Monday, January 24, 2011

தர்க்கத்திற்கு அப்பால்..........ஜெயகாந்தன் !

தர்க்கத்திற்கு அப்பால்...

ஜெயகாந்தன்


வெற்றி என்ற வார்த்தைக்குப் பொருளில்லை நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக் கொள்கிறோம். தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால், அந்தத் தோல்வியே வெற்றிதான். ஒரு காலத்தில் எனக்கு 

இப்படிப்பட்ட 'வெற்றி 'கள் வாழ்க்கையில் நிறையவே சம்பவித்தன.
என் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரியமாய்ப் பக்கத்து நகரத்துக்குப் போயிருந்தேன் வழக்கம்போல 'தோல்வி நிச்சயம் ' என்ற மனப்பான்மையுடன் போன நான், வழக்கத்திற்கு மாறாக அன்று தோற்றுப் போனேன். தோல்வி நிச்சயம் என்ற என் மனப்போக்குத் தோற்றது. என் வாழ்க்கையே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. 

கற்பனைக்கும் எட்டாத ஒரு பேரழகியை ரகஸ்யமாய் மனசிற்குள் காதலித்து, அந்தக் காதலை அவளிடம் வெளியிடும் என் எண்ணத்தை நானே பரிகஸித்து, பின்னொரு அசட்டுத் துணிவில், அவளது பரிகஸிப்பையும் ஏச்சையும் எதிர் பார்த்துத் தயங்கி, நாணிக் கூசி அவள் சந்நிதியில் நின்று 'உன்னை நான் காதலிக்கிறேன் ' என்று முற்றிலும் கூறி முடிக்கும் முன்பாக, அந்த வானத்துக் கனவு எனது வார்த்தையை எதிர்ப்பார்த்துப் பலகாலம் தவங் கிடந்தவளே போன்று ஆயிரம் முத்தங்களை எதிர்நோக்கிச் சிவந்த அதரங்கள் துடி துடிக்க என் கரங்களினிடையே விழுந்ததற்கொப்பான தோல்வி அது '

இந்த தோல்வியை, அல்லது வெற்றியைக் கொண்டாடித் தீர வேண்டும். ஊருக்குத் திரும்பிய பின்தானே ? அல்ல, இப்போதே. நான் ரொம்ப அவசரக்காரன். 

கொண்டாடுவது என்பது பெரிய காரியமா ? அது கொள்ளப்பட்ட உள்ளம் தன்னுள் லயித்துக் குதூகலிப்பது. அதன் விளைவாய் ஏற்படும் புற நிகழ்ச்சிகள் பெரிய காரியமன்று. கொண்டாடத் தக்கதை, சிலர் வானத்தை வண்ணப்
படுத்தும் வேடிக்கை நிகழ்த்திக் கொண்டாடுவார்கள். சிலர் நாலு பேருக்கு வயிறார உணவளித்துக் கொண்டாடுவார்கள். இன்னும் சிலர் அந்தப் பொழுதிலாவது தன் வயிறாரத் தான் உண்டு மகிழ்வார்கள். அதெல்லாம் அப்பொழுதிருக்கும் அவரவர் சக்தியைப் பொருத்தது எனினும் மனசில் ஏற்படும் அனுபவம் அனைவர்க்கும் ஒன்றுதான். 

இப்பொழுது என் நிலைமை... பையிலிருக்கும் ஒரு வெள்ளி ரூபாய் நாணயம்தான். அதற்கென்ன ? இந்த ஒரு ரூபாயிலும் கொண்டாடலாமே ' 

அதுதான் முடியாது. ஊருக்குப் போக முக்கால் ரூபாய் வேண்டும். அதனால்தான் என்ன ? கால் ரூபாயில் கொண்டாட முடியாதோ ? நிச்சயம் முடியும். 

