Showing posts with label உதிரிகளான இடதுகள். Show all posts
Showing posts with label உதிரிகளான இடதுகள். Show all posts

Saturday, February 20, 2021

#சாட்டர்டேபோஸ்ட் எல்லாமே அரசியல் தானா?

மூன்று நிமிடத்துக்கும் குறைவான இந்த தினமலர் வீடியோ பார்த்ததில் எனக்குள் எழுந்த முதல் கேள்வி::: IPAC  பிரசாந்த் கிஷோர் திமுகவின் வெற்றிக்காகத்தான் உத்தி வகுக்கிறாரா அல்லது தன்னுடைய சொந்த அஜெண்டாவை  முன்வைத்து மத்திய அரசு, பிஜேபி, நரேந்திர மோடி மீதான வெறுப்பை முன்வைக்கிறாரா?  


நடக்கப்போவது மாநில சட்டசபைத் தேர்தல் பிரதான எதிரியாகக் களத்தில் முன் நிற்பது அதிமுக என்கையில் மோடி அட்டாக் மோடுக்கு மாறி இசுடாலின் என்ன சாதிக்கப் போகிறார்? உங்களுக்கு ஏதாவது புரிந்தால் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்!


கரூர் லைட்ஹவுஸ் (சினிமா தியேட்டர்) கார்னரில் இருந்த காந்தி சிலையை, எனக்குத்தெரிந்து இத்தனை வருடங்களில் எந்தக் காங்கிரஸ்காரனும் கண்டு கொண்டதாக நினைவுக்கு வரவே இல்லை இப்போது கரூர் தொகுதியின் எம்பியாக இருக்கும் ஜோதிமணி கூட, தேர்தலுக்கு முன்போ பின்போ அந்த காந்தி சிலையைக் கண்டுகொண்ட செய்தி எதையும் பார்த்ததாக நினைவும் இல்லை! இப்போது திடீரென்று அம்மணிக்கு அங்கே புதிதாக ஒரு வெண்கலச்சிலை வைக்கப்பட்டதில் ஒரிஜினல் காந்தி மீது அக்கறை வந்துவிட்டதாம்! சிலையின் பீடம் தரமற்றதாக இருப்பதாக ஒரு அக்கப்போரை நடத்திக் கைதாகி இருக்கிறார் என்கிற செய்தியை புதிய தலைமுறை சேனல் செய்தியில் பார்த்தேன் முன்னாட்களில் இசுடாலின் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட சமயத்தில் சட்டையைக் கிழித்துக்கொண்டு போஸ் கொடுத்ததை அப்படியே நினைவு படுத்துகிற மாதிரி இந்தப்படம் இணையத்தில் கிடைத்தது. அதிக வசதி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த இந்தப்பெண்மணி ராகுல் காண்டியின் கவனத்தை ஈர்த்ததால் காங்கிரஸ் வேட்பாளராகி, திமுகவின் செந்தில் பாலாஜி தனது   அகதவிகடத்தையெல்லாம் காட்டியதில் ஜெயித்தும் விட்டார்! ஆனால் காங்கிரஸ் எம்பி மாதிரி செயல்படாமல் திமுக எம்பிக்கள் மாதிரியே நாடக அரசியல் செய்வது, இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் ஒரு நல்ல மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று நம்புகிற என்னைப்போன்றவர்களுக்கு பெரும் ஏமாற்றமே!  

என்னாது? காந்தியை சுட்டுட்டாங்களா? மொமண்ட்!   

