Showing posts with label இர்விங் வாலஸ். Show all posts
Showing posts with label இர்விங் வாலஸ். Show all posts

Thursday, February 6, 2020

கொஞ்சம் பதில் சொல்லித்தான் ......பாருங்களேன்!

முந்தைய பதிவில் சேகர் குப்தா எப்படி முக்கியமான ஒரு கேள்வியை எடுத்துக்கொண்டு, விடையைத் தேட முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார் என்பதைக் கொஞ்சம் சொல்லியிருந்தேன். அத்துடன், டொனால்ட் ட்ரம்ப் மீதான தகுதிநீக்க விசாரணையின் மீதான வாக்கெடுப்பு அமெரிக்க செனேட் சபையில் நடந்து கொண்டிருப்பதன் நேரலை வீடியோவையும் பகிர்ந்து கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட எட்டுமணிநேர வீடியோ அது. யாரும் திறந்து பார்த்திருக்க மாட்டீர்களே! 😃😂

வீடியோ 17 நிமிடம் 

ஏற்கெனெவே தெரிந்ததுதான்! மூன்றில் இருபங்கு வாக்குகள் இல்லை என்பதால் மட்டுமே டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப் பட்டிருக்கிறாரே தவிர, அவர் அந்தக் குற்றங்களைச் செய்யவே இல்லை, நிரபராதி என்பதால் அல்ல! 52 க்கு 48 என்ற வாக்குகளில் impeachment செய்யப்படுவதில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

பில் க்ளின்டன், டொனால்ட் ட்ரம்ப் இருவருமே impeach செய்யப்பட்டவர்கள் தான்! இருவர் சுமக்கும் கறைகளே வேறுவேறுதான்! இந்தப்பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் டொனால்ட் ட்ரம்ப் பற்றியே இருந்தது என்பதில் ஆச்சரியம் இல்லை.     

  1. ட்ரம்ப் வெளிப்படையாக மோசமானவர். அவ்வளவு தான். இவர் மோசம் என்பதால் மற்றவர் உத்தமர் என்பதல்ல. நான் இப்படித்தான் என்று அவர் இருப்பதால்தான் யாருமே அவரை எதிர்க்க முடியவில்லை. யாருக்குமே அவரை எப்படி எதிர்ப்பதென்று தெரியவில்லை. இன்றைய தேதியில், வரும் எலெக்ஷனில் அவர் வென்று வர மிக அதிக வாய்ப்பிருக்கிறது. டெமாக்ரட் எல்லோரும் கோமாளித்தனமாக உளறுகிறார்கள். ரிபப்லிக்கன் பார்ட்டியை பொறுத்தவரை, இவர் கண்டிப்பாக ஜெயிக்கக் கூடிய குதிரை. அதனால் கண்ணை மூடிக்கொண்டு இவர் பின்னால் இருக்கிறார்கள்.

    என்னை பொறுத்தவரை, ட்ரம்ப் பின் மிகப்பெரிய சாதனைகள் -- ப்ரெசிடெண்ட் என்பவரும் சாதாரண மனிதர் தான் என்று காட்டியதும் பொலிடிக்கலி கரெக்ட் என்ற hypocrisy -ஐ உடைத்ததும் தான்!
    ReplyDelete
    Replies
    1. ட்ரம்ப் பின் மிகப்பெரிய சாதனைகள் -- ப்ரெசிடெண்ட் என்பவரும் சாதாரண மனிதர் தான் என்று காட்டியதும் பொலிடிக்கலி கரெக்ட் என்ற hypocrisy -ஐ உடைத்ததும் தான்! super
      Delete
    2. வாருங்கள் ஜோதி ஜி!

      அமெரிக்க ஜனநாயக நடைமுறைகள் கொஞ்சம் வித்தியாசமானவை. பிரச்சினைகளை அவர்கள் அணுகும் முறையே வேறு, முடிவு செய்யும் விதமும் வேறு! அங்கே அதிபரை தனிநபராகப் பார்ப்பதில்லை. Embodiment of Law என்று மட்டுமே பார்க்கிறார்கள். சட்டத்தின்படி நடக்கிற சட்டப்படியே எல்லாம் நடந்தாக வேண்டுமென்பதன் அடையாளமாகவே அமெரிக்க அதிபர் முழு அதிகாரம் பெற்றவராக இருக்கிறார். அதுவே கேள்விக்குள்ளாக்கும் போது என்ன செய்வது? தகுதிநீக்கம் எப்படிச் செய்யப் படுகிறது?

      இர்விங் வாலஸ் எழுதிய The Man நாவல் பற்றிய சிறு அறிமுகம் இந்தப்பக்கங்களிலேயே இருக்கிறது முடிந்தால் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்! எழுபதுகளில் எழுதப்பட்ட இந்த நாவலில் நிறையவிஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும்.

      2016 அதிபர் தேர்தலில் இருபெரிய கட்சிகளுமே மிக மோசமான வேட்பாளர்களைத்தான் அதிபர் பதவிக்கு நிறுத்தினார்கள் என்பதில் இருப்பதில் எது ஆகக் குறைந்த மோசம் என்று பார்த்துத் தேர்ந்தெடுக்கிற வாய்ப்பு மட்டுமே அமெரிக்க வாக்காளர்களுக்கு இருந்தது. டெமாக்ரட் வேட்பாளர் ஹிலாரி க்ளின்டன் ஆகப்படுமோசமான நம்பகத்தன்மையற்றவர் என்பதாலேயே டொனால்ட் ட்ரம்ப் ஜெயிக்க முடிந்தது. தேர்ந்தெடுத்த தருணத்தில் ட்ரம்ப் மீதான நம்பிக்கை விகிதம் மிகக் குறைவாகவே இருந்தது.

      இருநாடுகளுமே ஜனநாயக முறைப்படி தேர்தல், வாக்குச்சீட்டு மூலமாகத் தேர்ந்தெடுக்கின்றன என்ற ஒருவிஷயத்தைமட்டும் வைத்து இந்தியச்சூழ்நிலையோடு ஒப்பிட்டுப்பார்க்க முடியாது.
      Delete
    3. வாருங்கள் பந்து!

      அமெரிக்க மண்ணில் இருந்துகொண்டு நீங்கள் எழுதியிருப்பதை ஜோதிஜி எப்படிப் புரிந்து கொண்டு எதனால் super என்று சொன்னார் என்பது எனக்குப் புரியவில்லை. அதனால் அவர் சொன்னதற்கே பதில் சொன்ன மாதிரி இருந்தாலும், உங்களுடைய வாதத்துக்கும் அதிலேயே பதில் இருக்கிறதென்றே நினைக்கிறேன்.
      Delete
  2. இப்போது சேகர் குப்தா 17 நிமிட வீடியோவில் என்ன முடிவாகச் சொல்ல முடிந்தது என்பதைக் கவனியுங்கள்! இங்கே நரேந்திர மோடி என்கிற தனிநபர் மீது, (பிஜேபி என்ற கட்சி மீதல்ல) இந்தியவாக்காளர்கள் நம்பிக்கை வைத்திருப்பது 2024 தேர்தலிலும் தொடரும் என்பதான நிலைமை எதனால்?

    வெறும் வலதுசாரி தேசியவாதம் என்று வார்த்தைகளால் மட்டுமே விளக்கக் கூடிய விஷயமா இது?
    ReplyDelete
  
உங்களுக்கு என்ன தோன்றுகிறது? கொஞ்சம் பதில் சொல்லத்தான் முயற்சித்துப்பாருங்களேன்!

