Thursday, January 31, 2019

கீச்சுகளில் உலா! செய்திகள்! சொல்ல விடுபட்டவை!

இன்னமும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் இங்கே ஒவ்வொரு ஊடகத்துக்கும் ஒருவிதமான தேர்தல் சுரம்  தொற்றிக் கொள்ளும்! அவர்களுக்குத் தொற்றியதை நமக்கும் தொற்றிக்கொள்ள விடத்தான் வேண்டுமா? இது KDbrothers சேனலுக்கு ஓசி விளம்பரம் இல்லை!  
இனி செய்திகளை ஒவ்வொன்றாக அலசலாமா?
முதல் கீச்சைக் கொஞ்சம் கவனியுங்கள்! நாட்டின் எதிர்காலத்துக்கு சிறந்தது கூட்டணி ஆட்சியா? தனிக் கட்சி ஆட்சியா என்று கேட்பதிலேயே மாநிலத்தில் தனிக்கொள்ளை! மத்தியிலே கூட்டுக் கொள்ளை என்று சோனியாவோடு கூட்டணி அமைத்து 10 ஆண்டுகள் வளமாகக் கொழித்த பழையகதையை நினைவு படுத்துகிறார்களோ? நாட்டுக்கு நல்லது ஏன் தமிழ்நாட்டுக்கும் நல்லதாக இருக்கக் கூடாது?

கழகத்தின் முன்னோடி கருணாநிதி 2006 வாக்கிலேயே இந்தலாஜிக்கை அறிமுகப்படுத்தி, கூட்டாளிகளை வாயடைக்கச்  செய்துவிட்டார் என்பதை அறியாயோ கண்மணியே!அப்போது யார் யார் எந்த அணியில், எத்தனை சீட்டை ஜெயித்தார்கள் என்பதையும் அங்கே சுட்டியில் பார்த்துக் கொள்ளலாம்! கருணாநிதியால் செய்ய முடிந்ததை, ஸ்டாலினும் செய்ய முடியுமா என்பது 9 ரூபாய் நோட்டு போல கேள்விக் குறியாக இனிமேல்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்! 

அந்தக்கணிப்பு இந்தக்கணிப்பு என்று ஸ்டாலினை முன்னிறுத்தி வருகிற எந்தக்கணிப்புமே நம்பத் தகுந்ததுதானா? இதையும் இரண்டாவது கீச்சில் கொஞ்சம் உரசிப்பார்த்து விடலாமா? 

இங்கே வயது வாரியாகப் பிரித்து சொல்லி இருப்பதிலுமே கொஞ்சம் தெளிவில்லை! முதல் முறையாக வாக்களிக்கப் போகிறவர்கள் எண்ணிக்கை 19வயதுக்கு உட்பட்டவர்கள் வெறும் எட்டு லட்சத்துச் சொச்சம் தானா? அடுத்த பிரிவு 20 முதல் 29 வயதுக்குள் இருப்பவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 18 லட்சம்! இந்த இரண்டு பிரிவையும் சேர்த்தால் 1.27 கோடி! இதில் ஒருமுறை அல்லது இருமுறை வாக்களித்தவர் எண்ணிக்கை சரியாகப் புலப்படவில்லை என்றாலும் தி மு கழகம்  இந்தப்பிரிவினரில் எத்தனை சதவீத வாக்குகளை வாங்கிவிடும் என்கிறீர்கள்? இங்கே தான் கருத்துக் கணிப்புகள் முழுக்கத் தவறுகிறதாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. காங்கிரஸ் உள்ளிட்டு எல்லா உதிரிக் கட்சிகளையும் சேர்த்து மெகாகூட்டணி அமைத்தாலும் சரியான விடை சொல்ல முடியாதபடி தான் களநிலவரம் இன்னமும் இருக்கிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டபிறகு  இருமுனைப்போட்டியா, பலமுனைப்போட்டியா என்பதில் இப்போது வரும் ஆரம்பகட்ட  கருத்துக்கணிப்பு எல்லாம் வாக்காளருடைய ஒரு விரல் பட்டனை அழுத்தும் போது என்னமாதிரி எதை நாடி அழுத்தும் என்கிற ஒரே தருணத்தில் பொய்யாகிப்போகுமா? 

களம் தயாராகிக்கொண்டே வருவதில் கொஞ்சம் பொறுத்திருந்துதான், கணிப்புகளின் வேர் எங்கே இருக்கிறது என்று தேடிப் பார்க்கப் பழகுவோமே!

என்ன அவசரம்? 