சங்கரய்யர் ஹோட்டலில், புதுப்பால், புது டிகாக்ஷன், சர்க்கரை கம்மி, ஸ்ட்ராங்கா ஒரு கப் காப்பி இரண்டனாதான். காப்பி அருந்தியதும் உடம்பில் ஒரு புதுத் தெம்பும் மனசில் ஒரு தனிக் குதூகலமும் பிறந்தன. ஊர் திரும்ப, ஒதுக்கி வைத்த பன்னிரண்டணாபோக, கையிலிருக்கும் இரண்டணாவை என்ன செய்யலாம். 'கடைசிச் சல்லியையும் ஒரு ராஜாவைப் போல் செலவு செய் ' என்ற பழமொழியும் நினைவுக்கு வந்தது. 

'ஐயா தருமதுரை.....கண்ணில்லாத கபோதி ஐயா... ' என்ற குரல். 

ஸ்டேஷனுக்குள் நுழையும் இடத்தில், ஒரு ஓரமாய் அந்த குருட்டுப் பிச்சைக்
காரன் உட்கார்ந்திருந்தான்; கிழவன். அவன் எதிரே இருந்த அலுமினியப் பாத்திரத்தில் வெறும் செப்புக் காசுகளே கிடந்தன. அவற்றின் நடுவே நான் போட்ட இரண்டணா, வெள்ளை வெளேரென்று விழுந்தது அழகாகத்தான் இருந்தது. குருடன் அதை எடுத்துத் தடவிப் பார்த்தவாறே, நான் இருப்பதாக அவன் நினைத்துக் கொண்ட திசை நோக்கி கரம் குவித்து, 'சாமி நீங்க போற வழிக்கெல்லாம் புண்ணியமுண்டு ' என்று வாழ்த்தினான். அதன் பிறகு உண்மையிலேயே நாலணாவில் அந்த நல்ல நாளை கொண்டாடிவிட்ட நிறைவு பிறந்தது எனக்கு. 

புக்கிங்கவுண்டரின் அருகே போய் என் சொந்த கிராமத்தின் பெயரைச் சொல்லிச் சில்லறையை நீட்டினேன். சிறிது நேரத்திற்கெல்லாம் டிக்கெட்டை எதிர்பார்த்து நீண்டிருந்த என் கைக்குள் மீண்டும் சில்லறையே விழுந்தது; 

'இன்னும் ஓரணா கொடுங்கள் சார். '

'பன்னிரண்டணாதானே ? '

'அது நேற்றோட சரி, இன்னிலேருந்து அதிகம். '

என் கை சில்லறையுடன் வெளியே வந்தது திடாரென்று பாதாளத்தில் வீழ்ச்சியுற்றது போன்ற திகைப்பில் நின்றுவிட்டேன். 'யாரிடம் போய் ஓரணா கேட்பது ? '

'அதோ ஒரு பெரியவர் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறாரே அவரிடம்..... ' என்று நினைக்கும்போதே.... ஒரு அணாதானே, கேட்டால்தான் என்ன என்று நினைக்கும்போதே --- கேட்டால் என்ன நடக்கும் என்பது தெளிவாகிக் கொண்டிருந்தது அங்கே. யாரோ ஒருவன் அவரருகே சென்றான். அவன் என்ன கேட்டானோ ? அவர் சொன்ன பதில் உலகத்துக்கே கேட்டது எனக்கும் உறைத்தது. இரண்டணா தர்மம் செய்து ஐந்து நிமிஷம் ஆகவில்லை. ஓரணாவுக்கு யாசிப்பதா என்று யோசிக்கும் நிலை வந்துவிட்டதை எண்ணும்போது, மனம்தான் வாழ்க்கையுடன் என்னமாய்த் தர்க்கம் புரிகிறது ?