மீண்டும் சந்திப்போம் 

தொடர்புடைய பதிவுகள்:

தேசியவாதம் பேசும் வலதுசாரிகள் ஏன் ஜெயிக்கிறார்கள்?



   

Wednesday, January 16, 2019

திரும்பப் படிக்க வைத்த கதை! The R Document இர்விங் வாலஸ்

இந்தப்பக்கங்களில் ஏற்கெனெவே பேசப்பட்ட  புத்தகம் இர்விங் வாலஸ் எழுதிய The R Document  இது 1976  ஏப்ரலில் வெளியானது. 


அதென்ன அவ்வளவு ரகசியமான  R Document?

The R Document! 

நீதிமுறையில் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ள ஒரு கதாபாத்திரத்தோடு கதை ஆரம்பிக்கிறது! நீதிமுறையைப் பாதுகாக்க முனைகிற அவருடைய உயிருக்கே உலை வைப்பதாகவும்  கதை விறுவிறுப்பாகச் செல்கிறது.
கிறிஸ்டோபர் காலின்ஸ்! 

அமெரிக்காவின் புதிய அட்டர்னி ஜெனரலாகப்  பதவியேற்கிறார்.  அந்தத் தருணத்தில், அமெரிக்காவில் பெருகி வரும் வன்முறை, குற்றங்களைக் களைவதற்காக, அமெரிக்க அதிபர் அமெரிக்க அரசியல் சாசனத்தில் ஒரு திருத்தம் கொண்டு வர உத்தேசித்திருக்கிறார். 35 வது திருத்தம் என்று அந்த  முயற்சி  அழைக்கப் படுகிறது. தேச நெருக்கடி காலங்களில், உரிமைகள் குறித்த அரசியல் சாசன  உத்தரவாதத்தை அடியோடு ரத்து செய்ய இந்தத் திருத்தம் வகை செய்வதாக இருக்கிறது. எப்போதும் போல ஆதரிக்கிறவர்கள், எதிர்க்கிறவர்கள் என்று இரண்டு தரப்புமே, இந்த உத்தேசத் திருத்தத்தின் மீது சவுண்டு கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

அட்டர்னி ஜெனரலான  காலின்சுக்கோ இந்த உத்தேசத் திருத்தம், அவசியமில்லை என்று பட்டாலும், அதை அடியோடு எதிர்க்கிறவர்கள் கூச்சலிடுகிற மாதிரி,  அதிகார துஷ்ப்ரயோகம் செய்யப் படாது, இருக்காது  என்றே நம்புகிறார். உண்மை அதற்கு நேர்மாறாக இருக்கிறது.

காலின்சுக்கு முன்பு அட்டர்னி ஜெனரலாக இருந்தவர், தன்னுடைய மரணப் படுக்கையில், அவரை அழைத்து, இரகசியமானதும் அபாயமானதுமான ஆர் டாகுமென்ட் என்ற ஒன்றைப் பற்றி எச்சரிக்கை
செய்ய விரும்புகிறார். காலின்சை அழைத்துவரச் சொல்லித் தகவல் அனுப்பி, இவர் அங்கே போய்ச் சேர்வதற்குள்  அவர் மரணமடைந்து விடுகிறார். கடைசித் தருணங்களில் ஒரு பாதிரியாரிடம், பாவ அறிக்கையைச் சொல்கிற தருணத்தில், இந்த விஷயத்தையும் சேர்த்தே சொல்கிறார். ஆனால் அந்தப் பாதிரியார், அது ரகசியமானது என்று காலின்சிடம் மேற்கொண்டு எந்த விவரமும் தர மறுத்து விடுகிறார்அது என்னவாக இருக்கும் என்ற கேள்வி, கிறிஸ்டோபர் காலின்சைத் துரத்திக் கொண்டே இருக்கிறது இந்த எச்சரிக்கையை காலின்ஸ் தொடர்ந்து ஆராய்கிறார்.  

The R Document!  

அது என்ன ஆர் டாகுமென்ட்? அதற்கும், உத்தேசித்திருக்கும் முப்பத்தைந்தாவது திருத்தத்திற்கும் என்ன சம்பந்தம்?

அமெரிக்க அதிபர் வாட்ஸ் ஒர்த்துக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது! சட்ட அமைச்சகத்துக்கும் எதுவும் தெரியாது! ஆனால், சிலந்தி லாவகமாக வலையைப் பின்னுவது போல, இந்த ஆர் டாகுமெண்டை மையமாக வைத்து என்னென்னமோ நடந்து கொண்டே இருக்கின்றன!

ஒவ்வொரு மாநிலமாக, இந்த சட்டத் திருத்தத்தை அங்கீகரித்து நிறைவேற்றிக் கொண்டிருக்கையில், காலின்ஸ் இந்தத் திருத்தத்தின் தலைமைச் செயலகமாக, மாக்கியவல்லி தனது இளவரசன் என்ற படைப்பில் சொல்கிற மாதிரி, நேர்மைத்திறமில்லாமல்  வஞ்சகமும், சூதும், மோசம் செய்கிற இயல்பும், கொண்டு தனது ஆட்சி அதிகாரத்தை கட்டமைக்கிற விதமாக எப் பி ஐ டைரக்டர் வெர்னான் டி. டினன் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். முழுக்க முழுக்க ஒரு போலீஸ் ராஜ்ஜியமாக மாற்ற டினன் முயற்சிப்பதை அறிகிறார்.தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சாக்காக இந்த சட்டத் திருத்தத்தை ஒவ்வொரு மாநிலமும் நிறைவேற்றித் தர, டினன் கொலை செய்கிறார், ப்ளாக்மெயில் செய்கிறார், தன்னுடைய  முழு சாமர்த்தியத்தையும் பிரயோகிக்கிறார்.

எப்படி இந்தக் கதை முடிச்சை கதாசிரியர் அவிழ்க்கிறார் என்பதைப் புத்தகத்தை வாசித்து அனுபவிப்பது தான் பொருத்தமாக இ ருக்கும். 
முன்னூற்று அறுபது பக்கங்களுக்குள்ளாகவே, மிகவும் விறுவிறுப்பாக கதை நகர்கிறது! அதிகாரம் ஒரே இடத்தில் மையம் கொள்ளும்போது ஏற்படக்  கூடிய விபரீதங்களை இந்த நாவல் மிக அழகாக, விறுவிறுப்பாகச் சொல்கிறது. எச்சரிக்கிறது.

இங்கே இந்தியாவின் நெருக்கடி நிலைப் பிரகடனம் என்ற ஜனநாயகப் படுகொலையை, ஜெயப் பிரகாஷ் நாராயணன் என்ற காந்தீய வாதி, வினோபா பாவேயின் சீடர் எப்படி  தடுத்து நிறுத்தினார் என்பதை, இந்தியாவின் இரண்டாவது விடுதலைப் போராகவே கூடச் சொல்ல முடியும்! 


இந்திரா காந்தி என்ற சர்வாதிகாரிக்கு எதிராக, எப்படி இந்த தேசத்தின் அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஜெயப்ரகாஷ் நாராயணனுடைய போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றன, காங்கிரஸ் எப்படி பிரிட்டிஷ் குள்ள நரிகளிடமிருந்து கற்றுக் கொண்ட பிரித்தாளும் கலையைப் பயன்படுத்தி அந்த ஒற்றுமையைப் பிளந்தது என்பது கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் சமகால சரித்திரம்!
தி ஆர் டாகுமென்ட்!  

