Showing posts with label திமுக. Show all posts
Showing posts with label திமுக. Show all posts

Wednesday, June 23, 2021

அரசியலுக்கு வந்துவிட்டால் யாருக்கும் வெட்கமில்லை!

தினமலர் நாளிதழுக்கு என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்::: தி.மு.க., ஆட்சிக்கு வந்த 40 நாட்களிலேயே, அதன் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிட்டது போங்க! 'நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா என்பதை உறுதியாக சொல்ல முடியாது' என கையை விரித்து விட்டார், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன். 'பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் சாத்தியமே இல்லை' என, 'குண்டை' துாக்கி போட்டார், நிதி அமைச்சர் தியாகராஜன். தமிழக அரசு, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அதை சரிசெய்ய நிபுணர் குழு எல்லாம் அமைக்கிறது, மாநில அரசு.பிரதமர் மோடியை சந்தித்து 25 கோரிக்கைகளை முன்வைத்தார், முதல்வர் ஸ்டாலின். அவை நிறைவேற்றப்படுமா என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும், பிரதமர் மோடி தரவில்லை.  தி.மு.க.,வினர், 'கோ பேக் மோடி' என பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்ததை, அவ்வளவு சீக்கிரம் பிரதமர் மோடி மறந்திருக்க மாட்டார். போதாக்குறைக்கு, நிதி அமைச்சர் தியாகராஜன் வேறு, தன் பங்குக்கு அவ்வப்போது மத்திய அரசை விமர்சித்து கடுப்பேத்துகிறார். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதில் சிறப்பாக செயல்பட்ட முதல்வர் ஸ்டாலின், நிதி அமைச்சர் நியமனத்தில், 'கோட்டை' விட்டுவிட்டார் என, நினைக்க தோன்றுகிறது. கோவில் நிலங்களை மீட்பதில் அக்கறை காட்டி பாராட்டு பெற்ற ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, 'கோவிலில், பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்' எனக் கூறி, மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்தார். 'முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்த பாவிகள் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்' என, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்களான வைகோவும், திருமாவளவனும் வேறு, முதல்வர் ஸ்டாலினுக்கு குடைச்சல் தருகின்றனர். ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது கிடைத்த நிம்மதியும், மகிழ்ச்சியும், ஆட்சிக்கு வந்த நாள் முதல் இல்லாமல் போய்விட்டது; பாவம்! உண்மையிலேயே பரிதாபப் படுகிறாரா அல்லது நையாண்டி செய்கிறாரா? எதுவாக இருந்தாலும் ஒன்றரை மாதத்திலேயே திமுகழக அரசின் லட்சணம் இதுதான் இப்படித்தான் என்றாகிவிட்டது மட்டும் நிச்சயம் 


இந்த ஒன்றியம் இவர்களிடம் படுகிற பாடு இருக்கிறதே! நீட் தேர்வு பற்றிய  பேச்சு எழுகிற சமயங்களில் எல்லாம் சினிமா நடிகர் சூர்யா தவறாமல் ஆஜராகி விடுகிறார் என்பது கூட தமிழக அரசியலின் இன்னொருவிதமான காமெடி! 


நாடாளுமன்றம்  நிறைவேற்றிய சட்டங்கள், திருத்தங்கள் மீது தீர்மானமோ ஆட்சேபமோ தெரிவிப்பது ஒரு  பயனுமில்லாத நேற்று அரசியல் ஸ்டன்ட் மட்டுமே! அதுபோலவே தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு, தேர்வு ரத்து என்பதும் சட்டமசோதாவை  உச்சநீதிதிமன்றம் உறுதிப்படுத்திய பிறகு எடுபடாது என்று தெரிந்தே மாணவர்களையும் பெற்றவர்ளையும் குழப்பி ஏமாற்றுகிற வேலை! பின்னே வேறென்ன?   
   

