் இதர அரபுநாடுகளும் முந்திக் கொண்டிருக்கின்றன என்பது மிகவும் வெளிப்படையாகவே தெரிகிற விஷயம்!  


சேகர் குப்தா இந்த 25 நிமிட வீடியோவில் கத்தாருக்கும், இதர அரபு நாடுகளுக்கும் மூன்றரை வருடங்களுக்கு முன் ஏற்பட்ட உரசல் இப்பொது எப்படி சரிசெய்யப் பட்டிருக்கிறது என்பதை விளக்குகிறார்.

#அக்கம்பக்கம்என்னசேதி தளத்தில் கொஞ்சம் விரிவாக எழுத நினைத்திருந்த விஷயம் இங்கே சுருக்கமாக! இந்த ஜனவரி கடைசி வாரத்தில் இரண்டு வருடங்களை நிறைவு செய்யப்போகிற இந்த வலைப்பக்கங்களுக்கு இதுவரை 5100+ பார்வைகளே கிடைத்தன என்பது எழுதுகிறவனுக்கு மிகவும் அவமானகரமான விஷயம்.

மீண்டும் சந்திப்போம்.   

Tuesday, January 5, 2021

கொஞ்சம் சிந்திக்கணும் ::: சிந்திக்க வைத்த சில பகிர்வுகள்!

எதை எதையோ வாசிக்கிறோம். ஆனால் சில பகிர்வுகள் மட்டுமே படித்ததில் பிடித்ததாகவும், கொஞ்சம் யோசிக்க வைப்பதாகவும் இருக்கும். அப்படி படித்ததில் பிடித்ததாக சில பகிர்வுகள்!


பானு கோம்ஸ், நமக்கு ஏற்கெனெவே மிகவும் அறிமுகமான ஒரு சமூக ஆர்வலர்! இந்த வீடியோ இரண்டு மாதம் பழசு! ஆனாலும் சில முக்கியமான விஷயங்கள் தெரிந்து கொள்வதற்கு இருக்கின்றன.

கேரளாவில் .....புதிய வீரியம் மிக்க சீன வைரஸ் தொற்று பரவிக் கொண்டிருக்கும் அதே வேளையில்..பறவைக் காய்ச்சலும் பரவி வருகிறது - செய்தி
கேரளாவில் இருக்கும் அதிக தொற்று பரவலை கருத்தில் கொண்டு ....வைரஸ் தடுப்பு மருந்தில் ...கேரளாவிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேரள அரசு... மத்திய மோடி அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாக இன்னொரு செய்தி.
தொற்று தடுப்பில் கேரளா தான் இந்தியாவிற்கே & உலகத்திற்கே கூட உதாரண மாநிலம் என்றெல்லாம் பரப்புரை செய்தவர்களைத்தான் ஒருவரையும் காணோம் !!
1.1K
72 கருத்துக்கள்
246 பகிர்வுகள்


இது சுடச்சுட முகநூலில் இன்றைக்குப் பார்த்தது. காணாமல் போனவர்களைப் பற்றிய கிண்டல், நம்மூர் இடதுசாரிகளின் சித்தாந்த வறட்சி, பொய்த் தகவல்களில் மட்டுமே ஜீவிக்க முடிகிற அவலம் என்று நிறைய விஷயங்களை யோசிக்க வைத்தது!

