Saturday, July 10, 2021

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நிறைய திமுக ஆதரவாளர்களைக் கதறவிட்டிருப்பது இந்த நாளுடைய ஆகச் சிறந்த காமெடி! வீடியோ 13 நிமிடம். 


ஒரு செய்தியாளராகவோ விவாத நெறியாளராகவோ செந்தில் என்றைக்கும் சோபித்ததில்லை. ஆனாலும் கூட இந்த வீடியோவில் ஒரு நகைச்சுவை ஓரங்க நாடகத்தை நடத்தியிருக்கிறார். நிறைய சொதப்பல்களுடன் தனி ஒருவனாக தமிழ் கேள்வி என்றொரு யூட்யூப் சேனலில் திமுகவுக்கு சொம்பு தூக்கிக் கொண்டிருக்கிறார். நேற்றும் கூட அண்ணாமலை தமிழக பிஜேபியின் தலைவரானதைக் கிண்டல் செய்து வெளியிட்டிருந்தார்.


செந்தில் எத்தனை வன்மத்தோடு தவறான தகவலைக் கொஞ்சமும் கூச்சமில்லாமல்  பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள கீழே ஸ்க்ரீன்ஷாட் ஒன்றே போதும்.


செந்தில் வாங்குகிற காசுக்கு விசுவாசமாக என்னமோ உளறிவிட்டுப் போகட்டும்!

தினமலர் காரன் - மோடி முடிவெடுத்து விட்டார் - கொங்கு நாட்டை பிரிக்க என்று கிளப்பி விட -

அண்ணாதுரை கருணாநிதியும் - அடைந்தால் திராவிட நாடு என்று இந்த நாட்டை துண்டாட பேசிய பொது - தேசியவாதிகள் மனம் துடித்த துடிப்பை தற்போது கொங்கு நாட்டு காரர்கள் திரும்பவும் கழகத்திற்கு குடுத்து கொண்டு இருக்கிறார்கள் .
1921 இறந்த பாரதி "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று- 1947 வரப்போகும் விடுதலை பற்றி பாடியது போல..
இன்று பலர் கொங்கு நாடு மலர்ந்து விட்டது போல - வரி விதிப்பு வருமானம் கொங்கு நாட்டில் அதிகம் என்றும் - காவேரி நீர் பங்கீடு பற்றி - கர்நாடகம் மற்றும் திராவிட தமிழ்நாடு உடன் எப்படி பேச்ச்சு வார்த்தை செய்வது - ஏற்றுமதி துறைமுகம் எப்படி என்பது பற்றியெல்லாம் எழுதுகிறார்கள் ..
ஒரு மந்திரம் மாதிரி சொல்லி சொல்லி - எல்லாரும் அதை நம்ப ஆரம்பித்து விட்டனர் என நினைக்கிறேன் ..
இந்த காவேரி நீர் ஓடும் பகுதியான திருச்சி தஞ்சை நாகப்பட்டினம் வரை - உங்கள் கூட சேர்த்து கொள்ளுங்க - உங்களுக்கு பழைய பூம்புகாரில் ஒரு பெரிய துறைமுகம் கட்டி - திருப்பூர் ஆடைகளை ஏற்றுமதி செய்து கொள்ளலாம் !!
இப்படிக்கு
சோழதிருநாட்டு நம்பி (விஜயராகவன் கிருஷ்ணன்)
புலர்ந்து வரும் திராவிட தீது இல்லா திருநாட்டில் புது பெயர்

என்று விஜயராகவனும் எரிச்சலோடு முகநூலில் எழுதி இருக்கிறாரே. இதற்கென்ன சொல்வது?   

மீண்டும் சந்திப்போம் 

Tuesday, July 6, 2021

இதுதான் விஷயம் ::: யார் யாருக்கு எப்படிப் புரிய வைப்பது?

 2500 கோடி ரூபாய் செலவில் சென்னையில் 4 பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கே என் நேரு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். பூங்காக்கள் அவசியம் தான்!  ஒரு பேரிடர்த்தொற்று அபாயம் முற்றிலும் குறையாத தருணம் இது, இப்போது இது ரொம்ப முக்கியமா என்று கேள்வி கேட்டால் பதில் வருமா வராதா என்று எனக்குத் தெரியாது.


1980 களில் ராஜீவ் காண்டி பிரதமராக இருந்த சமயம், புதிய கல்விக்கொள்கை ஒன்று அறிவிக்கப்பட்டு அதன் ஒரு அம்சமாக மாவட்டத்துக்கு ஒரு நவோதயா பள்ளியும் அறிவிக்கப்பட்டது. எந்தவொரு நல்லவிஷயத்தையும் குறுக்கே விழுந்து மறிக்கும் இடதுசாரிகள் அதையும்  கடுமையாக எதிர்த்தார்கள். தமிழகத்தில் அன்று ஆண்ட கழகம் என்ன காரணத்தாலோ நவோதயா  பள்ளிகளைத் தமிழகத்துக்குள் நுழைய விடவில்லை. இப்போதும் கூட பூங்காவுக்குச் செலவிட உத்தேசித்திருக்கும் 2500 கோடியில் 125 - 150 நவோதயா பள்ளிகளைத் தமிழக அரசே செலவுசெய்து ஏழை எளிய மக்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதை உறுதிசெய்யலாம். நீட் தேர்வு பற்றி எல்லாம் வீணாக அச்சப்படாமல் மாணவர்கள் தயாராக தரமான பள்ளிகளை உருவாக்குவதுதான் உண்மையான சமூகநீதி, சமநீதியும் கூட! இலவச சைக்கிள்களோ, கலர் டிவி போன்ற இலவசங்களோ அல்ல என்பதை  யாரிங்கே ஆட்சியாளர்களுக்குப் புரியவைப்பது? 


மே 2க்கு முன்னால் தமிழகத்தில் எல்லோருமே பெட்ரோல் - டீசல் விலையேற்றத்திற்கு மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்துத் தான் போராடினார்கள். அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தை உதாரணமாக காட்டி, அங்கு போல தமிழகத்திலும் மாநில அரசு வரியை குறைத்து, விலையை குறைத்தால் என்ன என்றெல்லாம் கேட்டார்..

ஆனால் தற்போது, பெட்ரோல் - டீசல் விலையேற்றத்தைக் கண்டிக்கும் எல்லாப் போராட்டத்திலும் மாநில அரசு கழன்று விட்டது; மத்திய அரசை மட்டும் கண்டிக்கிறார்கள். இங்கே ஒரு நியாயமான ஊடகமிருந்தால், அது என்ன கேள்வி எழுப்ப வேண்டும்?  என சுந்தர் ராஜ சோழன் முகநூலில் கேள்வி எழுப்புகிறார். யார் இதற்குப் பதில் சொல்வது?

பிரிட்டன் உட்பட சில மேற்கத்திய நாடுகளில் Shadow Government என்று எதிர்க்கட்சிகளின் அரசியல் செயல் பாடுகள், துறை வாரியான யோசனைகள், விமரிசனம் என்பதை காப்பியடித்து பாமக இங்கே சிலகாலமாக நிழல் நிதிநிலையறிக்கை (
பட்ஜெட் ) வெளியிட்டு வருகிறது. இந்த வருடத்துக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை டாக்டர் ராம்தாஸ் இங்கே வெளியிட்டு இருக்கிறார். 126 அறிவிப்புக்களைக் கொண்டதாக இந்த அறிக்கை இருப்பதை பாமகவினரே புரிந்துகொண்டு விடுவார்களா என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது. ஆளும் தரப்பு எப்படிப்புரிந்து கொள்ளுமோ?



ஒரு போலிப்பாதிரி மரணம் குறித்து விதம்விதமாகப் புகழுரைகளும் கார்டூன்களும் வந்துகொண்டே இருப்பதன் மீதான சலிப்பை போக்குகிற மாதிரி ஒத்திசைவு பதிவர் வெ.ராமசாமியின் இந்தப்பதிவு

மீண்டும் சந்திப்போம்.

Sunday, July 4, 2021

Cinematograph (Amendment) Bill 2021 ::: இன்னும் இரு பிரபலங்களின் கருத்து!

காதில் ஏறாது என்பது தெரிந்துமே  இது முகநூலில் ஸ்டேன்லி ராஜன் சூர்யாவுக்கு அறிவுரையாகச் சொன்னது ::: 

இந்திய அரசு ஒளிபரப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பது நல்ல விஷயம், மிக மிக தாமதமாக அந்த திருத்தம் கொண்டுவரபட்டிருந்தாலும் இப்பொழுது மோடி அரசாவது செய்தார்களே என்ற ஒரு நிம்மதி பிறக்கின்றது. இந்த சட்டத்துக்கு அகில இந்திய அளவில் எந்த எதிர்ப்பும் எழவில்லை ஆனால் தமிழகத்தில் மட்டும் வழக்கமான எதிர்ப்புகள் எழுகின்றன‌.

தமிழகத்தில் இதனை "கலையுலக தீவிரவாதி" சூர்யா என்பவர் முன்னெடுக்கின்றார், இது அவர்மேல் அகில இந்திய மக்களுக்கும் தேசாபிமானிகளுக்கும் பெரும் எதிர்ப்பினை கொடுத்துள்ளது. தமிழகம் ஒன்றே திரையுலகம் அரசியலை கட்டுபடுத்தும் மாநிலம், சினிமாக்காரனை தூக்கிவைத்து கொண்டாடும் மாநிலம் எனும் வகையில் தேசத்துக்கும் தேச அமைதிக்கும் மட்டும் பங்கம் விளைவிக்கும் படங்கள் மேல் நடவடிக்கை எடுக்க கூடாது அது "கருத்து சுதந்திரம்" என சூர்யா புலம்புவது அவர்மேல் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது

அவர் சினிமா மூலம் தேசஎதிர்ப்பையும் இன்னும் பல விஷயங்களையும் செய்ய திட்டமிட்டிருந்தாரா? அதை அரசு தடுக்கும் நிலையில் அலறுகின்றாரா எனும் மிகபெரிய கேள்வி எழுகின்றது. சூர்யாவின் நடவடிக்கைகள் சமீப காலமாக சர்ச்சைகுள்ளானவை, நீட் தேர்வு என கடந்தவாரம் வரை புலம்பும் அவர், திமுக அரசின் நீட் தேர்வு என்பது அரசியல் மோசடியாக போனது பற்றி வாயே திறக்கவில்லை. எல்லோருக்கும் சமத்துவ கல்வி என சொல்லும் சூர்யா, நாடு முழுக்க ஒரே கல்வி என்பதற்கு ஏன் அமைதி என்பதும் தெரியவில்லை.

இப்பொழுது புதிய ஒளிபரப்பு சட்டத்துக்கு எதிராக தன் தீவிரவாத கும்பலை தமிழகத்தில் திரட்டுகின்றார் சூர்யா. சூர்யா என்பவருக்கு தேசாபிமானிகள் சொல்லிகொள்வதெல்லாம் ஒன்றுதான் ::அய்யா சூர்யா, இங்கு உங்களின் சிங்கம் போன்ற படங்களுக்கு யாரும் தடை விதிக்கவில்லை, நாட்டுக்கும் இந்து மதத்துக்கும் எதிரான கருத்துக்களை சொல்லாத வரை உங்கள் படத்தை யாரும் தடுக்கப்  போவதில்லை. எம்.ஜி.ஆரின் நம்நாடு முதல் மணிரத்தினத்தின் ரோஜா வரை யாராவது ஒரு குற்றம் சொல்லமுடியுமா? அதை யாராவது தடுத்தார்களா?


