Showing posts with label திரைப்படங்கள். Show all posts
Showing posts with label திரைப்படங்கள். Show all posts

Thursday, April 15, 2021

#கர்ணன் படத்துக்கு #CSகர்ணன் என வைத்திருந்தால் இன்னும் கனப் பொருத்தம்!

கர்ணன் திரைப்படத்தைக் குறித்து உதயநி!தி தெரிவித்த கருத்தை ஏற்று திரைப்படக்குழுவினர் திருத்தம் செய்து இருக்கிறார்களாம்! ஏனடா திருத்தச் சொன்னோம் என்று உதயநிதியே தலையிலடித்துக் கொண்டு ஜகா வாங்கிய மாதிரி ஆகியிருக்கிறது என்று சொல்லாமல் சொல்கிறது பிபிசி தமிழ்.


1997 என்று முதலில் சொன்னதை இப்போது இப்படி மாற்றி சொன்னதால் என்ன ஆகிவிட்டது? எதனால் உதயநிதி இதை இனிமேலும் பெரிதுபடுத்தவேண்டாம் என்கிறரீதியில் அறிக்கை விட்டாராம்? 

 Murali Seetharaman  மதிப்பீட்டாளர்

 39 நி 
"கர்ணன்" படத்தில் மாரி.செல்வராஜ் - 1990 களின் பிற்பகுதியில் என்று ஒரு கார்டு போட்டாராம்! அதாவது அந்தக் கலவரம் எல்லாம் நடந்தது கலைஞர் ஆட்சியில் என்று அர்த்தம் வருதாம்!
நான் படம் பார்க்கவில்லை -
ஆனால் 1996 ல் கலைஞர் ஒரு மாபெரும் Sweep ல் - தமாகா கூட்டணி, ரஜனிகாந்த் ஆதரவு எல்லாம் பெற்று - ஆட்சிக்கு வந்த அந்த Tenure ல் பல கலவரங்கள் நடந்தன. (1996 - 2001) தென்மாவட்டங்கள் ரத்தக் காடாகக் காட்சியளித்தன.
கலைஞர் ஒவ்வொரு ஜாதியையும், மதத்தாரையும் திருப்தி செய்ய மாவட்டத்துக்கு எல்லாம் தலைவர் பெயரை வைப்பார். ராஜாஜி பார்ப்பனர் என்பதால் அவர் பிறந்த அன்றைய தருமபுரி மாவட்டத்துக்கு மட்டும், எத்தனையோ கோரிக்கை வைத்தும் மறுத்துவிட்டார் என்பது வேறு விஷயம்!
1989 ல் ஆட்சிக்கு வந்தவுடன் திண்டுக்கல் காயிதே மில்லத் மாவட்டம் என்றார். அதற்கு முன்பு MGR திண்டுக்கல்லை அண்ணா மாவட்டம் என்றார் - அதிமுக தோன்றியவுடன் போட்டியிட்டு ஜெயித்த முதல் தேர்தல் திண்டுக்கல் பார்லிமெண்ட் தொகுதி இடைத்தேர்தல் என்பதால்!
கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் அண்ணாதுரையை திண்டுக்கல்லில் இருந்து பிருஷ்டத்தில் ஒரு உதை விட்டு விரட்டி அவரை - அப்போது காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டிருந்த - செங்கல்பட்டுக்கு அனுப்பி - "செங்கை அண்ணா மாவட்டம்"- என்றார்! திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் - புதுக்கோட்டை பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டம் ... இப்படி எல்லாம் ஆனது!
இதன் க்ளைமேக்சாக வீரன் அழகுமுத்துக் கோன் மாவட்டம் என்று தென்காசியைத் தலைநகராகக் கொண்டு கருணாநிதி உருவாக்க முயன்ற போது பெரும் கலவரங்கள் உருவாயின.
பிறகு இனி எந்த மாவட்டத்துக்கும்...