தினமலர் நாளிதழ் இன்றைக்குப்பார்த்து எதற்காக இந்தக் கார்டூனை வெளியிட்டிருக்கிறார்கள்?பாமகவின் இரட்டைநாக்கும் ஆதாயம் இருந்தால் கூட்டணியை  மாற்றிக்கொள்ளும் வேகமோ புதிது அல்ல. 2021 சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு திமுகவை நெருங்க பாமக எடுத்த முயற்சிகள், பாமகவின் சட்ட மன்ற உறுப்பினர் G K மணி மருத்துவர் ராமதாசின் தூதராகச் செயல்பட்டுவருவது எதுவுமே ரகசியமல்ல. ஆச்சரியமுமல்ல. 


முதல்வர் நல்ல முடிவெடுக்கப்படும் என்று சொன்னது போல மருத்துவர் ராமதாசும் முடிவெடுத்துவிடுவார் என்பது வெறும் எதிர்பார்ப்பு மட்டுமல்ல. 


தினமலர் செய்தி மட்டும் உண்மையாக இருக்குமானால் தமிழகத்தில் பிஜேபி மிக வேகமாக வளர்ந்துவிட்டது. அடுத்து வரும் தேர்தல்களில் கழகங்களை, கூட்டணி வைக்காமலேயே தோற்கடிக்கிற அளவுக்கு வலிமை பெற்று வளருகிறது என்று சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டுமோ? A Party with a diference என எப்போதோ யாரோ சொன்ன கதையெல்லாம் பொய்தானாம்! அவர்களும் கழகங்கள், காங்கிரஸ், இதர கட்சிகள் மாதிரியே இந்தவிஷயத்திலும் என்று நீட்டி முழக்குகிறது தினமலர். 

டிஸ்கி: ஆனால் பிஜேபியின் மாநில பொதுச் செயலர்
K T  ராகவன் மறுப்புச் செய்தி வெளியிட்டிருக்கிறார் 


அதேபோல H ராஜா மீது தேர்தல் செலவுக்காகக் கொடுத்த பணத்தில் 4 கோடி ரூபாய்க்கு வீடுகட்டிக் கொண்டுவிட்டார் என்ற செய்தி அமமுக ஆசாமிகளால் பரப்பப்படுவதையும் என்ன செய்யப்போகிறார்கள் என்ற தகவல் கிடைத்தால் பகிர்கிறேன். 

அரசியலுக்கு வந்துவிட்டால் யாருக்கும் வெட்கமில்லை என்பது சரிதான் போல. 

மீண்டும் சந்திப்போம். 

Wednesday, June 9, 2021

சின்னச் சின்னதாய்க் கொஞ்சம் #செய்திகளின்அரசியல் !

தினசரி ஏதாவது ஒரு ஆடியோவை வெளியிட்டு, யாரைக் குழப்புகிறார் சசிகலா? புதிய தறுதலை அறிவாளிகளே குழம்புகிறார்கள் என்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு? 


தேர்தல் தோல்விக்குப்பின்னால் அதிமுக கொஞ்சம் துவண்டுபோய்த்தான் கிடக்கிறது.O பன்னீர் செல்வம் பழைய பன்னீர்செல்வமாக இருக்கிறாரா அல்லது புதிதாக தர்மயுத்தம் 2 என ஆரம்பிப்பாரா? சசிகலா அதிமுகவுக்குள் குட்டையைக் குழப்பிப் பார்க்கிறார் என்பது ஒருபக்கம், OPS என்னசெய்வாரோ  என்று இன்னொரு பக்கமுமாக கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது.  இதில் திமுகவே ஒதுங்கிநின்று வேடிக்கை பார்க்கிறதென்றால் .........!


கமல் காசருடைய #மநீம கட்சி என்ன நிலைமையில் இருக்கிறது? மக்கள் நீதி மையத்தின் ஆலோசனை கூட்டம் இணையம் ஊடாக நடந்தது.கமலஹாசன் தானே பேசி தானே ஆலோசனை செய்திருக்கலாம் அல்லது தசவாதாரம் போல பல வேடங்களில் அவரே வந்து பேசியிருக்கலாம் என்று முகநூலில் ஸ்டேன்லி ராஜன் நேற்று முன்தினம் நையாண்டி செய்திருப்பது போலத் தானா? ஆனால் இரண்டு நாட்களாக பொள்ளாச்சி Dr. மகேந்திரன் திமுகவில் இணையப்போவதாக, பெரிய போஸ்டிங் காத்திருப்பதாக செய்திகள் கசிந்துகொண்டே இருந்தன.மு க அழகிரி - இசுடாலின் சந்திப்பு மாதிரியே அதுவும் வரும் ஆனா வராது ரகமாகிப்போய்விட்டது.