'அதோ அந்தக் குருடனின் அலுமினிய பாத்திரத்தில் செப்புகாசுகளின் நடுவே ஒளிவிட்டுச் சிரிக்கிறதே இரண்டணா, அது என்னுடையது ? '

'அது எப்படி உன்னுடையதாகும். நீ கொடுத்துவிட்டாய், அவன் வாழ்த்தி விட்டான் '

'இப்ப சந்தியில் நிற்கிறேனே ? அதில் ஓரணா கூடவா எனக்குச் சொந்தமில்லை 

? அவன் பாத்திரத்தில் கிடந்தாலும் அது என்னுடையது அல்லவா ? கேட்டால் தருவானா ? தரமாட்டான். அவனுக்கு எப்படித் தெரியும் அதைப் போட்டவன் நான் என்று ' '

'எடுத்துக்கொண்டால் ? அதோ ஒரு ஆள் ஓரணா போட்டு விட்டு அரையணா எடுத்துக் கொள்கிறானே ' அதுபோல் ஒரு அணாவைப் போட்டுவிட்டு அந்த -- என்னுடைய --இரண்டணாவை எடுத்துக்கொண்டால் ? '

'இது திருட்டு அல்லவா ? '

'திருட்டா ? எப்படியும் என் பக்கத்திலிருந்து தர்மமாக ஓரணா அவனுக்குக் கிடைக்குமே... அந்த ஓரணா புண்ணியம் போதும்; என் காசை நான் எடுத்துக் கொள்கிறேன் ' என்று பொருளாதார ரீதியாய்க் கணக்கிட்டுத் தர்க்கம் பண்ணிய போதிலும், திருடனைப் போல் கை நடுங்குகிறது.

ஓரணாவைப் போட்டேன், இரண்டணாவை எடுத்துக் கொண்டு திரும்பினேன்.

\'அடப்பாவி ' ' -- திரும்பிப் பார்த்தேன். குருட்டு விழிகள் என்னை வெறிக்க, வாழ்த்தத் திறந்த வாயால் சபிப்பது போல் அவன் கேட்டான்.

'சாமி, இதுதானுங்களா தர்மம் ? யாரோ ஒரு புண்ணியவான் இரண்டணா போட்டாரு.... அதை எடுத்துக்கிட்டு ஓரணா போடறியே ? குருடனை ஏமாத்தாதே, நரகத்துக்குத்தான் போவே... '

நெருப்புக் கட்டியைக் கையிலெடுத்ததுபோல் அந்த இரண்டணாவை அலுமினியம் தட்டில் உதறினேன், இப்பொழுது என் கணக்கில் மூன்றணா தர்மம்.தெரியாம எடுத்துட்டேன் ' என்று சொல்லும்போது, என் குரலில் திருட்டுத்தனம் நடுங்கியது.

ஒரு பெண் அரையணா போட்டுவிட்டுக் காலணா எடுத்துச் சென்றாள்; குருடன் உடனே இரண்டணா இருக்கிறதா என்று தடவிப் பார்த்தான்.

அப்படிப்பார்த்தபோது அது இல்லாதிருந்ததுதான் நான் சிக்கிக்கொண்டேன் என்று புரிந்துகொண்டேன். அது அவனுக்குக் கிடைக்காமல் கிடைத்த செல்வம். விட மனம் வருமா ?

நான் யோசித்தேன்.

'அது அவன் பணமா ? '

'ஆமாம் ' '

'நான்தானே தந்தேன். '

'காசைத்தான் கடன் தரலாம், தருமத்தைக் கடன் தரமுடியுமா ? தர்மத்தை யாசித்து, தந்தால்தான் பெற வேண்டும். '

வெகு நேரம் நின்றிருந்தேன். நான் போக வேண்டிய ரயில் வந்துபோய்விட்டது. அடுத்த வண்டிக்கு இன்னும் நேரமிருக்கிறது. தர்மத்தின் பலனை அடுத்த ஸ்டேஷன்வரை கால் வலிக்க நடந்து அனுபவித்தேன்.

சில வருஷங்களுக்கு முன் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஒரு ரயில் விபத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது, அன்று நான் போக இருந்து தவற விட்ட ரயில் தான்.

இந்த விபத்திலிருந்து நான் எப்படித் தப்பினேன் ?