எந்தப் போக்குவரத்துக் கழகத்துக்கும்...
தனிநபர்களின் பெயரைச் சூட்டுவதில்லை என்று அரசாங்கமே ஒரு கொள்கை முடிவு எடுத்து...
அதுவரை வைத்த அத்தனை பெயர்களையும் அழிக்கும் அளவுக்கு... தென்மாவட்டக் கலவரங்கள் பெரும் வீச்சை ஏற்படுத்தின. இது கலைஞர் ஆட்சியில் - அதாவது மாரி செல்வராஜ் 'பாஷை'யில் சொல்வதானால்...
1990 களின் பிற்பகுதியில் என்பதை மறுப்பதற்கில்லை!
எனக்கு இந்த மாரி செல்வராஜ், வெற்றிமாறன், பா.ரஞ்சித், அமீர் வகையறா ஆசாமிகளின் மீதெல்லாம் -அவர்களுடைய கலைப்படைப்புகளை வைத்து - பெரிய மரியாதை கிடையாது!
ஆனால் திமுகவினர் இப்போது அவர்கள் மீது பாய ஆரம்பித்து இருப்பது தமாஷாக இருக்கிறது! அதாவது மாரி செல்வராஜ் "நீல" சங்கியாம்!
திமுக ஆட்சியில் கலவரங்கள் நடந்ததாக காட்டிவிட்டாராம்! தலித் இயக்கத்தவரின் அடையாளம் நீலசட்டை - எனவே "நீல" சங்கி! ஆனால் திமுகவினரின் வரையறைப்படி இன்னும் பல நிறங்களில் "சங்கி" கள் உள்ளனர்!
CPM கட்சி - அதன் ராஜ்ய சபா உறுப்பினர் - "சிகப்பு" சங்கி! ஏனென்றால் பாஜக அரசு கொண்டு வந்த
"ஏழைகளுக்கான 10% ஒதுக்கீடு" (EWS) மசோதாவை CPM ஆதரித்தது அல்லவா? அதை ஆதரித்து 'பார்ப்பனர்' T.K.ரங்கராஜன் பேசியபோது - கனிமொழி குறுக்கே வந்து - "என்னங்க இது அநியாயம்?" - என்று கத்திவிட்டும் போனார் அல்லவா? எனவே திமுக வரையறைப்படி CPM - "சிவப்பு" சங்கி!
வேலூர் இப்ராஹீம் போன்ற முஸ்லீம்கள், இந்துக்களின் நியாயத்தை உணர்ந்து பேசுவதால் அவர் "பச்சை" சங்கி!
கேரளாவில் P.C.ஜார்ஜ் என்ற காங்கிரஸ்காரர்-
"லவ் ஜிகாத் என்பது நிச்சயம் பெருமளவில் நடக்கிறது; இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்"- என்று பேசியதால் அவர் கிறிஸ்தவ 'வெள்ளை' சங்கி!
"அம்பேத்கர் சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க முன்மொழிந்தார்"- என்று முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி போப்டே பேசியுள்ளார்! எனவே அவர் நீதிபதி கவுன் நிறத்தால் "கறுப்பு" சங்கி!
இன்னும் சீமான் -"தமிழ் தேசிய" சங்கி!
கமல் - "மய்ய"- சங்கி!
ஆக... ஆக... ஆக...
திமுகவினர் பார்வையில்....



நீல சங்கி, சிகப்பு சங்கி, கதர் சங்கி, கறுப்பு சங்கி, பச்சை சங்கி, தமிழ் தேசிய சங்கி, மய்ய சங்கி...
இப்படிப் பலரும் உண்டு!
உண்மையான RSS சங்கியைத் தவிர இப்படிப்பட்ட கலர் கலரான "சங்கி" கள்தான் அதிகம் போல!
ஆனால் திமுகவினர் வசதியாக ஒன்றை மறந்து விடுகின்றனர்! 1999 - 2004 வாஜ்பாய் மந்திரிசபையிலேயே பங்கேற்று காபினெட் மந்திரியாகவே இருந்தாரே - முரசொலி மாறன் - அவர் எந்தவகை "சங்கி"?
ஒருவேளை "திராவிட" சிங்கியோ?