கமல் மாதிரியே, நிறைய பன்ச் டயலாகெல்லாம் பேசித் தன்னுடைய அரசியல் ஞானத்தை வெளிப் படுத்தியவர் விஜய் சேதுபதி. தேர்தல் ரிசல்ட்டுக்குப்பிறகு அரசியல் பன்ச் பேசினால் என்னவாகும் என்பது தெரிந்தவராக, சங்கடமான பன்ச்சை விட்டு சமையல் நிகழ்ச்சியில் சங்கீதம் பாடப்போறேன் என்று ஒதுங்கிவிட்டார். யார் சேனலில் என்று கூடத்தெரியாத அப்பாவியாக இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.


என்ன தயா இதெல்லாம் என்று ஆதங்கப்பட வேண்டாம்! சமூக இடைவெளி, கொரோனா கட்டுப்பாடுகள், ஆட்டோவில் இருவர் மட்டுமே பயணிக்கலாம் இவை சட்டமே நாங்கள்தானடா திமுக அமைச்சர்களுக்குப் பொருந்தாது என்பது உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டுமே!

சோனியாவின் தவப்புதல்வன் ராகுல் காண்டிக்கு ட்வீட்டரில் மட்டுமே அரசியல் பேசத்தெரியும். அதையும் யார் எழுதிக்கொடுக்கிறார்கள் என்பது காங்கிகளின் பரமரகசியம். பப்பு ஒரு கீச்சைப் போட்டவுடன் நாலா பக்கங்களிலிருந்தும் வந்து எப்படிக் கிழிக்கிறார்கள் பாருங்கள்! இந்த லட்சணத்தில் நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் களத்தில்
நிற்கக்கூடியவர் என்று ராகுலுக்கு முட்டுக்கு கொடுக்கிறார்களே. அது எப்படி?

இங்கே இசுடாலினுக்கு ஊடகங்கள் முட்டுக்கொடுக்க ஆரம்பித்து சில வருடங்கள் தான் ஆகியிருக்கும்! ஆனால் ராகுலுக்கு 2004 இலிருந்தே முன்களப்பிணியாளர்கள் முட்டுக் கொடுத்துவருகிறார்கள். முட்டுக்கொடுத்துக் கொடுத்தே இந்த நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டார்கள் என்பதையும் சேர்த்தே பாருங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.

Monday, May 31, 2021

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி தொடுத்த கணை! #கனிமொழி #ஜெகத்காஸ்பர்

யாரும் எதிர்பாராவண்ணம்  மிகபெரிய அதிரடி அஸ்திரத்தை பறக்கவிட்டுவிட்டார் சுவாமி  ஆம்! 

ஜெகத்கஸ்பர் எனும் பாதிரி சர்ச்சில் திருப்பலி வைப்பதை தவிர எல்லா இந்திய பிரிவினைகளுக்கும் கொடிபிடிப்பவர் என்பது உலகறிந்தது புலிகளின் மிக நெருங்கிய நண்பரான இவர் முன்பு பிலிப்பைன்ஸில் சர்ச்சைகுரிய வானொலியில் பணியாற்றியதும் பின் இலங்கைக்கு சென்று புலிகளோடு பழகியதும் பின்னாளில் லண்டனிலும் தமிழகத்திலும் புலிகளின் அறிவிக்கபடாத பினாமியாக சுற்றிவந்ததும் எல்லோரும் அறிந்தது. அன்னார் கனிமொழி முகாமில் மகா முக்கிய புள்ளி என்பது உலகறிந்தது

அன்னாரின் புலி ரகசியங்களையும், 2006ல் புலிகளை அமெரிக்கா தடை செய்தபொழுது பொழுது வெளியிடப் பட்ட ஆவணங்களையும் இப்பொழுது வெளியிடுகின்றார் சுவாமி. இதுகாலமும் மத்திய அரசு இதுபற்றி ஏன் வாய்திறக்கவில்லை என்றால் இதெல்லாம் சர்வதேச விவகாரங்கள், சில நாடுகளின் அனுமதியில்லாமல் பல விஷயம் சாத்தியமில்லை. இப்பொழுது எங்கோ அனுமதி கிடைத்துவிட்டது,  ஜெகத் கஸ்பரை டெல்லி மேலிடம் குறிவைத்தாயிற்று, சாமி சரியாக அம்பை வீசிவிட்டார்.