தருமம் காத்ததா ?

எனக்குத் தெரியாது. இதெல்லாம் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது. 

சிறுகதையின் வடிவத்தைப் பற்றி ஸ்ரீரங்கம் மோகனரங்கன், அவருக்கே உரிய பாணியில் இங்கே கலக்கிக் கொண்டிருக்கிறார்.எத்தனையோ பேர் எத்தனையோ தரம் பேசிப் பேசி இன்னமும் பிடிபடாத விஷயமாகத் தான் இருக்கிறது. 

ஜெயகாந்தனின் இந்த சிறுகதை, சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறது என்று எனக்குப் படுகிறது.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது, சொல்லுங்களேன்!







Saturday, January 15, 2011

மாற்றங்களுக்குத் தயாராவது - 8


வாசகர்களுக்கு உளங்கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! வான் மழை வழாது பொழிக ! மழைவளம் சுரக்க!பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

ஜான் பி கோட்டர் தன்னுடைய புத்தகத்தில், மாற்றங்களுக்குத் தடையாக இருக்கும் ஒரு எட்டு முக்கியமான தடைகளைப் பட்டியல் டுகிறார். அதற்கப்புறம், ஒரு எட்டு முக்கியமான வழிகளில் எப்படி மாற்றத்தை நாம் விரும்புகிற விதத்தில் நிர்வகிக்க முடியும், சாதிக்க முடியும் என்பதையும் சொல்கிறார்.

அதுவும் சுருக்கமாக வெறும் நூற்று எண்பத்தேழு  பக்கங்களில்!

முதலில் அவர் மாற்றங்களுக்குத் தடையாக இருக்கும் எட்டுக் காரணிகள் எவை என்று சொல்வதைப் பார்க்கலாம்.இதற்கு மாற்றாக, மாற்றங்களுக்கு ஒரு எட்டு வழிகளை சொல்வதையும் அதனதன் கீழேயே சேர்த்துப் பார்த்து விடலாம்!


இங்கே புத்தகத்தின் குறிப்பிட்ட பகுதிகளை கூகிள் புக்ஸ் தளத்தில் இணையத்திலேயே வாசிக்க முடியும்.


1. Allowing too much complacency

Establishing a Grater sense of urgency.

2. Failing to create a sufficiently powerful guiding coalition

Creating the Guiding Coalition.
 
3. Underestimating the power of Vision

Developing a Vision & Strategy

4. Under communicating the Vision by a factor of 10 (or 100 or even 1000)

Communicating the Vision, Change.
 
5. Permitting obstacles to block the Vision

Empowering others to act.
 
6. Failing to create short-term Wins

Creating short-term Wins.
 
7. Declaring Victory too soon

Consolidating Gains and producing even more change
 
8. Neglecting to anchor Changes firmly in the Corporate Culture

Institutionalizing Changes in the Culture.

நிறுவனங்கள் தோற்பதற்கான முக்கியமான எட்டுக் காரணங்களைப் பட்டியலிடும் ஜான் பி கோட்டர், நிறுவனங்கள் ஜெயிப்பதற்கான எட்டு வழிமுறைகளையும் அடுத்து சொல்கிறார். சிவப்பு, நீல வண்ணங்களில் இரண்டையும் அடுத்து டுத்துப் பார்க்கிறீர்கள் இல்லையா?

கொஞ்சம் இந்த இரண்டு பட்டியல்களையும் பார்த்துவிட்டு, உங்கள் மனதில் என்ன கேள்விகள் எழுகிறதோ, அதை எழுதுங்கள்!

கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்வதற்காக, ஒரு விளம்பரம்! மாற்றங்கள் என்றால் நமக்கு என்னென்னமோ தோன்றுகிறது இல்லையா? 

காம்லின் நிறுவனத்துக்கோ அது ஒரு வினோதமான விளம்பரமாக! 



மாற்றங்களை, ஒரே நிமிடத்தில் விளக்கி விடுகிறார்களாம்!




