Friday, January 31, 2020

ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன்! வாசித்ததும் நேசித்ததும்!

இன்று எதையோ தேடப்போக, ஜெயகாந்தன் எழுதிய உன்னைப் போnல் ஒருவன் நாவல் கைக்கு கிடைத்தது. இந்தப்புத்தகத்தை வாசித்து முப்பது வருடங்களுக்கும் மேலாகியிருக்குமே, கொஞ்சம் புரட்டிப்பார்க்கலாம்  என்று வாசிக்க ஆரம்பித்தவனை, ஜெயகாந்தனுடைய நீளமான முன்னுரை நாவலுக்குள் அப்படியே இழுத்துக் கொண்டது என்பதில், இன்றைய பகல்பொழுது வாசிப்பும் யோசனையுமாகப் போனதில் ஜெயகாந்தன் எழுத்தின் வீரியம் மீதான பிரமிப்பு இன்னமும் அடங்க மறுக்கிறது.


என்னிடமிருக்கிற இந்தப்புத்தகம் மதுரை மீனாட்சி புத்தகநிலையத்தாரால் 1964 இல் முதல் பதிப்பாக வந்ததன்  மறுபதிப்பாக 2014 செப்டெம்பரில் வந்த பிரதி. 195 பக்கங்கள். அதற்கு ஜெயகாந்தன் எழுதிய  முன்னுரையே 10 பக்கங்கள். விலை நூறு ரூபாய், இதை நான் எங்கே எப்போது வாங்கினேன் என்று யோசித்துப் பார்த்தபோதுதான் இது நான் வாங்கியதில்லை என்பதே உறைத்தது. மகன் வாங்கி வாசித்ததை இங்கே விட்டுப் போயிருக்கிறான்! புத்தகமாகுமுன் ஆனந்த விகடனில் 15 வாரம் தொடர்கதையாக வெளிவந்திருக்கிறது 

கதை தங்கம் என்கிற காதலனால் கைவிடப் பட்ட சித்தாள் வேலைக்குப் போகிற ஒரு பெண்மணி, தன்னுடைய 10 வயது மகன் சிட்டியோடு, தனித்து வாழ்வதிலிருந்து தொடங்குகிறது. தகப்பன் முகத்தை பார்த்திராத சிட்டி, ஆரம்பத்தில் பொறுப்பே இல்லாதவனாகத் தான் வளர்கிறான். தொண்டர் துரைக்கண்ணு என்றொரு ஐஸ் ஃபேக்டரி முதலாளியின் அறிமுகம் கிடைப்பதில் சிட்டிக்குத் தாயின் அருமை தெரிகிறது. பகலில் ஐஸ் ஃபேக்டரி வேலை, இரவில் முதலாளி நடத்தும் இரவுப்பள்ளியில் படிப்பு என்று நல்லவிதமாகப் போகிறது. இந்த நேரத்தில் மாணிக்கம் என்கிற ஒரு சோசியனுக்கும் தங்கத்துக்கும் நெருக்கமான உறவும் வயிற்றில் கருவாகவும்  வளர்கிறது. மாணிக்கம், தங்கம், சிட்டி, இவர்களுடன் ஒரே வீட்டில் வசிக்க வருவதில், மாணிக்கம் என்னதான் தந்தை மாதிரிப் பாசமாகப் பழகினாலும், சிட்டிக்கு மாணிக்கத்தைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. வேலைக்குப் போவதை விடுவதுடன் வீட்டையும் விட்டு வெளியேறுகிறான்  மாணிக்கம் புரிந்து கொண்டு தங்கத்தை விட்டுப் பிரிந்த செய்தி தெரிந்த பிறகுதான்  தாயுடன் வசிக்க மீண்டும் வருகிறான். தங்கத்துக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. மகனை அழைத்து, தன்னுடைய பூர்வக்கதையைச் சொல்லி, உன் தங்கையை என்மாதிரி இல்லாமல் நல்லவிதமாய் வளர்த்து ஆளாக்கு என்று சொல்லி, இறந்தும் போகிறாள். சிட்டி இப்போது, தாயையும் இழந்து நிற்கிற நிலையில் இருக்கிற ஒரே உறவு அவன் தங்கைதான்!

சுற்றியுள்ள மனிதர்கள் பழிக்காமல் உதவுகிறார்கள். சிட்டி மறுபடி பகலில் வேலை அப்புறம் படிப்பு, அதன் பிறகு தங்கையை எப்படி வளர்த்து ஆளாக்கலாம் என்ற கனவுகளோடு வாழ ஆரம்பிப்பதுடன் கதை முடிகிறது. அடித்தட்டு மக்களுடைய வாழ்க்கையை யதார்த்தமாக விவரிக்கிற கதைமாந்தர்கள் ஜெயகாந்தனின் இந்த நாவலில் இப்போது படித்து முடிக்கிற தருணத்திலும் வாழ்கிறார்கள்.


1964 மே மாதம் புத்தகமாக வந்த உன்னைப்போல் ஒருவன் ஜெயகாந்தன் தயாரித்து இயக்கி திரைப்படமாகவும் 1965 இல் வெளிவந்தது. பாடல்களே இல்லாமல், வெறும் ஒருலட்ச ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில், 21 நாட்களிலேயே எடுக்கப்பட்ட படம் என்பது இன்றைக்கு கொஞ்சம் நம்பமுடியாத ஆச்சரியமாகத்தான் இருக்கும்.  தேசியத் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படங்களில் மூன்றாவது பரிசைப் பெற்ற இந்தப்படத்தின் படச்சுருள் காணாமல் போய்விட்டது என்கிறார்கள்.


மீண்டும் சந்திப்போம் 
                

Thursday, January 30, 2020

காந்தியைப் பற்றி சில நூல்கள்! அப்புறம் ஒரு அக்கப்போர்!

பக்கா டூப்ளிகேட்டாக, காந்தி பெயரைத் தனது ஒட்டுவாலாக வைத்துக் கொண்டிருக்கிற ராகுல் காண்டி இன்று கேரளாவில் வயநாடு தொகுதி, கல்பேட்டா பகுதியில் அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுங்கள்  என்று கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து நடக்கும் இந்தக் கூட்டத்தில். கோட்சேவுக்கும் நரேந்திர மோடிக்கும் ஒரே சித்தாந்தம் தான் என்று உளறியிருக்கிறார்.


நேரு சிறையிலிருந்த நாட்களில் தன்னுடைய ஒரே மகளுக்கு உலக சரித்திரத்தைச் சொல்கிற மாதிரி எழுதிய கடிதங்கள் பின்னாட்களில் Glimpses of World Hostory என்று புத்தகமாகவும் வந்ததாகச் சொல்வதுண்டு! ஆனால் இந்திராவுக்கு, அது மண்டையில் எறியதுமில்லை!  தன்னுடைய வாரிசுகளுக்கு குறைந்த பட்ச சரித்திரத்தைக் கூட,கற்பிப்பதற்கு முனைந்ததுமில்லை! வாரிசுகளும் கூட, ராகுல் காண்டி மாதிரித் தற்குறிகளாகத்தான் இருக்கிறார்கள் என்பதை மேலே 22 நிமிட வீடியோவில் நேரடியாகவே பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும். 

வீடியோ 4 நிமிடம் 

ஒரிஜினல் காந்தியின் பிடிவாதம், என்வழிப்படி விருப்பமானால் சேர்ந்துவா, இல்லையானால் ஒதுங்கிப்போ என்பது மாதிரியான சர்வாதிகார குணம் பிடிக்காதவர்கள் கூட அவரை வெறுத்ததில்லை. தன்னுடைய போராட்டத்த்தில் இஸ்லாமியர்களும் கலந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, மகாத்மா காந்தி விட்டுக் கொடுத்துப் போனமாதிரி வேறெந்தத் தலைவரும் அவ்வளவு இறங்கிப்போனதில்லை. ஆனால் காந்தியை முகமது அலி ஜின்னா நம்பவே இல்லை!  கிழவன் தன்னுடைய அபிமான ஜவகருக்குத் தான் சாதகமாக இருப்பான் என்று வளர்த்துக் கொண்ட அதீத அவநம்பிக்கை, ஹிந்துக்களும் இஸ்லாமியரும் ஒன்றாக ஒத்துவாழவே முடியாது என்ற பிரிவினை வாதமாக வளர்ந்து, தேசம் பிளவுபட்டதில் முடிந்தது.

