Thursday, May 21, 2020

ச்சும்மா ஜாலிக்கு! விண்ணைத்தாண்டி வருவாயா? விடலைத்தனமான காதல்!

நீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தை ஒரு குழந்தைத்தனமான காதல் படமாக இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் எடுத்திருந்த்தாக முந்தின பதிவில் சொல்லி இருந்தது ஞாபகம் இருக்கிறதா? சமந்தா கதாநாயகியாக நடித்திருந்ததால் மட்டுமே அப்படிச் சொல்லவில்லை! 


சிம்புவை வைத்துப் படமெடுத்தால் அது தானாகவே ஒரு விடலைத்தனமான காதல் படமாக ஆகிவிடும் என்பதை நிரூபித்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா! ஒரு எல்லைக்குள் நின்றால் மட்டுமே சிம்பு படங்களில் விடலைத் தனம் இருக்கும். எல்லைதாண்டினால் அதுவே வில்லங்கமான அல்லது விவகாரமான படமாகிவிடும் என்பதற்கு சிம்பு நடித்த பலபடங்களைச் சொல்லலாம். அந்தவகையில் VTV படத்தில் சிம்புவின் விடலைத்தனம் ஒரு அளவோடு இருந்ததால் மிகவும் ரசிக்கப்பட்ட படமாகவும் ஆகிப்போனது.  இதன் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டால் எப்படியிருக்கும்? அதுவும் 12, 13 நிமிடங்களுக்குள்! கௌதம் வாசுதேவ் மேனன் தனது ஒன்றாக தளத்தில் வீடியோவை நேற்று ரிலீஸ் செய்த ஒரே நாளில் 11 லட்சம் பார்வைகளைக் கடந்து இருக்கிறதென்றால்....!

 
VTV நாயகன் கார்த்திக் தனது முன்னாள் காதலி ஜெஸ்ஸிக்கு போன் செய்கிறான். என்னமாக கதை போகிறதென்று வீடியோவைப் பாருங்கள்!  ஆனால்  நம்மூர் மீம்ஸ் க்ரியேட்டர்களுடைய கற்பனைத்திறன் இருக்கிறதே அது கௌதம் வாசுதேவ் மேனன்களை விட மிகத்திறமையாக இருக்கிறதென்றே சொல்ல வேண்டும்! ஒரே படத்தில் இந்த 12 நிமிட வீடியோவைச் சொல்லி இருக்கிறார் ஒரு திறமையாளர்!

 
இன்னொருத்தர் இதை அடுத்தகட்டத்துக்கே எடுத்துப் போய்விட்டார்! 


கொரோனா காலம், ஏகப்பட்ட புத்தகங்களைத் தூசு தட்டி எடுத்துப் படிப்பதிலும், தெலுங்கு தெரியாமலேயே சில வெப் சீரீசுகளைப் பார்ப்பதிலும் கடந்துபோய்க் கொண்டு இருக்கிறது!  Ee Office Lo இப்போது வெளியான இரண்டாவது சீசனைப் பார்த்து முடித்ததும் 2018 இல் வெளியான முதல் சீசனை VIU தளத்தில் ஸ்ட்ரீமிங்கில் பார்த்தேன்.நன்றாக இருந்தது என்று சொல்வது மிக்க குறைச்சலான மதிப்பீடு.   

நம்மூர் தொலைகாட்சி சீரியல் தயாரிப்பாளர்கள் இதுபோல எட்டிப் பிடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

மீண்டும் சந்திப்போம்.  

Monday, May 11, 2020

ச்சும்மா ஜாலிக்கு! ஓடாத படத்துக்கு ஒரு இரவல் வாங்கின விமரிசனம்!

யூட்யூபில் இன்று நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கௌதம் மேனனுடைய படங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படம் இது. பெரிதாகக் கதை என்று எதுவும் இல்லை என்றாலும் சிறுவயதிலிருந்தே அறிமுகமான இருவருடைய காதல், சொல்லப்பட்ட விதத்தில் இன்றைக்குப் பார்க்கும் போது கூட நன்றாக இருக்கிறது. முக்கியமாக இளையராஜாவின் இசை! குழந்தைத்தனமான ஒரு காதலை, வயசாளியாகிப்போன காலத்திலும் கூட ரசிக்க முடிகிறதென்றால் அதற்கு கௌதம் வாசுதேவ மேனன் அதிகம் சொதப்பாமல் எடுத்த காதல்கதை இது ஒன்றுதான் என்பதால் கூட இருக்கலாமோ?