ஏன் உம்முடைய சிங்கம், வானரம் ஆயிரம் படங்களை ஏதும் சொல்லமுடியுமா? நல்ல கருத்துக்களையும், நாட்டுபற்றையும் வளர்க்கும் படங்களை எந்த அரசு தடுக்க முடியும்? பாரத விலாஸ் முதல் இந்தியன் போன்ற படங்களை எந்த சட்டம் தடுக்க முடியும்? கலை என்பது பொழுதுபோக்குத்தான் ஆனால் அதில் தேச எதிர்ப்பையும் வீண் சமூக குழப்பங்களையும் திட்டமிட்டு பரப்புவோம் என அடம்பிடித்தால் யார் எற்பார்கள்? தேசாபிமானிகள் எப்படி ஏற்றுகொள்ள முடியும்?

தேசம் எப்படி ஏற்கும்? 130 கோடி மக்களுக்கான‌ தமிழக கூத்தாடி ஒருவனின் கருத்தை கேட்டுத்தான் எழுதவேண்டும் என கருதுவது எவ்வகை நியாயம்?  இந்து எதிர்ப்பும் இந்திய எதிர்ப்பும் கொண்டு, திராவிட ஜால்ரா சத்தத்தில் எல்லா சட்டமும் என்னை கேட்டுகொண்டுதான் எழுதபட வேண்டுமென நீர் கருதினால் அதையெல்லாம் ஏற்க முடியாது. இந்தியாவுக்கு எதிராகவும் இந்து மதத்துக்கு எதிராக பேசுவது மட்டும் கருத்து சுதந்திரம் என்றால் அப்படிப் பட்ட கருத்து சுதந்திரத்தை இந்நாட்டில் அனுமதிக்கவே முடியாது.

இந்தியா உலக நாடுகளுக்கு இணையாக முன்னேறிக் கொண்டிருக்கும் நேரமிது. சீன படங்கள், கொரிய படங்கள் ஏன் ஈரானிய படங்கள் கூட உலகளாவில் விருதுகளை பெருகின்றன, ஆனால் அங்கெல்லாம் தேசவிரோத அவர்கள் கலாச்சார விரோத கருத்து ஒரு புள்ளி கூட அனுமதிக்கபடுவதில்லை. உலகாளும் ஹாலிவுட்டில் அமெரிக்காவுக்கு எதிராக ஒரு வார்த்தை இடம்பெற முடியாது.

ஆம் சினிமா என்பது ஒரு ஊடகம் எனும் வகையில் அந்நாடுகள் வலுகவனமாக மக்களிடம் செல்லும் கருத்துக்களை நோக்குகின்றன, அதில் நாட்டுக்கும் சமூக அமைதிக்கும் எதிரான கருத்து என்றால் உடனே தடுக்கின்றன‌.உங்களுக்கு ஒரு விஷயம் அழுத்தி சொல்ல விரும்புகின்றோம்.

இந்த சட்டம் பாஜகவின் மோடி கொண்டுவரும் சட்டம் அல்ல, இது இந்திய அரசின் சட்டம் கட்சிகள் வரும் செல்லும், மோடி செல்வார் இன்னொரு பிரதமர் வருவார். ஆனால் நாடு என்றும் நிலையானது. அந்த நாட்டுக்கு எது நல்லதோ எது சரியோ அதைத்தான் மோடி செய்கின்றார், இதை எந்த வருங்கால பிரதமரும் மாற்றமுடியாது.நாட்டுக்கு விரோதமற்ற, இந்து விரோதமற்ற படங்களை நீங்கள் எவ்வளவும் எடுங்கள், மற்றபடி இந்த சட்டம் பற்றி ஏன் அஞ்சுகின்றீர்கள் என்பதுதான் தெரியவில்லை.

ஒரு பாம்பு வேட்டையாடி அதன் திறமைக்கேற்ப உண்ணலாம், ஆனால் ஊருக்குள் புகுந்து காவல்காரன் கையில் இருக்கும் கம்பு என் "உணவு வேட்டைக்கு" எதிரானது என்றால் அது நகைப்புகுரியது. இது தேசம், அரசு அதன் காவலாளி.அந்த அரசு இந்நாட்டுக்கு எது தேவையோ அதை மிக தெளிவாக உறுதியாக செய்கின்றது, அதை கண்டிப்பது நியாயமில்லை, எல்லா விஷயங்களிலும் இப்படி நீர் அழிச்சாட்டியம் செய்வதும் சரி அல்ல‌

இந்தியாவில் ஆயிரகணக்கான நடிகர் நடிகையர் இருக்கும் நிலையில் நீர் ஒருவர்தான் நடிகர் என்பது போல் குதிப்பதும் சரியல்ல‌.

நீர் சொன்னபடி இச்சட்டத்தை எதிர்த்து திரையுலகை விட்டு செல்வதாக செய்தால் உம்மேல் ஏற்பட்டிருக்கும் சந்தேகம் சரியாகும், நீர் தேசவிரோத கைகூலி என்பதும் சினிமாவில் குழப்பம் செய்யமுடியா நிலையில் ஓடி விட்டீர் என்பதும் உண்மையாகும். இச்சட்டத்தை எதிர்த்து நீர் சினிமாவில் இருந்து விலகினால் அது மிக்க நல்லது, நாட்டுக்கு அது நீர் செய்யும் மிகபெரிய சேவையாக அமையும்.அந்த நல்ல விஷயத்தை உடனே செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இந்நாடு என்பது உம்மை போன்ற நடிகனை நம்பி இல்லை, உமது வியாபாரத்திற்காய் நீர் எதையும் பேசித் திரியலாம் ஏதோ 4 படத்தில் நடித்து தமிழகத்தின் அல்லக்கைகள் சில கைதட்டிவிட்டால் அதற்காக நீர் நாட்டை காக்க வந்த அவதாரமாகி விடமாட்டீர். ஆனானப் பட்ட  எம்.ஜி.ராமசந்திரனே இந்தியனாக நல்ல குடிமகனாக தன் படங்களிலும் அரசியலிலும் இருந்தார் என்பதை மறக்க வேண்டா.

நீர் ஒரு நடிகன், சினிமா மாயையில் நிற்கும் அற்ப உருவம் அதை தவிர உமக்கு என்ன உண்டு? எல்லையில் பனிமலையிலும்  ராஜஸ்தான் வெயிலிலும் அசாம் காடுகளிலும் நிற்கும் இந்திய வீரனின் காலணிக்கு கூட பெறாத உமக்கு இந்நாட்டை பற்றி அதன் சட்டங்களை பற்றி பேச‌ தகுதி இல்லை என்பதனை முதலில் உணருங்கள், அதுதான் உமக்கு தெளிவினை கொடுக்கும்.

ஆனாலும் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை ஏமாற்றிய திமுக அரசை கண்டித்து சினிமாவில் இருந்து வெளிநடப்பு செய்யாமல் அந்த படுதோல்வி அரசியலை கண்டிக்காமல் இப்படியெல்லாம் கிளம்புவது உம்மேல் மிகபெரிய பரிதாபத்தை ஏற்படுத்துகின்றது.

உடனே சினிமாவில் இருந்து விலகி தமிழ்நாட்டில் இருந்தே விலகி நீவீர் வேறு எங்காவது செல்ல வாழ்த்துக்கள், மறக்காமல் உங்கள் அருமை மனைவியினையும் அழைத்து சென்றுவிடவும்! ஆம் இன்னொரு மாநிலத்தில் அல்லது நாட்டில் இருந்து உம் "கலை தீவிரவாதத்தை" செய்து பாருங்கள், அப்பொழுதுதான் நீவீர் செய்துகொண்டிருக்கும் காரியத்தின் அயோக்கியத் தனம் உமக்கு புரியவரும், அந்த அனுபவத்தில் நல்ல இந்தியனாக திருந்தி வருவீர்கள்.என்கிறாரே, இன்னுமா இந்த ஒலகம் கமல், சூர்யாவை எல்லாம் நம்புது?!!      

அதெல்லாம் அந்தக்காலம்! ஜோதிகாவை சில்லுன்னு காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பத்தோடு மதம் மாறுவதற்கு முன்னாடியாம்! விக்ரமன் பேட்டியில் 20.30 நிமிடத்தில் திருப்பதி உண்டியலில் காசுபோட்ட பழைய கதை   



கருத்து சுதந்திரம் கருமாந்திரம் ஒரு புண்ணாக்கும் இல்லை இவனுங்க கூப்பாடு போடறதுக்குக் காரணம்! இவனுங்க கருத்து சுதந்திரத்தை அவனுங்க தொழிலில் எந்த லட்சணத்துல கடைப் பிடிச்சானுங்கன்னு சொன்னா சந்தி சிரிக்கும்! 

இப்போ சமீபத்துல, ‘The Family Man - Season 2' வெப் சீரீஸ் வந்தபோது என்ன ஆட்டம்டா ஆடுனீங்க? அதை ஒளிபரப்பக்கூடாது; ஒளிபரப்பினா அமேஸான் பிரைமைப் புறக்கணிப்போம்னெல்லாம் வைகோ, சீமான்னு எத்தனை பேரு கூவினாங்க? விடுதலைப் புலிகளைப் போராளின்னு சொல்ல உங்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்குன்னா, அவங்களைத் தீவிரவாதின்னு சொல்லற கருத்து சுதந்திரம் இன்னொருத்தனுக்குக் கிடையாதா? அதுவும் அந்தத் தொடரை எதிர்க்கிறேன் பேர்வழின்னு அதுல நடிச்ச சமந்தா, பிரியாமணியை எல்லாம் ஆளாளுக்குக் கண்டபடி வசைபாடினீங்களே, அதுவா கருத்து சுதந்திரம்?

இதே மாதிரி ‘மெட்ராஸ் கஃபே’ன்னு ஒரு படம் வந்தபோது, அதைத் தடைசெய்யச் சொன்னது சாட்சாத் கருணாநிதி! அந்தப் படம் தமிழ்நாட்டுல ரிலீஸே ஆகலை. உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை யாராவது சொன்னா அது கருத்து சுதந்திரம் கிடையாது; ஆனா, உங்க கருத்துச் சுதந்திரத்தை மட்டும் எல்லாரும் தலைக்குமேலே வைச்சுக் கொண்டாடணுமாடா!


காவிரிப் பிரச்சினையிலே கூட்டம்போட்டு கண்டபடி பேசிப்புட்டு, அப்புறம் பாகுபலி படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம்னு சொன்னதும், சத்யராஜ் மன்னிப்புக் கேட்டாரா இல்லையா? சர்தான் போடா, எனக்குக் கருத்து சொல்ல உரிமையிருக்கு, நீ படத்தைப் பார்த்தா பாரு, பார்க்காட்டி போன்னு சொல்லுற தில்லு உண்டா இவனுங்களுக்கு?

தமிழில் முதன்முதலா லிப்-டு-லிப் கிஸ்ஸிங் வைச்சது கமலஹாசன் நடிச்ச ‘சட்டம் என் கையில்’ படத்தில்தான். அந்தப் படத்துக்கு எம்.ஜி.ஆர் எவ்வளவு குடைச்சல் கொடுத்தார்னு தேடிப்பார்த்துப் படியுங்க. டைரக்டர் டி.என்.பாலுவைப் பிடிச்சு உள்ளே போட்டார்யா எம்.ஜி.ஆர். எல்லாத்தையும் விடுங்கடா, மிக மிக சமீபத்தில் ஒரு தமிழ்ப்படம் சென்சார் போர்டால் தடைசெய்யப்பட்டிருக்கிறது தெரியுமா? ப்ளூ சட்டை மதிமாறன்னு ஒருத்தர், சினிமா விமர்சனம் பண்ணிட்டிருந்தவரு, ‘anti-indian' ன்னு ஒரு படம் எடுத்தாரு. அதுக்கு சர்டிபிகேட் கொடுக்க முடியாது போடான்னு துரத்தி விட்டுட்டாங்க சென்சார் போர்டுல. இந்த விஷால், சூர்யா, கார்த்தி, கார்த்திக் சுப்பராஜ், பா.ரஞ்சித் மரம் மட்டை எவனாவது அந்தாளுக்காகக் குரல் கொடுத்தீங்களா? 