1946 அக்டோபர் நவம்பரில் வங்காளத்தில் இருந்த  ( இப்போது  வங்கதேசத்தில் சிட்டகாங் அருகில்) நவகாளியில் ஹிந்துக்களை ஆயிரக்கணக்கில் இஸ்லாமியர்கள் கொன்றுகுவித்து, கட்டாய மதமாற்றம்,கற்பழிப்பு என்று அட்டூழியம் தொடர்ந்ததில்,  நான்கு மாத காலம் மகாத்மா காந்தி அந்தப் பிரதேசம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து சமாதானம் பேசியது பாதிக்கப் பட்ட மக்களிடம் சிறிதும் எடுபடவில்லை. மிச்சம் மீதி இருந்தவர்கள் இப்போதைய மேற்குவங்கம், திரிபுரா, அஸ்ஸாம் பிரதேசங்களுக்கு குடிபெயர்ந்தனர். எழுத்தாளர் சாவி எழுதிய நவகாளி யாத்திரை, எந்தக் காலத்திலோ படித்தது, எந்த அளவுக்கு நேர்மையாக விஷயத்தைச் சொல்லியிருந்தது என்று இப்போது நினைவில் இல்லை, மீள்வாசிப்பு செய்ய நினைக்கிறேன். (Feb 1, வெள்ளிக் கிழமை வரை இந்தப்புத்தகத்தை அமேசானில் இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்)  இணையத்தில் தேடினால் கிழக்கு பாகிஸ்தானாக இருந்து, இப்போது வங்காள தேசமாக இருக்கிற பகுதியில்  தொடர்ச்சியாக இன்று வரையிலும் கூட, ஹிந்துக்கள் எந்த அளவுக்கு கட்டாய மதமாற்றம் கற்பழிப்பு உட்பட ,  வன்முறைக்கு ஆளானார்கள் என்ற தகவல்கள் கொட்டிக் கிடப்பது கிடைக்கும். 
         
#FREE | பத்து நூல்கள் இலவசம் | பிப்ரவரி 01 பிற்பகல் 1.29 வரை
*
சர்வோதயம்
http://bit.ly/Sarvodayam
இந்திய சுயராஜ்யம்
http://bit.ly/HindSwarajTamil
பல ரூபங்களில் காந்தி
http://bit.ly/BahuroopiGandhiTamil
பாபூ அல்லது நானறிந்த காந்தி
http://bit.ly/BirlaOnBapu
மகாத்மா காந்தி நினைவு மாலை
https://amzn.to/2upPveY
நவகாளி யாத்திரை
https://amzn.to/2qOKcDC
தமிழ்நாட்டில் காந்தி
http://bit.ly/TSSRajanGandhi
காந்தி யார்?
http://bit.ly/GandhiYaar
காந்தியும் ஜவஹரும்
http://bit.ly/GandhiyumJawaharum
ஆத்மாவின் ராகங்கள்
http://bit.ly/AathmavinRaagangal  

ஒரு காந்தீயவாதியைப் பற்றிய ஒரு நாவலில், காந்தி மீது ஜனங்களுக்கு எவ்வளவு அபிமானம் இருந்தது என்பதை மிக அருமையாக ஆத்மாவின் ராகங்கள் என்று நா. பார்த்தசாரதி எழுதியிருந்ததை, அதைத் தொட்டு முன்னர் இந்தப் பக்கங்களில் எழுதிய பதிவு  எழுதிப் பத்தாண்டுகளை நெருங்கப் போகிறது.

புத்தகத்தை இங்கே இலவசமாகத் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்! வாசிக்க வேண்டுமெனப் பரிந்துரை செய்கிறேன்  

மீண்டும் சந்திப்போம்.                 

Wednesday, January 29, 2020

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடரும் வரலாற்றுப் பிழைகளும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாய்கிழிய மார்க்சீயம் பேசிக் கொண்டிருந்த காலம் போயே போய்விட்டது தானா? அடுத்த கட்சியின் வரலாற்றுப் பிழைகளை தம்பட்டம் அடிப்பவர்கள்தொடரும் தங்களுடைய வரலாற்றுப் பிழைகளை அறிந்திருக்கிறார்களா? தாங்களே (இடதுசாரிகள்) சரியான அரசியல் மாற்று என்று மார்தட்டிக் கொண்டிருந்தவர்கள், இன்றைக்கு கூனிக் குறுகிப்போய், திமுக / காங்கிரஸ் பல்லக்கில் பவனி வர உதவி செய்யும் சுயநலம் அற்ற NGOவாக ஆகி விடச் சித்தமாகிக் கொண்டிருக்கிறார்களா? எதற்கும் இந்தப்பதிவில் இரண்டாவது வீடியோவை ஒருமுறை பார்த்துவிடுங்கள்!
     

ஹிந்துஸ்தான் டைம்ஸில் இன்றைக்குப் பார்த்த இரண்டு செய்திகள், மார்க்சிஸ்டுகள் ஒரு அரசியல் கட்சியாக இயங்குகிற வேகத்தையும் சக்தியையும் இழந்து விட்டார்களோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிற விதமாக இருந்ததைப் பார்த்தேன். முதலில் ஆட்சி அதிகாரத்தையும் மக்கள் செல்வாக்கையும் இழந்து நிற்கிற மேற்குவங்கச் செய்தியைப் பார்த்துவிடலாம்! சௌபத்ரா சாட்டர்ஜீயின் அலசல் இங்கே  

வருகிற ஏப்ரலில் மேற்குவங்கத்தின் 5 ராஜ்ய சபா இடங்கள் காலியாவதில், இப்போதிருக்கிற கட்சிகளின் பலத்தை வைத்துப்  பார்த்தால் திரிணாமுல் காங்கிரஸ் 4 இடங்களில் சுலபமாக ஜெயித்து விடும். மீதமிருக்கிற ஒரு இடத்தை சீதாராம் யெச்சூரிக்காக, மேற்கு வங்க மார்க்சிஸ்டுகள் மறுபடியும் முயற்சிக்கிறார்களாம்!
2017 ஆம் ஆண்டு  யெச்சூரியின் ராஜ்யசபா பதவிக் காலம் முடிந்ததை ஒட்டி காங்கிரசே முன்வந்து அந்த இடத்தை யெச்சூரிக்கு விட்டுத்தர முன்வந்ததை, கட்சிக்குள் கை ஓங்கியிருந்த கேரள மார்க்சிஸ்டுகள், காங்கிரசோடு ஓட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்று தத்துவார்த்த நிலை (?) எடுத்துக் காலி செய்தது நினைவுக்கு வருகிறதா? அதைத்தான் சௌபத்ரா சாட்டர்ஜீ மார்க்சிஸ்டுகள் தொடர்ந்து வரலாற்றுப்பிழைகளைச் செய்து கொண்டே வருவதில் வல்லவர்கள் என்று வர்ணிக்கிறார். மேற்குவங்க மார்க்சிஸ்டுகளுக்கு லோக்சபாவிலும் இடமில்லை, ராஜ்யசபாவிலும் ஆளில்லை! அதற்காக? இப்போதும் காங்கிரஸ் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்க முன்வருமா? காங்கிரஸ் தன்னுடைய வேட்பாளரைத் தான் நிறுத்துவேன் என்று முடிவெடுத்தால், ஒருவேளை அதற்கே கிடைக்கலாம் அல்லது திரிணாமுல் காங்கிரசுக்கே 5 இடங்களும் என்றாகிவிடலாம்! 

ஆனாலும்  மேற்கு வங்க மார்க்சிஸ்டுகளின் குரலாக ஒலிக்க, மீண்டும் யெச்சூரி என்று மறைமுகமாகஅங்கே உள்ள தோழர்கள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்! மல்லுதேச தோழர்கள் இப்போதாவது ஒப்புக் கொள்வார்களா, மறுபடியும் தத்துவார்த்த நிலையெடுத்து கட்டையைக் கொடுப்பார்களா என்பது கடைசி நேரத்தில் தான் தெரிய வரும்! But the CPI(M) lived up to its reputation of committing blunders, bigger blunders and historic blunders. The party didn’t field Yechury on the ground that he has already enjoyed two terms in the House. There’s a party rule that no member can be given more than two terms in Rajya Sabha. என்று மார்க்சிஸ்டுகளின் தப்பு தவறுகள் தொடர்கதையாக இருப்பதைப் புட்டுவைத்திருக்கிறார். அது மட்டுமா?

So, if the CPIM wants to remain as a political party and not become a political NGO (selflessly helping other parties to prosper) it has little option but to nominate Yechury.Moreover, Yechury is the general secretary of the party and if he represents Bengal - where the party’s vote bank has seen the biggest shift towards the BJP in the last Lok Sabha polls, he can possibly be the best voice of the state CPI(M) in Parliament என்றும் சொல்வதில் மேற்கு வங்க மார்க்சிஸ்டுகள் மீதான பாசம் பீறிட்டுக் கிளம்புகிறது! 

மேற்குவங்கத் தோழர்கள் கதை தான் அப்படிப் போகிறதென்றால் மல்லுதேச மார்க்சிஸ்டுகள் கதை மல்லாந்து படுத்து விம்மிக் கொண்டிருக்கிற மாதிரி இருக்கிறது! ஹிந்துஸ்தான் டைம்சில் இன்று ரமேஷ் பாபு எழுதியிருக்கிற இந்தச் செய்திக் கட்டுரை  படம் பிடித்துச் சொல்கிறது. 
The House witnessed uproarious scenes as the Governor entered the hall. Angry Congress-led opposition legislators blocked his way, raising slogans and placards. With his entry blocked, he stood there for ten minutes. When Speaker P Sivaramakrishanan’s repeated pleas failed to deter them, security personnel forcibly removed agitating law-makers to make way for him.
But the opposition Congress said it was the darkest day in the history of the assembly. “It proved beyond doubt the government is supporting the Governor who day in and out criticises the assembly. It seems Pinarayi Vijayan has entered into an agreement with the Modi government to save him from the Lavalin graft case,” said opposition leader Ramesh Chennithala. 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய பரிதாப நிலை குறித்து இரண்டு செய்திகளும் சொல்லாமல் சொல்வது ஒன்றே ஒன்றுதான்! கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளத் தொடர்ந்து தவறிவருகிற எந்த ஒரு இயக்கமும் பிழைத்திருப்பதற்கான தகுதியை இழந்து விடும் என்பது தான் அது! 
மீண்டும் சந்திப்போம்.   