புலிப் பாதிரி, புலித் தந்தை கெஸ்பருக்கு இனி போதாத காலம், விஷயம் எங்கெல்லாமோ சுற்றத்  தொடங்கி விட்டது. சரி, இவ்வளவு காலமும் இல்லா சிக்கல் இப்பொழுது கஸ்பர்மேல் ஏன் விழுகின்றது என்றால் சுவாமியினை களத்துக்கு இழுத்து வந்த அந்த சேஷாத்திரி பள்ளிக்கும் பாதிரிக்கும் ஏதோ வில்லங்கம் என்பது மட்டும் புரிகின்றது.

ஆக‌, "பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே, அந்த புலிபாதிரியினை மன்னிக்காதேயும், இந்தியத்  திருநாட்டை குழப்ப வந்து தமிழக மக்களிடம் பிரிவினையினை வளர்க்கும் அந்த புலித் தந்தையின்  தோலை சுப்பிரமணியன் சாமி எனும் இறைவாக்கினர் வழியாக நீர் உரித்ததற்கு கோடான கோடி நன்றி தகப்பனே! கோட்டான கோடி நன்றி..." என்று முகநூலில் நன்றி பாராட்டுகிறார் ஸ்டேன்லி ராஜன்.

 


He (Dr.Swamy) also states “One correction.Father Gasper Raj of Christian Church (no surprise since LTTE was patronised by Vatican and hence TDK complicity),is that he formed Chennai Sangamam with Kanimozhi and BC to hold “cultural festivals”. The two cheated Kanimozhi of funds collected so she has quit him”

These are the reasons one can’t fully abandon Subramanian Swamy and we need him for some hot cases. There is not a good bad terrorist or bad bad terrorist. Whoever oppose and condemn terrorism must be backed as long as they genuinely fight for.
But having said that hope this is not an another hit and run or miss case என்கிறார் Raaman CK



டாக்டர் சுப்ரமணியன் சுவாமியை ஏதோ காரணங்களுக்காக இங்கே ஒருவர் மிகவும் விரும்பலாம் அல்லது வெறுக்கவும் செய்யலாம். கட்டுப்பாடில்லாத loose gun என்று பழிக்கவும் செய்யலாம். ஆனால் முற்றிலும் புறக்கணிக்கப்பட முடியாதவராக, இந்த மாதிரி விஷயங்களை அம்பலப்படுத்தி வெளிச்சத்துக்கு கொண்டுவர டாக்டர் சுவாமி அவசியமானவராகிறார் என்ற என்னுடைய கருத்திற்கு இந்த இரு நண்பர்கள் பகிர்வுகளும் வலுசேர்க்கின்றன.

மீண்டும் சந்திப்போம்

Sunday, March 28, 2021

தமிழக அரசியல்களம் ஏன் இன்னமும் தடுமாறிக் கொண்டிருக்கிறது?

ஆபாசராசாபேச்சுக்கு எதிர்ப்பு அதிகமாகி வருவதைக்  குறித்து திமுகவினர் யாரும் வாய்திறக்க வேண்டாம்.  கொஞ்சநாட்களில் சர்ச்சை, எதிர்ப்பெல்லாம் அப்படியே அமுங்கிப்போய்விடும் என்று இசுடாலின் கருதுவதாகத்  தோன்றுகிறது. அதுபோலவே தேமுதிகவின் சரிவுக்கு என்ன காரணமாம்? அதை வெறும் இரண்டே முக்கால் நிமிட வீடியோவில் சொல்லிவிட முடியுமா என்ன? 