கர்ணன் திரைப்படத்தைவைத்து அதிமுகவை மட்டம் தட்ட நினைத்த திமுகவினரின் சாயம் வெளுத்துப் போனது மட்டும்தான் மிச்சம்! மான்சோலை தேயிலைத் தொட்டது தொழிலாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டது , திமுக ஆட்சியில்தான் என்பதை மட்டுமல்ல, ஒவ்வொரு சாதியையும் திருப்திப்படுத்த கருணாநிதி என்னென்ன செய்தார், பிரச்சினை பெரிதானதும் எப்படியெல்லாம் ஜகா வாங்கினார் என்பதையும் இந்த முகநூல் பகிர்வு கொஞ்சம் சுருக்கமாகச் சொல்கிறது.

பாரதத்துக் கர்ணன் கொடையாளி! அர்ஜுனனுடன் கொண்ட பகைமை, துரியோதனனுடன் கூட்டாளி ஆக்கி வைத்தது. அவ்வளவுதான்.ஆனால் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் வகையறா கர்ணன் பெயரைவைத்துத் தங்களுடைய வன்ம அரசியலை மட்டுமே முன்னெடுத்து வருகின்றனர் என்ற முந்தைய கருத்தில் மாற்றமில்லை.

பதிவின் தலைப்புக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? C S கர்ணன் என்று கூகிளிட்டு தேடிப்பாருங்கள்!

மீண்டும் சந்திப்போம்.

Tuesday, December 9, 2014

காண்பதெல்லாம் உண்மையல்ல! No one is what they seem!


குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படத்தில் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டருக்கே என்று ஆரம்பித்து கேட்கிற கேள்வி அந்தநாட்களில் ரொம்பவுமே பிரபலம்! வீடியோவில் இரண்டாவது நிமிடத்தில் இருந்து அந்த கேள்வியை, கேட்டுவிட்டு ஓமகுச்சி நரசிம்மன் படுகிற பாட்டையும் இங்கே பார்க்கலாம்,




ஆனால் அதே மாதிரி ஒரு சிச்சுவேஷனில் எட்கார் ஆலன் போ என்கிற  ஒரு அமெரிக்கக் கதாசிரியர் "The System of Dr. Tarr and Prof. Fether" என்றொரு கதை எழுதியிருப்பது Stonehearst Asylum என்கிற திரைப் படத்தைப் பார்க்கிற வரை தெரியாது. 1890 களில் இங்கிலாந்தில் விக்டோரியா ராணி காலத்துப் பின்னணியில் ஒரு மனநலக் காப்பகத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். மனநலம் பிறழ்ந்தவர்களுக்கு அந்த நாட்களில் அளிக்கப்பட்ட கொடூரமான சிகிச்சைமுறைகள் கொஞ்சம் கோடிட்டுக் காட்டப் பட்டாலும் பயமுறுத்துகிற படமாக எல்லாம் இல்லை.

ஒரு வகுப்பறையில் மனநலம் பிறழ்ந்தவர்கள் பற்றியான லெக்சருடன் திரைப்படம் தொடங்குகிறது. எலைசா கிரேவ் என்கிற புத்திசுவாதீனமற்ற இளம் பெண்ணை வகுப்பறைக்கு அழைத்து வந்து அவளுடைய கேஸ் விவரிக்கப் படுகிற நேரத்திலேயே அவள் தனக்கு ஒன்றுமில்லை, காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறாள். ஒருவிதமான வலிப்புடன் அவள் மயக்கமுற பிரெண்டன் க்ளீசன் (நடிகர்)  அந்த நோயாளியைப் பற்றிக் கொஞ்சம் சொல்வதுடன் காட்சி முடிகிறது.


