**திராவிட பயங்கரவாதம்**
ஒரே ஒரு கார்ட்டூன், திராவிட பயங்கரவாதிகளின் சகிப்புத்தன்மையை தோலுரித்துக் காட்டி இருக்கிறது.
இத்தனைக்கும் அது கேலிச்சித்திரம் அல்ல, அது ஒரு கருத்துப்படம். அந்தக் கருத்துப் படத்தில் "அவரையோ", அவர் கொள்கையையோ எதுவும் சொல்லாமல் ஏதோ ஒரு சிலை என்கிற கருத்தில் தான் வரைந்திருக்கிறார் ஓவியர்.
உடனே அவரை "பார்ப்பனப் பாம்பு" என்று வசை பாடி விஷம் கக்கி இருக்கிறது திராவிடத் தேள் சுப வீ. திராவிட பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள் பிராமணர்கள் மட்டும் தான் என்ற 1960/70 மன நிலையில் இருக்கிறார் "பேராசிறியர்". பாவம் களநிலவரம் தெரியவில்லை அவருக்கு,
இதிலும் கூட ஓவியர் பிராமணர் அல்ல. இருந்தாலும் வேறு யாரையும் திட்டுவதற்கு தைரியம் இல்லாத கோழைகள், பிராமணனை தேர்ந்தெடுத்து வசை பாடுகிறது.
மீசை வைப்பதல்ல வீரம். எந்த நிலையிலும் உண்மை பேசுவதுதான் உண்மையான வீரம். பிணத்திலும், தோசையிலும் சாதி பார்க்கும் பேடிக்கூட்டதுக்கு ஓவியர் மதி என்ன சாதி என்று தெரியாமலா இருக்கும்? தெரிந்தும் அவர் "சாதியை" சொல்லாமல் "பார்பனப் பாம்பு" என்கிறது இந்த விஷத்தேள். அவ்வளவு வீரம் அவருக்கு.
ஓவியர் மதி மன்னிப்பு கேட்காவிட்டால் காலம் செருப்படி கொடுக்கும் என்று பேசுகிறார். இவருக்கு ஒன்று புரியவில்லை, இவர் சுட்டிக்காட்டும் இதே காலம் தான் இவர்களுக்கு இப்பொழுது செருப்படி கொடுத்துக் கொண்டிருக்கிறது, இவர்கள் முன்னம் செய்த, இன்னும் செய்து கொண்டிருக்கின்ற பாவத்திற்கு. அந்த அடி தாங்காமல் கத்துகிறார்.
திராவிட பயங்கரவாதிகள் எத்தனை வகையான கேலிச்சித்திரங்கள் வரைந்திருப்பார்கள்? இனிய உளவாக இன்னாதது எத்தனை பேசி இருப்பார்கள்? அவர்கள் கொடுத்த மருந்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு திருப்பிக் கொடுத்தால் கசக்கிறது, இவர்களுக்கு.
திராவிடம் என்பதே ஒரு சகிப்புத்தன்மையற்ற, அறிவற்ற முரட்டுக்கூட்டம் என்பதை மீண்டும் தெளிவு படுத்துகிறார் இவர்.
நேத்து சொன்னேன்ல... அண்ணாதுரையின் வரலாறு இனி இணையம் பூராம் நாறும்னு... இதோ ம.வெ ஜி(Ma Venkatesan) சின்ன சாம்பிள் அவிழ்த்து விட்டிருக்கிறார்....
பாரதிதாசனை எப்போது செருப்பால் அடிக்கப் போகிறார் சுபவீ செட்டியார்? - 1
தினத்தந்தியில் அண்ணாதுரையின் சிலையின் தலையில் கொரானோ படம் வைத்து வரைந்ததற்கு நாய் என்றும் அவரை செருப்பால் அடிக்கும் காலம் வரும் என்றும் சுபவீ செட்டியார் சொல்லியிருக்கிறார்.