இந்தியாவின் அரசியல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட 42 வது திருத்தம் மாதிரி, அமெரிக்காவிலும் நடக்கிற மாதிரி ஒரு கதைக் களத்தை எடுத்துக் கொண்டது, அங்கே எழுத்தாளரின் வெறும் கற்பனை என்று மட்டும் ஒதுக்கி விட்டுப் போக முடியவில்லை.

நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப் பட்டபோது நாடாளு மன்றம்,ஆட்சியாளர்களின் மனமறிந்து ஒத்து ஊதுகிற ஒரு இடமாக மட்டுமே ஆகிப் போனது,  பத்திரிகைகளின் வாய்கள் கட்டப்பட்டன, நீதித்துறை செயலிழந்து நின்றது........

இந்திய அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட 42 வது திருத்தம், திருத்தம் செய்யப்பட்ட அந்த சில வரிகளில் வாக்கியங்களில், அடிப்படை உரிமைகளைப் பறித்தது. அலங்காரக் கோஷங்கள் சேர்க்கப் பட்டன.  இறையாண்மையுள்ள ஜனநாயகக் குடியரசு என்பது வார்த்தைகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு, இறையாண்மையுள்ள, சோஷலிச, மதச் சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக ஆகிப் போனது! 

வார்த்தைகளில் மட்டும் தான்என்பதைச் சொல்லித் தான் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன!?

அதிகமான விவரங்கள் வேண்டுமானால் இந்த லின்கில்
 கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம்!

எமெர்ஜென்சி அமலில் இருந்த தருணங்களில் வெளியான இந்தப் புத்தகம் இந்தியாவில் தடை செய்யப் பட்டிருந்ததாக ஒரு தகவல் உண்டு. இந்தியாவின் நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் தீய அம்சங்களை தோலுரித்துக் காட்டிய புத்தகம் என்றெல்லாம் சொல்லப் பட்ட இந்தப் புத்தகத்தை, 1985 வாக்கில் தான் படிக்க முடிந்தது. பெங்களுர், வாசன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் தொண்ணூறு ரூபாய்க்கு சில ஆண்டுகளுக்கு முன் வாங்கினேன்.

இந்தப்புத்தகத்தை நேற்றைக்கு மீண்டும் வாசிக்க எடுத்துக் கொண்டிருப்பதில், இது ஒரு மீள்பதிவாக! 

எமெர்ஜென்சி காலத்தின் இருண்ட நினைவுகளைக்  கொஞ்சம் திரும்பிப் பார்ப்பதற்காகவும், இளைய தலைமுறை தெரிந்து கொள்வது அவசியம் என்பதற்காகவும்!

      

Saturday, October 23, 2010

ஏழு நிமிடங்கள்! இர்விங் வாலஸ்....!

ஏன் படிக்கிறோம், எதற்காகப் படிக்கிறோம்  என்ற கேள்வியை முந்தைய பதிவொன்றில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம். ஏன், எதற்காக என்பதை விட, எப்படிப் படிக்கிறோம், என்ன படிக்கிறோம், என்ன புரிந்து கொள்கிறோம் என்பது தான் முக்கியமான கேள்வியாக இருக்க வேண்டும் என்ற முத்தாய்ப்போடு அந்தப் பதிவு முடிந்திருந்தது இல்லையா?

இந்தப் பக்கங்களில், பேசப்படும் புத்தகங்கள், கதைகள் வெறும் வாசிப்பு என்ற பொழுது போக்கு அம்சமாக வைத்து மட்டும் பேச முற்பட்டதில்லை. இலக்கியம், திறனாய்வு, விமரிசனம் என்ற ரீதியில் கூட இந்தப் பக்கங்களில் எழுதியதில்லை. வாசித்த ஒவ்வொரு படைப்பும் என்னுள் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தியது, சிந்தனையை எந்தெந்த திசைகளில் விரிவுபடுத்திக் கொண்டு போனது என்ற ஒரு அம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு இங்கே தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் கவனித்திருக்கக் கூடும்.

அந்த வகையில், ஆர் டாகுமென்ட் புத்தகத்தைத் தொடர்ந்து மறுபடியும் வாசிப்பதற்காகத் தேடிப் பிடித்து வாங்கிய புத்தகங்களில் ஒன்று இர்விங் வாலசின் The Seven Minutes! 


இந்தப் புத்தகத்தின் கதையோட்டம் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு ஒன்றை அடிப்படையாகக் கொண்ட கோர்ட் ரூம் டிராமா வகை தான் என்றாலும் மறுவாசிப்பு செய்த பிறகு ஆர் டாகுமென்ட் புதினத்தைப் போலவே இந்த நூலும், சில அடிப்படையான கேள்விகளை எழுப்பியதைத் தொடர்ந்து சிந்திக்க முடிந்தது.


ஆர் டாகுமென்ட் புதினத்தைப் பேசும் போது, இந்தியாவில் இந்திராகாந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையை, அப்படி ஒரு நிலை அமெரிக்காவிலும்  வந்தால் என்ற ரீதியில் கற்பனை செய்து எழுதப்பட்ட கதை என்பதைப் பார்த்திருக்கிறோம். இங்கே 42 வது அரசியல் சாசனத் திருத்தம் அங்கே அமெரிக்காவில் 35 வது அமெண்ட்மென்ட் என்று கதைக் களத்தை, அமெரிக்க அரசியல் சூழலோடு நகர்த்திக் கொண்டு போனதை ஏற்கெனெவே இங்கே பார்த்திருக்கிறோம்.



இங்கே இந்தியாவில் 1975 களில் இந்திரா காந்தி தனக்கு வந்த சொந்த அரசியல் நெருக்கடியை, ஏதோ தேசத்துக்கே  வந்து விட்ட மாதிரி, அவசர நிலைப் பிரகடனம் செய்த கதை இதைப் படிக்கும் வாசகர்களில் பெரும்பாலானோருக்கு எங்கேயோ  கேள்விப் பட்ட மாதிரித் தான் தோன்றும். பச்சையாகச் சொல்லப் போனால், நெருக்கடி நிலை, அதன் கொடூரமான தன்மை, அதை உறுதியோடு எதிர்த்து ஜெய பிரகாஷ் நாராயணன் மாதிரி காந்தீயவாதிகள் நடத்திய போராட்டம் பற்றி இங்கே எவருக்குமே முழுதாய்த் தெரியாது. இரண்டாவது சுதந்திரப் போர் என்று சொல்லப் படுவதற்கு முழுத் தகுதியும் உள்ள  அந்த நாட்களில் நடந்த போராட்டங்களைப் பற்றி பேசுவாரைக் காணோம். அதை நினைத்துப் பார்த்து, மறுபடியும் அதே மாதிரி சூழ்நிலை உருவாகுமேயானால், அதை எதிர்கொள்ளத் தயார் செய்து கொள்ளும் பக்குவமும், முதிர்ச்சியும் இந்திய ஜன நாயகத்தில் இன்னமும் ஏற்படக் காணோம்!  