 
படத்திலிருந்து கொஞ்சம் காட்சிகள், வீடியோ 15 நிமிடம்!  கதாநாயகன் ஜீவா மட்டுமல்ல, அநேகமாக இயக்குனர் உட்பட அனைவருமே அடக்கி வாசித்திருப்பது படத்தின் சுவாரசியத்துக்கு ஒரு காரணம் என்றால் சமந்தா மிக முக்கியமான காரணம், மறுப்பதற்கில்லை!


ஒண்ணும் சொல்றதுக்கு இல்லே! 



சுட்டுப்பிடிக்க    உத்தரவு! இப்படி ஒருபடம் போனவருடம் தியேட்டரில் எத்தனை ஷோ ஓடியிருக்கும்? யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா? கிழக்கு மேனேஜர் ஹரன் பிரசன்னா இந்தப்படத்தைத் தேடிப் பிடித்தது மட்டுமல்லாமல் முகநூலில் ஒரு முழுநீள விமரிசனமும்  எழுதியிருக்கிறார். பின்னூட்டங்களில் அனல் பறக்கிறது

சுட்டுப் பிடிக்க உத்தரவு - கபட நாடகம்

கோவை தொடர் குண்டுவெடிப்பு என்பது தமிழ்நாட்டில் எத்தனை முக்கியமான தீவிரவாத நிகழ்வு என்பது எல்லாருக்கும் தெரியும். சிதைந்த வேனும் வெடிக்க காத்திருந்த காரும் அத்தனை மறக்கக் கூடியதல்ல. இத்தனை முக்கியமான ஒரு நிகழ்வைப் பின்னணியாக வைத்து ஒரு படம் வருகிறது என்றால், அது எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்? எப்படிப்பட்டதாக இருக்கக்கூடாது என்று தெரியவேண்டுமானால் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ பார்க்கலாம்.

ஒரு முக்கியமான நிகழ்வை, ஒரு மாநிலத்தையே உலுக்கிய நிகழ்வை மையமாக வைத்து முக்கியமான திரைப்படங்கள் உலகம் முழுக்க வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு சாபம் இருக்கிறது. உண்மையைச் சொல்வதைவிட யாரையாவது தாஜா செய்யவேண்டும் என்றால் அதற்காக இந்தக் கருவை எடுத்துக்கொண்டு, மனசாட்சியை அடகு வைத்துவிட்டுப் படம் எடுப்பது. அந்த அளவுக்கு தாஜா அரசியல் இங்கு ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அரசியலிலும் திரை உலகிலும்.

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தின் கோர முகத்தை கோயமுத்தூரில் பார்த்தோம். இஸ்லாமியர்களை எப்போதும் உச்சி மோந்து அன்பு செலுத்தும் கருணாநிதி கூட இந்தக் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து தீவிரமான நடவடிக்கை எடுத்தார் என்று திமுகவினரே சொல்வார்கள். இதைக் குறை சொல்லியும் பல திமுக ஆதரவு இஸ்லாமியர்கள் இன்று வரை பதிவுகள் இடுவதைக் காணலாம். ரஜினி சம்பந்தமே இல்லாமல் ஒரு அறிக்கை தந்தார். திமுகவைச் சேர்ந்த இஸ்லாமியர்களே ரஜினி சொன்னது மடத்தனம் என்றும், இந்தக் குண்டுவெடிப்புக்கு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்களே காரணம் என்று ஒப்புக்கொண்டதும் வரலாறு. இதுகுறித்து ரஜினி இன்று வரை வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது வேறு விஷயம். இப்படி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பின்னணியைக் கொஞ்சம் கூட வரலாற்றுப் பிரக்ஞையோ பொறுப்போ இல்லாமல் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இப்படத்தில் ஒரு தீவிரவாதக் குழு கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்த்த திட்டமிடுகிறது. அவர்கள் உடை பாவனை பேச்சு எல்லாம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் போலவே இருக்கிறது. ஆனால் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆறு தீவிரவாதிகளின் பெயர்களைக் கூடச் சொல்லாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு தீவிரவாதியின் பெயர் முபாரக் என்று வருகிறது என நினைக்கிறேன். தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பைத் தடுத்து நிறுத்தி வெற்றி பெறுகிறது தமிழகக் காவல்துறை.