‘எப்படி ஒரு தமிழ் படத்தைத் தடை பண்ணலாம்?’னு எவனாச்சும் கேட்டானா? எப்படிக் கேட்பான்? அந்த ப்ளூ சட்டை விமர்சனங்கிற பேருல ஒவ்வொரு படத்தையும் கழுவிக் கழுவி ஊத்திட்டிருந்தாரு! அவருக்கு இல்லையா கருத்துச் சுதந்திரம்? அதுக்குப் பழிக்குப் பழி வாங்க, அவரோட படம் தடைசெய்யப்பட்டதும் அத்தனை பயலுவளும் வூட்டுக்குள்ள முக்காடு போட்டுக்கிட்டு ஒளிஞ்சுகிடந்தானுங்க. நல்லா காப்பாத்தினீங்கடா கருத்து சுதந்திரத்தை!

இந்த நாயிங்களுக்கெல்லாம் கருத்து சுதந்திரம்னுற பேருல ஹிந்து மதத்தைக் கலாய்க்கணும். புதிய சரஸ்வதி சபதம், இந்திரலோகத்தில் நா அழகப்பன், தர்மராஜான்னு படம் எடுத்து ஹிந்துக் கடவுள்களைக் கிண்டல் பண்ணனும். இம்புட்டுத்தான் இவனுங்க டக்கு! ‘நீர்ப்பறவை’ன்னு ஒரு படத்தில ‘ஸ்தோத்திரம்’னு ஒரு வார்த்தைபோட்டு பாட்டு எழுதினதுக்கு, கிறிஸ்துவர்கள் எல்லாரும் கஞ்சாக்கவிஞன் வூட்டு வாசல்லகூடி ஆர்ப்பாட்டம் பண்ணி, பாட்டு வரியையே மாத்தி எழுதிட்டாங்க. ஆண்டாள் விஷயத்துல கருத்து சுதந்திரம்னு வக்காலத்து வாங்கின எவனாவது இந்த விஷயத்துல பக்கத்துல அண்டினாங்களா?

எ வெட்னஸ்டே படத்திலே நாலு தீவிரவாதிகளில் ஒருத்தன்கூட ஹிந்து கிடையாது. ஆனா, இந்த நாசமாப் போன மலஹாசன், ஒரு தீவிரவாதியை ஹிந்துவா காட்டியிருந்தான். நாமளும் வாயிலே வாழைப்பழத்தை வைச்சுக்கிட்டுப் பார்த்தோம். இவ்வளவு ஏன்? ‘திருஷ்யம்’ மலையாளப்படத்துல ஹீரோ கிறிஸ்துவர்; பாபநாசம் படத்துல ஹிந்து. ‘அவ்வை சண்முகி படத்தில் காயத்ரீ மந்திரத்தை வைச்சு காமெடி; அதே படத்தில் வரலட்சுமி நோன்பை வைச்சு காமெடி பாட்டு. எவனாவது கேட்டோமா? ‘தசாவதாரம்’ படத்துல ‘அழகியசிங்கர் தெரியுமா?’ன்னு கேட்டா, ‘யாரு மடோனாவா?’ன்னு பதில் வரும். இந்த கிரேஸி மோகனுக்கெல்லாம் இவ்வளவு நல்ல சாவு வந்திருக்கவே கூடாது. இதே மாதிரிதான் எழுத்தாளர் சுஜாதா ‘பேரு பார்த்தசாரதின்னு எப்படித் தெரியும்னு கேட்டா? அதான் மண்டையிலே பெருசா கோடுபோட்டிருக்கேன்னு கிண்டல்.

இப்படி ஆளாளுக்குக் கூட இருந்தே குழிபறிக்கிறதைப் பார்த்து வயிறுகுலுங்க சிரிச்ச்சிட்டிருக்கிறதுனால தான், ஒரு படத்துல ஹீரோ கருப்புச்சட்டை போட்ட நல்லவனாகவும், வில்லன் ராமாயணம் படிக்கிற கெட்டவனாகவும் காட்டுற அளவுக்கு துளிர் விட்டிருக்கு இந்தப் பயலுவளுக்கு.

.ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு தொழிலைச் சேர்ந்தவங்களும் பட்ஜெட்டுக்கு முன்னாலே நிதியமைச்சரைச் சந்திச்சு, தங்கள் துறைக்கு வேண்டியதைக் கேட்பாங்க. இத்தனை வருஷத்துல சினிமாத்துறையைச் சேர்ந்த யாராவது போய், இந்த பட்ஜெட்டுல எங்களுக்கு ஏதாவது செய்யுங்கன்னு கேட்டதுண்டா? அவனவன், தானுண்டு, தன் படமுண்டுன்னு பணத்தைச் சம்பாதிச்சிட்டு, வெளிநாட்டுல தீவு வாங்கிட்டு, அரைடஜன் வெளி நாட்டுக் காருல சுத்திட்டிருக்கானுங்க. ஆனால், நடிகர் சங்கத் தேர்தல்ல கூட நிக்காத மயிராண்டிங்கல்லாம், தேர்தல் வந்தா நாக்கைத் தொங்கப்போட்டுக்கிட்டு அரசியல் கட்சின்னு கிச்சுகிச்சு காட்டுறானுங்க.

தலைவா படத்துக்குச் சிக்கல் வந்தபோது விஜய்க்கு சப்போர்ட்டா யாராவது குரல் கொடுத்தாங்களா? கருத்துச் சுதந்திரம் போச்சுன்னு கதறினாங்களா? இல்லை, ஏன்னா அப்போ ஜெயலலிதா முதலமைச்சர். கரப்பான்பூச்சியடிக்கிற மாதிரி அடிச்சு அள்ளிக் கொல்லையிலே போட்டிருப்பாங்க.

கருத்துச் சுதந்திரமாம் கருத்துச் சுதந்திரம்...த்தூ! 

என்ன இம்புட்டுக் காட்டமா இருக்குன்னு கேட்கறீங்களா? எனக்கு கருத்து சுதந்திரம் இருக்கு சாமி! இப்படித் தன் கருத்தைக் காறித்துப்பிச் சொல்லியிருப்பவர் நம் சேட்டைக்காரன் பதிவர் வேணுகோபாலன்! நாமும் சேர்ந்து காறித்துப்பலாம் போல இருக்கிறதா? !!

மீண்டும் சந்திப்போம்

தமிழனின் தனிக்குணம் வெறும் அக்கப்போர் மட்டும்தானா?

தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு என்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எந்த அர்த்தத்தில் பாடினாரோ, தெரியாது. ஆனால் எந்தவொரு சின்னவிஷயத்தையும் பேனைப் பெருமாளாக்குகிற கதையாக வெறும் அக்கப்போராக ஆக்குவதே தமிழனின் தனிக்குணமாக ஆகிவருகிறது என்பதை சமீபத்தில் மேதகு என்ற ஈழத்தமிழர் ஆதரவுப் படம், அதையொட்டி தமிழ் தேசியவாதிகளுக்கும், திமுக ஆதரவாளர்களுக்கும் தொடர்ந்து நடக்கும் வன்மம் கலந்த விவாதம் ஒரு உதாரணம். அடுத்து கமல் காசர் முன்னெடுத்து நடத்தும் இன்னொரு அக்கப்போர் அடுத்த உதாரணம். இவை வெறும் குப்பை, வெட்டி அக்கப்போர் என்பதனாலேயே இதுகுறித்து எழுதாமலிருந்தேன்.  


விவாத வீடியோ 55 நிமிடம்.  On 18 June, the Centre had sought public comments on the draft Cinematograph (Amendment) Bill 2021, which proposes to penalise film piracy with a jail term and fine, introduce age-based certification, and empower the Central government to order recertification of an already certified film following receipt of complaints என்பது தான் விஷயம். இதன்மீது பொதுமக்கள் கருத்து சொல்வதற்கு ஜூலை 2 வரை அவகாசமும் அளிக்கப்பட்டது. முதலில் கமல் காசர் கடைசி நேரத்தில் களமிறங்கினார். விஸ்வரூபம் படத்தைக் குறைந்த விலைக்குக் கேட்டதில் upset ஆகி நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று வீரவசனம் பேசி அழுதவர், இந்தமுறை அப்படிச் சொல்லவில்லை என்பதே விஷயம் அத்தனை சீரியசானதில்லை என்று சொல்லாமல் சொல்கிறதோ? 


கமல் காசருக்கு அடுத்து கருத்து கந்தசாமியாக வாழ்ந்து வரும் நடிகர் சூரியாவும் களமிறங்கினார்.


இந்த நல்லவிஷயத்துக்காகவே சரவணா இந்த சட்டத் திருத்தத்தை நாடே ஒன்று கூடி ஆதரிக்குமே! 


திமுகவின் வாரிசு முதல்வரும் கூட கருத்து சொல்லி விட்டார்! 


எஸ்வி சேகர் என்றொரு மானஸ்தன் இருந்தாரே1 அவரும் கருத்து சொல்லிவிட்டார்!


  சாமானியர் கருத்தையும் கேட்க வேண்டாமோ ?

விஷயம் படைப்பு சுதந்திரம் பறிக்கப்படுகிறதே என்பது அல்ல. திருட்டுக்கதை அல்லது எங்கிருந்தோ சுட்ட கதை இனிமேல் தண்டனைக்குரிய குற்றம் என்றாவதில் எழும் அச்சம், கூவிப்பார்ப்போமே என்கிற நப்பாசை மட்டுமே இந்தக்கூக்குரல்களில் வெட்டி அக்கப்போராக!

மீண்டும் சந்திப்போம்.

Wednesday, June 30, 2021

ஒரு தலையங்கக் கொட்டு! ஒரு சப்பைக்கட்டு! என்னா உருட்டு!

ஆனந்த விகடன் தலையங்கம்: செய்ய முடிவதைச் சொல்லுங்கள்!


‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்’ என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில் ஜூன் 20-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது இப்போது சாத்தியமில்லை’ என்று தெரிவித்திருக்கிறார். இதுபற்றிக் கேள்வி கேட்ட பத்திரிகையாளரிடம், ‘எப்போது குறைக்கிறோம் என்று தேர்தல் அறிக்கையில் தேதி ஏதாவது போட்டிருக்கிறதா?’ என்றும் கேட்டிருக்கிறார்.
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வாட் வரியைக் குறைப்பதன் மூலமே அவற்றின் விலையைக் குறைக்க முடியும். ‘செஸ் மற்றும் சர்சார்ஜ் மூலமே பெட்ரோலியப் பொருள்களின் வரிகள் சமீபகாலத்தில் மத்திய அரசால் உயர்த்தப்பட்டன. இவற்றில் மாநில அரசுகளுக்குப் பங்கு வருவதில்லை. இந்தச் சூழ்நிலையில் வாட் வரியைக் குறைப்பதால் மாநிலத்துக்கு இழப்பு ஏற்படும். இப்போது விலையைக் குறைக்க முடியாது என்றாலும், எங்கள் ஆட்சிக்காலத்துக்குள் இதைச் செய்வோம்’ என்பது நிதியமைச்சரின் வாதம்.
மாநிலத்தின் நிதிநிலைமை அவர் அறியாதது அல்ல. கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து, நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்களில் கலந்துகொண்டவர் அவர். சொல்லப்போனால், தி.மு.க தேர்தல் அறிக்கையிலேயே ‘மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது’ என்று கூறப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில், எவற்றையெல்லாம் செய்ய முடியும் என்பது தி.மு.க தேர்தல் அறிக்கையை உருவாக்கியவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
ஆட்சிக்கு வந்த நாள் முதல் நேர்மறையான அணுகுமுறைகள் மூலம் தி.மு.க அரசு பாராட்டைப் பெற்றுவருகிறது. ஜெயரஞ்சன் தலைமையில் தமிழக அரசின் மாநிலக் கொள்கை வளர்ச்சிக் குழுவை அமைத்தது முதல் இப்போது ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்தர் டஃப்லோ, ஜீன் டிரெஸ், எஸ்.நாராயண் ஆகியோரை தமிழக முதல்வரின் பொருளாதார ஆலோசனை நிபுணர்களாக நியமனம் செய்தது வரை எல்லாமே வரவேற்பு பெற்ற அறிவிப்புகள்.
பால் விலைக்குறைப்பு, பெண்கள் மற்றும் திருநர் சமூகத்துக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் எனத் தேர்தல் வாக்குறுதிகள் வரிசையாக நிறைவேற்றப்பட்டு வந்தன. இந்நிலையில், இந்தப் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்குறைப்பு விவகாரம் முதல் சறுக்கலாக அமைந்துள்ளது. ‘சொன்னதைச் செய்வோம்... செய்வதையே சொல்வோம்’ என்பது தி.மு.க-வின் தேர்தல் முழக்கம். ‘செய்ய இயலாததை ஏன் சொல்ல வேண்டும்’ என்ற கேள்வியை இப்போது நிதியமைச்சரின் அறிவிப்பு எழுப்பியுள்ளது. தி.மு.க கொடுத்த முக்கியமான தேர்தல் வாக்குறுதிகள் பலவும் அரசுக்குப் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்துபவை. அவற்றின் நிலை என்ன ஆகும் என்ற சந்தேகம் இந்தத் தருணத்தில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஒவ்வொரு மாதத்தின் முதல் பணிநாளன்றும் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி முதல்வர் ஆய்வு செய்வார். அதைத் தொடர்ந்து ஊடகங்களைச் சந்தித்து அரசின் ரிப்போர்ட் கார்டை வழங்குவார்’ என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க குறிப்பிட்டிருந்தது. அதைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. (ஆனந்த விகடன், 30.06.2021)