          


மாசேதுங்கால் அவமதிக்கப்பட்டு  வெளியேற்றவும் பட்ட, மாவோ காலத்துக்குக் கொஞ்சம் பின்னாடி சீனக் கம்யூனிஸ்ட்  கட்சியால் திரும்ப அழைக்கப்பட்டு தலைமைப்பொறுப்பேற்றவருமான  டெங் சியாவோ பிங்கின் 24வது நினைவுதினமான நேற்று பாண்டிச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ட்வீட்டரில் இப்படி நினைவு கூர்ந்திருப்பது சரிதான்! வறுமையின் பிடியில் சிக்கித்தவித்த சீனாவை, அந்நிய முதலீடுகள், தொழிற் சாலைகளுக்குக் கதவைத் திறந்து முப்பதே ஆண்டுகளில் ஒரு பொருளாதார வல்லரசாக மாற்றியவர் டெங் சியாவோ பிங்! கம்யூனிஸ்ட் கட்சியின் வரட்டுத் தத்துவங்களை ஒதுக்கிவைத்துவிட்டே சீர்திருத்தங்களை துணிந்து மேற்கொண்டார் என்பதை சௌகரியமாக  இந்திய மார்க்சிஸ்டுகள் மறந்துவிட்டு டெங் சியாவோ பிங்கை இப்போது முன்னிலைப் படுத்திப் பேசும்போது, நரசிம்மராவ் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவு கொடுத்தார்களா என்பதையும் பேசட்டுமே! 1964 இல் கையூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது சீன ஆதரவு நிலை எடுத்தவர்கள் மார்க்சிஸ்டுகளாகவும் அதுவும் 1968 இல் உடைந்து ஒரு பகுதி நக்ஸலைட்டுகளாகவும் ஆனதை இதுவரை வெளிப்படையாகப் பேசாதவர்கள் இப்போது சீன ஆதரவு நிலையை வெளிப்படையாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள், அவ்வளவுதான்!      

சீன கம்மினிஸ்டுகள் சீனாவிற்கு விசுவாசமானவர்கள். இந்திய கம்மின்ஸ்டுகளும் சீனாவிற்கு விசுவாசமானவர்கள் இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் எதிரிகள். என்று இங்கே நண்பர் ராஜசங்கர் பொங்கி இருப்பது நியாயமானதுதான்!

மீண்டும் சந்திப்போம்.

Friday, February 7, 2020

சின்னச் சின்னதாய்! கொஞ்சம் #அரசியல்

நம்மூர் அரசியல்வாதிகள் கோமாளிகளாகவும் கொடூர வில்லன்களாகவும் எந்தெந்த நேரத்தில் எப்படி இருப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியாதபோது, நமக்கு மட்டும் அந்த மர்மம் அவ்வளவு சுளுவாகப் பிடிபட்டு விடுமா? இடதுசாரிகளுக்கு திடீர் திடீரென்று வந்துவிடும் ஞானோதயத்தை முதலில் பார்த்து விடலாமா?


இடதுசாரிகளுக்கு இப்படி வரும் திடீர் ஞானோதயம் மாநிலத்துக்கு மாநிலம், மாவட்டத்துக்கு மாவட்டம் தெருவுக்குத் தெரு ஒரே மாதிரி இருக்காது என்பது ஒரு காலத்தில் சர்வதேசியம் பேசியவர்களுடைய சோகம்!
வீடியோ 31 நிமிடம் தான்! முந்தைய இருபதிவுகளில் சேகர் குப்தா ஒரு முக்கியமான கேள்வியை எடுத்துக் கொண்டு விடையை எங்கே தேடுவது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்ததை வாசித்து இருந்தால், இங்கே நரேந்திர மோடி ஏன் தொடர்ந்து ஜெயிக்கிறார், காங்கிரஸ் தன்னுடைய அடையாளத்தை தொலைத்துவிட்டு, எழுந்திருக்கமுடியாமல் தடுமாறுவது ஏன், இடதுசாரிகள் எப்படிக் கரைந்து காணாமலேயே போய்க்கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கும், தேசியம், தேசியவாதம் என்பது இன்று வலதுசாரித் தன்மையோடு உலகளாவிய அளவில் வளர்ந்து வருவது ஏன் என்பதற்குமான விடைகளைக் கண்டறிவது கடினமானது அல்ல! கேள்வி கேட்டாலும் பிடிக்காது, பதிலென்ன என்பதைத் தெரிந்துகொள்ளப் பொறுமையும் இருக்காது என்பதை எப்போது விட்டொழிக்கப் போகிறோம்?  


