Showing posts with label Quo Vadis. Show all posts
Showing posts with label Quo Vadis. Show all posts

Wednesday, April 1, 2020

தெரிந்து கொள்ள சில விஷயங்கள்! சொல்வது பானு கோம்ஸ்!

முகநூலில் பானு கோம்ஸ் நமக்குத் தெரியாத, தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒரு தகவலை எழுதியிருக்கிறார். #பழைமைவாதம் என்பது எவ்வ்ளவு கோரமாக இருக்கும், செயல்படும் என்பதை நம்மில் பலரும் அறிந்திருக்கவே மாட்டோம் என்று இருக்கிற சமயத்தில், இதுமாதிரி விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் தவறே இல்லை என்று நினைப்பதால் இதை இங்கேயும் பகிர்கிறேன்.

    

ஜமாத் அல் தப்லிக் ..இந்த பெயரே ..இந்திய பொதுமக்களுக்கு மிகவும் புதிதான ஒன்று.

ஜமாத் அல் தப்லிக் என்பது பழமைவாத இஸ்லாத்தையும், தூய்மைவாத இஸ்லாத்தையும் பேசுகிற , பயிற்றுவிக்கிற / கற்றுக் கொடுக்கிற ஒரு கல்ட் இயக்கம். சுருக்கமாக சொல்வதானால்.. மறுகட்டமைப்பு செய்யப்பட்ட 7 ஆ ம் நூற்றாண்டு பழமைவாத ஆதி இஸ்லாம் !

இதன்படி.. 7-ஆம் நூற்றாண்டில் இஸ்லாத்தை தோற்றுவித்தவர்கள் மத ரீதியாக கற்றுக் கொடுத்தவற்றை மட்டுமே பின்பற்றவேண்டும். அணியும் உடை கூட .. கணுக்கால் வரையிலான கால்சட்டை, முட்டி வரையிலான மேல் சட்டை, நீண்ட தாடிதோலினால் ஆன செருப்பு, என்று 7ஆம் நூற்றாண்டில் அவர்கள் அணிந்திருந்த உடை பாணியை மட்டுமே பின்பற்ற வேண்டும். இந்த பழமை + தூய்மைவாதத்தின் சட்டதிட்டபடி ..இதில்..பெண்களுக்கு இடம் கிடையாது.

அரசியல், சமூக பிரச்சினைகள், பொது பிரச்சினைகள் என்று எதிலும் ஈடுபடுத்திக் கொள்வதோ, கருத்து தெரிவிப்பதோ கூடாது. என்பது இந்த இஸ்லாமிய அமைப்பின் நடைமுறை. அமைப்பில் இருப்பவர்கள் வாக்களிப்பதை கூட தவிர்க்க வேண்டும் என்று சில நேரங்களில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. 7 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மதக் கடமையை மட்டுமே செய்ய வேண்டும். மக்களை ...குறிப்பாக இளைஞர்களை இஸ்லாத்தின் பக்கம் வரவழைப்பதும், பழமைவாத இஸ்லாத்தை பரப்பவுதும் தான் தலையாய கடமை & நோக்கம்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கும் இடையிலான ஒன்றுபட்ட இஸ்லாமிய மக்கள் என்கிற கருத்துருவாக்கத்திற்காக உருவாக்கப்பட்ட இந்த பழமைவாத இஸ்லாமிய அமைப்பு உருவான இடம்... இந்தியா ! இந்தியாவின் Mewat-ல் முகமது இலியாஸ் என்பவரால் 1927-ல் உருவாக்கப்பட்டது.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பு நிகழ்வுக்கு பிறகு...மேற்குலக நாடுகள் & ஆசிய நாடுகளில் இருந்த இஸ்லாமிய பயங்கரவாத அச்சத்தினை பயன்படுத்திக் கொண்டு .....தங்கள் ஜமாத் அல் தப்லிக் அமைப்பு அரசியலில் இருந்து விலகி இருந்து அமைதியை மட்டுமே போதிப்பதாக சொல்லிக் கொண்டு ..எளிதாக காலூன்றியது...