மனதைக் கொள்ளை கொள்ளும் Beating Retreat 2020

குடியரசுதினக் கொண்டாட்டங்கள் நிறைவு பெறுகிற விதமாக, தலைநகருக்கு வந்த ராணுவத்தின் பல்வேறு பிரிவுகள் தங்களுடைய இருப்பிடத்துக்குத் திரும்ப அழைக்கப்படும் இசைமுழக்கமாக இப்போது நடந்து கொண்டிருப்பதை நேரலையில் பார்த்துக் கொண்டே இதை எழுதுகிறேன்.


16ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் ரோந்துப் பணியில் இருக்கும் படைப் பிரிவுகளை கோட்டைக்குத் திரும்ப அழைக்கும் வழக்கமாக இருந்தது,

இது பழசு 

இந்தியாவில் 1950 இல் தான் முதல் குடியரசு தினக் கொண்டாட்டம் முடிந்த மூன்றாவது நாள் ஜனவரி 29 அன்று முப்படைகளின் வாத்தியக் குழுக்கள் பங்குபெறும், இசைக்கொண்டாட்டமாக, ஆரம்பித்தது. இதன் சிறப்பு விருந்தினராக இந்திய ஜனாதிபதியே இருக்கிறார். சுமார் ஒன்றரை மணிநேரம் நடக்கிற இசைக் கோலாகலத்தைப் பார்க்க முடியாதவர்கள் இங்கே எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்.

மீண்டும் சந்திப்போம்.  
     

Tuesday, January 28, 2020

ஈவெரா! துக்ளக் அம்பலப்படுத்திய உண்மைகளும் தொடர்ச்சியும்!

துக்ளக் 50வது ஆண்டு நிறைவு  நிகழ்ச்சியில் நடிகர் ரஜனிகாந்த் பேசிய ஒரு 13 நிமிடப்பேச்சு தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதென்றே சொல்லவேண்டும்! எதையும் திரித்தும் மிகைப் படுத்தியுமே வெற்றுப்பரப்புரைகளிலே வளர்ந்த திராவிடங்கள் என்னமோ ஈவெரா மீது ரஜனிகாந்த் அவதூறு பரப்பிவிட்டதாக, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று  கூக்குரல் எழுப்பியதில் கடந்த 21 ஆம் தேதி மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்க முடியாது என்று இரண்டே நிமிடப் பேட்டியில் ரஜனிகாந்த் தனது நிலையைத் தெளிவுபடுத்தி விட்டார். ஈவெரா  என்கிற பகுத்தறிவு பிம்பத்தைக் கட்டமைத்து, அதைவைத்தே பிழைப்பு நடத்திவரும் தீ'னா கழகமும், தேவைப்படுகிற நேரத்தில் மட்டும் ஈவெராவின் மகிமைகளைப் பயன் படுத்திக்கொள்கிற இதர கழகங்களும் லபோதிபோவென இன்னமும் கூக்குரல் எழுப்பி வருகின்றன. அதில் துக்ளக் இதழில் வெளியானதென்ன என்ற ஆதாரத்தைக் காட்டாமல் அவுட்லுக் இதழில் 2017 ஆம் ஆண்டு வெளியான கட்டுரையை ஆதாரம் காட்டுவானேன் என்கிற கூக்குரலும் ஒன்று!     

இது இன்று நியூஸ் 7 சேனல் செய்தி!
  

இன்றைக்கு வெளியான (28/1/20) துக்ளக் இதழில் 1971 ஆம் ஆண்டு துக்ளக் இதழில் வெளியான சேலம் திராவிடர் கழக ஊர்வலம் பற்றிய செய்திகள், படங்களை மறுபதிப்புச் செய்திருக்கிறார்கள். ஆக அன்றைக்கு கருணாநிதி துக்ளக் இதழைப் பறிமுதல் செய்து மார்கெட்டிங் ஆசாமிபோல உதவியதைப் போல கழகங்கள் மறுபடியும் துக்ளக் இதழுக்கு மார்கெட்டிங் வேலையைச் செய்திருக்கின்றன என்பது திராவிட மாயை வேகமாகக் கலைந்து வருவதற்கான அடையாளம்! தொடர்ந்து பொய்களின் மீதே கட்டப் பட்ட திராவிடப் பம்மாத்து என்ன செய்வது என்பதறியாமல் திகைத்து நிற்பதில், விஷயம் அவர்கள் கையை மீறிப்போய் விட்டதும் கூடப் புலப்படுகிறதோ!


திராவிட மாயை -- ஒரு பார்வை என்று மூன்று பகுதிகளாக புத்தகம் எழுதிய சுப்பு மணியன் முகநூலில் ஈவெரா பற்றிப்  பகிர்ந்திருந்த சுவாரசியமான இரு பகிர்வுகளை இங்கே தருகிறேன்.

ஈ.வெ.ராவின் ரகசியம்
ராஜா சார் அண்ணாமலை செட்டியாருக்கு அறுவதாண்டு நிறைவுற்ற போது ஆயுஷ் ஹோமம், நவகிரக சாந்தி, பூஜைகள், வேத விற்பன்னர்களுக்கு தானம் ஆகியவை பெருமளவில் நடந்தன. இது குறித்த செய்திகள் அன்றைய அச்சு ஊடகங்களிலும் வெளி வந்தன.
இதையெல்லாம் படித்த ஈ.வெ.ராவுக்கு சூடு அதிகமாகி விட்டது. அண்ணாமலை செட்டியாருக்கு எதிராக போராட்டத்தை அறிவித்தார்.
ஈ.வெ.ராவின் போராட்டம் என்ற செய்தி வந்தவுடன் செட்டியாரை சுற்றியிருந்தவர்களுக்குக் கவலை. "பெரியாரை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று அவர்களை சமாதானப்படுத்திவிட்டு செட்டியார் ஈ.வெ.ராவுக்கு ஒரு தபால் அனுப்பினார்.
தபாலைப் பார்த்தவுடன் ஈ.வெ.ராவின் போராட்ட அறிவிப்பு முடிவுக்கு வந்தது. அந்த தபாலிலிருந்தது ஆயிரம் ரூபாய்க்கான காசோலை. இதுதான் ஈ.வெ.ராவின் ரகசியம்.
திராவிடப் பொய்யும் புரட்டும் ஒன்றா இரண்டா?  
   
திராவிடப் பொய்.
"1971 சேலம் ஊர்வலத்தில் ஹிந்து கடவுளை இழிவுபடுத்தினோம் . அதனால் தி மு க அதிக இடங்களில் ஜெயித்தது" என்று பெரியாரிஸ்டுகள் இப்போது சொல்கிறாரகள்.
1. அந்தத் தேர்தல் பிரசாரத்தில் தி மு கவோ அதன் கூட்டணிக் கட்சியான இந்திரா காங்கிரசோ இதைச் சொல்லி ஓட்டுக் கேட்க வில்லை. அதற்குப்பிறகு எந்தத் தேர்தலிலும் இதைச் சொல்லி ஓட்டுக் கேட்க வில்லை. தி்முக தரப்பில் அப்போது முக்கியமாகப் பேசப்பட்டது பிரதமர் இந்திராகாந்தியால் முன்னிறுத்தப்பட்டு ராஜ்யசபாவில் தோற்கடிக்கப்பட்ட 'மன்னர் மானிய ஓழிப்பு' மசோதாதான். தி மு க உறுப்பினர் எஸ் எஸ் ராஜேந்திரன் ராஜ்யசபா வாக்கெடுப்பின்போது கக்கூசுக்குப் போய் விட்டார். மசோதா தோற்றது. ஆளும் கட்சி மசோதா தோற்றுவிட்டதால் இந்திரா மந்திரி சபை ராஜினாமா செய்து தேர்தல் வந்தது. இந்திராவுக்கு இந்தியா பூராவும் வெற்றி. இந்திரா தயவில் திமுக விற்கும் வெற்றி.

மன்னர் மானியம் நீடிக்கவேண்டும் என்றார் காமராஜர். தி மு க வினர் காமராஜரை " ராஜாவின் கூஜா" என்று போஸ்டர் போட்டார்கள். காமராஜர் இருந்தது வாடகை வீடு. அது சொந்த வீடு என்று பொய் பிரச்சாரம் செய்தார்கள். "சோலை நடுவே வாழும் சோசலிசப் பிதா" என்று எழுதினார்கள்.
2. அன்றைய திமுக வின் ஸ்டார் பேச்சாளர் எம் ஜி ஆர். அவர் சேலம் ஊர்வலத்தை ஆதரித்துப் பேசவில்லை.
3.அன்றைய முதல்வர் மு கருணாநிதி தேர்தல் பிரசாரத்தில் ஊர்வலத்தைக் கண்டித்துப் பேசினார்.
4. ஊர்வலம் நடந்தது 24.01.1971. ஊர்வலத்தின் படங்கள் துக்ளக் 14.02.1971 இதழில் வெளிவந்தது .
அதுவரை சேலத்தில் நடந்த அயோக்கியத்தனம் ஊடகங்களில் வெளிவராமல் கருணாநிதி அரசு பார்த்துக்கொண்டது.
5. துக்ளக் இதழ் வெளிவந்து, தடைசெய்யப்பட்டு முழுவதுமாகச் செய்தி தமிழக வாக்காளர்களுக்கு போய் சேருவதற்குள் தேர்தல் பிரசாரம் முடிந்து விட்டது ( 25.02.1971).
1971 தேர்தல் முடிவுகளுக்கு திக ஊர்வலம் தான் காரணம் என்பது திராவிடப் பொய்.   