தேமுதிகவின் சரிவுக்கு விஜய பிரபாகரன் ஒருவரை மட்டுமே குறைசொல்கிற இந்தச் செய்தியைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தினமலர் தேர்தல்களம் 8 பக்க இணைப்பில் நல்லா இருந்த கட்சியும் நாலு சகுனி பசங்களும் என்று தலைப்புக்கொடுத்து,ஒரு மிமிக்ரி கலைஞன் விஜயகாந்த் மாதிரியே பேசியதைச் சொல்லி சப்பென்று முடித்திருக்கிற மாதிரியே இந்த வீடியோ செய்தியும் இருக்கிறது.

நேற்று கோவை தெற்கு தொகுதியில் பிஜேபி வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி ஈரானி பேச்சுக்கு கமல் காசரின் கட்சி பதில் சொல்லியிருப்பது திமுகவினருக்குத் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக்  காட்டுவதாகவே இருந்தது.

முன்னதாக  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசும்போது, ‘‘பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுடன், மக்களுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொள்வது, அதற்குண்டான தீர்வுகளை வழங்குவது, ஆட்சி நிர்வாகம் பற்றிய புரிதல், திட்டங்கள் தொடர்பாக விவாதம் செய்ய வேண்டும் என மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நான் சவால் விடுகிறேன்.பாஜகவின் வானதி சீனிவாசனுக்கு அளிக்கும் வாக்குகள் வளர்ச்சிக்கு உண்டான ஓட்டு. ஏழை, எளிய மக்களை, அவர்களின் வறுமையில் இருந்து வெளிக்கொண்டு வருவதற்கான ஓட்டு. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

காலைக் கடன்களைக் கழிக்க பெண்கள் பல இன்னல்களை எதிர்கொண்டனர். அதைச் சரிசெய்ய கோடிக்கணக்கிலான கழிப்பறைகளை நாடு முழுவதும் கட்டிக் கொடுத்துள்ளார். அதில் பெரும் பங்கு பயனாளிகள் தமிழகத்தில் உள்ளனர்.அதேபோல், கரோனா காலகட்டத்தில் 8 மாதங்களுக்குப் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ரேஷன் அரிசி மற்றும் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள், தேர்தலின்போது பாஜகவின் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். அதேபோல், இளைஞர்கள் தங்களது நட்பு வட்டாரத்தில் உள்ள மற்ற இளைஞர்களுக்கும் தெரிவித்து அவர்களை பாஜகவுக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும்’’ என்று ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.  


வானதி சீனிவாசன் போன்ற துக்கடாக்களுடன்.... என்ன ஒரு ஆணவமான அறிக்கை?! தைரியம் இருந்தால் சவால் விட்ட ஸ்ம்ருதி ஈரானியுடனேயே விவாதம் செய்ய கமல் காசர் விருப்பம் தெரிவித்திருக்க வேண்டியது தானே! ஏற்கெனெவே ஸ்ம்ருதியுடன் விவாதம் செய்து பப்பரப்பே என்று கமல் காசர் தவித்துத் தண்ணீர் குடித்த கதை மறந்து போய்விட்டதோ?

நினைவு படுத்திக்கொள்ள இங்கே 90 நிமிட விவாதம்   


 இது  தமிழில் 5 நிமிடச் சுருக்கம்.  

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் தமிழகத்தில் பல லட்சம் பேர் வேலை இழப்பு: ராகுல் காந்தி
ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் தமிழகத்தில் பல லட்

பிழைப்பு கெட்டுப்போன காங்கிரஸ், திராவிடங்களைச் சொல்கிறாரோ ராகுல் காண்டி?!  

தமிழக அரசியல்களம் ஏன் இன்னமும் தடுமாறிக் கொண்டிருக்கிறது?  என்கிற கேள்வி எனக்குள்  உறுத்திக்கொண்டே இருந்ததற்கு விடைசொல்கிற மாதிரி முகநூலில் ஒரு பகிர்வை இப்போது பார்த்தேன்:


போலி பாதிரி போலி போராளி ஜெகத் கஸ்பர் அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வெற்றிக்காக பிரச்சாரம் செய்ய வில்லை, பாஜகவுடன் காம்ப்ரமைஸ் செய்து கொண்டது போல இருக்கிறது என்று பேசியுள்ளார்.
மதமாற்ற கும்பலின் தலைவனுக்கு அரவக்குறிச்சி தொகுதி மட்டும் ஏன் கண்களை உறுத்துகிறது. ஜெகத் கஸ்பருக்கு ஏற்பட்ட அச்சத்தின் காரணம் என்ன? எத்தனையோ தொகுதிகளில் திமுக வெற்றி பெற வாய்ப்பு இல்லாத நிலையில் ஜெகத் கஸ்பருக்கு அரவக்குறிச்சி மீது மட்டும் ஏன் அக்கறை?
பதில் ஒன்று தான்.
இத்தனை காலம் தமிழகத்தில் பாஜகவை வளரச் செய்ய நல்ல தலைவர்கள் கிடைக்கவில்லை. பாஜகவின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு தெளிவான பதிலடி தர சரியான தலைவர் இல்லை.
ஆனால் இப்போது ஒரு தலைவன் உருவாகிறான். சூடான ரத்தமும், தெளிவான நோக்கமும், வரையறுக்கப்பட்ட கொள்கைகளும், எதையும் நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ளும் தைரியமும், எதைப்பற்றியும் விவாதிக்கும் அறிவு கூர்மையும், நேர்மையும், இந்த தேசத்தின் மேன்மையையும் உணர்ந்த, சுயநலம் இல்லாத எளிமையான அணுகுமுறை கொண்ட ஒருவன் களத்தில் இருக்கிறான்.
கோடிக்கணக்கான இளம் தமிழர்களை தேசியத்தின் பக்கம் நிற்க செய்யும் வலிமையுடையவன், இப்போதே லட்சக்கணக்கான தமிழர்களை ஈர்த்து விட்ட இளம் தலைவன் உருவாகி வருகிறான்.
அரவக்குறிச்சி அவனை அடையாளப்படுத்துகிறது. அரவக்குறிச்சி தரும் வெற்றி அவனை அங்கீகரிக்கும். அதன் பின் தமிழகமெங்கும் அவன் வழியில் இளைஞர்கள் திரள்வார்கள். அவன் வழியில் தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்கும்.
அவனே வருங்கால தலைவன், அண்ணாமலை அவன் பெயர்.
ஜெய்ஹிந்த்

மீண்டும் சந்திப்போம்   

Friday, February 7, 2020

சின்னச் சின்னதாய்! கொஞ்சம் #அரசியல்

நம்மூர் அரசியல்வாதிகள் கோமாளிகளாகவும் கொடூர வில்லன்களாகவும் எந்தெந்த நேரத்தில் எப்படி இருப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியாதபோது, நமக்கு மட்டும் அந்த மர்மம் அவ்வளவு சுளுவாகப் பிடிபட்டு விடுமா? இடதுசாரிகளுக்கு திடீர் திடீரென்று வந்துவிடும் ஞானோதயத்தை முதலில் பார்த்து விடலாமா?


இடதுசாரிகளுக்கு இப்படி வரும் திடீர் ஞானோதயம் மாநிலத்துக்கு மாநிலம், மாவட்டத்துக்கு மாவட்டம் தெருவுக்குத் தெரு ஒரே மாதிரி இருக்காது என்பது ஒரு காலத்தில் சர்வதேசியம் பேசியவர்களுடைய சோகம்!
வீடியோ 31 நிமிடம் தான்! முந்தைய இருபதிவுகளில் சேகர் குப்தா ஒரு முக்கியமான கேள்வியை எடுத்துக் கொண்டு விடையை எங்கே தேடுவது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்ததை வாசித்து இருந்தால், இங்கே நரேந்திர மோடி ஏன் தொடர்ந்து ஜெயிக்கிறார், காங்கிரஸ் தன்னுடைய அடையாளத்தை தொலைத்துவிட்டு, எழுந்திருக்கமுடியாமல் தடுமாறுவது ஏன், இடதுசாரிகள் எப்படிக் கரைந்து காணாமலேயே போய்க்கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கும், தேசியம், தேசியவாதம் என்பது இன்று வலதுசாரித் தன்மையோடு உலகளாவிய அளவில் வளர்ந்து வருவது ஏன் என்பதற்குமான விடைகளைக் கண்டறிவது கடினமானது அல்ல! கேள்வி கேட்டாலும் பிடிக்காது, பதிலென்ன என்பதைத் தெரிந்துகொள்ளப் பொறுமையும் இருக்காது என்பதை எப்போது விட்டொழிக்கப் போகிறோம்?  