கிறிஸ்துமசை ஒட்டி பனிப்பொழிவில் ஸ்டோன்ஹெர்ஸ்ட்  அசைலம் அடுத்த காட்சியாக விரிகிறது. எட்வர்ட் நியூகேட் என்கிற மருத்துவர்  வசதி படைத்தவர்களுக்கான இந்தமனநலக்காப்பகத்தை நடத்தி வரும் டாக்டரிடம் அவருடைய சிகிச்சை முறைகளைத்தேரிந்து கொள்வதற்காக வந்து சேர்கிறார். முதல் காட்சியில் அறிமுகமான எலைசா கிரேவ் அங்கே இருக்கிறார். டாக்டர் சிலாஸ் லாம்ப் கொஞ்சம் புரட்சிகரமான சிகிச்சை முறைகளைக் கையாள்கிறார். தன்னை ஒரு குதிரையாகக் கற்பனை செய்து கொள்ளும் ஒரு வசதி படைத்தவர், உறவினர்களுக்கோ சங்கடம் ஆனால் இந்தக்காப்பகத்தில் அப்படியே இருக்கும் சுதந்திரம். கதாநாயகியின் கதையும் அதே போலத்தான். எலைசா கிரேவுக்கு பியானோ வாசிப்பதில் ஈடுபாடு, எவ்வளவு நேரம்ஆனாலும் வாசித்துக் கொண்டிருக்க அனுமதிக்கப்படுகிறார். இப்படியே ஒவ்வொரு நோயாளிக்கும் அவரவர் இஷ்டப்படியே நடந்து கொள்ள சுதந்திரம். மருத்துவர் எட்வர்ட் நியூகேட் நோயாளி எலைசா கிரேவ் மீது மையல் கொள்கிறார்.

அடுத்து முதல் திருப்பமாக முதலில் டாக்டர் சால்ட் வசமிருந்த அந்தக் காப்பகம் டாக்டர் சிலாஸ் லாம்ப் வசமாகிவிட்டதும் டாக்டர் சால்ட் உட்பட அவருடைய உதவியாளர்கள் எல்லோருமே கீழே பாதாள கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும் எட்வர்டுக்குத் தெரிய வருகிறது. டாக்டர் சிலாஸ் லாம்ப் அங்கே சிகிச்சை பெற்று வந்த மனநோயாளி என்பதும் தெரிய வருகிறது.கீழே அடைபட்டிருப்பவர்களை விடுவிக்க எட்வர்ட் உதவுவதாக முடிவு செய்து எலைசாவிடம் அவளுடைய ஒத்துழைப்பையும் கேட்கிறார்.  முதலில் அவரை நம்ப மறுக்கும் எலைசா அவளிடம் காதலில் விழுந்தே தேடி வந்ததாகச் சொல்கிற கட்டம் நன்றாக இருக்கிறது.

இதற்கிடையே கீழே அடைப்பட்டிருந்தவர்களில் இருவர் வெளியே தப்பித்துச் செல்கையில் டாக்டர் சிலாஸ் லாம்பின் ஆட்கள் ஒருவரை சாகவிட்டு, இன்னொருவரைத் திரும்பக் கொண்டுவருகிறார்கள். கதாநாயகன் எட்வர்டும் வில்லன்களிடம் சிக்கிக் கொண்டு எலெக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மெண்டுக்குத் தயார் செய்யப்படுகையில் கதாநாயகியின் உதவியோடு தப்புகிறார் டாக்டர் சிலாசாக இருந்தவர் பழையபடியே மனநோயாளியாக.

இப்போது, க்ளைமாக்சில் எதிர்பாராத அடுத்த திருப்பம். இந்தக் காப்பகத்தை பரிசோதிக்க டாக்டர் எட்வர்ட் நியூகேட் என்று சொல்லிக்கொண்டு ஒரு உதவியாளருடன் இன்னொருத்தர் வந்து சேர்கிறார் அப்படியானால்,முதலில் வந்த எட்வார்ட் நியூகேட் யார்,கதாநாயகியை முதன்முதலில்  எங்கே எப்படிப் பார்த்தார் எப்படிக் கண்டவுடன் காதல் வந்து தேடிக்கொண்டு வந்தார் என்பது ரொம்பவும் சுவாரசியமாகச சொல்லப் பட்டிருக்கிறது இந்த ஒரு சுவாரசியமான திருப்பத்துக்காக மட்டுமே திரைப் படம் எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது என்று நினைக்கிறேன் படத்தைப்  பார்த்துவிட்டு அது சரிதானா என்பதை நீங்களும் கொஞ்சம் சொல்லுங்களேன்!

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)