என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் கொஞ்சம் சொல்லுங்களேன்!
 



Wednesday, January 5, 2011

வாசிக்க நினைத்திருக்கும் புத்தகங்கள்..!

ஜனவரி பிறந்து விட்டது!

புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், ஹேங் ஓவர்கள் முடிந்த பிறகு, அடுத்து ஒன்று ஆரம்பமாகவேண்டுமே! இங்கே தமிழ்ப்பதிவுகளில் சுடச் சுட வடை என்ற ரீதியில்,  இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பரபரப்பாக இருக்கப் போவது சென்னையில் நேற்றுத் துவங்கிய புத்தகக் கண்காட்சி தான்! புத்தகக் கண்காட்சியில் என்ன புத்தகங்களை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்து வாங்கினேன், அதில் என்ன வாசித்தேன், என்ன பிடித்தது அல்லது ஏன் பிடிக்கவில்லை என்ற மாதிரியான விவரங்களை எல்லாம் எதிர்பார்க்க முடியாது.

சென்ற வருடம், இதே சென்னைப் புத்தகக் கண்காட்சியைப் பற்றி எழுதிய இந்தப் பதிவில் ஒரு வாசகர் எழுப்பியிருந்த கேள்விக்கு பதில் சொன்னதில் இன்றைக்குக் கூட எந்த மாற்றமும் இல்லை.


"மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணையில், புத்தகங்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கையில், பின்னால் மென்மையான குரலில், அந்தப் புத்தகத்தை பற்றியோ, அதை விட இன்னும் சிறப்பான புத்தகம் ஒன்றையோ அறிமுகம் செய்யும் குரல்! புத்தகத்தை விற்பனை செய்யவேண்டுமே என்ற விற்பனையாளனின் குரல் அல்ல அது! புத்தகங்களை நேசித்த, அதை முழுமையாக வாசித்தஒரு வாசகன், இன்னொரு வாசகனோடு ஆர்வமாகப் பகிர்ந்துகொள்ளும் குரல்!

திரு நவநீத கிருஷ்ணன், அந்தப் புத்தக நிலையத்தில் வேலைக்கு சேர்ந்து, அதன் செயலாளராகவும் ஆனவர். சென்ற (2009) அக்டோபரில் தான் காலமானார்! பள்ளி இறுதிப் படிப்பை மட்டுமே முடித்த அவரால், வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை கடைக்கு வருகிறவர்களிடமும் உண்டாக்கத் தெரிந்த வித்தையை நிறையத் தரம் அனுபவித்தவன் நான்.

வாசிப்பை ஊக்குவிப்பது எப்படி என்பதை நான் பார்க்கும் விதம் வேறு! ஆர்ப்பாட்டமான கண்காட்சிகளை நடத்தி, அங்கே காண்டீனில் என்ன சாப்பிட்டோம் எந்த எந்தப் பிரபலங்களைப் பார்த்தோம் என்று பட்டியலும் புகைப்படமும் வெளியிடுவது மட்டுமே ஊக்குவிப்பது என்று நீங்கள் கருதினால், அதற்கு நான் தடையாக இருக்கப் போவதில்லை.

அடுத்தது, வலைப்பதிவுகளில் எழுதுபவர்களில், இன்னும் ஐம்பதாண்டுகளில் கொண்டாடப் படப் போகிறவர்களைப் பற்றி...அப்படி யாராவது வருவார்கள், அல்லது வரவே மாட்டார்கள் என்பதெல்லாம் என்னுடைய நம்பிக்கைகளின் சுமையில் சேர்த்துக் கொள்வதாக இல்லை. வலைப் பதிவுகளின் வடிவமும், வெளிப்படுத்துகிற கலையும், புத்தகங்கள், கவிதை எழுதுவதை விட வேறானது.

