Friday, January 10, 2020

தொடரும் விவாதங்கள்! பார்த்துவிட்டு என்ன செய்கிறோம்?

சிலபல விஷயங்களின் மீதான விவாதங்கள் முழு உண்மையை வெளிக்கொண்டு வருகிற மாதிரி இருக்கிறதா என்று தேடிப்பார்த்தால் ஏமாற்றம் மட்டுமே என்று பொத்தாம்பொதுவாக சொல்லிவிட்டுப்போய் விட முடியாது. எந்தவொரு விவாதமும், ஏதோவொரு உண்மையைத் தன்னையறியாமலேயே வெளிக்கொண்டு வந்துவிடுவதைக் கவனிக்கிறோமா? குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிரான கலகங்கள், போராட்டங்களை எதிர்க்கட்சிகள் ஏதோவொரு வகையில் மீண்டும் மீண்டும் கையிலெடுப்பதன் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினம் பொதுவேலை நிறுத்தம் /பாரத் பந்த் என்ற கூத்தையும் நடத்தினார்கள். அதன்மீது பொதுஜனங்களுடைய பார்வை என்னவாக இருக்கிறது?


நேற்றுபொது வேலைநிறுத்தமாமே! பார்த்தீர்களா? என்ன நடந்ததாம்? என்று இன்னொரு பக்கத்தில் புதிய தலைமுறை டிவி விவாதத்தின் காணொளியைக் கொடுத்து என்னுடைய கருத்தாகவும் சிலவிஷயங்கள் சொல்லியிருந்தேன். இங்கே அதே விஷயத்தை மதன் ரவிச்சந்திரன் கையிலெடுத்து ஒரு 50 நிமிட விவாதத்தை நேற்று நடத்தியிருக்கிறார். விவாதத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் பாருங்கள்! விவாதம் எனக்கென்னவோ பாரத்பந்த் என்ற கேலிக்கூத்தை யாருமே ஒருபொருட்டாக எடுத்துக் கொண்டு அதைப்பற்றி விவாதித்த மாதிரித் தெரியவில்லை. பொதுவேலைநிறுத்தத்தின் impact அவ்வளவுதானா? 

திரௌபதி பட ட்ரெயிலர் தமிழகத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ட்ரெயிலர் வெளியானது ஜனவரி 3 அன்றுதான் என்றாலும் இங்கே சிலதரப்புகளில் பரபரப்பையும், வேறு சில தரப்புகளில் எதிர்க்க வேண்டும் என்ற நினைப்பையும் தூண்டியிருக்கிறது. திராவிடர் கழகத்தின் கி வீரமணி இந்தப்படத்தை தடை செய்ய வேண்டுமென்று சொல்லியிருப்பதாக ஒரு யூட்யூப் வீடியோவின் தலைப்பில் பார்த்தேன். உண்மையோ பொய்யோ இருந்து விட்டுப் போகட்டும்.


இந்த 22 நிமிட வீடியோவில் திரைப்படத்தின் இயக்குனர் G மோகனும் இசையமைப்பாளர் ஜுபினும்  பேசுவது அக்டோபர் கடைசியிலே வெளியாகிவிட்டது. இயக்குனர் மிகத்தெளிவாக சென்னையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது அது என்ன என்பதைச் சொன்னபிறகும் கூட எதற்காக  இத்தனை வீண் சர்ச்சைகள் என்பது தெரியவில்லை.

இயக்குனர் கதைக்களம் என்ன என்று சொல்வது 
10நிமிட வீடியோவில் 


சென்னை உயர்நீதிமன்றத்தில் வெளிப்பட்ட ராயபுரம் ரிஜிஸ்திரார் அலுவலகத்தில் நடந்த போலித்திருமண மோசடி பற்றிய 


மீண்டும் சந்திப்போம் 

4 comments:

  1. அதிகாரம் உள்ளவர்கள் தன் அதிகாரத்தின் மூலம் சட்டத்தின் துணை கொண்டு சாதிக்கின்றார்கள். அதிகாரம் இல்லாத ஏழை எளிய மக்கள் அரைகுறை அதிகாரத்திடம் சிக்கிக் கொண்டு தவிக்கின்றார்கள். இயக்குநர் சொல்வது போல எத்தனை குடும்பத்தில் இறப்பு நடந்ததோ?

    ReplyDelete
    Replies
    1. வழக்கறிஞர்களுக்கு தனியாக என்ன அதிகாரம் இருக்கிறது ஜோதிஜி? போய், தில்லுமுல்லு, அடாவடி எல்லாவற்றையும் கையிலெடுத்துக்கொண்ட கதையை சொல்லும் கீழே டைம்ஸ் ஆப் இந்தியா செய்திக்கு சுட்டி இருக்கிறதே! அந்த வழக்கறிஞர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதென்பதற்கு இன்று வரை ஒரு தகவலும் இல்லை

      இதெற்கென்ன சொல்வீர்கள்?

      Delete
    2. எனக்கு முதலில் குறிப்பிட்ட சில வழக்கு முதல் நாள் அப்பீல் செய்து அன்றே அடுத்த நாளே அதற்கான ஜாமீன் போன்ற தீர்ப்புகள் வருவதேஇன்னமும் ஆச்சரியமாக உள்ளது.

      Delete
    3. நீதிதேவன் மயக்கம் என்று சொல்லமுடியாது! நீதிமான்களும் நிறைய சந்தர்ப்பங்களில் முதலீடு போடாத கூட்டாளிகளாக ஆகிவிடுகிறார்களோ என்னவோ? !!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)