பயங்கரவாதிகளுக்கு உதவும் ஒருவரது பெயர் தெளிவாகச் சொல்லப்படுகிறது. ஹிந்து. இது உண்மையாக இருக்கவே வாய்ப்பும் அதிகம். அதை மறுப்பது என் நோக்கமல்ல. ஆனால் தீவிரவாதிகளின் பெயர்கள்? இயக்குநர் அந்தச் சமயத்தில் தாஜா அரசியல் மற்றும் செக்யூலரிசத்தின் உச்சத்துக்குப் போய்விட்டார். அத்துடன் நிற்கவில்லை. இந்தத் தீவிரவாதத் தாக்குதலை முறியடிக்கும் இன்ஸ்பெக்டரின் பெயர் இப்ராஹிம்! இயக்குநர் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பார் என்பது நிச்சயம்.

படத்தில் இரண்டு முறை ஒரு வசனம் வருகிறது. இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தால் மசூதியில் தொழுபவர்கள் இறந்து போய்விடுவார்கள் என்று. அதாவது இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படமல்ல என்று இயக்குநர் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறாராம். இத்தனை உண்மைகளைக் கவனம் எடுத்து வலிந்து வலிந்து சொன்ன இயக்குநருக்குப் பயங்கரவாதிகளின் பின்னணியை விவரிப்பதில் மட்டும் செலக்டிவ் அம்னீஷியா வந்துவிடுகிறது. ஒரு தீவிரவாத நிகழ்வை அப்படியே படம் எடுப்பதில் என்ன பிரச்சினை? அது எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கும் மதத்துக்கும் எதிரான படமாகும்? உண்மையில் இப்படி யோசிப்பதே அந்த மதத்தினருக்குச் செய்யும் அநீதி அல்லவா? இப்படி யோசிப்பவன் தானே நியாயமானவனாக இருக்கமுடியும்? ஆனால் இங்கே அவன் கட்டம் கட்டப்படுவான். எனவேதான் இயக்குநர்கள் எதிர்த்திசைக்குப் போகிறார்கள்.

இத்தனை பெரிய குண்டுவெடிப்பை காவல்துறை தடுத்து நிறுத்த ஒரு நாடகம் நடத்துகிறார்கள். அந்த நாடகம் - ஐயகோ. குண்டுவெடிப்பைக் காட்டிலும் கொடூரமானதாக இருக்கிறது. இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று கூட இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா யோசிக்கவில்லை. அவரது நோக்கம் உண்மையைப் பதிவு செய்வதல்ல, மாறாக ஒரு நாடகத்தைச் சொல்வதுதான் என்பது உறுதியானபின்பு அவர் ஏன் இதைப் பற்றிக் கவலை கொள்ளப் போகிறார்!

தமிழ்நாட்டுத் திரையுலகம், உண்மையான நிகழ்வைப் பின்னணியாக வைத்து அரசியல் ரீதியான தீவிரமான படம் எடுப்பதில் இன்னும் வயதுக்கு வரவில்லை என்று சொல்லலாமா? இப்படியும் சொல்லிவிடமுடியாது. இதுவே ஹிந்துக்களுக்கு எதிரான திரைப்படம் என்றால் எல்லாவிதமான திறமைகளையும் ஒரே நேரத்தில் இறக்கிப் படமெடுப்பார்கள் என்பது உறுதி. உண்மையான நிகழ்வை அப்படியே பதிவு செய்யாமல், தங்களது மன ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் புகுத்தி ஒரு படம் எடுத்தால் அங்கே கலை செத்துப் போய்விடும். ஆனால் முற்போக்காளர் பட்டமும் பணமும் கிடைக்கும். எது தேவை என்பதை இயக்குநர்கள் தெளிவாகவே முடிவு செய்துவிடுகிறார்கள்.

ஆனாலும் நாம் சில நன்றிகளைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ஒன்று, இந்தக் குண்டுவெடிப்பைத் திட்டமிடும் தீவிரவாதிகளின் பின்னணியைக் காண்பிக்கவில்லை என்பது போலவே, இந்த குண்டுவெடிப்பு நியாயமான தேவையான ஒன்றுதான் என்ற அளவுக்கு இயக்குநர் யோசிக்காமல் இருந்திருக்கிறாரே, அதற்கு முதல் நன்றி! இரண்டு, குண்டுவெடிப்பைத் தகர்க்க உதவும் இஸ்லாமிய போலிஸுக்கு உதவும் மற்றவர்கள் ஹிந்துக்கள். அவர்களையும் இஸ்லாமியர்களாகவோ கிறித்துவர்களாகவோ யோசிக்காத இயக்குநருக்கு நன்றி சொல்லவேண்டாமா! இயக்குநர் இதையெல்லாம் யோசித்து மனதில் வைத்து அடுத்த படத்தில் இன்னும் பதினாறு அடி பாய வாழ்த்துவோம்.  

