Tuesday, January 28, 2020

ஈவெரா! துக்ளக் அம்பலப்படுத்திய உண்மைகளும் தொடர்ச்சியும்!

துக்ளக் 50வது ஆண்டு நிறைவு  நிகழ்ச்சியில் நடிகர் ரஜனிகாந்த் பேசிய ஒரு 13 நிமிடப்பேச்சு தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதென்றே சொல்லவேண்டும்! எதையும் திரித்தும் மிகைப் படுத்தியுமே வெற்றுப்பரப்புரைகளிலே வளர்ந்த திராவிடங்கள் என்னமோ ஈவெரா மீது ரஜனிகாந்த் அவதூறு பரப்பிவிட்டதாக, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று  கூக்குரல் எழுப்பியதில் கடந்த 21 ஆம் தேதி மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்க முடியாது என்று இரண்டே நிமிடப் பேட்டியில் ரஜனிகாந்த் தனது நிலையைத் தெளிவுபடுத்தி விட்டார். ஈவெரா  என்கிற பகுத்தறிவு பிம்பத்தைக் கட்டமைத்து, அதைவைத்தே பிழைப்பு நடத்திவரும் தீ'னா கழகமும், தேவைப்படுகிற நேரத்தில் மட்டும் ஈவெராவின் மகிமைகளைப் பயன் படுத்திக்கொள்கிற இதர கழகங்களும் லபோதிபோவென இன்னமும் கூக்குரல் எழுப்பி வருகின்றன. அதில் துக்ளக் இதழில் வெளியானதென்ன என்ற ஆதாரத்தைக் காட்டாமல் அவுட்லுக் இதழில் 2017 ஆம் ஆண்டு வெளியான கட்டுரையை ஆதாரம் காட்டுவானேன் என்கிற கூக்குரலும் ஒன்று!     

இது இன்று நியூஸ் 7 சேனல் செய்தி!
  

இன்றைக்கு வெளியான (28/1/20) துக்ளக் இதழில் 1971 ஆம் ஆண்டு துக்ளக் இதழில் வெளியான சேலம் திராவிடர் கழக ஊர்வலம் பற்றிய செய்திகள், படங்களை மறுபதிப்புச் செய்திருக்கிறார்கள். ஆக அன்றைக்கு கருணாநிதி துக்ளக் இதழைப் பறிமுதல் செய்து மார்கெட்டிங் ஆசாமிபோல உதவியதைப் போல கழகங்கள் மறுபடியும் துக்ளக் இதழுக்கு மார்கெட்டிங் வேலையைச் செய்திருக்கின்றன என்பது திராவிட மாயை வேகமாகக் கலைந்து வருவதற்கான அடையாளம்! தொடர்ந்து பொய்களின் மீதே கட்டப் பட்ட திராவிடப் பம்மாத்து என்ன செய்வது என்பதறியாமல் திகைத்து நிற்பதில், விஷயம் அவர்கள் கையை மீறிப்போய் விட்டதும் கூடப் புலப்படுகிறதோ!


திராவிட மாயை -- ஒரு பார்வை என்று மூன்று பகுதிகளாக புத்தகம் எழுதிய சுப்பு மணியன் முகநூலில் ஈவெரா பற்றிப்  பகிர்ந்திருந்த சுவாரசியமான இரு பகிர்வுகளை இங்கே தருகிறேன்.

ஈ.வெ.ராவின் ரகசியம்
ராஜா சார் அண்ணாமலை செட்டியாருக்கு அறுவதாண்டு நிறைவுற்ற போது ஆயுஷ் ஹோமம், நவகிரக சாந்தி, பூஜைகள், வேத விற்பன்னர்களுக்கு தானம் ஆகியவை பெருமளவில் நடந்தன. இது குறித்த செய்திகள் அன்றைய அச்சு ஊடகங்களிலும் வெளி வந்தன.
இதையெல்லாம் படித்த ஈ.வெ.ராவுக்கு சூடு அதிகமாகி விட்டது. அண்ணாமலை செட்டியாருக்கு எதிராக போராட்டத்தை அறிவித்தார்.
ஈ.வெ.ராவின் போராட்டம் என்ற செய்தி வந்தவுடன் செட்டியாரை சுற்றியிருந்தவர்களுக்குக் கவலை. "பெரியாரை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று அவர்களை சமாதானப்படுத்திவிட்டு செட்டியார் ஈ.வெ.ராவுக்கு ஒரு தபால் அனுப்பினார்.
தபாலைப் பார்த்தவுடன் ஈ.வெ.ராவின் போராட்ட அறிவிப்பு முடிவுக்கு வந்தது. அந்த தபாலிலிருந்தது ஆயிரம் ரூபாய்க்கான காசோலை. இதுதான் ஈ.வெ.ராவின் ரகசியம்.
திராவிடப் பொய்யும் புரட்டும் ஒன்றா இரண்டா?  
   