2012 டிசம்பரில் அரவிந்தன் நீலகண்டன் எழுதி கிழக்கு வெளியீடாக வந்திருக்கிற புத்தகம்  பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிசம்  அச்சுப் புத்தகமாக ரூபாய் 350/-  இப்போது அமேசான் கிண்டில் மின்னூலாக ரூபாய் 210/-  பற்றிய சிறு விமரிசனக்குறிப்பை இன்று பார்த்தேன். கிழக்கு வெளியீடுகளை வாங்குவதில் மனத்தடை, தயக்கம் இன்னும் நீடிப்பதால் என்னுடைய வாசிப்புப் பட்டியலில் இந்தப் புத்தகம் இல்லை. 


ஹிந்து நாளிதழ் கூட அவ்வப்போது வாசகர் கருத்தாக இப்படி படம் வரைந்து போட்டுவிடும்! தினத்தந்தி கூட சமீப நாட்களில் ரஜனிகாந்த் பேசுவதைத் தலைப்புச் செய்தியாக்குகிறதே! கவனிக்கிறீர்களா? மீம்ஸ் போடுகிறவர்களுக்கு இப்போது பிரசாந்த் கிஷோர் தான் ஹாட் கன்டென்ட் !

    
இசுடாலின் இப்படிக் கதறுகிறவரை காமெடி கலாட்டா தொடரும் போலத்தெரிகிறதோ!! 


அதெல்லாம் சரி! கிச்சன் கேபினெட் கீழே பழனி தைப்பூசப் போஸ்டருக்கு  என்ன முடிவெடுக்கப் போகிறதாம்?  

   
பாலச்சந்திரன் சு 
இன்று விற்பனைக்கு வந்துள்ள குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ரஜினியின் அரசியல் வருகை எப்படி இருக்கும் என்று சுமார் ஒரு லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஒரு சர்வே முடிவுகளில் ஒரு பகுதியை மட்டும் சுருக்கமாக வெளியிட்டுள்ளார்கள். அதாவது சர்வே எடுத்தவர்கள் சர்வே அறிக்கையின் முடிவுகளை குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு கொடுத்துள்ளனர். சில டேட்டாக்களை மட்டும் சர்வே குழுவினர் குமுதம் ரிப்போர்ட்டருக்கு வழங்கினார்கள் .
ரஜினி என்று கட்சி ஆரம்பிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னமும் வராத சூழலிலேயே ரஜினிக்கு 13.5% வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று 80% வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்கள் போன்ற சிறுபான்மையினர் மத்தியில் இந்த வரவேற்பு 90% உள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.
மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் நீங்கலாக ஏனைய 34 மாவட்டங்களில் ரஜினிக்கு பேராதரவு உள்ளது. கடலோர மாவட்டங்களிலும், செமி அர்பன் பகுதிகளிலும், ரஜினிக்கு பெரிய வரவேற்பு காணப்படுகிறது.
கமலுக்கு வாக்களித்தவர்கள் அந்த வாக்குகளை அப்படியே ரஜினி பக்கம் திருப்புகிறார்கள் என்று சர்வே முடிவுகள் சொல்கின்றன.
திமுக, அதிமுக என்று தமிழக அரசியலில் அம்பது வருடங்களுக்கும் மேலாக பழம் தின்று கொட்டை போட்டுவரும் இரு பழம் பெருச்சாளிக்கட்சிகளும் , ரஜினி வரவால் தேர்தலில் பலத்த அடிவாங்கும் என்று சர்வே முடிவுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
லயோலா கல்லூரியில் பயின்று , மூளை சலவை செய்துகொண்ட தமிழக தொலைக்காட்சி நெறியாளர்கள் நாலு பேரும் எவ்வளவு தில்லுமுல்லுகளை செய்தாலும் , மக்கள் தமிழகத்தில் மிக தெளிவாக உள்ளனர். மீடியாக்கள் செய்யும் பொய்ப்பிரச்சாரங்களுக்கு மக்கள் சாவு மணி அடிப்பார்கள் என்பது மே 2021 இல் எல்லோருக்குமே புரியும்.
இது இன்றைக்கு முகநூலில் பார்த்தது ..படித்தது!. என்வரை இதை நம்பமுடியவில்லை லிஸ்டில் வைத்திருக்கிறேன்.ஏன் என்றால் நான் திமுகவோ இசுடாலினோ இல்லை!