நல்லவேளை! நான் ட்ரெயிலரில் மிஷ்கின் மூஞ்சியைப் பார்த்ததுமே படத்தைப் பார்க்கவேண்டாமே என்று புறந்தள்ளியதால் பிழைத்துக் கொண்டேன்! 

மீண்டும் சந்திப்போம். 

Friday, May 8, 2020

#கொரோனாடைம்ஸ் டைம் பாசுக்கு என்ன செய்வது? டாவின்சி கோட்! விஷ்ணுபுரம்!

கொரோனா தொற்று ஏற்பட்டுவிடும்! வீட்டிலேயே இரு என்று அரசின் மிகக்கனிவான வேண்டுகோளை ஏற்று வீட்டிலேயே முடங்கி கிடக்கிற காலம் இது! பொழுதைக் கடத்துவது என்பது வரவர மிகவும் கடினமாகிக் கொண்டே வருவதில் டிவி பார்ப்பது முதலில் கசந்து அதன்பின் நெட்பிலிக்ஸ் முதலானவையும் கசந்ததில் எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று என்னிடம் யாரும் வந்து கேட்கவில்லைதான்! அவர்களுக்கும் அதே மாதிரிப் பிரச்சினை தான் போல என்று முடிவு செய்துகொள்ளலாமா என்பது கூட சரியாகத் தெரியவில்லை!  லோகோ பின்ன ருசி! அவரவர் அவஸ்தை அவரவருக்கு என்று வேறு சொல்லியிருக்கிறார்களே!

வலதுபக்கம் சொல்லியிருக்கிறமாதிரி முதல் இரண்டுவாரங்கள் ஓடிப்போயின.  அதற்காக Money Heist  அல்லது Narcos மாதிரிக்கு காவியங்களைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருக்க முடியுமா? காய்ச்சல் கண்டவனுக்கு வாய்கசந்துபோல வெப் சீரீஸ் பார்ப்பதும் ஆகிவிட்டது . இருக்கவே இருக்கிறது புத்தக வாசிப்பு என்று ஆரம்பித்தால் நம்முடைய ராசிக்கு ஹரிகேசநல்லூர்க்காரர் ஜோசியம் சொல்கிற மாதிரி ஆகிவிடும் என்று கண்டேனா?


டாவின்சி கோட்!  தமிழில் இருக்கிறது வாசிக்கிறாயா என்று நண்பர் பரம கருணையோடு கொடுத்த புத்தகம்! நண்பருக்கு என்மீது தீராதவஞ்சம் எதோ இருக்கப்போய், வசமாகத் தீர்த்துக் கொண்டு விட்ட மாதிரி அப்படி ஒரு கரடு முரடான மொழிபெயர்ப்பு. மேலே பார்த்தீர்களானால் இரா செந்தில், பெரு முருகன் என்று இரண்டுபேர் கூட்டாக முழிபெயர்த்திருக்கிறார்கள். டான் ப்ரவுன் அல்லது அவருடைய பதிப்பாளரிடமிருந்து முறையான அனுமதி பெற்று மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதான அறிகுறி எதுவும் சொல்லப்படவில்லை. 700+ பக்கங்கள் தானே என்று எடுத்துக் கொண்டதில், என்னுடைய பொறுமை அளவுக்கு மீறியே சோதிக்கப்பட்டதுதான் மிச்சம்.

மதம் மதம் சார்ந்த குறியீடுகள் என்று பேசவரும் அயல்மொழிப் புத்தகங்களை அவை ரொம்ப பிரபலம் என்பதாலேயே  மொழிபெயர்த்து விடுவதில் உள்ள முதல்தடையே வாசிப்பவருக்கு அதைப்பற்றிய பரிச்சயம் ஏதோ கொஞ்சம் இருக்கும் என்று கற்பனை செய்துகொள்வதுதான்! அதேபோல மொழி பெயர்த்தவர்களுக்காவது அப்படிப் பரிச்சயம் இருந்ததா என்றால் அதுவும் படுசுத்தம். ஆக ஆங்கிலத்தில் ஏற்கெனெவே படித்து படமாகவும்  பார்த்த ஒரு  த்ரில்லர் ரக நாவலைத் தமிழில் படித்த அனுபவம் ஒரு சொத்தைக்கடலையைக் கடித்து நேரமானபின்னாலும்கூட ஒரு அடிக்கசப்பு இருக்குமே அதைவிடக் கொடுமையானது.  