ஆக, கடவுள் பொய், புராணம் பொய், பண்பாட்டு விழுமியங்கள் எல்லாமே பொய் என்று வெற்றுக் கூச்சல் போடும் திராவிடங்கள் சொல்வதென்னவோ பொய் மட்டும் தான்!    

மீண்டும் சந்திப்போம்.

தொடர்புடைய பதிவு :

அரசியல் இன்று! தகர்க்கப்படும் பிம்பங்கள்! ஈவெரா!

Monday, January 27, 2020

தமிழருவி மணியன் ஒருவரே போதும்! #damager

பழ.கருப்பையா, தமிழருவி மணியன் போன்றவர்கள் காமராஜரின் தொண்டர்களாக இருந்தது, காந்தியம் பேசிக் கொண்டே எந்தெந்தக்குட்டிச்சுவர்களில் போய் நின்றார்கள் என்பதையெல்லாம் திரும்பிப் பார்த்தால் குமட்டிக் கொண்டு வருகிறது. காந்திய மக்கள் இயக்கம் என்று தனிக்கடை போட்டவர் இன்றைக்கு ரஜனிக்கு அரசியல் ஆலோசகர் என்கிறார்கள். இவர் போன இடம் எதிலும் நிலைத்து நின்றவர் இல்லை, போன இடம் எதுவும் உருப்பட்டதில்லை! #வைகோ மாதிரி ஒரு ராசி! இப்போது நிறையப்பேச ஆரம்பித்து இருக்கிறார்! காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்!

  
இந்த வீடியோவை சாணக்யா தளத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பேச்சு வியாபாரிகளை நம்பித் தமிழகம் இத்தனை நாள் கெட்டது போதாது என்று ஒரு புது ப்ராண்டைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு மணியன் புதிதாகக் கிளம்பியிருக்கிறார் என்பதில் சந்தோஷப்பட எதுவும் இல்லை.  திமுக, காங்கிரசைச் சாடுகிறார்,  பொன்னாரைப் புகழ்கிறார், பிஜேபிக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதில் எல்லாம் எனக்கு, எலி ஏன் அம்மணமாக ஓடுகிறது என  இவருடைய கடந்த காலம் மட்டுமே கண்முன் வந்து நிற்கிறது. 

இவரை, இவர் பேச்சை இன்னமும் நம்புகிறவர்களை, இவருடைய ஆலோசனைகளைக் கேட்பவர்களைப்  பார்க்க மிகவும்  பரிதாபமாக இருக்கிறது.

விதியே விதியே! தமிழ்ச்சாதியை என் செய நினைத்தாய்?

மீண்டும் சந்திப்போம்.                

Sunday, January 26, 2020

தொடரும் விவாதங்கள்! #அரசியல் இன்று!

குடியுரிமை, குடியுரிமை சட்டத்திருத்தம் பற்றித் தேவை இல்லாத அச்சத்தை வெளிப்படுத்துகிற சாக்கில், அரசுக்கு எதிரான கலகங்கள், போராட்டங்களைக் கிளப்பி வீட்டுக் குளிர்காய்கிறவர்கள் யார் யாரென்று அனேகமாக எல்லோருக்குமே இப்போது புரிய ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும் கூட கடந்த 15 முதல் டில்லியில் ஷாஹீன் பாக், காப்பியடித்து 24 முதல் சென்னையில் வண்ணாரப்பேட்டை என்று ஒரு குறிப்பிட்ட மத்தத்தினரைக் கூட்டி, போராட்டங்கள் செயற்கையாகத் தொடர வைக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு தானிருக்கிறோம். அதனால் குடியுரிமைச் சட்டத்திருத்தம் அதில் உள்ளதும் இல்லாததும் என இந்த 31 நிமிட வீடியோவில் திருமதி நிர்மலா சீதாராமன் விளக்கமாகச் சொல்கிறார்.

     
திரும்பத்திரும்ப பொய்யான தகவல்கள், அச்சத்தைத் தூண்டுகிறவிதத்தில் பரப்பப் படுகிற விஷத்துக்கு மாற்று, இதுமாதிரிப் பொறுமையாக விளக்கிச் சொல்வது மட்டும் தான்! அதனால், இன்னொருமுறை கேட்டுப் புரிந்து கொள்வதில் தவறே இல்லை! 


ஒரு மார்க்சிஸ்ட்டாக இருந்த முந்தைய நாட்களில், ஜி . ராமகிருஷ்ணனை, சந்தித்த தருணங்கள் சில உண்டு. உதறியெறிந்துவிட்டு வெளியே வந்தபிறகு, இன்றும் கூட என்னால் ஜீரணிக்க முடியாத விஷயம் ஒன்று இது! எமெர்ஜென்சி நாட்களுக்குப் பிறகு, ஜனதா கட்சி பரிசோதனை முயற்சி தோற்றுப்போனபின்னால் நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவ்வளவு கேவலமாக வீழ்ச்சியை நோக்கிப் போய்க்கொண்டிருப்பது எதனால் என்பது இன்னமும் நெருடலாக இருக்கிற கேள்வி! மதன் ரவிச்சந்திரன் போன்ற அதிக அனுபவம் இல்லாதவொரு ஊடகக்காரரை  70 வயது கடந்த தோழர் ஜி.ஆர். சமாளிக்கமுடியாமல் தடுமாறுகிற பரிதாபத்தை இந்த 30 நிமிட விவாதத்தில் பார்த்தேன். மார்க்சீயத்தை கூட  மறந்துவிட்டு ஈவெராவை தூக்கிப்பிடிக்க வேண்டிய நிலைமைக்கு மார்க்சிஸ்டுகள் போனது ஏன்? நிறைய விஷயங்களை நேர்மையாக எதிர்கொள்ள முடியாமல்  ஜி.ஆர் தடுமாறுகிற மாதிரியே டோலர்கள் நிலைமையும் ஆகிப்போனதோ? 

 
                  
இங்கே மார்க்சிஸ்டுகள் மாதிரி இடையில் புகுந்து ஈவெரா ஆதரவாளர்களாகக் காட்டிக் கொள்ளாமல், ஆரம்ப நாட்களிலிருந்தே ஈவெரா ஆதரவாளராகவும், பெரியார் என்றொரு திரைப்படத்தை மிகவும் சிரமப்பட்டு எடுத்து வெளியிட்டவருமான வேலு பிரபாகரன் இந்த 40 நிமிட வீடியோவில் என்ன சொல்கிறார்? சமீபத்தில் ஆதன் தளத்தில் பார்த்த உருப்படியான நேர்காணல் இது தானென்று அடித்துச் சொல்லுவேன்! இரண்டே நிமிட மறுப்பில், சும்மா எதையோ கொளுத்திப் போட்டுவிட்டு ரஜனிகாந்த் அடுத்த சினிமா பற்றி யோசிக்கப்போய் விட்டார். ரஜனி மீது விழவேண்டிய வெளிச்சம் தமிழருவி மணியன் மீது இன்றைக்கு, கொஞ்சம் அதிகப் படியாகவேவிழுந்து கொண்டிருக்கிறது! மணியனை விட கவனிக்கப்பட வேண்டிய நபர் வேலுபிரபாகரன் தான்! ஒரு பாமரத்தனமான ஈவெரா அபிமானம் தெரிந்தாலும் ரஜனி பேசியது சரிதான் என்று வீரமணி அண்ட் கோவை தோலுரிக்கிறார்! நெறியாளர் மாதேஷுக்கு ஐயா இப்படி சேம் சைட் கோல் போடுகிறாரே என்று அதீத அவஸ்தை இருப்பது செம  காமெடி என்பதற்காகவே இதைப் பார்க்கலாம்!

இத்தனை ஆண்டுகள் கடந்தும், பூணூல் என்பது பிராமணர்கள் மட்டுமே அணிவது என்ற மூடநம்பிக்கையில் பலரைத் திளைக்க வைத்திருப்பது ஒன்று மட்டுமே ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் அளப்பரிய சாதனை! பெரியார் மண்ணு; பெரியாரின் சீடர்களின் மண்டையில் இருப்பதும் மண்ணு மாத்திரமே!   

                                                      
சேட்டைக்காரன் பதிவர் ஏன் பொங்குகிறார்? ஒன்றும் இல்லை! வேலைவெட்டி இல்லாத தமிழேண்டா க்ரூப் டில்லி குடியரசுதின விழாவில் தமிழக அரசு சார்பில் பங்குகொண்ட ஊர்தியில் அய்யனார் சிலை இருந்தது! அய்யனார் சிலைக்கு எப்படிப்பூணூல் அணிவிக்கலாம் என்று கிளம்பிவிட்டார்கள்! அவ்வளவுதான்!😀😁😻


இங்கே அது ஒரு கனா காலம் 2013 ஏப்ரல் பதிவில் கூட கங்கைகொண்ட சோழபுரம் போகிறவழியில் அவர் பார்த்த அய்யனாருக்கும் கூடப் பூணூல் இருக்கிறது!

