Tuesday, January 21, 2020

தமிழக ஊடகங்களுக்கு நல்ல தீனிதான்! ஆனால் எப்படித் திரிப்பதாம்?

ஒரு சினிமா நடிகன்! ரஜனி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று சொல்லிக்கொண்டே இருப்பதைத்தவிர, இன்னமும் செயல்வடிவத்துக்கு வருகிறமாதிரிக் கூட அறிகுறிகள் இல்லை! ஆனால் அவர் வந்து விடுவாரோ என்கிற அச்சம் திராவிடக்கட்சிகளுக்குப் பிடித்து ஆட்டுகிறது. கடந்த 14 ஆம் தேதி துக்ளக் ஆண்டு விழாவில் சோ ராமசாமியுடைய தைரியத்துக்கு உதாரணமாக ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போக, ஒருவாரகாலமாக திருமாவளவன் உட்பட அநேகமாக எல்லோருமே பேசித்தீர்த்துவிட்டார்கள். இன்று காலை ரஜனிகாந்த் பத்திரிகையாளர்களிடம் பேசியது வெறும் இரண்டே நிமிடங்கள் தான்! தான் பேசியதற்கு ஆதாரம் இருக்கிறது.(ஈவெரா பற்றி) பேசியதற்கு மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்க முடியாது என்று சுருக்கமாக, அதே நேரம் இத்தனை காலமாக கட்டமைக்கப்பட்ட பெரியார் என்பதான ஒரு மாயபிம்பத்தின் மீது நேரடியாகவே ஒரு தாக்குதலைத் தொடுத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.


இங்கே திராவிடக்கட்சிகளுக்கு, சொல்லிக்கொள்கிற மாதிரி பெரிதாக, கொள்கை கோட்பாடு என்றெல்லாம் இருந்ததில்லை. ஈவெரா ஒரு சமூக சீர்திருத்த புரட்சியாளர், சிந்தனைச்சிற்பி, தத்துவஞானி என்றெல்லாம் தொடர்ந்து பரப்புரைகளில் கட்டப்பட்ட ஒரு மாயபிம்பத்தை முன்னிறுத்தி, தங்களுடைய பித்தலாட்டங்களைச் செய்துவந்த கதை சமீபகால வரலாறுதான்! 1949 இல் மணியம்மை ஈவெரா திருமணத்துக்குப் பின்னால் அண்ணாதுரை , நெடுஞ்செழியன் ஈவிகே சம்பத் முதலானோர் திராவிட கழகத்திலிருந்து வெளியேறி திமு கழகம் என்று தனிக் கடை ஆரம்பித்த நாட்களிலிருந்து ஈவெரா திமுக இடையிலான , விரோதம் 1967 இல் திமுக ஆட்சியைப் பிடித்த விபத்து நடந்தபிறகுதான் கொஞ்சம் மாறியது.

ஆளுகிற தரப்பின் பக்கமே சாய்ந்து காரியத்தை சாதித்துக் கொள்கிற ஒரே ஒருவிஷ்யத்தை நிரந்தரக் கொள்கையாக வைத்திருந்த ஈவெரா-திகவுக்கு, கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் ஓவராக ஆட்டம் போட வாய்ப்புக் கிடைத்தால் என்னென்ன செய்திருப்பார்கள்? 1971 இல் சேலம் பேரணியில் அதுதான் நடந்தது. 

ஆனால் ரஜனி மாதிரி ஒரு சூப்பர் ஸ்டாரிடமிருந்து இப்படி ஒரு அதிரடி வரும் என்பதை கழகங்கள் யோசித்துக்கூடப் பார்க்கவில்லை! அடி கொஞ்சம் பலமாகவே விழுந்திருப்பது, இன்று இசுடாலின் கொஞ்சம் தணிவாக. ஈவெரா பற்றிப் பேசும்போது நண்பர் ரஜனி கொஞ்சம் யோசித்துப் பேசவேண்டும் என்று ஹீனசுரத்தில் சொன்னதிலிருந்தே தெளிவாகியிருக்கிறது.        

புதியதலைமுறை மாறிவிட்டதோ என்று சந்தேகமெல்லாம் அனாவசியம்! உண்மைக்கு 
இப்படி ஒருநிமிடம் மட்டும்  ஒதுக்குவார்கள்!
மறக்க அடிப்பதற்கு திருமாவளவன்,
லூசு அருணன் கூவுவதைத் திரும்பத் திரும்ப 
ஒளிபரப்பித் தங்கள் விசுவாசம் எங்கே என்பதைக் 
காட்டியும் கொள்வார்கள்! 

1968 கீழவெண்மணி விவசாயக்கூலிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அரைப்படி கூலி உயர்வு கேட்டுப்போராடியதில், 44 பேர் நிலச் சுவான்தார்களால் எரித்துக் கொல்லப்பட்ட சமயத்தில் கூட ஈவெரா நிலச்சுவான்தார்களுக்கு ஆதரவாகத் தான் பேசினார் கம்யூனிஸ்டுகள் உள்ளே புகுந்து அரசுக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டி விட்டார்கள் என்று பேசிய கதையை, சத்தமே இல்லாமல் ஹைஜாக் செய்து கூலிப் போராட்டத்தை தலித் மக்கள் மீதான ஆணவ ஜாதி வன்முறை என்று திசைதிருப்பிவிட்ட கதையை. எந்த மார்க்சிஸ்டுகள் மீது ஈவெரா பழிசுமத்தினரோ, அந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட ஈவெரா புகழ் ஓங்குக என்று ஜிங்சக் அடித்துக் கொண்டிருப்பது மிகப் பெரிய  நகைமுரண்! இந்த முகநூல் பக்கம் கொஞ்சம் நினைவு படுத்துகிறது 

பங்ச்சர் ஆனது ஆனதுதான்! இப்போது எனக்கிருக்கும் ஒரே கேள்வி, ரஜனிகாந்த் தொடர்ந்து 2வது முறையாக ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கிறார் என்பதில் வருகிற நாட்களில் தமிழக சேனல்கள் விவாதங்களில் என்ன மாதிரிக் கதறப்போகிறார்கள் என்பதுதான்! 

மீண்டும் சந்திப்போம்.  

2 comments:

  1. அடி மிக பலமாக விழுந்திருக்கிறது. ஏற்கனவே எத்தை தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலை. இப்போது கேட்கவே வேண்டாம்!

    ரஜினி .. ஆரம்பமே அமர்க்களம்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து!

      ஈவெரா என்பது வெறும் ப்ராண்ட், வியாபார அடையாளமாக வைத்து மட்டுமே பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த கூட்டத்துக்கு ரஜனி நேரடியாகவே ஒரு சவால் விட்டிருக்கிறார் என்பது வரை சரி. ஆனால் இந்த நிலைபாட்டில் தொடர்ந்து நிற்பாரா, அரசியலுக்கு வருவாரா, வந்தால் என்ன மாதிரியான அரசியலை முன்னெடுப்பார் என்பது இன்னமும் கேள்விக்குறிகளாகவே இருப்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறதே!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)