மிட்டாய் கொடுத்துக் குழந்தைகள் கழுத்தில், காதில் இருப்பதைத் திருடும் திருடர்களைப் போல, இலவசங்கள், சலுகைகள் என்று கவர்ச்சி மிட்டாய்களைக் கொடுத்து மொத்தத்தையுமே சுருட்டிக் கொண்டு போகிறவர்களாக இங்கே உள்ள அரசியல் வாதிகள், அதைக் கண்டும் காணாமல் ஏமாந்து நிற்கிறவர்களாக ஜனங்கள் என்று இங்கே ஜனநாயகக் கூத்து நடந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கும் கூட, அந்த இருபது மாத இருண்ட காலத்தின் நிகழ்வுகளைப் பற்றிய பதிவுகள், மூடி மறைக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றன. அதைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தோ, அதைப் பற்றிய கருத்துக்களைத் தைரியமாக முன்வைத்தோ புத்தகங்களைத் தேடினால், ஏமாந்து தான் போவீர்கள்! 


அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் இந்திரா ஏதோ சாட்டையை சுழற்றி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களைப் பொறுப்போடு செயல் படுத்த வைத்த மாதிரியும் ஒரு வித மாயை ஏற்படுத்தப்பட்டது. கரீபி ஹடோ (வறுமையே வெளியேறு) என்று  கோஷம் எழுப்பிப் போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஓட்டியதும், வறுமை பயந்து வெளியேறிவிட்ட மாதிரி ஒரு தோற்றம் உருவாக்கப் பட்டது. தேசத்துக்கு வந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்காக என்று சொல்லிக் கொண்டு, அரசியல் சாசனம் உறுதிப் படுத்திய அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப் பட்டது, கருத்து சுதந்திரம் முடக்கப்பட்டது. 

கோயபல்சை மிஞ்சும் வகையில் காங்கிரஸ்காரர்கள் இன்று வரை பரப்பி வரும் பொய்களில் ஒன்று,ஒரு சாம்பிளுக்காக, காங்கிரஸ் ஒன்றினால் தான் நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியும் என்பது!

நெருக்கடி நிலை பற்றி  இன்னொரு சுவாரசியமான, அதிகம் வெளியில் தெரியாத தகவலும் உண்டு. இந்திரா காந்தி தன்னுடைய சொந்த அரசியல் ஆதாயத்துக்காகக் கொண்டு வந்த நெருக்கடி நிலை நிறையப்பேர் நினைப்பது போல முதலாவது அல்ல! இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலை, இருபது மாதங்களே நீடித்தது! காந்தியவாதியும், வினோபா பாவேயின் சீடருமான ஜெயப் பிரகாஷ் நாராயணன், நெருக்கடி கால சர்வாதிகாரத்தை எதிர்த்த போராட்டத்தைத் தலைமை
ஏற்று நடத்தினார்.

அதற்கும் முன்னால், இந்திய சீனப் போரின் போது 1962 ஆம் ஆண்டிலும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப் பட்டது. 1968 ஆம் ஆண்டு ரத்து செய்யப்படும் வரை, ஏறத்தாழ ஐந்தரை ஆண்டு காலம் அமலில் இருந்த இந்த நெருக்கடி நிலையின் பாதிப்பு, சாதாரண ஜனங்களை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. சீனாவிடம் அசிங்கமாகத் தோற்ற நேருவின் கோழைத் தனம், வெறும் ஜம்பத்துக்கு மட்டுமே இருந்த ராஜ தந்திரம், போரில் ஏற்பட்ட பின்னடைவுகள், அவமானங்களைப் பற்றிய செய்திகள் மட்டுமே வெளியிடத் தடை இருந்தது. பத்திரிகைகளை முடக்கவில்லை, அடிப்படை உரிமைகள் நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் சமயம் ரத்து செய்யப் பட்டிருந்தாலும் கூட, அப்படி ரத்து செய்யப் பட்டதற்கான  எந்த அறிகுறியுமே இல்லாமல் சேதம் இல்லாமல் இருந்த ஐந்தரை ஆண்டுகள்! 

அன்றைக்கு, கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்து, அதில் ஒரு தரப்பு இன்னொரு தரப்பை சீன ஆதரவாளர்களாக முத்திரை குத்தி, அல்லது ஆள் காட்டியதில் சில கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்கள் என்பதைத் தவிர வேறு கைதுகள், கோரங்கள் எதுவுமே இல்லை. 

ஐந்தரை வருடங்கள், நாட்டில் நெருக்கடி நிலை என்று ஒன்று இருந்ததோ, அது எதற்காக இருந்தது என்பதோ ஜனங்களுக்கு தெரியவே இல்லை. ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், 1962 இல் பிரகடனப்படுத்தப் பட்ட நெருக்கடி நிலைமை, நேரு ஒரு கோழை என்பதை வெளிப்படையாக ஜனங்கள் தெரிந்துகொள்ள முடியாமல், நேருவின் so called புனித பிம்பத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக மட்டுமே இருந்தது. அதிகாரிகளின் கூழைத் தன்மையை எடுத்துச் சொல்வதாக மட்டுமே இருந்தது. முழுக்க முழுக்க சர்வாதிகாரமாக மாறி விடவில்லை.  

ஆனால் இரண்டாவது தரம் பிரகடனப் படுத்தப்பட்ட நெருக்கடி நிலையோ பூனைக்குப் பிறந்த மகள், இந்திரா காந்தி தன்னைப் பாயும் புலியாகக் காட்டிக் கொள்ள நடத்திய வெறியாட்டமாகத் தான். அமலில் இருந்த அந்த இருபது மாதங்கள் இருந்தது. ஆர் டாகுமென்ட் புதினத்தை மறுவாசிப்பு செய்தது,  இதை மறுபடி நினைத்துப் பார்க்க ஒரு கருவியாக இருந்தது.

ஆர் டாகுமென்ட் புத்தகத்தோடு, இன்னும் சில நூல்களுக்கும் ஆர்டர் கொடுத்திருந்ததில், இர்விங் வாலஸ் எழுதிய The Seven Minutes புதினமும் ஒன்று!



காமம், போர்னோ என்றாலே முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு, அதே நேரம் திருட்டுத் தனமாகப் படிக்கும் இயல்பு இங்கே நிறையப் பேருக்கு இருக்கிறது. அதிகம் தேடப்படும் வார்த்தைகள் என்று காமம், காமக் கதைகள் என்று கூகிளிட்டுப் பார்த்தாலே அந்த இயல்பு புரிந்துவிடும். புத்தகங்களைப் பற்றிப் பேசுகிற இந்தப் பக்கங்களில் கூட அம்மா மகன் உறவுக் கதைகள் என்று குறியீட்டுச் சொல்லை வைத்துப் பதிவுகளைத் தேடுகிற "தேடல்களை" நிறையவே பார்த்திருக்கிறேன். 

ஏழு நிமிடங்கள் என்ற இந்தப் புதினம் கூட, அப்படி போர்னோ என்றழைக்கப்படும் ஒரு கதைப் புத்தகம், அதை விற்பனை செய்த ஒரு கடைக்காரர், அதைப் பதிப்பித்த வெளியீட்டாளர், அவருடைய நண்பரான வழக்கறிஞர், அரசியலில் குதிக்க விரும்பும் ஒரு அரசு வழக்கறிஞர், என்று வரிசையாகப் பாத்திரங்களை அறிமுகம் செய்து கொண்டே ஒரு கைது, ஒரு கற்பழிப்பு, ஒரு மரணம், அதைத் தொடரும் வழக்கில், இந்த ஆபாசப் புத்தகம் முக்கிய குற்றவாளியாக ஆக்கப்படும் விந்தையை, ஒரு கோர்ட் ரூம் ட்ராமாவாக எழுதப் பட்டது தான் இர்விங் வாலஸ் எழுதிய ஏழு நிமிடங்கள்!  