மீண்டும் சந்திப்போம்.           

Saturday, January 25, 2020

71வது குடியரசு தினமும் குடிமைப்பண்பு இல்லாத கூட்டமும்!

1950 ஜனவரியில் ஒரு அரசியல் சாசனத்தின் கீழ் இந்திய மக்களாகிய நாம் என்று ஒரு குடியரசாக அறிவித்துக் கொண்டதன் நினைவூட்டலாக 71 வது குடியரசு தினம் நாளை கொண்டாடவிருக்கும் சமயம் இது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற ஜனநாயகம், எல்லோருக்கும் வாக்குரிமை என்று அறிமுகமானதெல்லாம் பழங்கதை!
ஒரு தேசமாக நம்மை உணர்ந்தோமா? Nation, NationHood இவையெல்லாம் தெரிந்து, பொறுப்புள்ள குடிமக்களாக (citizenship) வளர்ந்தோமா?  தேசம், தேசியம், குடிமக்கள் இவைகளைப் பற்றி எதுவும் தெரியாமலேயே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே என்று ஆடினால் போதுமென்று இருந்தது எங்கே கொண்டு
போய் நிறுத்தியிருக்கிறது? ஷாஹீன் பாத் வண்ணாரப் பேட்டை போக இன்னும் எத்தனை முட்டுச்சந்துகளில்? 


நாளை குடியரசுதின விருந்தினராக பங்கேற்க பிரேசில் அதிபர் ஜாயிர் பல்சானாரோவுக்கு அழைப்பு விடுக்கப் பட்டு, அவரும் சில சக அமைச்சர்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகளோடு நேற்றைக்கு நம்முடைய மதிப்புக்குரிய விருந்தினராக வந்திருக்கிறார். இந்த நேரத்திலும் கூட, இடதுகளும் ஒருபக்கச்சார்புள்ள ஊடகங்களும் பிரேசில் அதிபரைப் பழிக்கிற மாதிரியான செய்திகளை  வலிந்து பரப்பிக் கொண்டிருக்கின்றன. வேடிக்கையென்னவென்றால் பிரிட்டனின் கார்டியன் நாளிதழும் இப்படிப் புழுதி வாரித் தூற்றுவதில் வெபன் சப்ளையராக! பிரேசில் இந்தியா உறவுகளை மேம்படுத்திக்கொள்வதை உலக நாடுகள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்றன, அவர்களுக்கு இது மிகவும் உறுத்தலாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எப்படி?


It's fair to say that the mainstream media treats both Modi and Bolsonaro as aberrations from the liberal status quo. Modi for India's controversial Citizenship Amendment Act, and Bolsonaro for his outspoken opposition to leftist politics. But these are the least important issues at hand when these two massive democracies meet. Far more important is their shared belief in a multipolar world, outside the influence of the traditional power centers.

For one, India and Brazil have certain similar approaches in diplomacy. Both have not submitted entirely to a particular bloc – whether it is the US, Russia or China. They have stuck to their individual standpoints on several issues. 

India, despite its closeness to the US, has not diluted its traditional friendship with Russia. The Bolsonaro administration, despite its baggage about Russia's Soviet past and its distrust of communism, sees the neo-Christian conservatism under Putin as common ground for a relationship.
BRICS may not have the same resonance any more, but both Brazil and India are looking for strong bilateral arrangements in a post-globalised world.In case a war breaks out over Iran, both would want to be away from the quagmire, with pragmatic alternative alliances in place. இப்படி இங்கே கள யதார்த்தத்தை விவரிக்கிறார் அபிஜித் மஜூம்தார் 
"Dividing everything into two categories is neither accurate nor reasonable. The way the world evolves isn't binary but rather gradual and on a vast array of aspects and nuances. If we want to positively impact the world, we need active engagement, not superficial clickbait or ignorance." இப்படி ஜாயிர் பல்சானாரோவுடனான சந்திப்பைக் குறித்து சொல்லியிருப்பது யாரோ ஒரு அரசியல்வாதியோ விமரிசன சக்ரவர்த்தியோ இல்லை. Criticism of Jair Bolsonaro meeting is "an oversimplification of a complex world" says Bjarke Ingels இவர் ஒரு டேனிஷ் ஆர்கிடெக்ட். சரியாகத் தான் சொல்லியிருக்கிறார் என்பது இங்கே இடதுகளுக்கும், காசுக்குக் கூவுகிற ஊடகங்களுக்கும் புரியவே புரியாது! அவர்களுடைய முட்டாள்தனமான கற்பனாவாதத்துக்கு பதிலே கிடையாது!
பிரேசில் அதிபர் ஜாயிர் பல்சானரோ வருகையை, நம்முடைய அரசு காட்டுகிற நெருக்கத்தை அப்புறம் எப்படித்தான் புரிந்துகொள்வது?  FirstPost  தளத்தில் ஸ்ரீமாய் தாலுக்தர் ஒரு சரியான பார்வையை நேற்றே எழுதியிருக்கிறார். 
Brazil — which has seen ties with neighbouring Argentina deteriorate — looks to upgrade its trade partnership with India and tap its rapidly growing market, New Delhi is keen to exploit possibilities in resource-rich Latin America. Plus, there’s oil.
India, one of the world’s biggest oil importers, needs to diversify its energy needs from the Gulf. Iraq remains its top supplier but in recent times India has started importing more crude from the US (a 72 percent jump in first five months of 2019). The instability in Gulf, US-Iran confrontation and threats of secondary sanctions from the US may drive India further away from middle east. This is where Brazil, one of world’s top 10 oil exporters, sees a big opportunity.  மேலே சுட்டியில் ஸ்ரீமாய் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முழுமையாக வாசித்துப் பாருங்கள்!
மேலே அபிஜித் மஜூம்தார் தனது செய்திக்கட்டுரையில் முடிவாக ஒரு பன்ச் வைத்து முடித்திருக்கிறாரே! அதையாவது வாசித்தீர்களா?
"The Modi and Bolsonaro meeting may not be the most explosive, but when two of the world's biggest emerging powers meet on a very special occasion, it is a clear signal to the big boys: We are here to play our game, not yours."  
அதுதான் இங்கே முக்கியமான விஷயம். மீண்டும் சந்திப்போம்.              

Friday, January 24, 2020

#விடாதுகருப்பு கட்டமைக்கப்பட்ட ஈவெரா பிம்பம் உடைகிறது!

ஈவெரா மீதான ஒரு சிந்தனையாளர், சீர்திருத்தவாதி இன்னபிற கட்டமைக்கப்பட்ட மாயபிம்பங்கள் கலைந்து. ஈரோட்டு வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்றும் மிஞ்சாமல் போவது போல ஆகிக் கொண்டே வருகிறது. இந்த மாயை களைய பலகாலமாகவே நிறையப்பேர் முயன்று வந்தாலும், கழகங்கள் ஆட்சியில் இருக்கும்போது ஒரு சித்தாந்த முகமூடி தேவைப்பட்டதில், ஈவெராவை ஒரு புனித பிம்பமாக ஆக்கப்பட்டார். ஆனால் ஒரு பொய்யை எத்தனைநாளைக்குத்தான் நீட்டித்துக் கொண்டே போகமுடியும்? துக்ளக் ஆண்டுவிழாவில் 10 நாட்களுக்கு முன்னால் ரஜனிகாந்த் யதார்த்தமாகப் பேசியது ஒரேயடியாக அந்தப் பொய்ப்பிம்பம் உடைக்கப் படுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்து போனது.

,  
  
சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய அநாகரிகமான பேரணியில் நடந்த சம்பவங்களை அரைகுறையாக மறைப்பதற்கு  ஒரு பக்கம் முயற்சிகள் நடந்து கொண்டே இருந்தாலும், இதுவரை மறக்கடிக்கப் பட்ட விஷயங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டே இருப்பதை ரங்கராஜ் பாண்டே இந்த 23 நிமிட வீடியோவில் தெளிவாகத் தொகுத்துச் சொல்கிறார். 

ஆக, ஈவெரா என்கிற மாய பிம்பத்தை உடைத்த தனிப்  புகழை ரஜனிகாந்த் தட்டிச் சென்றுவிட்டார். தமிழருவி மணியனும், ரவீந்திரன் துரைசாமியும் சொல்வதைப் பார்த்தால், தனக்குத் தோதான ஒரு நேரத்தில் ஈவெரா ஒரு பெரியார் தான் என்று ரஜனிகாந்த் மிகவும் அழுத்தமாக மாற்றியும்  சொல்வார் என்றுதான் தோன்றுகிறது!