இன்று ..இந்த ஜமாத் அல் தப்லிக்-கு ..உலக முழுவதும் கிளைகள் உண்டு. கோடிக்கணக்கில் உறுப்பினர்கள் உண்டு. கிர்கிஸ்தான் நாட்டின் அரசமைப்பு சட்டம் இந்த பழமைவாத இஸ்லாத்தை மட்டும் அங்கீகரித்திருக்கிறது !

இந்த ஜமாத் அல் தப்லிக்-கை சேர்ந்தவர்கள்..உலகம் முழுவதும் ..மத பிரச்சாரகர்களாக... தங்கு தடையின்றி வருடம் முழுவதும் சென்று வருகிறார்கள். 3 நாட்கள் முதல் 4 மாதங்கள் வரையில் தங்கி இருந்து ..பழமைவாத இஸ்லாத்தை போதிக்கிறார்கள். இவ்வாறு வருபவர்கள்...அந்தந்த இடத்தில் உள்ள தப்லீகிகளை தங்களோடு இணைத்துக் கொண்டு நாடுமுழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுப்படுத்துகிறார்கள்.

ஜமாத் அல் தப்லிக்-கை சேர்ந்தவர்கள். அமைப்பையோ.. தங்களையோ வெளிகாட்டிக் கொள்வதில்லை . பொதுவெளியில் அது குறித்து பேசுவதும் இல்லை. பொது சமூக அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகியே இருக்கிறார்கள். இதனால் பொதுவெளி கவனம் தவிர்க்கப்படுகிறது. இவர்களுக்கென்று ஒவ்வொரு ஊரிலும் மதரஸாக்களை ஏற்படுத்திக் கொள்வதில்லை. ஆங்காங்கே இருக்கும் மதரஸாக்களை தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

''நேரடியாக''.. ஜமாத் அல் தப்லிக் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு இல்லை. ஆனால்...இவர்களின் இந்த சமூக விலகலோடு கூடிய மறைவான கட்டமைப்பு .. பல பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் பிடிக்கும் இடமாக மாற்றி இருக்கிறது என்று உலகநாடுகள் அஞ்சுகின்றன.காரணம்...

1990-...2000 களில்..அமெரிக்கா உட்பட்ட உலக நாடுகள் பலவற்றிலும் நடந்த நடந்த பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பல பயங்கரவாதிகள் ...பாகிஸ்தானில் உள்ள ஜமாத் அல் தப்லிக் கூட்டத்திற்கு சென்று வந்ததாக அதன் விசாரணைகள் வெளிப்படுத்தியது.

இதனை தவிர...ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் பேசுகிற அதே சமரசமற்ற பழமைவாத தூய்மைவாத இஸ்லாத்தை தான்..அரசியலற்று இருப்பதாக சொல்லிக் கொள்ளும் ஜமாத் அல் தப்லிக்-ம் பேசுகிறது. அதனாலேயே...பல பயங்கரவாத அமைப்புகளுக்கும் .. ஆள் பிடிக்கும் இடமாக .. ஜமாத் அல் தப்லிக் -ன் கூட்டங்கள் இருக்கின்றன...என்று அஞ்சுகின்றன உலக நாடுகள்.

இன்று  வைரஸ் தொற்று ...டெல்லியில் இயங்கி வந்த ஜமாத் அல் தப்லிக்கை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

#Jamaat_Al_Tabligh #DelhiNizamuddin  என்று பானு கோம்ஸ் எழுதியிருப்பதோடு தரவுகளாக சில இணைப்புக்களையும் கொடுத்திருக்கிறார்   


இரண்டாவது தரவு    2003 ஜூலையில் நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த செய்தி  இவை இரண்டும் பயங்கரவாதத்தொடர்பை வெளிக்கொணர்ந்தவை.
 

நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் விடிகாலை 2 மணிக்கு வந்து சொல்லவேண்டிய விதத்தில் சொன்னபிறகுதான் அவர்களுக்குப் புரிந்ததாம்! பெருமைப்பட்டுக் கொள்கிற விஷயமா? 

மீண்டும் சந்திப்போம்

Wednesday, September 11, 2019

Quo Vadis! எங்கே போகிறோம்?