1971 இல் இதைத் திரைப்படமாக்கிய இயக்குனர், கதையின் மைய நீரோட்டத்தை சரியாகப் புரிந்து கொள்ளாததாலோ என்னவோ, வெறும் சொதப்பலாகிப் போனது தனிக் கதை!


கதை என்று பார்க்கப் போனால், வழக்கமான இர்விங் வாலஸ் பாணியிலான ஒன்று தான்! ஒரு மையக் கருவை எடுத்துக் கொண்டு, பாத்திரங்களை வரிசையாக அறிமுகப்படுத்திக் கொண்டே, கதையை நகர்த்திச் செல்லும் கோர்ட் ரூம் டிராமா தான்!
இப்போது படிக்கும் போது கூட இந்த கோர்ட் ரூம் டிராமா நன்றாகத் தான் இருக்கிறது!

கதை சொல்கிற போதே, ஆசிரியர் சில கேள்விகளை கதா பாத்திரங்களின் வழியாக எழுப்புகிறார், வாசகர்களை யோசிக்க வைக்கிறார் என்ற வகையில் வித்தியாசப்பட்டு நிற்பதாக சில படைப்புக்கள் இருக்குமல்லவா! அந்த வகையில், ஆர் டாகுமென்ட் புதினத்தைத் தொடர்ந்து, இந்த நூலில் எடுத்துக் கொண்ட விஷயம், கருத்து சுதந்திரம்,  இலக்கியங்கள், அதில் ஆபாசம் என்று சமூகத்தால் ஒரு கால கட்டத்தில் நிராகரிக்கப் பட்டு, அப்புறம் ஏற்றுக் கொள்ளப் பட்டவை, எது ஆபாசம், அதை எப்படி, எவர் நிர்ணயிப்பது போன்ற சில கேள்விகள் இந்தப் புத்தகத்தின் மையக் கருவாக இருக்கிறது.

மைகேல் பாரெட், ஒரு திறமையான வழக்கறிஞர். வசதி படைத்த தொழிலதிபரின் மகளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் தருணம். அந்தத் தொழிலதிபரின் நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ள முடிவும் செய்து, வழக்கறிஞர் ப்ராக்டிசை நிறுத்திக் கொள்ள உத்தேசித்திருக்கும் தருணத்தில் புத்தகப் பதிப்புத் துறையில் இருக்கும் பழைய நண்பரிடம் இருந்து அவருடைய உதவியைக் கேட்டுத் தொலை பேசியில் அழைப்பு வருகிறது.

நண்பர் வெளியிட்ட  ஏழு நிமிடங்கள் என்ற புத்தகத்தை விற்பனை செய்த கடைக்காரரைப் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். பெண்கள் உரிமை பற்றிக் குரல் எழுப்பும் அமைப்பு ஒன்றின் தலைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்தப் புத்தகம் ஆபாசமானது, விற்றது குற்றம் என்ற ரீதியில் கைது நடந்திருக்கிறது.

நண்பரின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல், அந்த வழக்கை மைகேல் பாரெட் எடுத்துக் கொள்கிறார். டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியிடம் (நம்மூர் பப்ளிக் பிராசிக்யூட்டர் பதவி மாதிரி) பேசி,  குற்றத்தை ஒப்புக் கொள்வதாக ஒரு சமரசம் பேசி, புத்தகக் கடைக்காரரை வெளியில் கொண்டு வந்து விடுவது என்ற யோசனையை முடிவெடுக்கிறார். எல்மோ டங்கன் என்ற டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியும் பாரெட்டின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு பரிசீலிப்பதாக உறுதி அளிக்கிறார். ஆனால், அடுத்தடுத்து நிகழும் சில சம்பவங்கள் ஒரு சாதாரணமான கைது விவகாரத்தை வேறு வேறு திசையில் வெகு வேகமாக இழுத்துக் கொண்டு போகின்றன.

இன்னொரு தொழிலதிபர், எல்மோ டங்கனை, அரசியலுக்கு கொண்டு வர முடிவு செய்கிறார். எல்மோ டங்கனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்கு, ஒரு பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கி, வெற்றி வேட்பாளராக அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, ஒரு இளம்பெண் கற்பழிக்கப் பட்ட நிலையில், மரணமடைகிறாள். அவளைக் கற்பழித்த இளைஞன் காரில், ஏழு நிமிடங்கள் என்ற கதைப் புத்தகம் கிடைக்கிறது. அந்த இளைஞனை அப்படிக் கொடூரமான செயலுக்குத் தூண்டியதே, ஆபாசமான அந்தப் புத்தகம் தான் என்று வழக்கு திசை திரும்புகிறது.

டிஸ்ட்ரிக்ட் அட்டார்னியிடம் பேசி, புத்தகம் விற்ற குற்றத்தை ஒப்புக் கொண்டு, மிக லேசான அபராதத்தோடு விடுதலை செய்து விடலாம் என்ற நிலை மாறி, புத்தகம், புத்தகத்தை விற்பனை செய்தவர்  இருவருமே கற்பழிப்பு, கொலைக் குற்றத்தையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. பாரெட்டின் காதலி, அவளுடைய தகப்பனார் இருவரும், பாரெட் தன்னை அந்த வழக்கில் இருந்து விடுவித்துக் கொண்டு, அவர்களுடைய நிறுவனத்தின் வைஸ் ப்ரெசிடென்ட் பொறுப்பை உடனடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். வழக்கறிஞராகக் கடமையா காதலா என்ற கேள்வியோடு, உத்தரவாதமான வருமானம்,செல்வாக்குடன் கூடிய வாய்ப்பை ஏற்றுக் கொள்வதா இல்லை சுதந்திரமாக தொழில் செய்ய முடிவெடுப்பதா என்ற கேள்வியும் எழுகிறது. பாரெட்டின் நண்பர், ஏழு நிமிடங்கள் என்ற அந்த சர்ச்சைக்குரிய புத்தகத்தைப் பதிப்பித்தவர், தன்னுடைய இக்கட்டான நிலையை எடுத்து சொல்லி, பாரெட்டைத் தவிர வேறு எவருமே, அந்த வழக்கை எடுத்து நடத்துவதில் தனக்கு நம்பிக்கை இல்லை, தனக்காக இந்த வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்.

ஆபாசம், சர்ச்சைக்குரியது, ஒரு இளம்பெண் கொடூரமாகக் கற்பழிக்கப் படத் தூண்டுகோலாக இருந்த அளவுக்கு குற்றம் உள்ளது என்று சொல்லப் படும் "ஏழு நிமிடங்கள்" என்ற அந்தப் புத்தகத்தை மைகேல் பாரெட் படித்துப் பார்க்கிறார். ஒரு இளம் பெண், தான் உடலுறவு கொண்ட  தருணங்களில் உச்சத்தை அடையும் அந்த ஏழு நிமிடங்களைப் பற்றித் தனக்குத் தோன்றும் எண்ணங்களைப் பதிவு செய்கிற விதத்தில் எழுதப் பட்டிருக்கும் அந்தப் புத்தகத்தில், மற்றவர்கள் குதிப்பது போல ஆபாசமானதோ, குற்றத்தைத் தூண்டுவதாகவோ எதுவுமில்லை என்று அபிப்பிராயப் படும் பாரெட், தன்னுடைய காதலி, காத்திருக்கும் செல்வாக்கான உத்தியோகம் இரண்டையும் துறந்து, அந்தப் புத்தகத்துக்காக, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக, வழக்கை எடுத்து நடத்துவது என்று முடிவு செய்கிறார்.