தேவையற்ற சர்ச்சைக்கு இடம் கொடுத்தது யார் என்பது இன்னமும் தெளிவாகாத விஷயம். புதுச்சேரி பிஜேபி அமைச்சர்களும் ஒன்றிய அரசு எனச்சொல்லியே பதவிப் பிரமாணம் செய்ததாக இங்கே செய்திகள் பரவலாக வெளியானபிறகு, தமிழிசை இத்தனை தாமதமாக மறுத்திருப்பதே ஒருவிதமான சப்பைக்கட்டு மாதிரித் தான் இருக்கிறது. (இந்து தமிழ்திசை உள்ளிட்ட ஊடகங்களில் முன்னர் வந்த செய்தியைப் பார்த்துவிட்டு, வீடியோக்கள் கிடைக்கிறதா என்று தேடினேன். உறுதி செய்யப்படாத தகவல் என்று நினைத்ததால் இந்தப் பக்கங்களில் அதைப் பற்றி எதுவும் எழுதவில்லை.) இதில் தமிழில் பதவியேற்ற பெருமையை மறைப்பது எங்கே இருக்கிறது?
இந்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுச்சேரி ஆட்சிப்பரப்பு என்று சொல்லிப் பதவியேற்பு உறுதிமொழியை ஆரம்பித்துவைத்தவருக்கு, பக்கத்தில் தமிழ்நாட்டில் இந்த ஒன்றியம் என்கிற வார்த்தை கிடந்து படாத பாடு படுவது தெரியாமல் போயிற்று என்றால் நம்புகிற மாதிரியாகவா இருக்கிறது?  


உதயநிதி உருட்டுவதற்கெல்லாம் இது உறைபோடக் காணாது தான்! ஆனாலும் ஒரு நல்ல உருட்டோடு பதிவை முடித்துக் கொள்ளலாம் இல்லையா?

மீண்டும் சந்திப்போம்.

Tuesday, June 29, 2021

இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்! காங்கிரசுக்கு சோளப்பொரி!

சிறிது காலம் முன்புவரை கூட நான் அர்ஜுன் சம்பத் என்கிற நபரை அவ்வளவாக அறிந்ததில்லை. பொன் மாலை பொழுது பதிவர் நண்பர் மாணிக்கம் அடிக்கடி அர்ஜுன் சம்பத்தைக் குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். அதுபோக ஒன்றிரண்டு வீடியோக்களில் பார்த்ததோடு சரி. நான்கு நாட்களுக்கு முந்தைய இந்த வீடியோ இன்று என் பார்வைக்கு வந்தது. 



இந்த 23 நிமிட வீடியோவில் திமுகவை நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரிக் கேள்வி கேட்கிறார். யூட்யூப் சேனல் வைத்திருந்தாலே ஊடகம் என்று அலப்பறை செய்கிற ஆசாமிகளுக்கு  சூடும் வைக்கிறார்  ரெட்பிக்ஸ் சேனல் தலைப்பு வைக்கிற மாதிரி சிவசங்கர் பாபாவைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கவுமில்லை, சர்ச்சையைக் கிளம்புகிற மாதிரி எதையும் பேசவில்லை. ஆனால் அப்படித் தலைப்பு வைத்துத்தான் அவர்களும் பிழைப்பு நடத்த வேண்டி இருக்கிறது, பாவம் என்ன செய்வது? அர்ஜுன் சம்பத் குறிப்பிடுகிற லயோலா கல்லூரிப் பேராசிரியை பற்றி  ஒரு 5 நிமிட வீடியோ.  


ஸ்டேன்லி ராஜன் சொல்கிற நுண்ணரசியல் புரிகிறதா?  ஆணையத்தலைவர் மாதிரி ஏதாவது வாங்கிக்கொள்! ராஜ்யசபா சீட்டுக்கெல்லாம் ஆசைப் படாதே! அவ்ளோ தான்! பஞ்சாயத்து முடிந்தது  


மன்மோகன் சிங் 10 ஆண்டு காலம் டம்மிப்பிரதமராக இருந்த ஐ மு கூட்டணி ஆட்சிக்காலத்தில் அதிகம் பேசப் பட்ட வார்த்தை கூட்டணி தர்மம். அதற்கு அர்த்தம் மிக  சிம்பிள்!  கொள்ளையடிப்பதில் உனக்கு எவ்வளவு எனக்கு எவ்வளவு என்கிற சதவீதக்கணக்கு. அவ்வளவு தானா? பானாசீனா மகனுடன் போய் முதல்வரை சந்தித்துவிட்டு வந்தது என்ன கணக்கு? மரியாதை நிமித்தமாக என்பது வெளியே சொல்லிக் கொள்வது மட்டும் தான். 

ஊகிக்க முடிகிறதா?  மீண்டும் சந்திப்போம்.     

Monday, June 28, 2021

இந்தியாவைப் புனரமைத்த சிற்பி P V நரசிம்ம ராவ் நூற்றாண்டு

இந்தியப் பிரதமராக இருந்த அரசியல்வாதிகளிலேயே இன்றைக்கும் மிகவும் குறைத்து மதிப்பிடப் படுகிறவர் பி வி நரசிம்ம ராவ் ஒருவர் மட்டும் தான் என்கிற கசப்பான உண்மையை அவர் பிறந்த நூற்றாண்டு தொடங்குகிற ஜூன் 28 இன்று, ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.  


புதிய தறுதலை தொலைக்காட்சிக்கு 17 மொழிகளில் பேச தெரிந்த முன்னாள் பி.வி.நரசிம்ம ராவ் என்று மட்டுமே தலைப்புக் கொடுக்கத் தெரிவதில் வியப்பு ஒன்றுமே இல்லை. முன்னாள் என்ற வார்த்தைக்கு அடுத்து பிரதமர் என்ற வார்த்தையைக் கூடச் சேர்க்க முடியாத அலட்சியத்தைப்போலவே  தேச மக்களும்  அவரைக் குறைவாக மதிப்பிட்டு  அலட்சியப்படுத்தி வருகிறோமா?


நரசிம்ம ராவ் : இந்தியாவை மாற்றி அமைத்த சிற்பி என்ற தலைப்பிலேயே நூலின் மொத்தக் கருத்தையும்  சொல்கிற மாதிரி வினய் சீதாபதியின் ஆங்கிலநூலைத் தமிழில் மொழி பெயர்த்த ஜெ . ராம்கியின் அறிமுக உரையோடு போன சனிக்கிழமை ஒரு நூல் மதிப்புரை விவாதம் நடந்தது என்ற தகவலை சற்றுத்தாமதமாகத் தான் தெரிந்து கொள்ள முடிந்தது . வலையேற்றியது Tamil EBookery யூட்யூப் தளத்தில் நேற்று வரை தேடி இன்றிரவு தான் கிடைத்தது.


 வீடியோ 44 நிமிடம் 


பேரறிவும் ஆளுமையும் இருந்தும்  நரசிம்மராவால் சோனியா காண்டி, பல்லக்குத் தூக்குகிற விசுவாசிகள் துணையோடு கொடுத்த குடைச்சலைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பது இந்திய அரசியலின் பெரும் சோகம்.. சோனியாவின் வஞ்சம் நரசிம்மராவ் இறந்த பிறகும் தீராததில், முன்னாள் பிரதருக்கு டில்லியில் அரசுமரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தக்கூட விடவில்லை. காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்குள்ளும் அவரது உடல் மரியாதை செலுத்துவதற்காக வைக்கக்கூட அனுமதியில்லை. அகமது படேல்களும் ராஜசேகர ரெட்டிகளும் சேர்ந்து நடத்திய கொடுமைகளை முன்பே இங்கேயும் இன்னொரு வலைப்பக்கத்திலும் பேசியிருக்கிறோம். 


பிபிசி தமிழில் ஒரு விரிவான செய்திக்கட்டுரை வெளி வந்திருக்கிறது, பழைய கதைகளை மேலோட்டமாக நினைவுபடுத்தியிருக்கிறார்கள். நாட்டுக்குழைத்த நல்ல மனிதர்களையும் கொஞ்சம் தெரிந்து கொள்வோமே.  

மீண்டும் சந்திப்போம்.         

Friday, June 25, 2021

தயிர்வடை (தோழர்) வரதராஜனும் தமிழக அரசியல் களமும்!

உதவாத ஒரு இடதுசாரியாகத் திரிந்து கொண்டிருந்த 40+ ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பிரபலமான அரசியல் ஆளுமையைப் பற்றி, தயிர்வடையை ஆசையாகச் சாப்பிட்டுக்கொண்டே தோழர் வரதராஜன் சொன்ன ஒரு சத்தியவாக்கு இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் ஞாபகத்தில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறதென்றால்  நம்ப முடிகிறதா? அவர் என்ன சொன்னார் என்பதைப் பார்த்தால் அது எத்தனை சத்தியமான வாக்கு என்பதும் புரிந்துவிடும்.  

வீடியோ 36 நிமிடம் 
 

தோழர் வரதராஜன் குறிப்பிட்ட அந்தப்பிரபலமான அரசியல்வாதி பலவித கிறுக்குத்தனங்களுக்குப் பெயர் போனவர். கருணாநிதி மாதிரி எல்லாவற்றிலும் கருத்துக் சொல்லி எல்லா விதங்களிலும் சிக்கிக்கொண்டவர் அல்ல. எப்படி அவர் தப்பித்துக்கொண்டே வருகிறார் என்ற ஆச்சரியம் எனக்கு. அதற்குத் தோழர் சொன்ன பதில் தான் கிளாஸ்! இருகோடுகள் தத்துவம் தான்!  

" ஒருவிஷயம் மிகவும் முட்டாள்தனமானது என்று ஜனங்கள் கூக்குரல் எழுப்ப ஆரம்பிக்கிறபோதே இன்னுமொரு முட்டாள்தனத்தை முன்னிறுத்துவது! புதிய விஷயம் கிளம்பியவுடன் பழைய கிறுக்குத்தனத்தை ஜனங்கள் மறந்துவிட்டுப் புதிய விஷயத்தைப் பிடித்துக் கொள்வார்கள். இப்படி வரிசையாகத் தொடர்வதிலேயே ஜனங்கள் மறதியும் கூடிக்கொண்டே போவதுதான் அவருடைய பலம், சாமர்த்தியம்! புரிகிறதா?" என்று சொல்லிக்கொண்டே இன்னொரு பிளேட் தயிர்வடை ஆர்டர் செய்யச் சொல்வார். தயிர்வடை என்னுடைய குரு தட்சிணை என்பது நண்பர்களுக்கு இந்நேரம் புரிந்து இருக்கும்!  