திமுக தலீவர்  இந்த விவகாரத்தில் கொஞ்சம் அடக்கியே வாசிக்க நினைத்தாலும், அது ரவீந்திரன் துரைசாமிக்குப் பொறுக்கவில்லை! முந்தைய வீடியோக்களில் சொன்னதுதான்! ஆனால் சில அதிமுக அமைச்சர்கள் துள்ளிக்குதிப்பது ஏன், இந்தக் கேள்விக்காவது தெளிவாகப்பதில் சொன்னாரா? அதுவுமில்லை! இன்னொரு வீடியோவில் இதே மாதிரி சொதப்பினால் ர. து.வையும் ஆதன் தளத்தையும் ஒதுக்கித் தள்ளிவிடவேண்டியது தான்! வீடியோ 29 mts 

இன்றைய தினமணியில் 1971 பதிவு, இரண்டாவது நாளாக. இந்த செய்திகளைத் தேடும் போது இன்னொரு விஷயம் தெரிந்தது. ஈ.வே.ரா.வின் நாத்திக பிரசாரத்தையும் துக்ளக் இதழ் பறிமுதல் செய்யப் பட்டதையும் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டங்கள் வெடித்தன. ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்ட அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் கண்டித்தனர். அந்த எழுச்சியைக் கண்டு ஈ.வே.ரா.வும் தி.க. தி.மு.க. கட்சிகளும் மிரண்டதும் உண்மை.


ஆனால் ஜனங்களை எப்படித் திசைதிருப்புவது, போக்கு காண்பிப்பது என்பது கருணாநிதிக்குத் தெரிந்திருந்த அளவுக்கு வேறு யாருக்கும் தெரியவில்லை. அதேநேரம் கருணாநிதி கூட  இன்றும் அதே சாமர்த்தியத்துடன் இந்த விவகாரத்தைக் கையாண்டிருக்க முடியுமா என்பது சந்தேகத்துக்குரியதுதான்!

மீண்டும் சந்திப்போம்.  
                 

இலக்கியம் அப்புறம்! அரசியல் பார்வையைத் தொடரலாமா?

முந்தின பதிவில் சங்க இலக்கியம் பேசியது, ஒரு புத்தக அறிமுகம் எப்படி இருந்தது என யாராவது வந்து சொல்வார்கள் என்று ஒருநாள் காத்திருந்தேன். எதையும் காணோம்! வழக்கமான அரசியல் பார்வையைத் தொடரலாமா?  ஆதன் தளத்தில் ஒரு வித்தியாசமான நேர்காணல்!


இந்த 37 நிமிடவிவாதத்தில் முதல் ஆச்சரியம், பங்கு கொண்டவருடைய பெயர் ஸ்ரீராம் சேஷாத்ரி! இப்படி ஒரு அரசியல் விமரிசகர் இருப்பதே எனக்கு இந்த விவாதத்தைப் பார்த்தபிறகுதான் தெரிய வந்தது! அதைவிட, மிகுந்த ஆச்சரியம் அவர் ரஜனி பேச்சு  குறித்து கொஞ்சம் விவரத்தோடு பேசிய விதம்! நெறியாளர் மாதேஷ் மற்ற சேனல்களை போல. தோன்றினாலும் அடிக்கடி குறுக்கிடுவதில்லை என்று எனக்குத்  தோன்றினாலும், யூட்யூப் தளத்தில் ஒரு கமென்ட் வித்தியாசமாக!  

ramesh karthik  13 hours ago (edited)

மாதேஷ் மூன்று முக்கிய குறிப்புகளை நீ தடுத்து விட்டாய்.

 முதலாவது குறிப்பு பெரியாரின் இந்து மத எதிர்ப்பை பற்றி அவர் பேசினார் அதை நீ தடுத்து பேச்சை திசை திருப்பி விட்டாய்.

 இரண்டாவது குறிப்பு இந்து மதம் என்றாலே சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு தோற்றம் அதை ரஜினி உடைக்க நினைக்கிறார் அதைப்பற்றி பேச வரும்போது அதையும் நீ தடுத்து வேறு ஒரு கேள்வியை மடத்தனமாக கேட்டு விட்டாய்.

மூன்றாவது அவர் எல்லோருக்குமான அரசியல் எல்லோருக்குமான ஆன்மீகம் இந்து முஸ்லிம் கிறிஸ்டின் 3 மாதங்களிலும் அவரவர் தெய்வங்களை வணங்கலாம் அதைப் பற்றி விளக்கம் தரும்போது அதையும் நீ தடுத்து விட்டாய்.

பிறகு எவ்வாறு ஒரு கருத்தை ஒரு விருந்தினர் உன்னிடம் தெளிவுபடுத்த முடியும்?.

 எல்லாத்தையும் நீ முழுமையாக கேட்காமல் பிஜேபி, பிஜேபி , பிஜேபி  என்று ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் நீ மடை கட்டினால் எவ்வாறு பேசுவது?.

பொதுவாக யூட்யூப் தளத்தில் கமென்ட் பார்த்தீர்கள் என்றால், வெறுப்பைக் கக்கும் அநாகரிகமான வார்த்தைகளில் இருக்கும், அவைகளுக்கு கொஞ்சம் எதிர்க்கருத்தும் இருக்கும். திரௌபதி பட ட்ரெய்லருக்கு வந்த 24000+ கமென்டுகளில் 99.5% ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் இருந்ததை, ஒரு விதிவிலக்காக எடுத்துக் கொண்டுபார்த்தால் ஒரு அரசியல் விவாதத்தை முழுதாகப் பார்த்துவிட்டு, இப்படி ஒரு தெளிவான கமென்ட் செய்திருப்பதை பார்ப்பது இதுவே முதல் முறை என்பது இந்த வீடியோ விவாதத்தில் மிகப்பெரிய வித்தியாசம், சிறப்பு! ஸ்ரீராம் சேஷாத்ரி, இதர சேனல்களில் பார்த்திராத சங்கதிகளையும் இதில் பேசியிருக்கிறார் என்பதால் பார்க்கும்படி நண்பர்கள் அனைவருக்கும் பரிந்துரை செய்கிறேன்.  

 வீடியோ 27 நிமிடம் 

தமிழருவி மணியன்தான் ரஜனிக்கு குருவா? அப்படி என்றால் பிஜேபியை எதற்காக ரஜனியோடு சம்பந்தப் படுத்திப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்? இந்து தமிழ் திசை எதற்காக ரஜனியை அரசியலுக்கு வராமல் தடுக்க இந்த  அச்சுறுத்தல் என்று தலைப்புக் கொடுத்து, என்ன சொல்ல வருகிறார்கள்? 

இந்த இரு விவாதங்களையும் முழுமையாகப் பார்க்கும் படி கேட்டுக்கொள்ளத்தான் என்னால் முடியும். ஆனால் பார்ப்பதும் நடப்பு என்ன என்பதை யோசித்து முடிவு செய்வதும் உங்களிடம்தான் இருக்கிறது. என்ன செய்வதாக உத்தேசம் என்று கேட்கலாமா? கூடாதா?  

மீண்டும் சந்திப்போம்.                      

Wednesday, January 22, 2020

கலம் செய் கோவே! கொஞ்சம் பாட்டு! கொஞ்சம் யோசனை!

யூட்யூப் தளத்தில் செய்திகளைத் தேடிக்கொண்டிருந்த தருணத்தில் ஒரு பாடலைக் கேட்க நேர்ந்தது. அரசியல் மட்டுமே பேசிக் கொண்டிருந்தவனை, கொஞ்சம் இலக்கியமும் வாசியேன் என்று இழுத்துக் கொண்டு போன ஒரு பாடல்! கேட்கலாமா?


புறநானூற்றில் இருந்து ஒரு சிறிய பாடல். இயற்றிய புலவர் யாரென்று தெரியாது, பிரிவாற்றாமையில் பாடுவதாக, இங்கே பாடியிருப்பவர் சைந்தவி, இசை அமைத்தவர் ராஜன் சோமசுந்தரம். 5 நிமிடம்.

கலம்செய் கோவே கலம்செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
அகலிது ஆக வனைமோ  
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!   

கலம் செய் கோவே என்று இங்கே விளிக்கப்படுவது ஈமத்தாழி செய்கிற குயவன். ஊர் நனந்தலை என்பது மட்டும் பாடலில் குறிப்பு இருக்கிறது. பாடலை ரசிக்க முடிந்ததா?


2018 இல் சந்தியா பதிப்பக வெளியீடாக வந்திருக்கிற சுஜா சுயம்பு தொகுத்திருக்கும், தமிழ்த் தொகுப்பு மரபு - எட்டுத்தொகைப்பனுவல்கள் என்ற புத்தகத்தைக் குறித்த ஒரு சிறு அறிமுகம் இந்து தமிழ் திசையில் படித்த நினைவு இன்னும் இருக்கிறது.  புத்தக விலை ரூ.700/- என்பது கொஞ்சம் பயமுறுத்தியதும் நினைவு வருகிறது. ஒரு தனிநபர் வாசிப்புக்காக  இவ்வளவு செலவு செய்வது என்பது எல்லோராலும் இயலாத ஒன்று.வாசிப்பவர் தேவையறிந்து  உதவுகிற ஒரு நல்ல நூலகத்தின் அருமையை நான் மீண்டும் மீண்டும் அனுபவித்த வேளையும் கூட! இங்கே பொது நூலகத் துறை ஒரு  உயிரோட்டமான துணையாக இருந்ததே இல்லை என்கிற கசப்பான உண்மையும், லெண்டிங் லைப்ரரிகளிலும் கூட படிக்க விரும்புகிற புத்தகங்கள் கிடைப்பதில்லை, அங்கேயும் ரமணி சந்திரன், பால குமாரன், போன்ற இலக்கிய ஆளுமைகளின் புனைவுகள் மட்டுமே கிடைக்கும் என்பதான கசப்பும் ஒருசேர மறுபடியும் சைந்தவியின் குரலில் ஒரு பழந்தமிழ் இலக்கியப்பாடலைக் கேட்டபோது அனுபவித்தேன். அதென்னய்யா எட்டுத்தொகை என்று கேட்கிறீர்களா? 1) குறுந்தொகை 2) நற்றிணை 3) அகநானூறு 4) ஐங்குறுநூறு 5) கலித்தொகை 6) பரிபாடல் 7) புறநானூறு 8) பதிற்றுப்பத்து என்று சங்க இலக்கியப்பாடல்களை பாடியவர் யார் பாடப்பட்டவர் யார், திணை, கூற்று என்று இன்னும் சில குறிப்புகளோடு  வகைப்படுத்திப் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டவைதான் எட்டுத்தொகை. 