தமிழில் டாவின்சி கோட் படித்து முடித்ததில் ஏற்பட்ட தைரியம், மகனுடைய புத்தக சேகரத்தில் இங்கே வந்து  சேர்ந்தவற்றில் ஜெயமோகனுடைய  விஷ்ணுபுரம் நாவலை நேற்றைக்குப் படிக்க எடுத்துக் கொள்கிற அளவுக்கு நெஞ்சுரத்தைக் கொடுத்திருக்கிறது.

கொரோனா சோதனைக்காலத்தை வெல்ல ஜெயமோகனை வாசிப்பது என்றாகியிருக்கிறதே, அது ஒன்று போதாதா?  மீண்டும் சந்திப்போம்.      

Saturday, May 2, 2020

பார்த்தது! கேட்டது! படித்ததில் பிடித்தது!

இன்றைக்குப் பார்த்த செய்திகளில் முக்கியமானதாக எனக்குப் படுவது #MakeChibaPay என்ற ஒற்றை முழக்கத்துடன் சில நாடுகள் முன்னெடுத்திருக்கிற சில விஷயங்கள்தான்! சீனா தன்னுடைய ஆதிக்கவிஸ்தரிப்புக் கனவுகளில்  நிறையவே தப்புக்கணக்குப் போட்டதுதான் மூலகாரணம், nCov 19 வைரஸ் சீனாவின் கனவுகளை மொத்தமாகவே முடமாக்கிவிடும் போலத்தான் நிலவரம் இருக்கிறது.

   

இந்தியா இந்தவிஷயத்தில் மிகவும் நிதானமான போக்கைக் கடைப்பிடிப்பது உசிதம்தானா? கேள்வி கேட்கலாம் தான்! ஆனால் பதில் சொல்வாரைத்தான் காணோம்! சீனாவிலிருந்து வளர்ந்த  நாடுகள் பலவும் தங்களுடைய தொழிற்சாலைகளை மூடிவிட்டுவெளியேறத் தயாராகி வருவதில் இந்தியாவுக்கு ஆதாயம் என்று பேசப்பட்டவை கூட வெறும் ஊகங்களாக மட்டுமே நின்று போயின. சீனாவை விட்டு வெளியேறும் உற்பத்திக்கூடங்களில் பெரும்பாலானவை வியட்நாமைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன. இன்றைக்கு உலகின் மிக மலிவான 
உற்பத்திக்  கூடமாக இருக்கும் சீனாவை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் இந்தியாவை கொண்டுபோய் வைக்கிற அளவுக்கு இந்தியத் தொழிலதிபர்கள் எவரும் தயார் நிலையில் இல்லை. அரசின் வரிச் சலுகைகளில் மட்டுமே ஒட்டுண்ணிகளாக உயிர்வாழப் பழகியவர்களிடம் புது முயற்சிகள், தயாரிப்புக்கள் என்று சந்தைக்குத் தகுந்தபடி மாறுங்கள் என்று சொன்னால் எப்படி? குறைந்தபட்சம் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் கூடத் தங்களை புதுப்பித்துக்கொள்ள, உளநாட்டிலேயே தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளத்  தயாராக இல்லாத ஒரு தொழில்துறையை என்னவென்று மதிப்பிடுவீர்கள்?  சீனாவும் இன்னும் பல நாடுகளும் முன்னெடுத்த RCEP பிராந்திய அளவிலான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இந்தியா ஒதுங்கி கொண்டது இந்தியத் தொழில்துறை இன்னமும் மாற்றத்துக்குத் தயாராக இல்லை என்பதனால் தான் என்பதைக் கசப்போடு நினைவு படுத்திக்கொள்ள வேண்டி வருகிறது. இப்போது இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தியிருக்கிற நெருக்கடி பலபுதிய வாய்ப்புக்களையும் சேர்த்தே கொண்டுவந்திருக்கிறது. 


இந்தக்கூத்து பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில்தான்! 

இன்றைக்கு படித்ததில் மிகவும் பிடித்தது: 

குட்டி தமிழ்வாணன்

ஒரு எழுத்தாளர் பற்றி மிகையாக அந்த காலத்தில் கற்பனை கதைகள் சிறுவர்கள் மத்தியில் இருந்தது.
தமிழ்வாணனுக்கு ஒரு கண் கிடையாது. ஒரு கை கிடையாது. இப்படி.
பள்ளிக்கூட லைப்ரரிகளில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் புத்தகங்களுக்கு செம டிமாண்ட்.
சங்கர்லால் துப்பறிகிறார். அப்புறம் துப்பறியும் கதைகள் தமிழ்வாணன் துப்பறிகிறார்.