மீண்டும் சந்திப்போம்.    

Friday, January 17, 2020

புத்தகக்கண்காட்சியும் வெற்றுக்கூச்சல் போடும் கிறுக்கு மாய்க்கான்களும்!

சென்னை புத்தகக்கண்காட்சியை இடதுசாரிகளும், திமுக அபிமானிகளும் எத்தனை கேவலப்படுத்த வேண்டுமோ அத்தனை அசிங்கங்களையும் அரங்கேற்றினார்கள். மதுரை மார்க்சிஸ்ட் கட்சியின் எம்பி சுனாவெனா கீழடி பற்றிப் பேச வந்தவர், அதைப்பேசமாட்டேன் என்றுசொல்லி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகப் பேசி அரசியல் கலப்படம் செய்தார். இடதுசாரி லூசுகள் எல்லாம் கூடி பபாசிக்கெதிராக வாயில் கருப்புத்துணிகட்டி கண்டன ஆர்ப்பாட்டம் செய்த வேடிக்கையை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் வீடியோ கொடுத்துப் பதிவு செய்திருக்கிறேன். மூன்றாவதாக பழ. கருப்பையா மகன் கரு.ஆறுமுகத்தமிழன் களத்தில் தனித்து இறங்கி இருப்பது இன்னும் அசிங்கமாக வெளிப்பட்டிருக்கிறது.

வீடியோ 46 நிமிடம் முழுதும் பார்க்க 
வேண்டியதில்லை! முதல் 10 நிமிடமே 
மொத்த சங்கதியின் யோக்கியதையைச் 
சொல்லிவிடுகிறது.  
ரெட் பிக்ஸ் தளத்தைத் தவிர இப்படிச் சம்பந்தமே இல்லாத தலைப்புக் கொடுத்து விஷயத்தை திசை திருப்ப முயற்சிக்கிற சேனல் வேறில்லை என்பதை ஏற்கெனெவே பலமுறை சொல்லி அப்புறம் அவர்கள் வீடியோக்களைப் பகிர விருப்பமில்லாமல் இருந்தவனை இந்த அப்பட்டமான பொய்த்தலைப்பு கொஞ்சம் உசுப்பி விட்டது. வெகுண்டெழுந்த தமிழர்கள் என்கிறார்களே. அப்படி எத்தனைபேர் வெகுண்டெழுந்தார்களாம்? வீடியோவில் ஒரே ஒரு ஆசாமிதான் கண்டனம் தெரிவித்துப் பேசுகிறார்! திராவிடங்கள், நாம் தமிழர் கட்சி சொல்லி வருகிற பொய் புளுகுக்கு மேல் ரெட் பிக்ஸ் மாதிரி ஊடகப் புளுகுகள் இருக்கின்றன, தமிழர் மெய்ப்பொருளியல் என்று பேச வந்த ஆறுகத்தமிழன், தொடர்பே இல்லாமல் ரஜனி துக்ளக் ஆண்டுவிழாவில் பேசியது, குடியுரிமைச் சட்டத்திருத்தம் என்று அரசியல் கலந்து பேசியது சரிதானா? சரிதான் என்று யாராவது சொன்னால், அவர்கள் 200 ருபீஸ் உபிக்களோ, அல்லது இடதுசாரிக் குறுங்குழுக்களாகவோ தான் இருப்பார்கள் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் வேண்டாம்! வாசகர் கடிதங்கள் என்று இருபகுதிகளாக ஜெயமோகன் தளத்தில் வெளிவந்திருக்கும் கடிதங்கள் புத்தகக் கண்காட்சி தானாகவே தன்னை உருவாக்கிக்  கொண்ட விதம், தினமணி முதலான நாளிதழ்களும், சமூக வலைதளங்கள் தான் வளர்த்தன என்பதைப் புட்டு வைக்கின்றன. கருணாநிதி ஏதோ பார்த்துச் செய்வார் என்று அவர்காலடியில் புத்தகக் கண்காட்சியை வைத்தவர்கள், கருணாநிதி புத்தகக் கண்காட்சிக்கு வந்தபோது, பழ.கருப்பையா (அவரை மிமரிசித்து எழுதியிருந்த) புத்தகம் கண்ணில் படாமல் ஒளித்து வைத்த கதையையும் சேர்த்தே தெருவில் இழுத்து விட்டிருக்கிறார்கள்!