Wednesday, January 30, 2019

ஜாக்டோ ஜியோவுக்கு செக்! ஒழுங்கீனத்தை ஆதரிக்காதீர்!

வேறென்ன செய்ய வேண்டுமென்கிறீர்கள்? தொடர்ந்து திமுக மாதிரியே ஒழுங்கீனத்தை ஆதரிக்க வேண்டுமா? 


வேலைசெய்ய வருகிறார்களா? வேலைநிறுத்தம் செய்யவா?  



கீழே உள்ள வீடியோவில் ஒரே ஒரு உருப்படியான விஷயம்... அரசியல்வாதிகளுக்கும் ரிடையர்மெண்ட் வயது நிர்ணயிக்கவும் கோரிக்கைப் பட்டியலில் பெர்மனெண்டாக சேர்ப்பார்களாம்! மொதல்ல அதைச் செய்யங்கப்பு! 



"இதுநாள் வரை அறவழியில்(??) போராடிய ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் திமுக ஆட்சி அமையும் வரை பொறுமை காக்குமாறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்தவுடன் உரிய முறையில் நியாயமாகப் பரிசீலித்து நிறைவேற்றப் பட்டு, அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மனிதாபிமானம் போற்றப்படும் என்றும் உறுதியளிக்க விரும்புகிறேன்" என்று இன்றைக்கு ஸ்டாலின் சொல்லி இருப்பதாக ஹிந்து நாளிதழ் செய்தி சொல்கிறது.  

இந்தக் கார்டூன் தி மு கழகத்துக்கு வாக்களித்தால் எவ்வளவு வருத்தப்படவேண்டிவரும் என்பதை மிகவும் அழுத்தமாகச் சொல்வதுபோல இருக்கிறது. இவர்களோடு கூட்டணி வைத்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்குப் புதுப்புது ஐடியாக்கள் இப்படித் தெறிக்கிறதாம்! 


அரசுக்கு வருவாய் இல்லை . நட்டத்தில் இயங்க முடியுமா ? எனவே அரசை லாபகரமாக இயக்க நம்மால் முடிந்த சில யோசனைகளைச் சொல்லுவோம் .

முதலில் காவல் துறையால் அரசுக்கு பெரும் செலவு ; அதன் மூலம் வருவாயும் இல்லை .ஆகவே காவல் துறையைக் கலைத்துவிட்டு தனியார் கூலிபடைகளை ஊக்குவிக்கலாம் .

நீதித்துறையும் பெரும் செலவை ஈர்க்கிறது .எனவே நீதிமன்றங்களை மூடிவிட்டு நாட்டாமை ,கட்டப்பஞ்சாயத்து இவற்றை ஊக்குவிக்கலாம் . கொல்வதும் நானே கொல்லப்படுவதும் நானே என பகவான்கிருஷ்ண பரமாத்மா கீதையிலேயே சொல்லிவிட்டதால் இனி கொலை ,கொள்ளை போன்ற செயல் எதுவும் பகவான் திருவிளையாடலில் ஒன்று எனச் சேர்த்துவிடலாம் .

கல்வித்துறை ,சமூகநலத்துறை போன்ற சகல மக்கள் சேவைத்துறைகளையும் கலைத்துவிடலாம் .லாபம் தரும் டாஸ்மாக் மட்டுமே அரசு வசம் போதும் .

இன்னும் ஏகப்பட்ட பேஷான யோசனைகள் இருக்கு கேட்டால் சொல்லுவோம் …


.நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள்?

Tuesday, January 29, 2019

ஜாக்டோ ஜியோ போராட்டம்! இதுதான் கேள்வி! இதுவே பதிலும்!


+வால் பையன் வழக்கம்போல தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற கதையாக , ஆசிரியர் போராட்டத்தை குறித்து இன்றைக்கு இரண்டாவது பதிவாக கேள்விக்கு பதில் சொல்கிற விதத்தில் எழுதியிருக்கிறார். அங்கே பின்னூட்டம் எழுதினால் கவனிப்பதில்லை என்பதால், இங்கே தனிப்பதிவாக