அதைக் கண்டுகொள்வதற்கு ஐம்பதாண்டுகள் போகவேண்டாம்! இப்போதே, இங்கேயே R P ராஜ நாயஹம் ஒருவர் இருக்கிறார். அவரை விட, வலைப் பதிவுகளைத் திறமையாகக் கையாளத் தெரிந்த வித்தைக்காரரைப் பார்ப்பது மிகவும் கடினம். இதை சொல்லும்போதே வேறு யாருமே இல்லை என்று சொல்வதற்காக இல்லை, இன்னும் பல பதிவர்கள் வெவ்வேறு வடிவங்களில் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், நானும் அவர்களை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

இந்த வலைப்பதிவு வடிவம் வேறு, புத்தகமாகப் படிக்கிற வடிவம், உள்ளடக்கமே வேறு. நான் சொல்ல வந்தது, கொஞ்சம் பேர் தெரிய வந்தவுடன், அல்லது சும்மா எழுதிக் கிறுக்கியதை எல்லாம் வெளியிட்டு, மாப்பிள்ளை மச்சான் படைப்பும் அதில் ஒரு ஓரத்தில் வந்திருக்கிறது என்ற ஒன்றை மட்டும் வைத்துக் காசு பார்ப்பவர்களைக் குறித்தானது மட்டுமே! அதே மாதிரி, இணையத்தில் எழுதியதையே, புத்தகமாக வாந்தி எடுக்கும் ரிபீட்டு கல்ச்சரை மட்டுமே!"

இந்த ஒரு அம்சத்தில் என்னுடைய கருத்துவேறுபாட்டைத் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால், இதுமாதிரிக் கண்காட்சிகள் புத்தக விற்பனையை அதிகரிக்கச் செய்யும் தூண்டுகோலாக இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஒரு புத்தகக் கடையில் டிஸ்ப்ளேயில் வைத்து ஆறுமாதமோ  அல்லது ஒரு வருடத்திலோ விற்கிற ஒரு புத்தகம், இந்த மாதிரிக் கண்காட்சியில் ஒரே நாளில் அந்த எண்ணிக்கையைத் தாண்டிவிடுகிறது. பதிப்பகங்கள் சந்தோஷப்படலாம்! அவர்களாகப் பார்த்துக் கொடுக்கிற ராயல்டி கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்குமே என்று புத்தக ஆசிரியர்களும் கூட சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்!

காசு கொடுத்து, தேடிப் பிடித்து வாங்கும் வாசகனாய் நாமும் சந்தோஷப் படுகிற மாதிரி புத்தகங்கள் வந்திருக்கிறதா என்பது வாசகர் பார்வையில் இருந்து எழவேண்டிய கேள்வி! நாம் தேடுகிற விஷயங்கள், அந்தப் புத்தகத்தில் கிடைக்கிறதா? நம்முடைய சிந்தனையை உயர்த்திக் கொள்கிற விதத்தில் நாம் வாங்கும் புத்தகங்கள் உதவியாக இருக்கிறதா?

சென்ற  வருடம் புத்தகக் கண்காட்சியில் என் மகன் வாங்கி வந்த புத்தகங்களில், ஜெயமோகனின் "இன்றைய காந்தி" கொஞ்சம் குறிப்பிட்டுச் சொல்கிற மாதிரி இருந்தது.  திரு ராமச்சந்திரா குஹா எழுதிய INDIA After Gandhi ஆங்கில புத்தகத்தைப் போல ஜெயமோகனின் நூல் ஒரு முழுமையான புத்தகமாக, தேவையான தகவல்களுடன் கூடிய புத்தகமாக இல்லை என்றாலும் கூட, தமிழில் வெளியான புத்தகம் என்ற வகையில் கொஞ்சம் உயரமான இடத்தில் தனித்து இருக்கிறது. தமிழினி வெளியீடாக வந்த இந்தப் புத்தகம், இன்று கூட வாங்கிப் படிக்கக் கூடியது தான்.