சசி தரூர் திருமதி சுதா மூர்த்தியுடன் நடத்துகிற ஒரு சிறு நேர்காணல் வீடியோ 16 நிமிடம்தான்! முழுக்க முழுக்க சுதா மூர்த்தியின் புத்தகங்களைப்  பற்றி மட்டுமே என்பது பார்க்க எத்தனை அழகாய் இருக்கிறது! இத்தனைக்கும் இது சென்ற ஆண்டு நிகழ்ந்த ஒரு உரையாடல் என்பது, நிகழ்ச்சியின் சுவையைக் குறைக்கிறதா ?! சுதா மூர்த்தியின் 200வது புத்தக வெளியீட்டு நிகழ்வின் முழு நிகழ்ச்சியும் இங்கே.  வீடியோ 56 நிமிடம். இன்போசிஸ் நாராயண மூர்த்தியும், சசிதரூரும் காங்கிரஸ்காரர்கள் என்பது எங்காவது வெளிப்பட்டதா?  

புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் பேசட்டுமே! அதை விடுத்துக் கிறுக்கு மாய்க்கான்கள் எதற்காக வெற்றுக்கூச்சல் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்? வாய் இருக்கிறது என்பதற்காக எங்கு வேண்டுமானாலும் வந்து கரைச்சல் பண்ணுவார்களா?இதுமாதிரியான போக்குகளைக் கடுமையாகக் கண்டிப்பதன் மூலமே அடக்க முடியும்.

மீண்டும் சந்திப்போம்.  

Thursday, May 16, 2019

கமல் காசர்! அப்புறம் இடதுசாரிகளின் வீழ்ச்சி!

அனேகமாகத் தேர்தல் முடிவுகள் வெளிவருகிற வரையில் கமல் காசர் உளறல் மட்டுமே இங்கே செய்திகளில் சேனல் விவாதங்களில் முக்கிய இடம் பிடிக்கும் என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு ஊடகங்களுக்கு இங்கே செய்திகளுக்கான வறட்சி இருப்பது தெளிவாகப் புலப்படுகிறதே, கவனித்துப் பார்க்கிறீர்களா? 