அண்ணாதுரையை இதைவிட மிக கேவலமாக ஒருவர் விமர்சித்திருக்கிறார். அவர் பெயரில் இப்போதும் திமுக விருது கொடுக்கிறது. அவருடைய பிறந்தநாளை கொண்டாடுகிறது என்பது சுபவீக்கு தெரியுமா?
அண்ணாதுரையை மிக கேவலமாக விமர்சித்தவர் சாதி ஒழிப்புப் போராளி பாவேந்தர் பாரதிதாசன்தான்.
பாரதிதாசன் அண்ணாதுரையைப் பற்றி எழுதுகிறார் :
....அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் (இன்னும் இருக்கின்றார்) பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை. துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் தொத்தா – அண்ணாத்துரையின் அப்போதைய புலம்பல் இது!
அன்னையோ சென்னையில் ஐயரோடு! காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.
பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் பொன்னப்பா தரும் சிறுதானம்.
இந்த நிலையில் எனக்குப் பொற்கிழியும் பொன்னாடையும் அண்ணாத்துரையா அளித்திருப்பார்? அதற்கு மாறாக அண்ணாத்துரை என்ன முயற்சியில் ஈடுபட்டிருந்தார் தெரியுமா அப்போது?
பெரியாரின் செல்வநிலை கண்டு மலைத்தார். அவரின் தொண்டராகி நிலைத்தார். குடும்பம் குலைத்தார். பெரியாரை அவர் அண்ணாரிடமிருந்தும், மக்களைப் பெற்றவரிடமிருந்தும் கலைத்தார்.
இன்னும் இதைச் சொல்வதென்றால் விரியும், திரு.குருசாமியைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்.
இந்த முயற்சியில் அண்ணாத்துரைக்குச் சாப்பாட்டுக் குறைவு நிறைவேறிற்று. ஆனால் அவர் கோட்பாட்டுக் குறைபாடு அப்படியே இருந்தது.
தமக்கொரு நல்ல நிலையை ஏற்படுத்துக் கொள்ள எவன் ஏமாறுவான் என்று அண்ணாத்துரைக் கழுகு முகத்தைத் தீட்டிக் கொண்டிருந்தது. ( குயில் இதழ், குரல்– – 1, (30-9-1958), இசை -18)
.............................
இதைவிட ஒருவர் அண்ணாதுரையை கேவலப்படுத்த முடியுமா? எப்போது செருப்பால் அடிக்கப் போகிறார் சுபவீ செட்டியார்?
இதில் வருத்தப்படக்கூடிய விசயம் என்னவென்றால், இறந்தவரும் கிறித்தவ டாக்டர்தான்! இறந்தவர் RC கிறித்தவர், எதிர்த்தவர்கள் CSI கிறித்தவர்கள்.! கிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான மதசண்டையை இது பிரதிபலிக்கிறது!
எங்கேயாவது ஒரு குக்கிராமத்தில் ஒரு சிறிய கோவிலில் நடக்கும் சாதாரண பிரச்சனையை, கோவிலின் பெயரையும், மோதிய ஜாதிகளின் பெயரையும் பகிரங்கமாக வெளியிட்டு பிரச்சனையை தீவிரமாக்கும் தமிழக மீடியாக்கள், கிறித்தவ மதவெறியர்களின் மோசமான கோர தாண்டவத்தை செய்த வன்முறை கும்பலை "பொதுமக்கள்" என மறைத்து செய்தி வெளியிட்டுள்ளனர்.. டெல்லி மாநாட்டுக்கு சென்றுவந்தவர்களை இதே நபர்கள்தான் "தனியார் அமைப்பினர்" என அழைத்தனர்.
முதலில் இறந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டித்த அரசியல் தலைவர்கள், வன்முறை கும்பல் கிறித்தவர்கள் என்றதும் அப்படியே பின்வாங்கிக் கொண்டனர்..
சென்னை சம்பவம் கிறித்தவ மதத்திலிருக்கும் மோசமான பிரிவினையை காட்டுகிறது! அதே போல கிறித்தவ மதத்தில், வெள்ளை அங்கி பாதிரியாராக பெரும்பாலும் உயர்சாதியினரே வரமுடியும்!