இந்த வருடம் புத்தகக் கண்காட்சி துவங்கிவிட்டது என்பதற்காகவோ, கண்காட்சி சுரம் என்னையும் தொற்றிக் கொண்டுவிட்டது என்பதற்காகவோ இல்லாமல், புத்தகங்களை அதன் உள்ளடக்கம், ஆசிரியரின் அனுபவம், எழுத்துவன்மை இவைகளைப் பற்றி தெரிந்து வைத்திருப்பதால் மட்டுமே இந்த வருடம்  நான் வாசிக்க, வாங்க நினைத்திருக்கும் ஒரு சில புத்தகங்களின் அறிமுகமாக!

1.Makers of Modern India

ராமசந்த்ர குஹா இந்தப் புத்தகத்தில், நவீன பாரதத்தைச் செதுக்கிய சிற்பிகளாக ஒரு பத்தொன்பது நபர்களைக் குறித்து அவர்களுடைய எழுத்துக்கள், பேச்சுக்களில் இருந்து எடிட் செய்து தொகுத்து வெளியிட்டிருக்கும்  இந்த நூலை இந்த ஜனவரியில் வாங்கிப் படிக்க உத்தேசித்திருக்கிறேன். இந்தப் புத்தகத்தை கல்கத்தாவில் அறிமுகம் செய்து பேசிய ராமச்சந்திர குஹா சொன்ன ஒரு கருத்து, வங்காளம்  உருப்படுவதற்காகவாவது சிபிஎம் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி அரசு பத்தாண்டுகளுக்கு முன்னரே ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டிருக்க வேண்டும் என்று சொன்ன ஒரு விமரிசனத்தை அன்றாட செய்திகளில் சென்ற மாதம் பார்க்க நேர்ந்தது.அப்போது  இந்த புத்தகத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்[புக் கிடைத்தது. 

ராமசந்த்ர  குஹா இந்தப் புத்தகத்தில்,  ஜனங்களுக்கு மறந்து போன அல்லது அறிமுகமே இல்லாமல் போன  தாராபாய் ஷிண்டே, ஹமீத்  தல்வாய், சையத் அஹமத் கான் போன்ற சிலரைத் தன்னுடைய பட்டியலில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். ஜனங்களுக்கு நினைவில் இருக்கும் முக்கியமான புள்ளிகளான, சர்தார் வல்லபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ் இருவரையும் சேர்த்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், இந்த இருவரும், செயல் வீரர்களாக மட்டுமே இருந்திருக்கிறார்கள்! அதாவது, இவர்கள் எழுதிய, பேசியதன் அடிப்படையில் தொகுப்பதற்குப் போதிய விவரங்கள் இல்லாததுதான் என்று சொல்லப்படுவது கொஞ்சம் நெருடுகிறது.

ஆனாலும் சரித்திரமே தெரியாமல் சரித்திரத்தை போதிக்க முற்படுகிற முற்போக்கு எழுத்தாளர்கள், சரித்திரப் பேராசிரியர்கள் நிறையப் பேரைப் படித்து அலுத்து விட்ட அனுபவம், சரித்திரத்தைக் கொஞ்சம் கோர்வையாக, என்ன சொன்னாலும் அதற்குப் போதுமான ஆதாரங்களுடன், குறிப்புக்களுடன் சொல்லத் தெரிந்த திரு ராமசந்த்ர குஹா, தன்னுடைய பார்வையில் என்ன சொல்ல வருகிறார் என்பதை, அவர் தொகுத்து வெளியிட்டிருக்கும் இந்த நூலை வாங்கிப் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலை இந்தப் புத்தகக் கண்காட்சியி துவங்கிய தருணம் தோற்றுவித்திருக்கிறது.

இணையத்தில் ஒரு தளத்தில் ரூ.543/- என்றும் இன்னொன்றில் ரூ.559/-என்றும் விலையைப் பார்க்க முடிந்தது.இணையத்தில் புத்தகங்களை வாங்கத் தெரிந்தவர்களுக்கு, ஆண்டு முழுவதுமே புத்தகத் திருவிழா-கண்காட்சிதான் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லையல்லவா!