இங்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அருணன் தன்னுடைய சொந்தக் கட்சியின் கொலைவெறித் தாண்டவங்களை மறந்துவிட்டுப் பேசுகிறாரா? மறைத்துவிட்டுப் பேசுகிறாரா? கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்து, அதன் வலது சந்தர்ப்பவாதம் பிடிக்காமல் கட்சியை விட்டு வெளியேறி, ஒரு புதிய கட்சியைத் தொடங்கியதற்காக T P சந்திரசேகரன் என்கிற உள்ளூர்ப் பிரமுகர்    ஏழு வருடங்களுக்கு முன்னால் 2012 மே மாதம் 4 ஆம் தேதி மார்க்சிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அவ்வளவு எளிதில் மறந்து விடக்கூடியது தானா? கொலைக்குத் தூண்டுதலாக இருந்ததாக இன்றைய கேரளா முதல்வர் அன்றைக்கு கேரள மாநிலக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பிணராயி விஜயன் பெயரும் அடிபட்டது. “The T P murder was pre-planned and is blood chilling and monstrous. The aim of the murder is not personal vendetta. The way the murder was conducted is not only inhuman but is also brutal and savage. It not only shocks the conscience of the court, but it also shocks the conscience of the entire society.”  இது சந்திரசேகரன் கொலைவழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வாசகங்கள். “It is true that the deceased (T P Chandrasekharan) was a public figure in the locality. He was the leader of an emerging political party. Motive of the murder was political animosity. Accused 1 to 7 were tools in the hands of the persons who entertained political enmity towards the deceased.... The murder in this case was cold blooded, pre-planned and brutal. The motive of the crime was not any personal enmity. The manner in which the murder was committed reveals extreme depravity. The action of accused not only was inhuman but ruthless and barbaric. It shocks not only the judicial conscience but the collective conscience of the society.” இதுவும் நீதிமன்றம் சொன்னதுதான்  கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் குறிப்பாகக் கண்ணூர்ப் பகுதியில் நடத்திய கொலைவெறித்தாண்டவம் குறித்தான செய்திகள் இணையத்தில் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. அருணன் போன்றவர்களுக்காக இதை சொல்ல முற்படவில்லை, மார்க்சிஸ்டுகள் எவ்வளவு பொய்யர்களோ அதை போலவே கொலைவெறி பிடித்தாடுகிறவர்களும் கூட என்பதைச் சொல்வதற்காக மட்டுமே. இந்தக் கொலை பற்றிய விரிவான தகவல்களுக்கு 

நிலை இன்னமும் மோசம் அடைந்திருக்கிறது.வங்காளத்தில் ஒரே ஒரு எம்பி இடது சாரிகளுக்குக் கிடைக்கலாம்.30 வருடங்களாக ஆண்ட மாநிலத்தில்! கேரளத்தில் 5 கிடைத்தால் பாக்கியம்.உலகின் முதல் ஜன நாயக இடது அரசு அமைந்த நிலம்.
இடதுசாரி சிந்தனை மேற்கு நாடுகள் போல பல்கலைக்கழக வளாகங்கள்,அறிவு ஜீவிகளுக்கு நடுவில் மட்டுமே புழங்கும் ஒரு fad ஆக மாறிவிடும் அபாயம் உள்ளது.
Its not the ascent of right but the almost complete absence of left in the picture that worries me .They can only be the counterbalance not the regional parties.But everybody has climbed on their wagon except the left.They are not even on the platform .worry.  

நண்பர் போகன் சங்கர் கவலைப்படுவதில் கொஞ்சம் நியாயம் இருந்தாலும், இப்போதைய மோசமான சரிவுக்கு இடதுசாரிகளே முழுமுதற்காரணம் என்பதை மறந்துவிட்டுப் பேசுவது எந்த அளவுக்குச் சரியாக இருக்கும்? 

இங்கே பதிவுகளில் சரியான தரவுகள் ஆதாரங்களோடுதான் அவைமீதான் என்பார்வையைச் சொல்லிவருகிறேன். மாற்றுக கருத்து இருந்தால் சரியான காரணங்கள், தரவோடு எழுதினால் அதையும்  இங்கே வெளியிடத்  தயாராகவே இருக்கிறேன். 2014 இல் போகன் சங்கர் சொல்லியிருக்கிற கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. இதே கவலையைப் பல வருடங்களுக்கு முன்னால் ராமச்சந்திர குகாவும் வருத்தப் பட்டுச் சொல்லியிருந்தார். வலதுசாரிச் சிந்தனையுடன் இங்கே பிஜேபி வளர்ந்து வருவதற்கு சரியான மாற்றாக இடதுசாரிகளால் மட்டுமே இருக்க முடியும். காங்கிரசோ, மாநிலக் கட்சிகளோ அந்த இடத்தை ஒருபோதும் நிரப்ப முடியாது.

மீண்டும் சந்திப்போம்.
                        

Sunday, February 24, 2019

அரசியல் களம்! கூட்டணி பாவமா? பரிதாபமா?