இந்த விவாதத்தைக் கொஞ்சம் கவனியுங்கள்! ஜாக்டோ ஜியோ சார்பில் பேசுகிற பேட்ரிக் ரேமன்ட் ஒன்பது அம்ச கோரிக்கையில் எதுவும் நிதிச் சுமையை புதிதாக ஏற்றுகிற மாதிரி இல்லை என்கிறார். ஆனால் உயர்நீதிமன்றம் இந்தக் கூற்றை மறுக்கிற மாதிரி கருத்து சொல்லிருக்கிறது. அடுத்து இந்த கோரிக்கைகள் 2007 இலிருந்தே பெண்டிங் என்கிறார்.ஆனால் தி மு கழகம் ஆட்சியில் இருந்த 2011 வரை என்ன செய்து கொண்டு இருந்தார்களாம்? எங்க காசு 27000 கோடி ரூபாயை ஆட்டையப் போட்டுட்டாங்க என்று கூசாமல் சொல்லத் தெரிந்தவருக்கு, அதை ஆரம்பித்து வைத்ததே தி மு கழக ஆட்சிதான் என்பது தெரியாதா? தி மு கழகம் சார்பில் வசந்தி ஸ்டாலின்! வழக்கமான அராத்துப் பேச்சு! அடுத்துப் பேசுகிற மணிவாசகம் தி மு கழகத்தின் இரட்டை நிலைப்பாட்டை நன்றாகவே தோலுரிக்கிறார், நம்மூரு நியாயமே தனி ரகம்தான் இல்லையா? கடமையைச் செவ்வனே செய்கிற ஆசிரியர்களுக்கு கௌரவமான ஊதியம் கொடுக்கப்பட வேண்டுமென்பது எவ்வளவு நியாயமோ அதே அளவு, ஆசிரியர்கள் வாங்குகிற ஊதியத்துக்கு உண்மையாக வேலை செய்கிறார்களா என்ற கேள்விக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அதற்குத் தயாராக இல்லாதவரை ........ தனியார் பள்ளிகள் வளர்வதற்கும், அரசுப் பள்ளிகள் மூடுவிழா காண்பதற்கும்தான் இந்தப் போராட்டம் கதவுகளைத் திறக்கிறது என்றால்..... சரியா? இல்லையா? இதுதான் கேள்வி! இதுவே பதிலும்! அரசு Vs ஆசிரியர்கள் நியாயம் யார் பக்கம் என்று நீட்டி முழக்குகிற இன்னொரு ஒன்றரை மணிநேர பொழுதுபோக்கு விவாதம் இங்கே!

ஆப்கானிஸ்தான், தாலிபான், பாகிஸ்தான்! இது என்ன முக்கோணம்?

மெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வந்தாலும் வந்தார்! நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் என  ராணுவக் கூட்டாளிகளும், சீனா முதலான  வர்த்தகக் கூட்டாளிகளும் எப்போதடா இவருடைய பதவிக்காலம் முடியுமென்று விழிபிதுங்கிக் காத்திருக்கிறார்கள்! இந்த வரிகளில் ஒரு எழுத்து கூட மிகையில்லை!

ப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா திடுதிப்பென்று உருவிக்கொள்வது இந்தியாவுக்கு நல்லதா கெட்டதா?போதாக்குறைக்கு ஆப்கானிஸ்தான் அமைதிப்பேச்சு வார்த்தைகளில் இந்தியாவுக்கு இடமில்லையென்று பாகிஸ்தான் முந்திக் கொண்டு, தானே வழியும் ஜீவனுமாய்   தாலிபான்களுக்கு தானே எல்லாமுமாக  இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிற சமீபத்தைய செய்திகளில் இந்தியாவுடைய நிலை என்ன?

ப்படி ஆரம்பித்து நேற்றைக்கு அக்கம் பக்கம் என்ன சேதி தளத்தில் எழுதியபிறகு, இன்று எகனாமிக் டைம்சில்
Pakistan is taking satisfaction that its view on resolving the Afghanistan problem is proving correct. Taliban is stressing to the US and others, including India, that it is an independent actor, not a creature of Pakistan. The fact is that Pakistan continues to have great leverage over it but does not, at this time, entirely control it. லோக்சபா தேர்தல்கள் வருகிற சமயமானாலும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் கண்வைத்திருக்க வேண்டும் என்று அரசுக்கு உபதேசம் செய்கிற மாதிரி, வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் செயலாளராக முன்னால் பணியாற்றிய விவேக் கட்ஜு எழுதியிருப்பதைப் பார்த்தேன்.  

ம்மூர் பாபுகளுக்கு(அதிகாரி வர்க்கம்)  பணியை விட்டு வெளியே வந்த பிறகுதான், இது மாதிரி உபதேசம் செய்கிற தைரியம் வருகிறதோ என்கிற ஐயம் எழுகிறது. பணியாற்றுகிற சமயங்களில் வெறும் தலையாட்டி பொம்மைகளாகவோ, ஆதாயம் இருந்தால் மட்டுமே வாயைத் திறக்கிறவர்களாகவோ இங்கே அதிகாரிகள் வர்க்கம் இருப்பது தெரிந்த விஷயம்! வெளியுறவுத்துறையில் மலையாளிகள் மற்றும் மும்பைகர்கள் செயல்படுகிற விதத்தை, அறிந்துகொள்ளக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதை கவனித்திருக்கிறேன்.  