2.பாரதிக் கல்வி - ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்

 
3.அறிவும் நம்பிக்கையும் - ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன்


தமிழினி வெளியீடாக இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் என்பதை சொல்வனம் இதழில் வந்த இந்தக் குறிப்பில்மட்டும் தான் தெரிந்து கொள்ள முடிகிறது. தமிழினி, விருபாடாட்காம் மற்றும் வேறெந்த தளங்களிலும், புத்தகத்தைப் பற்றிய மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. எத்தனை பக்கங்கள், விலை விவரம் பற்றியும் எந்தத் தகவலும் தெரிந்து கொள்ள முடியவில்லை.



அதனால் என்ன?!

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனின் மோகனத் தமிழை மின்தமிழ் மற்றும் தமிழ்வாசல் கூகிள் வலைக் குழுமங்களில் நிரம்ப அனுபவித்தவன்! அவருடைய வாசிப்பு அனுபவம், தான் சொல்ல வருவதைப் பாங்குடன் சொல்கிற நேர்த்தி இவைகளைத் தொடர்ந்து படித்து அனுபவித்து வருகிறவன். தாயை போல பிள்ளை நூலைப் போல சேலை என்பார்கள் இல்லையா!  அந்த வகையில் அவருடைய மோகனத் தமிழ் எப்படி இருக்கும் என்பது ஏற்கெனெவே தெரிந்திருப்பதனால், இந்த இரண்டு நூல்களையும் இந்த ஜனவரியிலேயே வாங்கிப் படிக்கும் உத்தேசம் இருக்கிறது.

இந்த ஆண்டு படிக்க உத்தேசித்திருக்கும் நூல்களின் பட்டியல், நூல்களைப் பற்றிய சுருக்கமான மதிப்பீடுகளை  இன்னும் ஒன்றிரண்டு பதிவுகளில் தொடர்ந்து பேசுவோம்!

Change Management மாற்றங்களுக்குத் தயாராவது குறித்த தொடர்பதிவுகள் கொஞ்சம் இடைவெளி விட்டுத் தொடரும்! மனிதவளம், மேலாண்மை, நிர்வாகம், மார்கெடிங் துறை குறித்த பதிவுகளைத் தொடர்ந்து இந்தப்பக்கங்களில் எழுதும் விருப்பம் இருப்பதை ஏற்கெனெவே சொல்லியிருக்கிறேன்!


டிஸ்கி ஒன்று

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் எழுதிய  இரு நூல்கள் புத்தகக் கண்காட்சியில் கடைக்கு 12.01.2011 அன்று விற்பனைக்கு வந்து சேர்ந்தன. 

தமிழினி -- கடை எண் 354, 355 

United Writers Shop No 29 

நூல்கள் --- 

1) பாரதிக் கல்வி, ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன், தமிழினி, டிசம்பர் 2010, பக்கம்
128, ரூ 80. 

2) அறிவும், நம்பிக்கையும் -- ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன், தமிழினி, டிசம்பர்
2010, ரூ 55 

முதல் நூல் பாரதியின் கருத்துகளைப் பற்றிய இலக்கிய விமரிசனம். 

இரண்டாவது நூல் மனித சிந்தனை மரபுகளின் வரலாற்றில் அறிவும் நம்பிக்கையும் எந்தவிதமான ஊடுகலந்த இயக்கம் கொள்கின்றன என்பதைப் பற்றி விவேகாநந்தரையும், நம்மாழ்வாரையும் முன்னிறுத்தி எழுதப்பட்ட பண்பாட்டு விமரிசனம். 

"படிக்க நேர்ந்தால் படிப்பவர்கள் கருத்துகள் சொன்னால் நன்றாக இருக்கும். அவ்வாறு சொல்வோருக்கு முன்கூட்டியே நன்றிகள்" . 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் தன்னுடைய நன்றிகளை முன்கூட்டியே இப்படி தெரிவித்திருக்கிறார்!


இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)