2012 டிசம்பரில் அரவிந்தன் நீலகண்டன் எழுதி கிழக்கு வெளியீடாக வந்திருக்கிற புத்தகம்  பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிசம்  அச்சுப் புத்தகமாக ரூபாய் 350/-  இப்போது அமேசான் கிண்டில் மின்னூலாக ரூபாய் 210/-  பற்றிய சிறு விமரிசனக்குறிப்பை இன்று பார்த்தேன். கிழக்கு வெளியீடுகளை வாங்குவதில் மனத்தடை, தயக்கம் இன்னும் நீடிப்பதால் என்னுடைய வாசிப்புப் பட்டியலில் இந்தப் புத்தகம் இல்லை. 


ஹிந்து நாளிதழ் கூட அவ்வப்போது வாசகர் கருத்தாக இப்படி படம் வரைந்து போட்டுவிடும்! தினத்தந்தி கூட சமீப நாட்களில் ரஜனிகாந்த் பேசுவதைத் தலைப்புச் செய்தியாக்குகிறதே! கவனிக்கிறீர்களா? மீம்ஸ் போடுகிறவர்களுக்கு இப்போது பிரசாந்த் கிஷோர் தான் ஹாட் கன்டென்ட் !

    
இசுடாலின் இப்படிக் கதறுகிறவரை காமெடி கலாட்டா தொடரும் போலத்தெரிகிறதோ!! 


அதெல்லாம் சரி! கிச்சன் கேபினெட் கீழே பழனி தைப்பூசப் போஸ்டருக்கு  என்ன முடிவெடுக்கப் போகிறதாம்?  

   
பாலச்சந்திரன் சு 
இன்று விற்பனைக்கு வந்துள்ள குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ரஜினியின் அரசியல் வருகை எப்படி இருக்கும் என்று சுமார் ஒரு லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஒரு சர்வே முடிவுகளில் ஒரு பகுதியை மட்டும் சுருக்கமாக வெளியிட்டுள்ளார்கள். அதாவது சர்வே எடுத்தவர்கள் சர்வே அறிக்கையின் முடிவுகளை குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு கொடுத்துள்ளனர். சில டேட்டாக்களை மட்டும் சர்வே குழுவினர் குமுதம் ரிப்போர்ட்டருக்கு வழங்கினார்கள் .
ரஜினி என்று கட்சி ஆரம்பிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னமும் வராத சூழலிலேயே ரஜினிக்கு 13.5% வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று 80% வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்தவர்கள் போன்ற சிறுபான்மையினர் மத்தியில் இந்த வரவேற்பு 90% உள்ளதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.
மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் நீங்கலாக ஏனைய 34 மாவட்டங்களில் ரஜினிக்கு பேராதரவு உள்ளது. கடலோர மாவட்டங்களிலும், செமி அர்பன் பகுதிகளிலும், ரஜினிக்கு பெரிய வரவேற்பு காணப்படுகிறது.
கமலுக்கு வாக்களித்தவர்கள் அந்த வாக்குகளை அப்படியே ரஜினி பக்கம் திருப்புகிறார்கள் என்று சர்வே முடிவுகள் சொல்கின்றன.
திமுக, அதிமுக என்று தமிழக அரசியலில் அம்பது வருடங்களுக்கும் மேலாக பழம் தின்று கொட்டை போட்டுவரும் இரு பழம் பெருச்சாளிக்கட்சிகளும் , ரஜினி வரவால் தேர்தலில் பலத்த அடிவாங்கும் என்று சர்வே முடிவுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
லயோலா கல்லூரியில் பயின்று , மூளை சலவை செய்துகொண்ட தமிழக தொலைக்காட்சி நெறியாளர்கள் நாலு பேரும் எவ்வளவு தில்லுமுல்லுகளை செய்தாலும் , மக்கள் தமிழகத்தில் மிக தெளிவாக உள்ளனர். மீடியாக்கள் செய்யும் பொய்ப்பிரச்சாரங்களுக்கு மக்கள் சாவு மணி அடிப்பார்கள் என்பது மே 2021 இல் எல்லோருக்குமே புரியும்.
இது இன்றைக்கு முகநூலில் பார்த்தது ..படித்தது!. என்வரை இதை நம்பமுடியவில்லை லிஸ்டில் வைத்திருக்கிறேன்.ஏன் என்றால் நான் திமுகவோ இசுடாலினோ இல்லை!