ஜனநாயகம் என்பது வரம். இதை புரிந்து கொள்ள, இதை எதிர்மறையாக சொன்னால்தான் தெரியும்.
சௌதி போன்ற மன்னராட்சி நாடுகளில், இப்படியான பேச்சு எழுத்து உரிமைகள், ஏட்டளவில் கூட இல்லை. நிறைய எழுத இருக்கிறது.. பின்னர் எழுதலாம்.
சீனாவில் எந்த உரிமையும், சாதாரண, மத்திய, பணக்கார ஆசாமிகளுக்கு, ஏன் எவருக்குமே கிடையாது. எல்லாம் மேலே உள்ளவன் பார்த்துக்கொள்வான் என்பதாக, எல்லாம் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோவுக்கு மட்டும்தான். உள்ளூர் வாசிகளுக்கே இந்த கதி.. இதில் வெளிநாட்டு ஆசாமி இறங்கினால், திரும்பி ப்ளைட் ஏறும் வரையில் நிழலாய் போலீஸ் தொடரும். எங்கு தங்கினாலும், போலீஸூக்கு தகவல் போய்க்கொண்டே இருக்கும். சாதாரணமாக தங்கி இருந்தாலே, இந்த கதி. ப்ளாக்கிங், வ்ளாக்கிங்க்கெல்லாம் பண்ணினால்.. கதகளிதான் சாரி தினம் களிதான்.
இப்போது சீனாவில் ஃபேஸ் ரெகக்னிஷன் சிஸ்டம், 20 கோடி கேமராக்களால், படம் பிடிக்கப்பட்டு, அந்த ஆசாமிகளின் ஸோஷியல் க்ரெடிட் சிஸ்டத்தில்.. கைவைத்து, 24 மணி நேரமும் மக்களை உளவு பார்க்கிறது சீன அரசாங்கம். இதைப்பற்றி நம் உள்ளூர் கம்மிகளுக்கு தெரியுமா என்பது கூட சந்தேகம்தான். சீனாவில் வீட்டுக்குள் இன்னும் அரசு கேமரா வைக்கவில்லை அவ்வளவுதான்.
கோரோனா பற்றி உண்மையைச்சொன்ன டாக்டர், கொரோனாவில் செத்ததாக செய்தி. இதைப்பற்றி சொன்ன, பத்திரிக்கை நிருபர்கள், சீனாவின் செல்லில். இது அலிபாபாவின் ஜாக் மா வாக இருந்தாலுமே கூட இப்படித்தான் பொருந்தும்.
ஒரு சுபயோக சுபதினத்தில் ஜாக் மாவின் அலிபாபா ஷேர், மற்றும் ஆன்ட் கம்பெனி விலைகள் தடாலடியாய் சரிந்தது. ஆன்ட் கம்பெனியின் அமெரிக்க ஐபிஓ என்ட்ரியை.. ஷீ ஜின்பென்னின் பெர்ஸனல் ஆர்டரால் நிறுத்தி வைத்து.. நான்தான் எஜமான்டா என்று ஜாக்மாவிற்கு நிலைநிறுத்தியிருக்கிறார். அடிப்படையாய் மக்கள் மனத்தில் ஒரு பயத்தை உருவாக்குவதுதான்.. ஜனநாயகமில்லாத கம்யூனிஸ்ட் ஆட்சியோ, இஸ்லாமிய மன்னராட்சியோ செய்யும் முதல் காரியம்.
அலிபாபாவின் ஜாக்மா என்ன சொன்னார்..?
ஜாக்மா சொன்னது, வங்கிகள், ஈடுகள் இல்லாமல் கடன் தரவேண்டும்.. சீனாவின் பைனான்ஸ் ரெகுலேட்டர்ஸ் ரிஸ்க் எடுக்காமல் ரஸ்க் சாப்பிட சொல்கிறார்கள் எப்படி முடியும்..? இப்படியெல்லாம் தினம் இங்கு நாங்கள் பேஸ்புக்கில் எழுதுகிறோம் என்பவர்கள்.. மனசாட்சியை லேசாக அசைத்துப்பாருங்கள். இதை சொன்னதற்கே.. ஜாக்மாவின் அலிபாபா மீது ஆன்டி ட்ரஸ்ட்.. ஆன்ட் கம்பெனியின் அமெரிக்க ஐபிஓ அம்பேல். இப்போது ஜாக்மாவையே காணவில்லையாம்.
இந்தியாவில்.. ஆதார் எதிர்ப்பிலிருந்து.. தீவிரவாத வரவர ராவ் வரைக்கும்.. சிஏஏ வரை எதிர்ப்பது இப்படியான கம்மிகள்.. கேட்டால் பாஸிஸ ஆட்சி என்பார்கள்...
கர்ர்ர்ர்... நன்றி -
Prakash Ramasamy
ஜி

விரிவாகத் தெரிந்து கொள்ள மேலே ஒரு செய்தித் தொகுப்பு 

முகநூல் இன்னமும் வம்பர்களுக்கானதுதான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை. ஆனாலும், இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக இதுதான் விஷயம் என்று சுளீரென்று உறைக்கிற மாதிரியான பகிர்வுகளும் இருக்கத்தான் சேய்கின்றன. 

மீண்டும் சந்திப்போம்.              

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)