திமுக ஆட்சிக்கு வந்து இன்று 50 நாட்களாவதில், இரு கோடுகள் தத்துவம் சொல்கிற மாதிரி, வலுவில் ஒரு பிரச்சினையை உருவாக்கி, ஜனங்கள் குய்யோமுய்யோ என்று கூவ ஆரம்பிப்பதில் இன்னொரு பிரச்சினையை ஆரம்பித்து, தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியாத அவலத்தை மறைத்து ஜனங்களுடைய கவனத்தை எதிலும் நிலைகொள்ள விடாதபடி திசைதிருப்புவதில், அநேகமாக வெற்றி அடைந்து வருகிறார்கள். 


ஒவ்வொரு விஷயமாக நினைத்துப்பாருங்கள்! முதலில் அமைச்சர் தியாகராஜன்! ஒன்றியம் குன்றியம் என்ற விதண்டா வாதத்தை ஆரம்பித்தது அவர்தான்! நடுவில் சேகர்பாபு என்டர் ஆனார். அப்புறம் மின்தடைக்கு அணில்கள் தான் காரணம் என்று ஒரேபோடாக செந்தில் பாலாஜி போட்டது ஓடிக்கொண்டிருந்தது. நேற்றைக்கு கொங்கு ஈஸ்வரன் ஜெய் ஹிந்த் என்பது ஆளுநர் உரையில் இடம்பெறாமல்போனதே பெரிய சாதனை என சட்டசபையில் பேசியது சர்ச்சையாக.

கூட்டிக் கழித்துப்பாருங்களேன்! திமுகவின் சிக்சர்கள் காணாமல் போனதும் வெட்டி சர்ச்சைகளில் அவர்களது கையறுநிலை மறைக்கப்படுவதும் புரியுமே!

மீண்டும் சந்திப்போம்.                         

Thursday, June 24, 2021

ஒண்ணுமில்ல ச்சும்மா! அரசியலைப் படம் பிடித்துக் காட்டப் போறேன்!

பர்கா தத்தின் Mojo Story சேனலில் அவருடைய அரசியல் சொற்பொழிவு, விவாதத்தைக்  கேட்கையில் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?


53 நிமிடங்கள் என்பது இந்த சப்ஜெக்டுக்கு மெய்யாகவே நெம்ப ஓவரு ரகம் தான்! இந்த ஒரு விஷயத்துக்காகத் தான் சதீஷ் ஆசார்யா, மஞ்சுள் போன்ற கார்டூனிஸ்ட் அறிவுஜீவிகள் தேவலையே என்று தோன்றும். சாம்பிள் ஒன்று பார்த்துவிடலாமா?


சதீஷ் ஆசார்யா, பிரசாந்த் கிஷோரை சௌகரியமாக இதில் தவிர்த்துவிட்டார் என்பதில் நுண்ணரசியல் எதுவும் இருக்கிறதா?


கார்டூனிஸ்ட் மஞ்சுளுக்கு நரேந்திர மோடியைத் தவிர வேறெதுவுமே  பிரச்சினையில்லை!பொருட்டுமில்லை! ஜம்மு காஷ்மீர் அரசியலில் ஃபரூக் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி வகையறாக்கள் செய்துவந்த அட்டூழியங்கள் எதுவுமே பொருட்டில்லை என்கிறபோது எரிச்சல் வரத்தான் செய்கிறது.


இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்று அந்தநாட்களில் காமராஜர் சலிப்புடன் சொன்ன வார்த்தைகள் தான் ஞாபகம் வருகிறது.


திமுக அடக்கமுடியாத யானை என்று சட்டசபையில் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். வீடியோ  40  நிமிடம் என்று சொன்னால் ஸ்ரீராமுக்கு ஒவ்வாமை வந்துவிடுமே என்பதால் ஸ்க்ரீன் ஷாட் மட்டும்! பார்க்க விரும்பினால் நீலக்கலரில் சுட்டி.


அடக்கமுடியாத யானை எப்படியிருக்கும் என்பதை கார்டூனிஸ்ட் அமரன் கோடுகளில் வரைந்து காட்டி இருக்கிறார்! திருத்தங்கள் நிறையச் சொல்லலாம்! 

இந்த யானைக்கு ஒவ்வொரு அவயமும் வெவ்வேறு மிருகத்தின் அவயமாக வரைந்திருந்தால் கனப்பொருத்தம்!

மீண்டும் சந்திப்போம்.

Wednesday, June 23, 2021

அரசியலுக்கு வந்துவிட்டால் யாருக்கும் வெட்கமில்லை!

தினமலர் நாளிதழுக்கு என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்::: தி.மு.க., ஆட்சிக்கு வந்த 40 நாட்களிலேயே, அதன் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிட்டது போங்க! 'நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா என்பதை உறுதியாக சொல்ல முடியாது' என கையை விரித்து விட்டார், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன். 'பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் சாத்தியமே இல்லை' என, 'குண்டை' துாக்கி போட்டார், நிதி அமைச்சர் தியாகராஜன். தமிழக அரசு, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அதை சரிசெய்ய நிபுணர் குழு எல்லாம் அமைக்கிறது, மாநில அரசு.பிரதமர் மோடியை சந்தித்து 25 கோரிக்கைகளை முன்வைத்தார், முதல்வர் ஸ்டாலின். அவை நிறைவேற்றப்படுமா என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும், பிரதமர் மோடி தரவில்லை.  தி.மு.க.,வினர், 'கோ பேக் மோடி' என பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்ததை, அவ்வளவு சீக்கிரம் பிரதமர் மோடி மறந்திருக்க மாட்டார். போதாக்குறைக்கு, நிதி அமைச்சர் தியாகராஜன் வேறு, தன் பங்குக்கு அவ்வப்போது மத்திய அரசை விமர்சித்து கடுப்பேத்துகிறார். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதில் சிறப்பாக செயல்பட்ட முதல்வர் ஸ்டாலின், நிதி அமைச்சர் நியமனத்தில், 'கோட்டை' விட்டுவிட்டார் என, நினைக்க தோன்றுகிறது. கோவில் நிலங்களை மீட்பதில் அக்கறை காட்டி பாராட்டு பெற்ற ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, 'கோவிலில், பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்' எனக் கூறி, மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்தார். 'முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்த பாவிகள் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்' என, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்களான வைகோவும், திருமாவளவனும் வேறு, முதல்வர் ஸ்டாலினுக்கு குடைச்சல் தருகின்றனர். ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது கிடைத்த நிம்மதியும், மகிழ்ச்சியும், ஆட்சிக்கு வந்த நாள் முதல் இல்லாமல் போய்விட்டது; பாவம்! உண்மையிலேயே பரிதாபப் படுகிறாரா அல்லது நையாண்டி செய்கிறாரா? எதுவாக இருந்தாலும் ஒன்றரை மாதத்திலேயே திமுகழக அரசின் லட்சணம் இதுதான் இப்படித்தான் என்றாகிவிட்டது மட்டும் நிச்சயம் 


இந்த ஒன்றியம் இவர்களிடம் படுகிற பாடு இருக்கிறதே! நீட் தேர்வு பற்றிய  பேச்சு எழுகிற சமயங்களில் எல்லாம் சினிமா நடிகர் சூர்யா தவறாமல் ஆஜராகி விடுகிறார் என்பது கூட தமிழக அரசியலின் இன்னொருவிதமான காமெடி! 


நாடாளுமன்றம்  நிறைவேற்றிய சட்டங்கள், திருத்தங்கள் மீது தீர்மானமோ ஆட்சேபமோ தெரிவிப்பது ஒரு  பயனுமில்லாத நேற்று அரசியல் ஸ்டன்ட் மட்டுமே! அதுபோலவே தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு, தேர்வு ரத்து என்பதும் சட்டமசோதாவை  உச்சநீதிதிமன்றம் உறுதிப்படுத்திய பிறகு எடுபடாது என்று தெரிந்தே மாணவர்களையும் பெற்றவர்ளையும் குழப்பி ஏமாற்றுகிற வேலை! பின்னே வேறென்ன?   
   

தினமலர் நாளிதழ் இன்றைக்குப்பார்த்து எதற்காக இந்தக் கார்டூனை வெளியிட்டிருக்கிறார்கள்?பாமகவின் இரட்டைநாக்கும் ஆதாயம் இருந்தால் கூட்டணியை  மாற்றிக்கொள்ளும் வேகமோ புதிது அல்ல. 2021 சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு திமுகவை நெருங்க பாமக எடுத்த முயற்சிகள், பாமகவின் சட்ட மன்ற உறுப்பினர் G K மணி மருத்துவர் ராமதாசின் தூதராகச் செயல்பட்டுவருவது எதுவுமே ரகசியமல்ல. ஆச்சரியமுமல்ல. 


முதல்வர் நல்ல முடிவெடுக்கப்படும் என்று சொன்னது போல மருத்துவர் ராமதாசும் முடிவெடுத்துவிடுவார் என்பது வெறும் எதிர்பார்ப்பு மட்டுமல்ல. 


தினமலர் செய்தி மட்டும் உண்மையாக இருக்குமானால் தமிழகத்தில் பிஜேபி மிக வேகமாக வளர்ந்துவிட்டது. அடுத்து வரும் தேர்தல்களில் கழகங்களை, கூட்டணி வைக்காமலேயே தோற்கடிக்கிற அளவுக்கு வலிமை பெற்று வளருகிறது என்று சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டுமோ? A Party with a diference என எப்போதோ யாரோ சொன்ன கதையெல்லாம் பொய்தானாம்! அவர்களும் கழகங்கள், காங்கிரஸ், இதர கட்சிகள் மாதிரியே இந்தவிஷயத்திலும் என்று நீட்டி முழக்குகிறது தினமலர். 

டிஸ்கி: ஆனால் பிஜேபியின் மாநில பொதுச் செயலர்
K T  ராகவன் மறுப்புச் செய்தி வெளியிட்டிருக்கிறார் 


அதேபோல H ராஜா மீது தேர்தல் செலவுக்காகக் கொடுத்த பணத்தில் 4 கோடி ரூபாய்க்கு வீடுகட்டிக் கொண்டுவிட்டார் என்ற செய்தி அமமுக ஆசாமிகளால் பரப்பப்படுவதையும் என்ன செய்யப்போகிறார்கள் என்ற தகவல் கிடைத்தால் பகிர்கிறேன். 

அரசியலுக்கு வந்துவிட்டால் யாருக்கும் வெட்கமில்லை என்பது சரிதான் போல. 

மீண்டும் சந்திப்போம். 

Tuesday, June 22, 2021

குழுவுக்கு மேல் குழுவாகப்போட்டு மக்களைக் குழப்பும் தமிழக அரசு! :: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி!

தமிழக அரசியல்களத்தில் மிகவும் கூர்ந்து கவனிக்கப் பட வேண்டிய ஒருவராக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இருக்கிறார். காரணம், உள்ளூர்ப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிற அதே நேரம் தேசியப் பார்வை கொண்டவராகவும், அரசியலை உடனுக்குடன்  ஆராய்ந்து, சரியாக விமரிசனம் செய்கிறவராகவும் அவர் இருப்பதுதான்! பாமகவின் டாக்டர் ராமதாசும் கூட அப்படி அரசியல் செயல் பாடுகளைக் கொண்டிருந்தாலும், அவர் மீது அவ்வளவு நம்பிக்கை ஏற்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் டாக்டர் ராமதாஸ் ஆதாயம் தருகிற பக்கம் சாய்ந்தே பழக்கப்பட்டவர என்பதோடு, எல்லா நேரங்களிலும் அவரது அரசியல் நிலைப்பாடு சரியானதாக இருந்ததே இல்லை என்கிற கடந்தகால வரலாறும் தடையாக இருக்கிறது. 