திராவிடப் பொய்.
"1971 சேலம் ஊர்வலத்தில் ஹிந்து கடவுளை இழிவுபடுத்தினோம் . அதனால் தி மு க அதிக இடங்களில் ஜெயித்தது" என்று பெரியாரிஸ்டுகள் இப்போது சொல்கிறாரகள்.
1. அந்தத் தேர்தல் பிரசாரத்தில் தி மு கவோ அதன் கூட்டணிக் கட்சியான இந்திரா காங்கிரசோ இதைச் சொல்லி ஓட்டுக் கேட்க வில்லை. அதற்குப்பிறகு எந்தத் தேர்தலிலும் இதைச் சொல்லி ஓட்டுக் கேட்க வில்லை. தி்முக தரப்பில் அப்போது முக்கியமாகப் பேசப்பட்டது பிரதமர் இந்திராகாந்தியால் முன்னிறுத்தப்பட்டு ராஜ்யசபாவில் தோற்கடிக்கப்பட்ட 'மன்னர் மானிய ஓழிப்பு' மசோதாதான். தி மு க உறுப்பினர் எஸ் எஸ் ராஜேந்திரன் ராஜ்யசபா வாக்கெடுப்பின்போது கக்கூசுக்குப் போய் விட்டார். மசோதா தோற்றது. ஆளும் கட்சி மசோதா தோற்றுவிட்டதால் இந்திரா மந்திரி சபை ராஜினாமா செய்து தேர்தல் வந்தது. இந்திராவுக்கு இந்தியா பூராவும் வெற்றி. இந்திரா தயவில் திமுக விற்கும் வெற்றி.

மன்னர் மானியம் நீடிக்கவேண்டும் என்றார் காமராஜர். தி மு க வினர் காமராஜரை " ராஜாவின் கூஜா" என்று போஸ்டர் போட்டார்கள். காமராஜர் இருந்தது வாடகை வீடு. அது சொந்த வீடு என்று பொய் பிரச்சாரம் செய்தார்கள். "சோலை நடுவே வாழும் சோசலிசப் பிதா" என்று எழுதினார்கள்.
2. அன்றைய திமுக வின் ஸ்டார் பேச்சாளர் எம் ஜி ஆர். அவர் சேலம் ஊர்வலத்தை ஆதரித்துப் பேசவில்லை.
3.அன்றைய முதல்வர் மு கருணாநிதி தேர்தல் பிரசாரத்தில் ஊர்வலத்தைக் கண்டித்துப் பேசினார்.
4. ஊர்வலம் நடந்தது 24.01.1971. ஊர்வலத்தின் படங்கள் துக்ளக் 14.02.1971 இதழில் வெளிவந்தது .
அதுவரை சேலத்தில் நடந்த அயோக்கியத்தனம் ஊடகங்களில் வெளிவராமல் கருணாநிதி அரசு பார்த்துக்கொண்டது.
5. துக்ளக் இதழ் வெளிவந்து, தடைசெய்யப்பட்டு முழுவதுமாகச் செய்தி தமிழக வாக்காளர்களுக்கு போய் சேருவதற்குள் தேர்தல் பிரசாரம் முடிந்து விட்டது ( 25.02.1971).
1971 தேர்தல் முடிவுகளுக்கு திக ஊர்வலம் தான் காரணம் என்பது திராவிடப் பொய்.   

ஆக, கடவுள் பொய், புராணம் பொய், பண்பாட்டு விழுமியங்கள் எல்லாமே பொய் என்று வெற்றுக் கூச்சல் போடும் திராவிடங்கள் சொல்வதென்னவோ பொய் மட்டும் தான்!    

மீண்டும் சந்திப்போம்.

தொடர்புடைய பதிவு :

அரசியல் இன்று! தகர்க்கப்படும் பிம்பங்கள்! ஈவெரா!

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)