ஜமாத் அல் தப்லிக் ..இந்த பெயரே ..இந்திய பொதுமக்களுக்கு மிகவும் புதிதான ஒன்று.
ஜமாத் அல் தப்லிக் என்பது பழமைவாத இஸ்லாத்தையும், தூய்மைவாத இஸ்லாத்தையும் பேசுகிற , பயிற்றுவிக்கிற / கற்றுக் கொடுக்கிற ஒரு கல்ட் இயக்கம். சுருக்கமாக சொல்வதானால்.. மறுகட்டமைப்பு செய்யப்பட்ட 7 ஆ ம் நூற்றாண்டு பழமைவாத ஆதி இஸ்லாம் !
இதன்படி.. 7-ஆம் நூற்றாண்டில் இஸ்லாத்தை தோற்றுவித்தவர்கள் மத ரீதியாக கற்றுக் கொடுத்தவற்றை மட்டுமே பின்பற்றவேண்டும். அணியும் உடை கூட .. கணுக்கால் வரையிலான கால்சட்டை, முட்டி வரையிலான மேல் சட்டை, நீண்ட தாடிதோலினால் ஆன செருப்பு, என்று 7ஆம் நூற்றாண்டில் அவர்கள் அணிந்திருந்த உடை பாணியை மட்டுமே பின்பற்ற வேண்டும். இந்த பழமை + தூய்மைவாதத்தின் சட்டதிட்டபடி ..இதில்..பெண்களுக்கு இடம் கிடையாது.
அரசியல், சமூக பிரச்சினைகள், பொது பிரச்சினைகள் என்று எதிலும் ஈடுபடுத்திக் கொள்வதோ, கருத்து தெரிவிப்பதோ கூடாது. என்பது இந்த இஸ்லாமிய அமைப்பின் நடைமுறை. அமைப்பில் இருப்பவர்கள் வாக்களிப்பதை கூட தவிர்க்க வேண்டும் என்று சில நேரங்களில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. 7 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மதக் கடமையை மட்டுமே செய்ய வேண்டும். மக்களை ...குறிப்பாக இளைஞர்களை இஸ்லாத்தின் பக்கம் வரவழைப்பதும், பழமைவாத இஸ்லாத்தை பரப்பவுதும் தான் தலையாய கடமை & நோக்கம்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் இடையிலான ஒன்றுபட்ட இஸ்லாமிய மக்கள் என்கிற கருத்துருவாக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த பழமைவாத இஸ்லாமிய அமைப்பு உருவான இடம்... இந்தியா ! இந்தியாவின் Mewat-ல் முகமது இலியாஸ் என்பவரால் 1927-ல் உருவாக்கப்பட்டது.
அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பு நிகழ்வுக்கு பிறகு...மேற்குலக நாடுகள் & ஆசிய நாடுகளில் இருந்த இஸ்லாமிய பயங்கரவாத அச்சத்தினை பயன்படுத்திக் கொண்டு .....தங்கள் ஜமாத் அல் தப்லிக் அமைப்பு அரசியலில் இருந்து விலகி இருந்து அமைதியை மட்டுமே போதிப்பதாக சொல்லிக் கொண்டு ..எளிதாக காலூன்றியது...
இன்று ..இந்த ஜமாத் அல் தப்லிக்-கு ..உலக முழுவதும் கிளைகள் உண்டு. கோடிக்கணக்கில் உறுப்பினர்கள் உண்டு. கிர்கிஸ்தான் நாட்டின் அரசமைப்பு சட்டம் இந்த பழமைவாத இஸ்லாத்தை மட்டும் அங்கீகரித்திருக்கிறது !
இந்த ஜமாத் அல் தப்லிக்-கை சேர்ந்தவர்கள்..உலகம் முழுவதும் ..மத பிரச்சாரகர்களாக... தங்கு தடையின்றி வருடம் முழுவதும் சென்று வருகிறார்கள். 3 நாட்கள் முதல் 4 மாதங்கள் வரையில் தங்கி இருந்து ..பழமைவாத இஸ்லாத்தை போதிக்கிறார்கள். இவ்வாறு வருபவர்கள்...அந்தந்த இடத்தில் உள்ள தப்லீகிகளை தங்களோடு இணைத்துக் கொண்டு நாடுமுழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுப்படுத்துகிறார்கள்.
ஜமாத் அல் தப்லிக்-கை சேர்ந்தவர்கள். அமைப்பையோ.. தங்களையோ வெளிகாட்டிக் கொள்வதில்லை . பொதுவெளியில் அது குறித்து பேசுவதும் இல்லை. பொது சமூக அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகியே இருக்கிறார்கள். இதனால் பொதுவெளி கவனம் தவிர்க்கப்படுகிறது. இவர்களுக்கென்று ஒவ்வொரு ஊரிலும் மதரஸாக்களை ஏற்படுத்திக் கொள்வதில்லை. ஆங்காங்கே இருக்கும் மதரஸாக்களை தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
''நேரடியாக''.. ஜமாத் அல் தப்லிக் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு இல்லை. ஆனால்...இவர்களின் இந்த சமூக விலகலோடு கூடிய மறைவான கட்டமைப்பு .. பல பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் பிடிக்கும் இடமாக மாற்றி இருக்கிறது என்று உலகநாடுகள் அஞ்சுகின்றன.காரணம்...
1990-...2000 களில்..அமெரிக்கா உட்பட்ட உலக நாடுகள் பலவற்றிலும் நடந்த நடந்த பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பல பயங்கரவாதிகள் ...பாகிஸ்தானில் உள்ள ஜமாத் அல் தப்லிக் கூட்டத்திற்கு சென்று வந்ததாக அதன் விசாரணைகள் வெளிப்படுத்தியது.
இதனை தவிர...ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் பேசுகிற அதே சமரசமற்ற பழமைவாத தூய்மைவாத இஸ்லாத்தை தான்..அரசியலற்று இருப்பதாக சொல்லிக் கொள்ளும் ஜமாத் அல் தப்லிக்-ம் பேசுகிறது. அதனாலேயே...பல பயங்கரவாத அமைப்புகளுக்கும் .. ஆள் பிடிக்கும் இடமாக .. ஜமாத் அல் தப்லிக் -ன் கூட்டங்கள் இருக்கின்றன...என்று அஞ்சுகின்றன உலக நாடுகள்.
இன்று வைரஸ் தொற்று ...டெல்லியில் இயங்கி வந்த ஜமாத் அல் தப்லிக்கை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
No comments:
Post a Comment