நான்காண்டுகளுக்கு முந்தைய நேர்காணல்தான்! ஒரு  consistency உடன் அரசியல் பேசுகிறவர்கள் தமிழகத்தில் மிகமிகக் குறைவு என்றாலும், அப்படி அரிதானவர்களில் டாக்டர் கிருஷ்ணசாமி ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம். வீடியோ 37 நிமிடம், டாக்டர் கிருஷ்ணசாமியைப் புரிந்துகொள்ள உதவுகிற ஒன்றும் கூட!

நேற்றைய 16வது தமிழக சட்டமன்றக்கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியதில்,புதிய திமுக அரசின் செயல் திட்டங்கள் எப்படியிருக்கும் என்பது வெளிப்பட்டதா? டாக்டர் கிருஷ்ணசாமி என்ன சொல்கிறார் என்பதைப் பார்க்கலாமா?

படித்தவர் பாட்டைக் கெடுத்தார், எழுதியவர் ஏட்டைக் கெடுத்தார்! என்பது போல,குழுக்கள் மேல் குழுக்கள் போட்டு நாட்டை குழப்பலாமா? 

ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலோ அல்லது புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாநில அரசோ ஆளுநர் உரையுடன் மாநில சட்டமன்ற கூட்டத்தொடரை துவங்குவது மரபு. நேற்று தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையுடன் துவங்கியது. ’ஆளுநர் உரை’ என்று பெயரிட்டாலும், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் அரசு எழுதிக் கொடுத்த உரையே அது. ஓரிரு ஆளுநர்கள் தாங்களே அறிக்கைகளை  தயார் செய்து கொண்டு படித்த வரலாறுகளும் உண்டு. ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் திமுக அரசின் அறிக்கையை அப்படியே படித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சர் சகாக்கள் நமது தாய் தேசத்தை ’இந்தியப் பேரரசு’ என முறையாக அடையாளப்படுத்தாமல் ’ஒன்றிய அரசு’ என்று தொடர்ந்து இழிவுபடுத்துவதால் இத்தேசத்தின் மீது பற்று கொண்ட கோடான கோடி தேசபக்தர்கள் ஏற்கனவே பெரும் ஆதங்கத்திற்கு ஆட்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஆட்சேபனைக்குரிய ’ஒன்றிய அரசு’ என்ற சொற்றொடர் நேற்றைய ஆளுநர் உரையின் தமிழாக்கத்திலும் இடம் பெற்றுள்ளது. சட்டமன்ற பதிவேடுகளிலும் இனி இடம் பெற்று விடும். இந்த ஆட்சேபனைக்குரிய தமிழ் வார்த்தை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு வரவில்லையா? அல்லது தற்காலிகமாகக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? என்று தெரியவில்லை.

நம்மை அடையாளப்படுத்தியும், பாதுகாத்தும் வரும் தாய்க்கு நிகராக போற்றப்படும் இந்தியத் தேசத்தைக் குறைத்துப் பேசி திமுகவினர் என்ன சுகம் காண்கின்றனரோ தெரியவில்லை? இப்படித் தொடர்ந்து பேசுவது தவறு என்ற  குற்ற உணர்ச்சி சிறிதும் கூட அவர்களுக்குத் தோன்றியதாக தெரியவில்லை. திமுகவின் இந்தியத் தேச விரோத போக்கு அவர்களின் வக்கிர புத்தியைக் காட்டுவதாகவே நாட்டுப் பற்றாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

திமுக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இது. அரிய பல அறிவிப்புகள் வரும் என்றே அவர்களது ஊடக தோழமைகள் ஆரூடம் சொல்லி வந்தனர். அதுபோன்று எந்த அதிசய அறிவிப்புகளும் ஆளுநர் அறிக்கையில் இடம் பெறவில்லை. ஆனால் இந்த அரசிற்கு நிதிப் பற்றாக்குறை மட்டும் அல்ல, செயல் ஆக்கத்திற்கான சிந்தனை பற்றாக்குறையும் இருப்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு கொடுத்த முக்கிய வாக்குறுதி ஒன்று கூட நிறைவேற்றப்படும் என சொல்லவில்லை.

மாநில அரசுக்கு உரிய ஆலோசனைகளைச் சொல்லவும், அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவும் அரசியல் சாசன விதிமுறைப்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் இந்தியக் குடியுரிமை பணிகளில் (IAS) தேர்ச்சி பெற்றவர்களை கொண்ட   நிர்வாகக் கட்டமைப்பு (Bureaucracy) தமிழ் மாநிலம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் உள்ளது. தலைமைச் செயலாளர் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரையிலும் அதன் நீட்சியாக நிர்வாக அமைப்புக் குக்கிராம தலையாரி வரையிலும் எப்பொழுதும் நிரந்தரமாக உள்ளது. இதற்கு மேலும், ஓரிரு துறைகளில் தகவல்களைத் திரட்டவும், அத்துறைகளை மேம்படுத்தவும் எப்பொழுதாவது சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்படுவது விதிவிலக்காக கடந்த காலங்களில் நடந்துள்ளது.

ஆனால், எதற்கெடுத்தாலும் குழுவை நியமிப்பதே கொள்கையாக இவ்வரசு விதியாக்கிக் கொண்டுள்ளது. ஆட்சிக்கு வந்த 45 நாட்களில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு; மாநில நிதி ஆதாரம் குறித்து ஆராய ஜெயரஞ்சன் தலைமையில் ஒரு குழு; கருப்பு பூஞ்சையைக் கண்டறிய டாக்டர் மோகன் தலைமையில் ஒரு குழு; கரோனா குறித்து ஆராய இன்னொரு குழு என அண்மையில் தான் பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் எல்லாம் போதவில்லை போலும். இப்பொழுது சர்வ தேச குழு ஒன்று புதிதாக முளைத்துள்ளது. நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ,  ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் அடங்கிய முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்படும் என நேற்றைய ஆளுநர் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அடுக்கடுக்காக குழுக்களை மட்டும் இவ்வரசு அடுக்கிக் கொண்டே போகிறது.

இந்த குழுக்கள் எல்லாம் இலவசமாகச் செயல்படுமா? இவர்கள் எல்லாம் செயல்படக் கோடிக்கணக்கில் செலவு செய்யவேண்டுமே? நிதி நெருக்கடியில் ஏற்கனவே மாநில அரசு சிரமப்படும் வேளையில் செலவைக் குறைப்பதற்குப் பதிலாகச் செலவைக் கூட்டிக்கொண்டே போவது எவ்விதத்தில் நியாயம்? ”அரைகுறை ஆயுள் கொண்ட இலவசத் திட்டங்களை அள்ளி வீசி, ஆசையைத் தூண்டுவது; எளிதான இலக்காக விளங்கும் வறுமையில் சிக்கித் தவிக்கும் ஏழை, எளிய மக்களின் வாக்குகளை ஐநூறுக்கும், ஆயிரத்திற்கும் விலைக்கு வாங்கி வெற்றி பெறுவது” தானே திராவிட சித்தாந்தத்தின் தாரக மந்திரம். ஏழை தமிழர்களின் அறியாமையின் மீதும், இயலாமையின் மீதும் தானே இவர்களின் பொருளாதார கோட்பாடும், சமூக நீதியும் கட்டியமைக்கப்பட்டுள்ளது. 

கழக கண்மணிகளின் இந்த அரிய கண்டுபிடிப்புகளைத் தாண்டி, கடந்த பத்து வருடமாக தமிழகத்திற்கு வரும் எல்லா நல்ல திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போட்ட இவர்களிடத்தில் உலக பொருளாதார நிபுணர்கள் வேறு என்ன புதிய திட்டங்களைத் தந்து விடப் போகிறார்கள்? அல்லது அவர்கள் நல்ல திட்டங்களைத் தந்தாலும் இவர்கள் ஏற்றுக் கொண்டு முறையாக நடைமுறைப் படுத்தப் போகிறார்களா? இக்குழு நியமனம் வீண் செலவு, வெறும் வெட்டி வேலையாகத் தானே முடியும்.

குழுக்கள் மேல் குழுக்கள் போட்டு இம்மாநில  மக்களைக் குழப்பவும் வேண்டாம்!மாநில நிதி ஆதாரத்தை விரயமாக்கவும் வேண்டாம்!!

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,  நிறுவனர் & தலைவர், புதிய தமிழகம் கட்சி.    22.06.2021   

அரசியலில் ஒரு தெளிவான பார்வையோடு இருப்பது அபூர்வம். நேர்மையாக  அரசியல் விமரிசனம் செய்வது அரிதிலும் அரிது. இப்படி அபூர்வமானவராக டாக்டர் கிருஷ்ணசாமி இருக்கிறாரே, எப்போது இவர்போன்ற அரசியல்வாதிகளைக் கண்டுகொள்ளப் போகிறோம்? சொல்லுங்கள்!

மீண்டும் சந்திப்போம்.           

Sunday, June 20, 2021

ஸ்டாலின் டெல்லி பயணம் சாதனையா? ::: புதிய தமிழகம் கட்சி Dr. கிருஷ்ணசாமி!

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் K .கிருஷ்ணசாமியை தமிழக அரசியலில் எப்படி மதிப்பிடுகிறோம்? அவரை அரசியலில் எந்த இடத்தில் வைத்திருக்கிறோம்? 2021 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி அமைப்பதில் அதிமுக செய்த மிகப்பெரிய தவறாக தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகளை ஒதுக்கிவைத்தது தான் என்பது என்னுடைய கருத்து. பாமகவுக்கு மட்டுமே கொடுத்த முக்கியத்துவம், பிஜேபி உடன் ஒருவிதமான அலட்சியம் இவைகளும் அதிமுகவின் தோல்விக்குக் காரணங்களாக இருந்தன. பிஜேபியும் கூட அதே தவறைத்தான் இன்று வரை செய்து கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. இன்று பிரதான எதிர்க் கட்சியாக, பெயரளவுக்கே அதிமுக இருந்து வருகிறது. அதிமுக செய்ய வேண்டிய வேலையை பாமகவின்  டாக்டர் ராமதாசும் புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமியும் தான்  செய்துவருகிறார்கள் என்பதை இந்தப் பக்கங்களுக்கு வரும் நண்பர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.  



இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்றால்  தமிழ்நாடு என்பது ஊராட்சிகளின் ஒன்றியமா என்ற அழுத்தமான கேள்வியை தமிழக அமைச்சர்களிலேயே கடைக்குட்டி தியாகராஜனுக்கு முன்வைக்கிற தைரியம் புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமிக்கே இருந்தது. தமிழக அரசின் செயல்பாடுகள் மீதான ஆரோக்கியமான விமரிசனத்தையும் கிருஷ்ணசாமி தொடர்ந்து செய்து வருகிறார். கவனிக்கிறோமா?

உதாரணத்துக்கு முகநூலில் இன்று அவர் பதிவுசெய்து இருக்கும் ஒரு அரசியல் விமரிசனம்::

'ஸ்டாலின் டெல்லி பயணம்' சாதனை ஆனதா? வெறும் சம்பிரதாயத்தில் முடிந்ததா.?

மனநிறைவுக்குள் மறைந்து போன ஸ்டாலினின் திருப்தி!! இலைகள் அமைதியை விரும்பலாம்! காற்று சும்மாயிருக்குமா?