இவற்றில் புறநானூற்றில் பாடியது யார் என்ற விவரம் கிடைக்காமல், மனித வாழ்க்கையின் மிக நுண்ணிய உணர்வான பிரிவாற்றாமையில் பாடுவதாக அமைந்த ஒரு சிறுபாடல், ஒரு நூலகம் எப்படிப்பட்ட தேவைகளையும் பூர்த்தி செய்கிற விதத்தில் இருக்க வேண்டும் என்கிற யோசனையைக் கிளறி விட்டது. சங்க இலக்கியப்பாடல்கள் முழுதும் Project Madurai தமிழ் இணைய பல்கலைக்கழகத் தளத்தில் கிடைக்கும் என்றாலும் அவை தொகுக்கப்பட்ட விதத்தை விளக்கும் விதத்தில் ஆய்வுகளைத் தருவதில்லை.

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் மாதிரி ஒன்றிரண்டு தனியார் நூலகங்களில் இன்னும் அது மாதிரியான தேடல்களுக்கு விடை கிடைக்கிறது என்பது மட்டும்தான் இப்போதைக்கு ஆறுதல்.

ஞானாலயா மாதிரி நல்ல நூலகங்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? 

மீண்டும் சந்திப்போம்.                       

Tuesday, January 21, 2020

தமிழக ஊடகங்களுக்கு நல்ல தீனிதான்! ஆனால் எப்படித் திரிப்பதாம்?

ஒரு சினிமா நடிகன்! ரஜனி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று சொல்லிக்கொண்டே இருப்பதைத்தவிர, இன்னமும் செயல்வடிவத்துக்கு வருகிறமாதிரிக் கூட அறிகுறிகள் இல்லை! ஆனால் அவர் வந்து விடுவாரோ என்கிற அச்சம் திராவிடக்கட்சிகளுக்குப் பிடித்து ஆட்டுகிறது. கடந்த 14 ஆம் தேதி துக்ளக் ஆண்டு விழாவில் சோ ராமசாமியுடைய தைரியத்துக்கு உதாரணமாக ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போக, ஒருவாரகாலமாக திருமாவளவன் உட்பட அநேகமாக எல்லோருமே பேசித்தீர்த்துவிட்டார்கள். இன்று காலை ரஜனிகாந்த் பத்திரிகையாளர்களிடம் பேசியது வெறும் இரண்டே நிமிடங்கள் தான்! தான் பேசியதற்கு ஆதாரம் இருக்கிறது.(ஈவெரா பற்றி) பேசியதற்கு மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்க முடியாது என்று சுருக்கமாக, அதே நேரம் இத்தனை காலமாக கட்டமைக்கப்பட்ட பெரியார் என்பதான ஒரு மாயபிம்பத்தின் மீது நேரடியாகவே ஒரு தாக்குதலைத் தொடுத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.


இங்கே திராவிடக்கட்சிகளுக்கு, சொல்லிக்கொள்கிற மாதிரி பெரிதாக, கொள்கை கோட்பாடு என்றெல்லாம் இருந்ததில்லை. ஈவெரா ஒரு சமூக சீர்திருத்த புரட்சியாளர், சிந்தனைச்சிற்பி, தத்துவஞானி என்றெல்லாம் தொடர்ந்து பரப்புரைகளில் கட்டப்பட்ட ஒரு மாயபிம்பத்தை முன்னிறுத்தி, தங்களுடைய பித்தலாட்டங்களைச் செய்துவந்த கதை சமீபகால வரலாறுதான்! 1949 இல் மணியம்மை ஈவெரா திருமணத்துக்குப் பின்னால் அண்ணாதுரை , நெடுஞ்செழியன் ஈவிகே சம்பத் முதலானோர் திராவிட கழகத்திலிருந்து வெளியேறி திமு கழகம் என்று தனிக் கடை ஆரம்பித்த நாட்களிலிருந்து ஈவெரா திமுக இடையிலான , விரோதம் 1967 இல் திமுக ஆட்சியைப் பிடித்த விபத்து நடந்தபிறகுதான் கொஞ்சம் மாறியது.

ஆளுகிற தரப்பின் பக்கமே சாய்ந்து காரியத்தை சாதித்துக் கொள்கிற ஒரே ஒருவிஷ்யத்தை நிரந்தரக் கொள்கையாக வைத்திருந்த ஈவெரா-திகவுக்கு, கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் ஓவராக ஆட்டம் போட வாய்ப்புக் கிடைத்தால் என்னென்ன செய்திருப்பார்கள்? 1971 இல் சேலம் பேரணியில் அதுதான் நடந்தது. 

ஆனால் ரஜனி மாதிரி ஒரு சூப்பர் ஸ்டாரிடமிருந்து இப்படி ஒரு அதிரடி வரும் என்பதை கழகங்கள் யோசித்துக்கூடப் பார்க்கவில்லை! அடி கொஞ்சம் பலமாகவே விழுந்திருப்பது, இன்று இசுடாலின் கொஞ்சம் தணிவாக. ஈவெரா பற்றிப் பேசும்போது நண்பர் ரஜனி கொஞ்சம் யோசித்துப் பேசவேண்டும் என்று ஹீனசுரத்தில் சொன்னதிலிருந்தே தெளிவாகியிருக்கிறது.        

புதியதலைமுறை மாறிவிட்டதோ என்று சந்தேகமெல்லாம் அனாவசியம்! உண்மைக்கு 
இப்படி ஒருநிமிடம் மட்டும்  ஒதுக்குவார்கள்!
மறக்க அடிப்பதற்கு திருமாவளவன்,
லூசு அருணன் கூவுவதைத் திரும்பத் திரும்ப 
ஒளிபரப்பித் தங்கள் விசுவாசம் எங்கே என்பதைக் 
காட்டியும் கொள்வார்கள்! 

1968 கீழவெண்மணி விவசாயக்கூலிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அரைப்படி கூலி உயர்வு கேட்டுப்போராடியதில், 44 பேர் நிலச் சுவான்தார்களால் எரித்துக் கொல்லப்பட்ட சமயத்தில் கூட ஈவெரா நிலச்சுவான்தார்களுக்கு ஆதரவாகத் தான் பேசினார் கம்யூனிஸ்டுகள் உள்ளே புகுந்து அரசுக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டி விட்டார்கள் என்று பேசிய கதையை, சத்தமே இல்லாமல் ஹைஜாக் செய்து கூலிப் போராட்டத்தை தலித் மக்கள் மீதான ஆணவ ஜாதி வன்முறை என்று திசைதிருப்பிவிட்ட கதையை. எந்த மார்க்சிஸ்டுகள் மீது ஈவெரா பழிசுமத்தினரோ, அந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட ஈவெரா புகழ் ஓங்குக என்று ஜிங்சக் அடித்துக் கொண்டிருப்பது மிகப் பெரிய  நகைமுரண்! இந்த முகநூல் பக்கம் கொஞ்சம் நினைவு படுத்துகிறது 

பங்ச்சர் ஆனது ஆனதுதான்! இப்போது எனக்கிருக்கும் ஒரே கேள்வி, ரஜனிகாந்த் தொடர்ந்து 2வது முறையாக ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கிறார் என்பதில் வருகிற நாட்களில் தமிழக சேனல்கள் விவாதங்களில் என்ன மாதிரிக் கதறப்போகிறார்கள் என்பதுதான்! 

மீண்டும் சந்திப்போம்.  

ச்சும்மா ஜாலிக்கு! ஒரு திரைப்பட விமரிசனம்! V1 மர்டர் கேஸ்

இந்தப்பக்கங்களில் ஓர் முழுநீளத் திரைப்பட விமரிசனமாக எழுதிப்பார்த்து நாளாகி விட்டது இல்லையா? சிலநாட்களுக்கு முன்னால் ஒரு நாலு படத்துக்கு விமரிசனம் எழுதலாமென்றால், சரக்கே இல்லாத படத்துக்கு என்ன எழுதுவது என்று மிகவும் சுருக்கமாக இரண்டு தமிழ் இரண்டு தெலுங்குப் படங்களுக்கு சின்னக்குறிப்பாக எழுதியதை நண்பர்கள் அவ்வளவாக சட்டை செய்யவே இல்லை!