’கல்கண்டு’ தமிழ்வாணன் ஒரு pompous person.
தன்னைப்பற்றி எப்போதும் மிகப்பெரிய அளவில் பில்ட் அப் பண்ணுவார். எம்.ஜி.ஆர் காவல்காரன் படத்தில் நடித்ததற்கு பிறகு தொப்பியுடன் எப்போதும் பொது இடங்களுக்கு வர ஆரம்பித்தார். தொப்பி, கூலிங் க்ளாஸ் சகிதம் தான் எப்போதும் இருக்க ஆரம்பித்தார். கல்கண்டு பத்திரிக்கையில் தமிழ்வாணன் கேள்வி பதில்கள் பிரபலமானவை.

கேள்வி : எம்.ஜி.ஆர் இப்போது எப்படியிருக்கிறார்?

தமிழ்வாணன் பதில் : ’எம்.ஜி.ஆர் இப்போது ஒரு குட்டி தமிழ்வாணன் போல் இருக்கிறார். தமிழ்வாணன் தொப்பி வைத்திருப்பது போல அவரும் தலைக்கு ஒரு தொப்பி வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்வாணன் கறுப்பு கண்ணாடி போட்டிருப்பது போல எம்.ஜி.ஆரும் கண்ணுக்கு கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார். மொத்தத்தில் அவர் ஒரு குட்டி தமிழ்வாணன் போல மாறியிருக்கிறார்.’

Worst Arrogance. Thinking too much of oneself. Superiority complex.

அன்று எம்.ஜி.ஆருக்கு இருந்த பிரமாதமான அந்தஸ்து தெரிந்தும் இப்படி ஒரு பீற்றல்.
எம்.ஜி.ஆர் என்ன, எம்.ஜி.ஆர் ரசிகர்களே இதைப்பார்த்து எரிச்சல் படாமல் இருக்க முடியுமா?

கல்கண்டு பத்திரிக்கையில் எப்போதும் எம்.ஜி.ஆர் மலையாளி, கிழவன் என்றெல்லாம் கிண்டல் செய்து கொண்டுமிருந்தார்.

உலகம் சுற்றும் வாலிபன் படத் தயாரிப்பு காலத்தில் எம்.ஜி.ஆர் ஹாங்காங்கில் தமிழ்வாணன் சட்டையைப் பிடித்து மிரட்டி எச்சரித்த போது மிரண்டு போய்விட்டார்.‘துணிவே துணை’ என்று முழங்கியவர் கல்கண்டு ஆசிரியர்.

“நூறு வயது வரை வாழ்வது எப்படி?” என்று விளக்கமாக ஒரு புத்தகம் எழுதினார்.

தமிழ்வாணனுக்கு அப்புறம் தான் ஐம்பது வயது முடிந்தது. அதன் பின் ஐம்பத்தொரு வயதும் முடிந்து ஒரு ஆறு மாதத்தில் செத்துப்போனார். ஐம்பத்தொன்றரை வயது தான் தமிழ்வாணனுக்கு லபித்தது.
அவர் இறந்து நாற்பத்தியொரு வருடங்கள் இப்போது ஓடி விட்டது. நூறு வயதாக இன்னும் எட்டு வருடங்கள் இருக்கிறது.

The advise you tell others is the advice you need to follow.

இவருக்கும் கண்ணதாசனுக்கும் ஏதோ மனஸ்தாபம் இருந்திருக்கிறது.

’கண்ணதாசன்’ மாதப் பத்திரிக்கையில் ‘அடுத்த இதழில் மாஸ்டர்  ஆஃப் ஆல் ஃப்ராட்ஸ் பற்றி ‘ என்று அறிவித்து ஒரு குறிப்பு இருந்தது.தமிழ் வாணன் தான் அது என்று பரவலாக ஹேஸ்யம்.

அப்போது தமிழ்வாணன் அகால மரணம் .

அடுத்த கண்ண தாசன் இதழில் மாஸ்டர் ஆஃப் ஃப்ராட்ஸ் கட்டுரை எதுவும் வெளியாகவில்லை. கப்சிப்.

வலையெழுத்து எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இன்றும் R P ராஜநாயஹம் எழுத்தே சாட்சி.

மீண்டும் சந்திப்போம்.  
  
   

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)