மே மாதம் 07 ஆம் தேதி தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்ட திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் 40 தினங்கள் கழித்து ஜூன் மாதம் 17ஆம் தேதி டெல்லியில் பாரத பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த அரசு விழா ஒன்றுக்கு வருகை புரிந்த மோடி அவர்களுக்கு எதிராக திமுகவும், அதன் தோழமை இயக்கங்களும் கருப்பு கொடிகளாலும், கருப்பு பலூன்களாலும் சென்னையின் மண்ணையும், விண்ணையும் நிரப்பி போராட்டம் செய்தனர். அதையும் தாண்டி மோடி அவர்களின் நிகழ்ச்சி நடைபெற்ற ஐஐடி மாணவர் வளாகத்திலும் அத்துமீறி நுழைந்து கருப்புக் கொடி காட்டிய சம்பவங்களை எவரும் எளிதில் மறந்துவிட முடியாது. எந்த மோடிக்கு எதிராக ”திரும்பிப் போ” என்று கோஷம் எழுப்பினார்களோ? அந்த மோடியை தேடி அவருடைய இல்லம் சென்று சந்திக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் சென்னையில் மோடிக்கு எதிராக நடந்தது போல, டெல்லியில் ஸ்டாலினுக்கு எதிராக எவரும் அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. அது டெல்லி அரசியல் நாகரீகம்!

மாநிலங்களில் புதிதாக முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டவர்கள் பாரத தேசத்தின் பிரதமரைச் சந்திப்பது வெறும் சம்பிரதாயத்திற்கானது மட்டுமல்ல, தங்களது சாதுரியத்தால் அந்தந்த மாநிலத்திற்கு வரவேண்டிய திட்டங்களை வலியுறுத்தி சாதிப்பதே அதில் உள்ளார்ந்த அம்சம். இதுபோன்ற ஒரு முக்கியமான சந்திப்பிற்கு முன்பாக கள அளவில் “Home Work” என்று சொல்லக்கூடிய முன்னோட்ட பணிகளை செவ்வனே செய்து முடிக்க வேண்டும்.

“Go Back Modi” என சமூக வலைதளங்களில் டிரென்டிங் செய்ததும், விமான நிலையத்தைத் தாண்டி பதினைந்து கி.மீட்டருக்கு அப்பால் உள்ள கிண்டி ஐஐடி வளாகத்திற்குள்ளும் கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்ததும் மோடியின் நெஞ்சில் நீங்காத வடுவாகி இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி ஒரு சுமூகமான உறவுக்கான பாதையை ஸ்டாலின் அவர்களால் உருவாக்கி இருக்க முடியும். ஆனால் அதுபோன்ற ஒரு ராஜ தந்திர நடவடிக்கையை முறையாக மேற்கொண்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை.  

ஏனெனில் பிரதமருடனான சந்திப்பு என்பது வெறும் சம்பிரதாயத்தையும் தாண்டி தமிழகத்திற்குக் கேட்டுப் பெற வேண்டிய பல கோரிக்கைகள் அவர் தலைக்குமேல் இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கு முன் நடைபெற்ற கசப்பான சம்பவங்களை மறக்க ஒரு இதமான சூழலை உருவாக்கி அதன் பின் இந்த சந்திப்பு நடைபெற்றிருந்தால் டெல்லி சென்று சென்னை திரும்புவதற்கு முன்பாகவே சில கோரிக்கைகள் நிறைவேறியிருக்கக் கூடும். கடந்த 17 ஆம் தேதி  பிரதமர் – ஸ்டாலின் நேரடி சந்திப்பின் போது 25க்கும் மேற்பட்ட  கோரிக்கைகள் அடங்கிய ஒரு புத்தக வடிவிலான மனு அவரிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலேயே தமிழகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. 

சேலம் மற்றும் தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டிய விஷயம் என்ன தலை மேல் இருக்கக்கூடிய பிரச்சனைகளா? அதையெல்லாம் ஏன் தற்போதைய உடனடி கோரிக்கைகளில் சேர்க்க வேண்டும்? கரோனா இரண்டாவது அலையில் தொழில், வர்த்தகம் மற்றும் அனைத்து சேவைகளும் நாற்பது நாட்களுக்கு மேலாக முற்றாக முடங்கிப் போயுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் முதல் அனைத்து தரப்பினருமே ஊரடங்கால் சிக்கித் திணறுகின்றனர்.  தமிழக மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசும் மிகப்பெரிய அளவிற்கு நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கிறது. எனவே, இப்பொழுது தமிழக அரசை நிதி நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கான போதிய நிதி ஆதாரத்தைப் பெறுவதற்கான கோரிக்கை தானே முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும்?

ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூபாய் 1000, அதேபோல, ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூபாய்1000-லிருந்து 1500, பெட்ரோல் டீசலுக்கு தலா ரூ 5 குறைப்பு, நகைக்கடன் தள்ளுபடி போன்ற நிதி ஆதாரத்தோடு சமந்தபட்ட முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளைக் கூட தமிழ்நாடு அரசு நிறைவேற்ற எந்த முனைப்பும் காட்டவில்லையே? இந்நிலையில் 12,500 கோடி நிலுவையில் உள்ளது என்று ஜிஎஸ்டி கூட்டத்தில் வீராவேசமாகப் பேசினால் மட்டும் போதுமா? பாரத பிரதமருடனான சந்திப்பில் ஜிஎஸ்டி நிலுவை, 13 மற்றும் 14-வது நிதி ஆணைய பங்கீடுகள் போன்ற மிக முக்கிய நிதி அம்சங்கள் அல்லவா அக்கோரிக்கை மனுவில் முக்கிய இடம் பெற்றிருக்க வெண்டும்?

தமிழக நிதி நிலைமையை எடுத்துச் சொல்லி, குறைந்தபட்சம் அந்த நிலுவைத் தொகையை இரண்டு, மூன்று தவணைகளாகப் பெறுவதற்கு உண்டான உத்தரவாதத்தைப் பிரதமரிடத்திலே அப்போதே பெற்று அவர் டெல்லியிலிருந்து சென்னை வந்து சேருவதற்கு முன்பாக ரூபாய் 4000 அல்லது 5000 கோடி பெறப்பட்டிருந்தால் அது மிகப்பெரிய சாதனையாக இருந்திருக்கும். ஆனால் அதுபோன்ற முக்கியமான வாய்ப்பை ஸ்டாலின் நழுவவிட்டு விட்டார். சாதனை நிகழ்த்துவதைக் காட்டிலும் சம்பிரதாயத்தை நிறைவேற்றுவதிலும், வெறுப்பு அரசியல் செய்வதையுமே முக்கியமானதாகக் கருதியதன் விளைவுதான் இதுவோ? 

சாதனைகளை நிகழ்த்த அதற்குண்டான வலுவான முன்னேற்பாடுகள் “Spade Work” முறையாகச் செய்யப் பட்டு இருக்க வேண்டும். ஆனால் மாறாக ”எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல” -  ”பச்சை புண்ணில் உப்பைத் தடவுவது போல” மே 07-ஆம் தேதி பதவியேற்ற நாள் முதல் டெல்லி சென்று திரும்புவது வரை மத்திய அரசை ’ஒன்றிய அரசு’ என இழிவு படுத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். திமுக பாஜகவை எதிர்ப்பது என்பது வேறு; தமிழக அரசு மத்திய அரசை எதிர்ப்பது என்பது வேறு. மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு வழியில் மத்திய அரசுடன் தமிழக அரசு மோதல் போக்கை மட்டுமே கையில் எடுப்பது தமிழகத்துக்கு நிகழ்காலத்திலும் பாதிப்பை உண்டாக்குகிறது; எதிர்காலத்திலும் பாதிப்பை உண்டாக்கும் என்ற அச்சத்தையே உருவாக்குகிறது.

மத்திய அரசின் அதிகார வரம்பு என்ன? மாநில அரசின் அதிகார வரம்பு என்ன? என்பது கூட தெரியாமல் ஒரு மாநிலக் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து விட்டு, இப்போது அத்தனையையும் நிறைவேற்ற வேண்டும் என பட்டியலிட்டுக் கேட்டால், அதை நிறைவேற்றுவது எப்படி மத்திய அரசுக்கு சாத்தியமாகும்? ஒரு அரசியல் கட்சியின் கொள்கை சார்ந்த அறிக்கை என்பது வேறு; தேர்தல் வாக்குறுதி என்பது வேறு; நடைமுறை பிரச்சினை என்பது வேறு. புதிய கல்வித் திட்டம் (NEP), நீட் தேர்வுகள் (NEET), மூன்று வேளாண் திட்டங்கள், மின் சட்டம் போன்றவை எல்லாம் நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றப்பட்ட சட்டங்கள். இந்தியா முழுமைக்குமான சட்டங்களை ஒரு மாநிலக் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை அப்படியே ஏற்றுக்கொண்டு மத்திய அரசு ரத்து செய்ய முடியுமா?

7 பேர் விடுதலை, செங்கல்பட்டு தடுப்பூசி ஆய்வகம் போன்ற அம்சங்கள் குறித்து என்ன உத்திரவாதம் அளிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. மொத்தத்தில் நடந்த சந்திப்பு 20 நிமிடங்கள். வெளியே வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமருடனான சந்திப்பு ’மன நிறைவையும், மகிழ்ச்சியையும்’ தந்தது என்று கூறினார். பொதுவாக இது அரசியல் தளத்தில் பயன்படுத்தப்படும் Diplomatic வார்த்தை அல்ல, பொதுவாக ’திருப்தி’ என்ற வார்த்தைதான் பயன் படுத்தப்படும். அதாவது தனிப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே ’மகிழ்ச்சி’ என பயன்படுத்தப்படும். ஏன் ’திருப்தி’ என்ற வார்த்தையைத் தவிர்த்து, மனநிறைவு என்ற வார்த்தை பயன்படுத்தினார்? என்பது புதிராக உள்ளது.

மோடி அவர்களுடனான சந்திப்பு மனநிறைவாக இருந்தது, எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என பிரதமர் கூறியதாக ஸ்டாலின் அகமகிழ்ச்சி கொள்கிறார். மோடி அப்படிச் சொல்லியிருந்தால் அது அவரின் பெருந்தன்மையும், திறந்த மனப்பான்மையும் காட்டுகிறது. அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்து இருந்தாலும் தமிழ் மாநிலத்தைப் பாகுபாடில்லாமல் தங்களுடன் அணைத்துச் செல்ல மோடி விரும்புகிறார் என்பதே இதன் மூலம் வெளிப்படுகிறது. ஆனால் ஸ்டாலினோ அடுத்த பத்தாவது நிமிடத்தில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் மீண்டும் ’ஒன்றிய புராணம்’ பாடி தனது வெறுப்பு அரசியலையே வெளிப்படுத்தி இருக்கிறார். அரசியல் கலக்காமல் மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாகச் செல்லுமா? அல்லது பிணக்குடனே தொடருமா? என்பதே கேள்வி.

இலைகள் அமைதியை விரும்பினாலும், காற்று சும்மா இருக்குமா?

மிகவும் எதிர்பார்த்த மோடி - ஸ்டாலின் சந்திப்பு வெறும் சம்பிரதாயமாகவே முடிந்து விட்டது; சாதிக்க வாய்ப்பிருந்தும், ஸ்டாலின் சாதிக்க தவறிவிட்டதால் ஏமாந்து போனது தமிழ் மக்களே! ஸ்டாலின் அவர்களின் மன மகிழ்ச்சி - மன நிறைவுக்கு அவரின் வேறு எந்த கோரிக்கைகளை பிரதமர் மோடி அவர்கள் நிறைவேற்றித் தந்தார்? என்பதற்கு எதிர்வரும் காலமே பதில் சொல்லும்! 

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,நிறுவனர் & தலைவர். புதிய தமிழகம் கட்சி.

20.06.2021

கவனிக்கவேண்டிய முக்கியமான பகுதிகளை தடித்த எழுத்துக்களில் தந்திருப்பது என்னுடைய வேலை. 