கிறித்தவ மதத்திற்கு சென்றால் ஜாதி இல்லை என்பது, தாழ்த்தப்பட்ட மக்களை மதம்மாற்றம் செய்யும் வெற்று வார்த்தையே.. தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் "பாதர்கள்" போல, நிஜ வாழ்க்கை பாதர்கள் இல்லை.!
எந்த மதத்தை சேர்ந்தவராகிலும், கொரனாவால் இறந்தவர்கள் உடலை, இறந்த பிறகாவது நிம்மதியாக அடக்கம் செய்ய விடுங்கள்! கொரானாவில் இறந்தவர்களை எரித்தாலோ, அல்லது 12 அடி ஆழ குழியில் புதைத்தாலோ, அதனால் யாருக்கும் கொரானா பரவாது!
உங்கள் பிரிவு பாதிரியார்களின் பேச்சை கேட்டு, ஊரடங்கை மீறி, மசானங்களில் கூடி, கொரானாவை தடுக்கிறேன் பேர்வழி என்ற பெயரில், கொரானா தொற்று பரவ காரணமாகாதீர்கள்!
நன்றி ; Saravanan Swamy S
மீண்டும் சந்திப்போம்.
பாரதிதாசன் சொன்னதாக வந்திருக்கும் தகவல்கள் புதிது!
ReplyDeleteபுதிய தகவல் இல்லை ஸ்ரீராம்! பாரதிதாசன் தன்னுடைய கதை ஒன்றைப்படமாக்க பட்டபாடு தெரிந்தால் இந்தத்தகவல் சும்மா ஜுஜுபி தான்!
Deleteஎப்படியோ குப்பையைக் கிளறி விட்டார்கள்...
ReplyDeleteகுப்பை கொட்டுவது கிளறப்படுவதற்காகவே!
Delete// கொரானாவைத் தடுக்கிறேன் பேர்வழி என்றுகொரானா கிருமி பரவக் காரணம் ஆகாதீர்கள்//
ReplyDeleteமிச்சம் மீதி இருக்கின்ற பேரையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
நாம் சொல்லித் திருந்துகிற கூட்டமா அவை துரை செல்வராஜூ சார்!?
Deleteஅன்றைக்கு பொது மக்கள் என்று வந்ததுமே நினைத்தேன் - என்ன இது நரிகள் அம்மணமாகப் போகின்றனவே - என்று...
ReplyDeleteஅப்புறம் தான் தெரிந்தது நரிகள் எப்போது வேட்டி கட்டியிருந்தன?.. என்பது...
இந்தநரிகள் பாவாடை கட்டி அலைபவை!
Deleteயார் யாரெல்லாம் பொது மக்கள் என்று இப்போதே சொல்லி விட்டால் நன்றக இருக்கும்...
ReplyDeleteசம்பந்தப்பட்டது இஸ்லாமியர் என்றால் சிங்கிள் சோர்ஸ், தனியார் அமைப்பு இத்தியாதி. கிறுத்திருவம் என்றால் கிராம மக்கள் இவர்கள் எல்லாம் பொதுமக்கள் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் மறைக்கப்படுவார்கள்.
Deleteபிறத்தியாரைப் பிடிக்க வில்லை என்றால் அவரது சிறுமையைச் சொல்லி வசை பாடுவதற்கு பாவேந்தரும் தப்பவில்லை போல் இருக்கிறதே....
ReplyDeleteஒரு திரைப்படம் எடுப்பதற்காக பாரதிதாசன் பட்டபாடு அப்படி! திராவிடங்களுக்குப் புரிகிற மொழியிலேயே வெளுத்து வாங்கினார். அவர்களும் எதுவும் நடக்காதமாதிரி, துடைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
Deleteஓ!...
Deleteதனிப்படப் பேச வேண்டுமென்று முன்னர் சொல்லியிருந்தீர்களே! கூகிள் சேட் அல்லது மின்னஞ்சல் krishna04@gmail.com இல் தொடர்புகொள்ளலாம்
Delete