எல்மோ டங்கனை  அரசியலுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யும் தொழிலதிபரின் செல்வாக்கினால், அரசுத் தரப்புக்கு வலுவான சாட்சியங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. வாடிகனில் இருந்து திருச்சபையின் ஆதரவையும் தெரிவித்து ஒரு பாதிரியார், சாட்சியமளிக்கவும் முன்வருகிறார்.

இப்படி நீதி மன்ற விசாரணை, தன்னுடைய தரப்புக்கு ஆதரவாக சாட்சியங்களை மைகேல் பாரெட் தேடியலைவது என்று மாறிமாறிக் கதை நகர்கிறது. இதற்குமேல் கதையைப் பற்றி எழுதுவது, மொத்தக் கதையையும் இங்கேயே சொல்லி விடுவது போலாகி விடும் என்பதால் இந்த மட்டோடு நிறுத்திக் கொள்வோம்.

கதையின் முடிவில் தெரிய வரும் ஒரு சஸ்பென்ஸ் முடிச்சு மிக சுவாரசியமாகஇருக்கிறது.

1969 இல் வெளியான இந்தப் புதினத்தை இன்றைக்குப் படிக்கும் போது கொஞ்சம் மெதுவாக நகர்கிற மாதிரி இருக்கிறது என்பதைத் தவிர, இர்விங் வாலசின் கதை சொல்லும் பாணியில் இருக்கும் வழக்கமான சுவாரசியம் இதிலும் இருக்கிறது! கதை சொல்லும் போதே, சில அடிப்படைக் கேள்விகளைப் படிப்பவர்கள் மனதில் விதைத்துக் கொண்டே போகும் இர்விங் வாலசின் உத்தி எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது.

இந்தப் புத்தகத்தை, இப்போது மறுவாசிப்பு செய்த பிறகு எனக்குள் எழுந்த சிந்தனை, இந்தக் கதையைப் பற்றியது மட்டுமே அல்ல! ஆபாச எழுத்து, கிளர்ந்தெழச் செய்யும் எழுத்து, கலகத்தை விதைக்கும் எழுத்து என்றெல்லாம் குற்றம் சொல்கிறோமே, அதை எல்லாம்  எதை வைத்து வரையறை செய்வது? கருத்து சுதந்திரம்
என்றெல்லாம் சொல்கிறோமே அது எது வரை? அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுகிறோமே அதற்கு அர்த்தம் என்ன? ஏதோ ஒரு சட்டப் புத்தகத்தில் அல்லது அரசியல் சாசனத்தில் எழுதி வைத்து விடுவதாலேயே நமக்கு அளிக்கப்பட்டு விட்டதாக அர்த்தமாகி விடுமா, அல்லது நாம் தான் அவைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமா?

ஆர் டாகுமென்ட் புதினத்தைப் படித்து முடித்த
கையோடு  இதைப் படித்ததால் மட்டுமே இந்தப் புத்தகம் எனக்குள் இப்படிப்பட்ட யோசனைகளைக் கிளப்பியதா அல்லது தன்னளவிலேயே இந்தப் புத்தகம் இந்தக் கேள்விகளை எனக்குள் எழுப்பியதா?

The Seven Minutes!

இந்தப் புத்தகம், பெங்களூரு வாசன்  பப்ளிகேஷன்ஸ் வெளியீடாக, இந்தியப்பதிப்பிலேயே தற்சமயம் கிடைக்கிறது.



 

Friday, August 20, 2010

தி ஆர் டாகுமென்ட்.....! இர்விங் வாலஸ்!

 
இர்விங் வாலஸ் எழுதிய "மனிதன்" என்ற புதினத்தைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுக விமரிசனத்தைப் பார்த்திருக்கிறோம்!

சுதந்திர தினச் சிந்தனைகளாக இன்னொரு வலைப் பக்கங்களில் எழுதிக் கொண்டிருந்ததில், தேடும்போது இர்விங் வாலஸ் எழுதிய தி ஆர் டாகுமென்ட் (The R Document) என்ற புதினத்தைப் பற்றிய இந்த TIF (பட வடிவில்) அந்தப் புத்தகத்தைப் பற்றிய ஒரு கட்டுரையின் ஒரு பக்கம் காணக் கிடைத்தது.

படத்தின் மீது க்ளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்

இர்விங் வாலஸ் எழுதிய, தி ஆர் டாகுமென்ட்! 1976 ஏப்ரலில் முதல் முறையாகப் புத்தகவடிவில் வெளியானது. 

இந்தப்  புத்தகத்தை 1977 இல் மைக்கேல் ஹெண்டெர்சன் என்பவர் படித்துவிட்டு, தன்னுடைய கருத்தை இப்படிச் சொல்கிறார். அவர் எழுதிய இந்தப் பகுதியின் முதல் பக்கம்(மேலே பட வடிவில் காண்பது), இந்திரா காந்தி காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப் பட்டு, இருபது மாதங்கள் இந்திய ஜனநாயகம் கழுத்து நெறிக்கப்பட்டுக் கிடந்த அந்த இருண்ட தருணங்களில் இருந்து ஆரம்பிக்கிறது. 

ஹெண்டெர்சன் சொல்கிறார்:

"1975-1977 இந்திய நெருக்கடி நிலைப் பிரகடனத்தைப் பற்றி விரிவாகப் படித்து முடித்துவிட்டு, வீடு திரும்புகிற நேரத்தில் படிப்பதற்காக சுவாரசியமான புத்தகத்தைத் தேடிய போது, இர்விங் வாலஸ் எழுதிய தி ஆர் டாகுமென்ட் புதினத்தைப் பார்க்க நேர்ந்தது. அதன் அட்டையில் அதிர்ச்சியூட்டக் கூடிய யதார்த்த நிலை என்று போட்டிருந்ததைப் பார்த்தேன்.

இருபது மாதங்கள் இந்தியாவில் அமலில் இருந்த சர்வாதிகாரத் தன்மையை  அதிரச் செய்யும் அளவிற்கு இந்த நாவல் எதிரொலித்தது என்பது உண்மை. இந்தக் கதையை, 1977 இல் படித்ததற்குப் பதிலாக, 1974 இல் படித்திருந்தால், மிக சுவாரசியமான கற்பனை, ஆனால் எப்போதுமே நடக்க முடியாதது என்று தான் நினைத்திருப்பேன். 

இந்தியாவின் அரசியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட 42 வது திருத்தம் மாதிரி, அமெரிக்காவிலும் நடக்கிற மாதிரி ஒரு கதைக் களத்தை எடுத்துக் கொண்டது, அங்கே எழுத்தாளரின் வெறும் கற்பனை என்று மட்டும் ஒதுக்கி விட்டுப் போக முடியவில்லை.

நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப் பட்டபோது நாடாளு மன்றம்,ஆட்சியாளர்களின் மனமறிந்து ஒத்து ஊதுகிற ஒரு இடமாக மட்டுமே ஆகிப் போனது,  பத்திரிகைகளின் வாய்கள் கட்டப்பட்டன, நீதித்துறை செயலிழந்து நின்றது........



இப்படிப் போகிறது ஹென்டர்சனின் வர்ணனை!

இந்திய அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட 42 வது திருத்தம், திருத்தம் செய்யப்பட்ட அந்த சில வரிகளில் வாக்கியங்களில், அடிப்படை உரிமைகளைப் பறித்தது. அலங்காரக் கோஷங்கள் சேர்க்கப் பட்டன.  இறையாண்மையுள்ள ஜனநாயகக் குடியரசு என்பது வார்த்தைகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு, இறையாண்மையுள்ள, சோஷலிச, மதச் சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக ஆகிப் போனது! 

வார்த்தைகளில் மட்டும் தான்என்பதைச் சொல்லித் தான் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன!?

அதிகமான விவரங்கள் வேண்டுமானால் இந்த லின்கில்
கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம்!

எமெர்ஜென்சி அமலில் இருந்த தருணங்களில் வெளியான இந்தப் புத்தகம் இந்தியாவில் தடை செய்யப் பட்டிருந்ததாக ஒரு தகவல் உண்டு. இந்தியாவின் நெருக்கடி நிலைப் பிரகடனத்தின் தீய அம்சங்களை தோலுரித்துக் காட்டிய புத்தகம் என்றெல்லாம் சொல்லப் பட்ட இந்தப் புத்தகத்தை, 1985 வாக்கில் தான் படிக்க முடிந்தது. தற்சமயம் பெங்களுர், வாசன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் ரூ.90/- இற்குக் கிடைக்கிறது.

The R Document! 

நீதிமுறையில் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ள ஒரு கதாபாத்திரத்தோடு கதை ஆரம்பிக்கிறது! நீதிமுறையைப் பாதுகாக்க முனைகிற அவருடைய உயிருக்கே உலை வைப்பதாகவும்  கதை விறுவிறுப்பாகச் செல்கிறது.

கிறிஸ்டோபர் காலின்ஸ்!

அமெரிக்காவின் புதிய அட்டர்னி ஜெனரலாகப்  பதவியேற்கிறார்.  அந்தத் தருணத்தில், அமெரிக்காவில் பெருகி வரும் வன்முறை, குற்றங்களைக் களைவதற்காக, அமெரிக்க அதிபர் அமெரிக்க அரசியல் சாசனத்தில் ஒரு திருத்தம் கொண்டு வர உத்தேசித்திருக்கிறார். 35 வது திருத்தம் என்று அந்த  முயற்சி  அழைக்கப் படுகிறது. தேச நெருக்கடி காலங்களில், உரிமைகள் குறித்த அரசியல் சாசன  உத்தரவாதத்தை அடியோடு ரத்து செய்ய இந்தத் திருத்தம் வகை செய்வதாக இருக்கிறது. எப்போதும் போல ஆதரிக்கிறவர்கள், எதிர்க்கிறவர்கள் என்று இரண்டு தரப்புமே, இந்த உத்தேசத் திருத்தத்தின் மீது சவுண்டு கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

அட்டர்னி ஜெனரலான  காலின்சுக்கோ இந்த உத்தேசத் திருத்தம், அவசியமில்லை என்று பட்டாலும், அதை அடியோடு எதிர்க்கிறவர்கள் கூச்சலிடுகிற மாதிரி,  அதிகார துஷ்ப்ரயோகம் செய்யப் படாது, இருக்காது  என்றே நம்புகிறார். உண்மை அதற்கு நேர்மாறாக இருக்கிறது.

காலின்சுக்கு முன்பு அட்டர்னி ஜெனரலாக இருந்தவர், தன்னுடைய மரணப் படுக்கையில், அவரை அழைத்து, இரகசியமானதும் அபாயமானதுமான ஆர் டாகுமென்ட் என்ற ஒன்றைப் பற்றி எச்சரிக்கை
செய்ய விரும்புகிறார். காலின்சை அழைத்துவரச் சொல்லித் தகவல் அனுப்பி, இவர் அங்கே போய்ச் சேர்வதற்குள்  அவர் மரணமடைந்து விடுகிறார். கடைசித் தருணங்களில் ஒரு பாதிரியாரிடம், பாவ அறிக்கையைச் சொல்கிற தருணத்தில், இந்த விஷயத்தையும் சேர்த்தே சொல்கிறார். ஆனால் அந்தப் பாதிரியார், அது ரகசியமானது என்று காலின்சிடம் மேற்கொண்டு எந்த விவரமும் தர மறுத்து விடுகிறார். அது என்னவாக இருக்கும் என்ற கேள்வி, கிறிஸ்டோபர் காலின்சைத் துரத்திக் கொண்டே இருக்கிறது இந்த எச்சரிக்கையை காலின்ஸ் தொடர்ந்து ஆராய்கிறார்.  

The R Document!  

அது என்ன ஆர் டாகுமென்ட்? அதற்கும், உத்தேசித்திருக்கும் முப்பத்தைந்தாவது திருத்தத்திற்கும் என்ன சம்பந்தம்?

அமெரிக்க அதிபர் வாட்ஸ் ஒர்த்துக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது! சட்ட அமைச்சகத்துக்கும் எதுவும் தெரியாது! ஆனால், சிலந்தி லாவகமாக வலையைப் பின்னுவது போல, இந்த ஆர் டாகுமெண்டை மையமாக வைத்து என்னென்னமோ நடந்து கொண்டே இருக்கின்றன!

ஒவ்வொரு மாநிலமாக, இந்த சட்டத் திருத்தத்தை அங்கீகரித்து நிறைவேற்றிக் கொண்டிருக்கையில், காலின்ஸ் இந்தத் திருத்தத்தின் தலைமைச் செயலகமாக, மாக்கியவல்லி தனது இளவரசன் என்ற படைப்பில் சொல்கிற மாதிரி, நேர்மைத்திறமில்லாமல்  வஞ்சகமும், சூதும், மோசம் செய்கிற இயல்பும், கொண்டு தனது ஆட்சி அதிகாரத்தை கட்டமைக்கிற விதமாக எப் பி ஐ டைரக்டர் வெர்னான் டி. டினன் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். முழுக்க முழுக்க ஒரு போலீஸ் ராஜ்ஜியமாக மாற்ற டினன் முயற்சிப்பதை அறிகிறார்.தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சாக்காக இந்த சட்டத் திருத்தத்தை ஒவ்வொரு மாநிலமும் நிறைவேற்றித் தர, டினன் கொலை செய்கிறார், ப்ளாக்மெயில் செய்கிறார், தன்னுடைய  முழு சாமர்த்தியத்தையும் பிரயோகிக்கிறார்.

எப்படி இந்தக் கதை முடிச்சை கதாசிரியர் அவிழ்க்கிறார் என்பதைப் புத்தகத்தை வாசித்து அனுபவிப்பது தான் பொருத்தமாக இருக்கும்.
முன்னூற்று அறுபது பக்கங்களுக்குள்ளாகவே, மிகவும் விறுவிறுப்பாக கதை நகர்கிறது! அதிகாரம் ஒரே இடத்தில் மையம் கொள்ளும்போது ஏற்படக்  கூடிய விபரீதங்களை இந்த நாவல் மிக அழகாக, விறுவிறுப்பாகச் சொல்கிறது. எச்சரிக்கிறது.