தமிழக அரசியல்களம் முன்னெப்போதும் இதுமாதிரிப் பரிதாபங்களாக அங்கங்கே ரீல் அறுந்துபோய்க் கிடந்ததில்லை! அலுமினிய குவளையைப் பார்த்து தகர டபபா சத்தமாக இளிக்கிற மாதிரி, இங்கே ஒவ்வொரு கூட்டணியும் கேலிக்கூத்தாக்கப் படுவதில், சமூக ஊடகங்கள், குறிப்பாக யூட்யூப் சேனல்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. சொல்லிவைத்த மாதிரி இசுடாலின் ஆரம்பித்து வைத்த சூடு சொரணை இருக்கா முதற்கொண்டு கோபி பரிதாபங்கள் வரை! 


கூட்டணி பாவமா? பரிதாபமா? இந்தமாதிரி நக்கல் வீடியோக்கள், என்னமாதிரியான வாக்காளர்கள் மீது என்னமாதிரி தாக்கத்தை ஏற்படுத்தி விடுமென்று நினைத்துச் செய்கிறார்கள்? 200 ரூபாய் திமுக மாதிரி எங்களுக்கு வசைபாடத்தான் தெரியும்! விளைவு என்ன என்று கேட்டால் என்ன தெரியும் என்றா?

தேதிமுக வட்டாரம் கொஞ்சம் தெம்பாக இருக்கிற மாதிரித்தான் இப்போதுவரையிலான நிலவரங்கள் சொல்கின்றன. விஜய் காந்த் மகன் நன்றாகவே பேசக் கற்றுக் கொண்டுவிட்டார்! அதுமட்டும் போதுமா?
  
ஆக, தேதிமுக வில்  பிரேமலதா, விஜய் பிரபாகரன் என இரண்டு ஸ்டார் பேச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிற மாதிரி ஒவ்வொரு தொகுதியிலும் பழைய வலிமையோடு செயல்படுகிற தொண்டர்கள் இருக்கிறார்களா என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டுமோ?

கிழக்கு பத்ரி ஏதோ ஒரு தொலைக்காட்சிவிவாதத்தில் பேசியதன் மீது சிலரால் தடித்த வார்த்தைகளில் விமரிசனம் செய்யப்பட்ட விஷயம் கொஞ்சம் தாமதமாகத் தான் தெரியவந்தது. இன்று தான் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன். விஜய் காந்தின் முக்கியத்துவத்தை  திமுகவும், அதிமுகவும் எந்த அளவில் மதிப்பிட்டிருக்கின்றன என்று பத்ரி சொல்வது கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. அமமுக தினகரன், ம நீ ம கமல் காசர் இருவருடைய nuisance value குறித்துச் சொல்வதும்! 

    
தப்பும் தவறுமாகக் கணிப்பது, 2016 இல் பேசியதை அப்படியே உல்டா அடித்துப் பேசுவது, ஒன்றிரண்டு சீட்டுக்காக ஏதோ ஒரு கழகத்திடம் மண்டியிடுவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோகம் என்று அருணன் நினைக்கிறாரோ? பிட்டுப்பார்த்தால் உள்ளே அத்தனையும் சொத்தை என்றிருக்கிற அரசியல் சூழலில், கம்யூனிஸ்டுகளுடைய நிலைபாடு  என்ன பெரிய வித்தியாசமாக இருக்கிறது? அரசியலில் கிடைத்த வாய்ப்பைக் கோட்டை விட்டவர்கள் பட்டியலில் முதல் இடம் இந்திய கம்யூனிஸ்டுகளுக்குத் தான் என்பது அவர்களைத் தவிர எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது என்பது கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் பரிதாபம்!

பேச்சில் மட்டுமே இடதுகளாகவும், சமூக நீதிக் காவலர்களாகவும்  இருக்கும் விசிக, கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட   உதிரிகளைப் புறக்கணித்தால் மட்டுமே இவர்களுக்கு புத்தி வருமோ? 

புத்தி புகட்டுவதற்கான வாய்ப்பு விரைவிலேயே தேர்தல் வடிவத்தில் வருகிறது!  

  

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)