மீண்டும் சந்திப்போம்.    

Wednesday, January 30, 2019

ஜாக்டோ ஜியோவுக்கு செக்! ஒழுங்கீனத்தை ஆதரிக்காதீர்!

வேறென்ன செய்ய வேண்டுமென்கிறீர்கள்? தொடர்ந்து திமுக மாதிரியே ஒழுங்கீனத்தை ஆதரிக்க வேண்டுமா? 


வேலைசெய்ய வருகிறார்களா? வேலைநிறுத்தம் செய்யவா?  



கீழே உள்ள வீடியோவில் ஒரே ஒரு உருப்படியான விஷயம்... அரசியல்வாதிகளுக்கும் ரிடையர்மெண்ட் வயது நிர்ணயிக்கவும் கோரிக்கைப் பட்டியலில் பெர்மனெண்டாக சேர்ப்பார்களாம்! மொதல்ல அதைச் செய்யங்கப்பு! 



"இதுநாள் வரை அறவழியில்(??) போராடிய ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் திமுக ஆட்சி அமையும் வரை பொறுமை காக்குமாறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்தவுடன் உரிய முறையில் நியாயமாகப் பரிசீலித்து நிறைவேற்றப் பட்டு, அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மனிதாபிமானம் போற்றப்படும் என்றும் உறுதியளிக்க விரும்புகிறேன்" என்று இன்றைக்கு ஸ்டாலின் சொல்லி இருப்பதாக ஹிந்து நாளிதழ் செய்தி சொல்கிறது.  

இந்தக் கார்டூன் தி மு கழகத்துக்கு வாக்களித்தால் எவ்வளவு வருத்தப்படவேண்டிவரும் என்பதை மிகவும் அழுத்தமாகச் சொல்வதுபோல இருக்கிறது. இவர்களோடு கூட்டணி வைத்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்குப் புதுப்புது ஐடியாக்கள் இப்படித் தெறிக்கிறதாம்! 


அரசுக்கு வருவாய் இல்லை . நட்டத்தில் இயங்க முடியுமா ? எனவே அரசை லாபகரமாக இயக்க நம்மால் முடிந்த சில யோசனைகளைச் சொல்லுவோம் .

முதலில் காவல் துறையால் அரசுக்கு பெரும் செலவு ; அதன் மூலம் வருவாயும் இல்லை .ஆகவே காவல் துறையைக் கலைத்துவிட்டு தனியார் கூலிபடைகளை ஊக்குவிக்கலாம் .

நீதித்துறையும் பெரும் செலவை ஈர்க்கிறது .எனவே நீதிமன்றங்களை மூடிவிட்டு நாட்டாமை ,கட்டப்பஞ்சாயத்து இவற்றை ஊக்குவிக்கலாம் . கொல்வதும் நானே கொல்லப்படுவதும் நானே என பகவான்கிருஷ்ண பரமாத்மா கீதையிலேயே சொல்லிவிட்டதால் இனி கொலை ,கொள்ளை போன்ற செயல் எதுவும் பகவான் திருவிளையாடலில் ஒன்று எனச் சேர்த்துவிடலாம் .

கல்வித்துறை ,சமூகநலத்துறை போன்ற சகல மக்கள் சேவைத்துறைகளையும் கலைத்துவிடலாம் .லாபம் தரும் டாஸ்மாக் மட்டுமே அரசு வசம் போதும் .

இன்னும் ஏகப்பட்ட பேஷான யோசனைகள் இருக்கு கேட்டால் சொல்லுவோம் …


.நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள்?

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)