தாலிபான்கள் முழுக்க முழுக்க பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இல்லை என்று விவேக் கட்ஜு ஒரு பகுதியை மட்டும் சொல்கிறார். ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று மூன்று நாடுகளிலும் வேர் பிடித்திருக்கிற இயக்கம் தாலிபான். ஆரம்பநாட்களில், ரஷ்யா ஆப்கானிஸ்தான் புதைகுழியில் சிக்கிய போது, அமெரிக்கர்களாலும்,  அடுத்து அமெரிக்கா சிக்கியபோது ரஷ்யர்களாலும் கொம்புசீவப்பட்டு வளர்க்கப்பட்டது தாலிபான் என்பதை கவனத்தில் கொண்டுதான் உபதேசம் செய்தாராமா?

தாலிபான்கள் விஷயத்தில் ஈரானும் ஒரு stakeholder என்பது இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் தாலிபான் அமைதிப்பேச்சு வார்த்தைகளில் புதிய வாய்ப்புக்களுக்கான கதவையும் திறந்து வைத்திருக்கிறது. 

அக்கம் பக்கம்! என்ன சேதி!

மேலே ஒரு புதிய வலைப்பக்கத்தின் சுட்டி இருக்கிறது. படித்துப் பார்த்துப் பிடித்திருந்தால், நண்பர்களுக்கும் பகிரவோ பரிந்துரை செய்யவோ, மனது வைக்கலாமே!

       

Monday, January 28, 2019

லயோலா! நேரு! Y Gee மகேந்திரா! அக்கப்போர்!

அதிசயம்! நிஜம்தானா என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு இன்று மறுபடியும் பார்க்க வைத்த செய்தி!
The Supreme Court Monday asked the Enforcement Directorate (ED) to decide on a date on which it would interrogate senior Congress leader P Chidambaram’s son Karti Chidambaram in the INX Media and the Aircel Maxis cases. Giving the ED time till January 30, a bench comprising Chief Justice Ranjan Gogoi and Justice Sanjiv Khanna asked Solicitor General Tushar Mehta, appearing for the ED, to seek instructions and give the date on which the probe agency wanted to question Karti. என்கிறது செய்தி


விசாரணைக்கு சிறிதும் ஒத்துழைக்காமல், கீழ் நீதி மன்றங்களின் தயவில் டிமிக்கி கொடுத்துக் கொண்டே வந்த செட்டிநாட்டு ஜாமீன் வாரிசு விவகாரத்தில் தான் உச்ச நீதிமன்றம் இன்று இப்படி சொல்லியிருக்கிறது.
The bench, hearing Karti’s plea seeking permission to travel abroad, said that he will not be allowed to leave the country if he evades questioning by the ED. He is scheduled to travel to France, Spain, Germany and the United Kingdom for the next few months for international tennis tournaments organised by a company called ‘Totus Tennis Ltd’ having its registered office in the UK. “We will ensure both. We will ensure that he appears before you (ED) and he goes for his tennis assignment,” the bench said adding, “No tennis for him if he evades”. அமெரிக்காவில் இருந்துகொண்டே அருண் ஜெயிட்லி இதிலும் மூக்கை நுழைக்கிறாரா என்று பார்க்க வேண்டுமா? கடவுளே! என்ன இது தேசத்துக்கு வந்த சோதனை?!!

எப்போ சொன்னார் எங்கே சொன்னார்னெல்லாம் கேக்காதீங்க! images ல எதையோ தேடிட்டிருக்கும் போது கூகிளான் #எனக்குன்னே கொண்டுவந்து காண்பிக்கிறான்!

ஆக்சிடெண்டுக்குப் பொறந்தவன்னு சொல்லிக் கொள்வதில் அத்தனை பெருமை!
Photo
லயோலா கல்லூரி  சர்ச்சைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டே தான்  இருக்கின்றன! கிறித்தவத்துக்கும் சர்ச்சைகளுக்கும் உண்டான தொடர்பு இன்று நேற்றானது அல்ல. ஒய் ஜி மகேந்திரா எங்கே என்ன சொல்கிறார் என்பதையும் கொஞ்சம் கேளுங்கள்!
     
    

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)