  
பெரிய நடிகர்கள் பெரிய பட்ஜெட் படங்கள் என்று வெளியாகி பெருமளவிலான தியேட்டர்களை ஆக்கிரமித்தும் கூடாக காற்றாடிக்கொண்டிருக்கிற நேரத்தில் குறைந்த அளவு தியேட்டர்களில் மட்டுமே ரிலீசாகி ரசிகர்கள் ஆதரவைப் பெற்றிருக்கிற ஒரு படம் என்று சொல்லவேண்டுமானால் அது V1 மர்டர் கேஸ் என்கிற படம் தான். இத்தனைக்கும் படத்தில் பெரிய நடிகர்களோ பட்ஜெட்டோ எதுவுமில்லை. ஒரு த்ரில்லர் படம்தான்! திரைக்கதை வடிவம், காட்சிப்படுத்தி இருக்கிற விதம் எல்லாமாகச் சேர்ந்து படம் வெற்றி அடைந்திருக்கிறதென்றால் என்ன சொல்வீர்கள்?


WIN News சேனல் மெல்ல மெல்ல விரிவடைந்து வருகிறது என்பதைச் சொல்கிற மாதிரி இந்தப்படம் குறித்த ஒரு கலந்துரையாடலை நேற்றைக்குப் பார்த்தேன். இயக்குனர் பாவெல் நவகீதன் சில படங்களில் நடித்திருக்கிறார். ஒரு வித்தியாசமாக இந்தப் படத்தின் இயக்குனராகவும் ஆகிவிட்டார். 


அதென்ன பாவெல் என்று பித்தியாசமாக என்ற கேள்விக்கு மேலே வீடியோவில் காரணம் சொல்வதும் தன்னுடைய படத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் தகவல் சொல்வதுமாக! நடிகர் அஜித் குமார் படம் இருக்கிறதே என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள்! ஒரு சம்பந்தனுமில்லை!

ஒரு கொலை விசாரணைதான்! ஆனால் அதுவே கொஞ்சம் வித்தியாசமானதாக, கதாநாயகன் ஏதோ ஒரு காரணத்தால் இருட்டைக்கண்டால் பயம், மயக்கம் அடைகிறவனாக! அதனாலேயே ஆக்டிவ் போலீசாக இருப்பதிலிருந்து தடைய அறிவியல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டவன். அவனை சக போலீஸ் அதிகாரி ஒரு பெண் கொலை பற்றிய விசாரணைக்குள் எப்படிக் கொண்டு வருகிறார் என்பதில் ஆரம்பித்து வழக்கமான போலீஸ் விசாரணையாகக் கதைக்களம் விரிவதில் பார்ப்பவர்களை படத்தில் ஒன்றச் செய்துவிடுவதில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார். க்ளைமேக்ஸ் எதிர்பாராதது என்று சொல்ல முடியாதுதான்! ஆனால் அதையே இயக்குனர் ஒரு மெசேஜ் சொல்லப் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார். ரொம்ப உறுத்தல் என்றாகிவிடாமல் அளவோடு முடித்திருப்பது இன்னொரு வெற்றி! எப்படி என்பதை படத்தைப்பார்த்து நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்!

இப்போதெல்லாம் சமூகத்துக்கு மெசேஜ் சொல்கிற வியாதி தமிழ்ப்பட இயக்குநர்களுக்குத் தொற்றிக் கொண்டிருப்பதில், பாவெல் நவகீதனுக்கும் அப்படி ஒரு தொற்று இருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை! இதை அந்தநாட்களிலேயே கலைவாணர் நாட்டுக்கு சேதிசொல்ல நாகரீகக்கோமாளி வந்தேனய்யா என்று பாட்டுப்பாடி நாசூக்காக, பலவித மெசேஜ் சொல்லி இருக்கிறார். பராசக்தி வசனம் போல அனல்(?) துப்பாமல்  மென்மையாகவே சொல்லியிருக்கிற மாதிரி, இந்தப் படத்தின் க்ளைமேக்சிலும்  கதாநாயகன், கொஞ்சம் எக்ஸ்ட்ரா வசனங்களில் அந்த மெசேஜை சொல்லி இருக்கிறார். ஒரு க்ரைம் த்ரில்லருக்கு இதெல்லாம் தேவைதானா என்று பார்வையாளர்களை எரிச்சல் கொள்ளச் செய்யாமல் அளவோடு முடித்திருப்பது இயக்குனருடைய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். அதற்காகவே படம் பார்க்கலாம்!  

மீண்டும் சந்திப்போம்!  
  

Monday, January 20, 2020

புத்தகக்கண்காட்சியும் டெல்லி அப்பளமும்!

வருடாவருடம்  சென்னைப்புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் பேசப்படுகிறதோ இல்லையோ சாட் மசாலா தூவிய டெல்லி அப்பளம் பரபரப்பாகப் பேசப்படுவதில், மக்களுடைய ரசனை குறித்து உங்களுக்கு ஏதாவது ஊகிக்க முடிகிறதா?  சீரியசாகப் புத்தகங்கள் வாங்கவருகிற முகங்கள் எத்தனை?வாங்கியதைப் படிக்காமலேயே இருப்பது குறித்து பெருமிதமாக சமூகவலைதளங்களில் பகிர்பவர்கள் எத்தனை? இப்படி எதையுமே கணிக்கமுடியாத சென்னை புத்தகக் கண்காட்சி நாளையோடு ஒருவழியாக நிறைவு பெறுகிறது.


புத்தகங்களை வாங்கி வாசிக்கிறோமோ இல்லையோ, நொறுக்குத்தீனி வாங்கித் தின்பதற்காகவே வருகிறோம் என்று சொல்கிற மாதிரி ஒரு வீடியோ, 8 நிமிடம், இந்து தமிழ்திசைக்காரர்களிடமிருந்து! 



முகநூல் பகிர்வுகளில் சரவெடியாக இப்படிப் பகடி செய்யும் போகன் சங்கர் புத்தக அறிமுக நிகழ்ச்சியில் எப்படிப் பேசுகிறார் என்பதைக் கொஞ்சம் பாருங்களேன்


வீடியோ 7 நிமிடம்  செல்வம் அருளானந்தம் எழுதிய சொற்களில் சுழலும் உலகம்  புத்தகம் பற்றிப் பேசியது இது. ஏதாவது புரிகிறதா?
"அண்ணா பேசும்போது எங்களோட மன நிலையையும் நீங்க கணக்கில எடுத்துக்கணும். ரொம்ப அடர்த்தியாப் பேசறீங்க.உங்களவுக்கு நாங்கள் படிக்கலை.நேத்து நீங்கள் மீட்டிங்ல சொன்னது புரியவே இல்லை"

"நேத்து நான் மீட்டிங்ல சொன்னது 'இந்த மைக் சரியில்லை.எக்கோ அடிக்குது.யாராவது சரி பண்ணுங்க"'
கருத்துகள்


  • KN Senthil மைக்குனு யாரை ஜாடையா சொன்னீங்கன்னு தெரியலையாம். அதை தான் கேக்கறார்.
    9
  
ஆக, புத்தகக்கண்காட்சி புத்தகங்களையும் தாண்டி நிறைய அக்கப்போர்களையும் கொண்டிருந்தாலும் வாசிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு நல்ல முயற்சியாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் புதிதுபுதிதாக முளைக்கும் எழுத்தாளர்கள் வாசகர்களுக்குப் பயன்படுத்துகிற விஷயங்களைத் தான் எழுதினார்களா? வாசகர்கள் மதிப்பீடு என்ன? இதைப்பற்றி யாராவது இங்கே பதிவு செய்திருக்கிறார்களா, யாருக்காவது தெரியுமா?
  
என்னை எடுத்துக் கொண்டால்  ஒரு புத்தகக் கண்காட்சிக்கும் போனவனில்லை. ஆனால் புத்தகக் கடைகளுக்குப் போவதை வாடிக்கையாக வைத்து இருந்தவன். புத்தகங்களைக் கையிலெடுத்து புரட்டிப் பார்த்து எழுத்தாளரின் மொழிநடை, சொல்லவரும் செய்தி இவைகளைக் கவனித்து, வாங்குவதா வேண்டாமா என்பதை அந்த நேரத்திலேயே முடிவு செய்து, புத்தகங்களை வாசிக்கும் இயல்பு உள்ளவன்.
புத்தகங்கள் தான் பேசவேண்டுமே தவிர எழுதியவன் அல்ல என்பது என்னுடைய ஆழ்ந்த நம்பிக்கை. 

ஒரு தேர்ந்த வாசகன், புத்தகத்தைத் திறனாய்வு அல்லது மதிப்பீடு செய்வதான போக்கை எப்போது வளர்த்தெடுக்கப் போகிறோம்? மேற்கத்திய நாடுகளில் literary critics புத்தகவாசிப்புக்கு மிகவும் உற்றதுணையாக இருப்பதுபோல விமரிசனக்கலையை இங்கும் எப்போது உருவாக்கிக்கொள்ளப்போகிறோம்? 

டிஸ்கி: ஒருவழியாக என்னுடைய லேப்டாப்பில் கிண்டில் அப்ளிகேஷனை மறுபடியும் நிறுவியாகி விட்டது.  அதனால் நண்பர் திருப்பூர் ஜோதிஜியின் 5 முதலாளிகளின் கதை  கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.  
   
மீண்டும் சந்திப்போம்.           

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)