குப்பை அரசியல்வாதிகளுக்குத் தேவையே இல்லாமல் முக்கியத்துவம் கொடுப்பதில், டாக்டர் கிருஷ்ணசாமி மாதிரி கவனிக்கப்படவேண்டியவர்களை கவனிக்க மறந்து விடுகிறோமா? எப்போது நம்முடைய பார்வையை விசாலமாக்கிக்கொள்ளப் போகிறோம்?

மீண்டும் சந்திப்போம்.   

Saturday, June 19, 2021

டில்லிக்குப்போனார்! திரும்பி வந்தார்! #சொல்லவிடுபட்டவை

முந்தைய பதிவில் தமிழக முதல்வர் தலைநகர் டில்லிக்குப் போனதைக் கொஞ்சம் பார்த்தோம். கூடவே போனவர்கள் யார், என்ன செய்தார்கள் என்பது லைம்லைட்டுக்கு வரவே இல்லையே என்ற மனக்குறையை இன்றைய செய்திகள் தீர்த்து வைத்திருக்கின்றன. திமுகவின் சீனியர் அமைச்சர் துரைமுருகன் முதல்வருடன் கூடவே டில்லிக்குப் போனதாக செய்திகள் சொன்னாலும் பிரதமரைச் சந்தித்த போதும் சரி, மறுநாள் சோனியாவை சந்தித்தபோதும் சரி துரைமுருகனைக் காணவே இல்லை. எங்கே போனாராம்?


டெல்லியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தும் நேரில் சென்று சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோனியின் தீவிர ரசிகரான அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே,  கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக சென்னை வந்திருந்த தோனியை, நேரில் சந்தித்தார். அப்போது, ஐபிஎல் இறுதிப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதற்காக தோனிக்கு துரைமுருகன் வாழ்த்து தெரிவித்ததாக News 18 தமிழ்நாடு செய்தி சொல்கிறது. அப்படியானால் தனி விமானம் மூலம் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தி.மு.க எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவர் மகன் கதிர் ஆனந்த் MP  மற்றும் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றதாக இதே செய்தியின் துவக்கம் சொல்வதில் வரவேற்பளிப்பதற்காக மட்டுமே துரை முருகன் டில்லிக்குப் போனார் என்றாகிறதே! ஆக, பொழுது போகாமல்தான் தந்தையும் மகனும் தோனியைச் சந்தித்தார்கள் போல!


இந்த 5 நிமிட வீடியோவில் விகடன் சொல்வது என்ன? மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணி வேண்டாம் என ஸ்டாலின் உருமாறி இருப்பதாக சொன்னதைக் கூட சகித்துக் கொண்டுவிடலாம். ஆனால் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் மாதிரி நிதானமான அணுகுமுறைக்கு மாறிவருகிறார் என்கிறார்களே, அது சரிதானா?

.

நீட் தேர்வை ரத்து செய்! இது எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது. பிரதமரைச் சந்தித்துவிட்டு வெளியேவந்து பத்திரிகையாளர்களிடம் பேசும்போது நீட் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை மெமோரண்டமாக அளித்து இருக்கிறோம் என்று சில கோரிக்கைகளைப் பட்டியல் இட்டுச் சொல்லியிருக்கிறார் 


நீட் தேர்வு ரத்து மாதிரியே கச்சத்தீவை மீட்பதும் அந்தக் கோரிக்கைகளில் சேர்ந்திருக்கிறது GST வரிவசூலில் தமிழகத்துக்கு நிலுவை இருப்பதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதில் ரூ. 4321 கோடி என்று குறிப்பிட்டுப் போதிய விவரங்களுடன் கேட்டமாதிரித் தெரியவில்லை.  பிரதமருடனான சந்திப்பில் என்னதான் நடந்திருக்கும்? முகநூலில் ஒரு கற்பனை உரையாடல்.
சிரிப்பதற்காக மட்டும்.  


திமுகஆட்சிக்கும் மின்வெட்டுக்கும் அப்படி பொருத்தம்! அந்தநாளைய ஆற்காடு வீராசாமி போலத்  தடுமாறாமல் அமைச்சர் செந்தில் பாலாஜி அசால்டாக ஒரேபோடு போட்டதில் ஆறுமாத வாய்தா! அப்புறம்? இன்னொரு வாய்தா வாங்கத்தெரியாதா என்ன? !! ஜனங்கள் பாடு தான் எப்போதும் போலத் திண்டாட்டம்.....😕😔 


சுண்டெலிகளுக்குக் குளிர்விட்டுப்போய் விட்டது போல!  அதற்காக பிறந்தநாள் வாழ்த்தாக இப்படியா? திமுக சங்கர மடம் இல்லைதான்! ஆனால் வாரிசு இல்லாத கட்சி ஒன்றுமில்லையே! 

மீண்டும் சந்திப்போம். 
   

Friday, June 18, 2021

தலைநகர் டெல்லியில் மக்கள் முதல்வர்!

தலைநகர் டெல்லியில் மக்கள் முதல்வர் - பிரதமர், முதலமைச்சர் சந்திப்பின் முக்கியத்துவம் இப்படி கலைஞர் செய்திகள் தொலைகாட்சி பெருமிதப்பட்டுக் கொள்கிற விவாத நிகழ்வு வீடியோ 50 நிமிடம். வேறு வேலை எதுவுமில்லை என்றால் தாராளமாகப் பார்க்கலாம். பனிமலர் தான் நிகழ்ச்சியின் நெறியாளர்.


இத்தனை அதிமுக்கியமான நிகழ்ச்சியைப் பற்றிய விவாதத்துக்குப் பார்வையாளர்கள் வெறும் 72 பேர்தான் என்பதை மேலே ஸ்க்ரீன்ஷாட் காட்டும்போது ஏ தாழ்ந்த தமிழகமே என்று கருணாநிதி மாதிரி நாமும் சொல்ல வேண்டுமோ? தெரியவில்லையே! 



இணையத்தில் இந்த அதிமுக்கியமான நிகழ்வைக் குறித்து நிறைய சேதி சொல்கிறார்கள்! எப்படி என்று பார்த்து விடலாமா?


அதுசரி! ஸ்டேன்லி ராஜன் வேறெப்படிச் சொல்வாராம்?


கார்டூனிஸ்ட் அமரன் கூட ஸ்டேன்லி ராஜன் சொன்னதைத் தான் கோடுகளில் வரைந்திருக்கிறார்.


இது ஸ்ரீராம் சேஷாத்ரியின் ட்வீட்டர் செய்தி :: டில்லியில் வரவேற்கக் காத்திருந்த கூட்டம், 200 ரூ உபிக்களை டில்லிக்கு கூட்டிக்கொண்டுபோக செலவாகுமே! உள்ளூர் ஆட்களை வைத்தே சமாளித்துவிட்டார்கள் போல.



நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்ததாக ஸ்டாலின் ட்வீட் செய்த சோனியா ராகுல் இருவரைச் சந்தித்ததைப்பற்றி எந்த முக்கியத்துவமும் விவாதமும் இல்லையா?

நாம்தான் இவர்களுக்குத் தேவையே இல்லாமல் இத்தனை பில்டப் கொடுத்து வருகிறோமா என்ன?

மீண்டும் சந்திப்போம்.

Tuesday, June 15, 2021

இப்போது வாசித்துக்கொண்டிருப்பது! சிராக் பாஸ்வான்::காற்று பிடுங்கப்பட்ட பலூன்!

நரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி ஜெ. ராம்கியின் சரளமான தமிழ் மொழிபெயர்ப்பில் வினய் சீதாபதியின் புத்தகத்தை இன்றைய மீள்வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளத் தூண்டுதலாக இருந்தது ஞாயிறு இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியிருந்த ஒரு அருமையான செய்தித்தொகுப்பு.

சிலவருடங்களுக்கு முன்புவரை கிழக்கு வெளியீடுகள் எதையும் வாங்குவதில்லை என்ற முடிவு, என்மகன் வாங்கிவைத்திருந்த புத்தகங்களில் பெரும்பகுதியை என்னிடம் தள்ளிவிட்டதில், முறியடிக்கப்பட்டது. இன்றும்  பி வி நரசிம்ம ராவ் என்கிற மகத்தான மனிதனைப் பற்றி நமக்குத் தெரிந்ததெல்லாம் என்ன என்பதை யோசிக்க வைத்த ஒரு நல்ல புத்தகம் இது.


It were these crucial 90 minutes that paved the way for India’s historic decision to liberalise its economy in 1991. Rao was told that foreign exchange reserves had dipped to Rs 2,500 crore, only enough to meet three months’ imports
என்று ஆரம்பிக்கிற ஒரு நினைவுத்தொகுப்பை  வாசித்துத்தான் பாருங்களேன்! பிரதமர் நரசிம்ம ராவ், தன்னுடைய  நிதியமைச்சராக இருக்கும்படி முதலில் கேட்டுக் கொண்டது முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் I G படேலைத்தான்! உடல்நலக் குறைவு காரணமாக  அவர் ஏற்க மறுத்து விடவே அடுத்த சாய்சாகத் தான் மன்மோகன் சிங் அழைக்கப்பட்டார் என்கிற சேதி போகிற போக்கில் இந்த  நினைவுத் தொகுப்பில் வருகிறது! 



சிராக் பாஸ்வான்! பீஹார் அரசியலில் செல்வாக்கோடு இருந்த ராம்விலாஸ் பாஸ்வானுடைய மகன், தந்தையின் அரசியல் வாரிசும் கூட! தந்தை நடத்தி வந்த லோக் ஜனசக்தி பார்ட்டியின் (LJP)  தலைவரும் கூட.பிஹார் அரசியலில் நிதீஷ் குமாரின் JDU (S) கட்சியும் LJP யும் சமஅளவிலான வாக்குவங்கியை வைத்திருந்தது பழைய கதை. ஆனால் நிதீஷ்குமாரின் அரசியல் சாதுர்யம் அவரைக் கொண்டுபோன உயரத்தை பாஸ்வான்+ எட்டிப் பிடிக்கமுடியவில்லை கடந்த சட்டசபைத் தேர்தல்களில் NDA கூட்டணியை விட்டு வெளியேறி, தனித்துப்போட்டி ஆனால் பிஜேபிக்கு மட்டும் ஆதரவளிப்பதான விளையாட்டை சிராக் பாஸ்வான் நடத்தியதில் நிதீஷ் குமார் ரொம்பவுமே சேதப்பட்டுப் போனார் என்பதை நாடுமறந்தாலும் நிதீஷ் குமார் மறக்கவில்லை. Since then, Mr Kumar has been clear that the onus was on the BJP to show that it did not have a secret understanding with the LJP, drawn a red line at Chirag Paswan’s induction into the Union council of ministers, if and when a Cabinet reshuffle occurs, and worked to weaken Mr Paswan’s hold over his party. This plan succeeded (with perhaps the BJP’s blessings) when five LJP Members of Parliament decided to elect Pashupati Kumar Paras, the late Paswan’s brother, as parliamentary party leader என்று உச்சுக்கொட்டுகிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலையங்கம் 


நிதீஷ் குமார் பீஹார் அரசியலில் தன்னுடைய பிடியை மறுபடி பெற்றுவிட்டார் என்று எடுத்துக்கொள்வதா? அல்லது சிராக் பாஸ்வான் தன்னுடைய பிடியை இழந்து விட்டாரா? இப்போது அவர்முன் இருக்கிற சாய்ஸ் என்ன? இதற்குமேலும் பிஜேபியோடு காலம் தள்ள முடியுமா?  பீஹாரில் எதிர்த்தரப்பான லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வியோடு கை.கோர்ப்பாரா?  


இங்கே கழகங்கள் அடிக்கிற லூட்டியில் வெறுத்துப் போய் வேறுபக்கம் பார்க்கப்போனால் அங்கேயும் இத்தனை ரணகளமா? ஒண்ணும் புரியலையே சாமி!


மீண்டும் சந்திப்போம்.

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)