எங்கே போகிறோம்? மனிதன் சிந்திக்கத் தொடங்கிய நாட்களிலிருந்தே கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விதான் இது! சோ எழுதிய நாடகம் ஒன்றின் தலைப்பு இதே பொருளைத் தரும் Quo Vadis! அகிலன் எழுதிய நாவல் ஒன்றின் தலைப்புக் கூட எங்கே போகிறோம் தான்! அகிலன் எழுதிய அந்தக்கதை இப்போது சுத்தமாக நினைவில் இல்லை.



யூட்யூப் தளத்தில் தேடிக் கொண்டிருந்தபோது கவண் படத்தில் இருந்து இந்த க்ளிப்பிங், நீண்ட நாள் கழித்து T ராஜேந்தரை செம form இல் பார்த்தபோது, எனக்குள் கிளைத்த கேள்வி எங்கே போகிறோம்? சமூகத்தின் முகம் காட்டும் கண்ணாடியாகத்  தங்களைச் சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் நம்மை எங்கே  திசைமாறிச் செல்லத் தூண்டுகின்றன என்பதைப் புரிந்துகொண்டாலே எங்கே போகிறோம் என்பதும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதும் தெளிவாகிவிடும் என்பதைத்தான் செய்திகளின் அரசியல் என்ற ஹேஷ்டாகில் இங்கேயும் Consent to be ...nothing! தளத்திலும் எழுதிவருவதை நண்பர்கள் கவனித்திருக்கலாம். 


OPIndia தளத்தில் இங்கே ஊடகங்கள் எப்படி ஒரு செய்தியைத் திரித்துச் சொல்கிறார்கள்  என்பதை  . நீங்களே பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வரலாம்! கோயபல்ஸ் எல்லாம் இவர்களிடம் பிச்சை வாங்கவேண்டும்! ஓலா, உபெர் பற்றிச் சொன்னது கூட சரி! ஆனால் லாரி, ட்ரக் வகையறா வாகனமும் விற்பனையில் படுத்துவிட்டதே என்று கேள்விகேட்கிறவர்கள் கவனத்துக்கு இப்படி ஒரு பதிலும் உலாவுகிறதே! தெரியுமா?

     
ஜெயமோகன் பற்றியோ சாரு நிவேதிதா பற்றியோ எழுதியே ஆகவேண்டிய எந்தவிதமான அரிப்போ கட்டாயமோ எனக்கு இல்லை என்றாலும், இது பதிவர் உண்மைத்தமிழனுக்காக! ஜெயமோகன் போல அல்லது அவரைவிடவும் இணையத்தில் எழுதிக்குவித்தவர் உண்மைத்தமிழன் என்பதால்! 


முடிவு பண்ணிட்டேன். ஆசானே இப்படி சொன்ன பிறகும் நாம இதுல இறங்கலைன்னா நாளைய சமூகம் நம்மளை எழுத்தாளரா நினைக்க வாய்ப்பே இல்லை.
ஸோ.. அடுத்த ஜனவரில இருந்து ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு புத்தகம்ன்னு உண்மைத்தமிழன் வலைத்தளத்தில் இருக்கும் அனைத்து இலக்கியங்களையும் அமேசானில் கொட்டப் போகிறேன்.
ஆசான் அவைகளைப் படித்துவிட்டு "குப்பை" என்று வார்த்தை சொன்னால் போதும்..
பேரானந்தமடைவேன்..!
இந்த ஒரு வார்த்தைக்காகவே என் புத்தகங்கள் அமேசானில் பிய்த்துக் கொண்டு போகும் என்று உறுதியாய் நம்புகிறேன்..!
ஜெய் ஜெயமோகன்ஜி..!

சீனாதானா அவர் நினைத்ததை விட இன்னும் அதிககாலம் திஹார் சிறைவாசம் செய்யவேண்டியதிருக்கும் போல! 

எங்கே போகிறோம் என்பது தெரியாமலேயே எவ்வளவு செய்தி, அரசியலைக் கடந்துவந்திருக்கிறோம் என்பது இப்போது புரிகிறதா?

மீண்டும் சந்திப்போம்.   
   

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)