இங்கே இந்தியாவின் நெருக்கடி நிலைப் பிரகடனம் என்ற ஜனநாயகப் படுகொலையை, ஜெயப் பிரகாஷ் நாராயணன் என்ற காந்தீய வாதி, வினோபா பாவேயின் சீடர் எப்படி  தடுத்து நிறுத்தினார் என்பதை, இந்தியாவின் இரண்டாவது விடுதலைப் போராகவே கூடச் சொல்ல முடியும்! 


இந்திரா காந்தி என்ற சர்வாதிகாரிக்கு எதிராக, எப்படி இந்த தேசத்தின் அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஜெயப்ரகாஷ் நாராயணனுடைய போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றன, காங்கிரஸ் எப்படி பிரிட்டிஷ் குள்ள நரிகளிடமிருந்து கற்றுக் கொண்ட பிரித்தாளும் கலையைப் பயன்படுத்தி அந்த ஒற்றுமையைப் பிளந்தது என்பது கண் முன்னே நடந்து கொண்டிருக்கும் சமகால சரித்திரம்!

தி ஆர் டாகுமென்ட்! 


அவசியம் படிக்க வேண்டிய ஒரு புதினமாக நான் பரிந்துரை செய்யக் கூடிய நூல்களில் ஒன்று! வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் அல்ல! நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருப்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும் கூட!




Wednesday, August 4, 2010

தி மேன்....! இர்விங் வாலஸ்!



"இர்விங் வாலஸ் எழுதிய The Man என்ற புதினம்! டக்ளஸ் டில்மன் என்ற கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்க ஜனாதிபதியாகி விடுகிறார்! புத்தகம் வெளிவந்த காலத்தில், இதைக் கற்பனையாக மட்டுமே, அதுவுமே, தேர்தல் அல்லாத வழியில் என்று தான் சொல்ல முடிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். சமயங்களில், கற்பனை செய்து எழுதுகிற விஷயங்கள், நடப்பு விஷயங்களோடு பொருந்திப் போக முடிகிற விநோதத்தைப் பார்த்துப் பார்த்து, இப்போதெல்லாம் அது எனக்கு அது மிகவும் பழகிப் போய்விட்டது!" 

இப்படி இந்தப்பக்கங்களில் எழுதினேன்  இந்தப் புத்தகத்தைத் தொட்டு, சென்ற வாதம் டிசம்பரில் ஒன்று, இந்த வருடம் ஜனவரியில் ஒன்று என்று லேசாகத் தொட்டு எழுதியிருந்தாலும், முழுமையாக ஒரு புத்தக விமரிசனமாக எழுத இப்போது தான் நேரமும், யோசனையும் பொருந்தி வந்திருக்கிறது. என்னுடைய சேகரத்தில் மறுவாசிப்புக்காகத்  தேடிய போது உடனே கிடைக்கவில்லை  என்பதும் ஒரு காரணம்.

இந்தப்  புத்தகம் முதன் முதலாக என் கையில் கிடைத்தது அனேகமாக 1970 அல்லது 1971 ஆக இருக்கலாம். என் மனதில் இன்றைக்கும் நீங்காத ஒரு இடத்தில் இந்தப் புத்தகம் இருக்கிறது! வெறும் கதைதானே, படித்தோமா பொழுது போனதா அப்புறம் மறந்தும் போனோமா என்ற ரகத்தில் எல்லாப் படைப்பையும் எழுத்தாளர்களையும், சேர்த்துவிட முடியாது என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு சிறந்த உதாரணம். தவிர, நாற்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னால், எழுதப்பட்ட ஒரு கற்பனைப் புதினத்தில் சொல்லப் படும் பல சம்பவங்கள், பாத்திரங்களை அப்படியே அச்சு அசலாக இன்றைக்கும், இங்கே கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கும் அரசியலோடு கூடத் தொடர்பு படுத்திப் பார்க்க முடிகிற விதமாக இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

ஒரு நல்ல எழுத்தாளன் தான் வாழ்கிற சமுதாயத்தை ஊன்றிக் கவனிக்கத் தெரிந்தவனாக இருக்கிறான்!.தன்னுடைய எழுத்தில் சமுதாயத்தின் மூலக் கூறுகளை அப்படியே கொண்டு வந்து விடுகிறான். சிலநேரங்களில் ஜெயகாந்தன்  யதார்த்தத்தை அப்பட்டமாகத் துகிலுரித்துக் காட்டுகிற மாதிரி! சில நேரங்களில், நா.பார்த்த சாரதி, அகிலன் மாதிரி யதார்த்த நிலையைக் கண்டு கொதிக்கும் தன்னுடைய ஆவேசத்தையும் சேர்த்துக் கொட்டுகிற மாதிரி! ஆகக் கதையில் வரும் சம்பவங்கள் கற்பனை என்றாலும், அதன் அடித்தளமாக இருக்கும் சமுதாயத்தைப் பற்றிய கண்ணோட்டம் அல்லது  மூலக் கூறுகள் உள்ளது உள்ளபடியே இருப்பதால், படிக்கும்போது சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒரு தன்மை அல்லது போக்கும் அப்படியே அச்சு அசலாக வெளிப்படுகிறது. கற்பனை, பொய்க்குக் கூட, உண்மையின் கலப்பு அவசியமாக இருக்கிறது. அல்லது பொய், கற்பனை என்று நாம் சொல்வதே யதார்த்த நிலைமையின் திரிக்கப்பட்ட வடிவம் தான் என்பதைப் புரிந்து கொண்டால், ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை.

எவரும் கற்பனை செய்தே பார்த்திருக்க முடியாத விதத்தில் கதை துவங்குகிறது.

TC, The Chief  என்று மட்டுமே அழைக்கப் படும் அமெரிக்க ஜனாதிபதி பாரிஸ் நகரத்தில் ஒரு சர்வதேசப் பேச்சுவார்த்தைக்குப் போயிருக்கும் தருணத்தில், கட்டடம் இடிந்து உயிரிழக்கிறார். அடுத்து இங்கே துணை ஜனாதிபதி ஏற்கெனெவே உடல் நலமில்லாமல் மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிற நிலையில், பதவியேற்பதைத்  தீர்மானிக்கிறார்கள். எதிர்பாராதவிதமாக அவரும் இறந்து விடும் செய்தி வருகிறது. அரசியல் சட்டப்படி, எஞ்சியுள்ள காலத்திற்கு ஜனாதிபதி பொறுப்பை ஏற்க வேண்டியது யார் என்ற கேள்வி எழ, senate pro tempore என்று பதில் வருகிறது. அமெரிக்கத் துணை அதிபர்  அமெரிக்க செனேட் சபையின் தலைவராகவும்  இருப்பவர். அவர் சபைக்குத் தலைமைதாங்க முடியாத  சமயங்களில் சபைக்குத் தலைமை தாங்குகிற பொறுப்பு இது. பெரிய அளவில் முக்கியத்துவமில்லாத இந்தப் பொறுப்பில், கறுப்பரான டக்ளஸ் டில்மானை TC யின் டீம் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறது. இங்கே, ஜாதிக்கொரு பிரதிநிதித்துவம், முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி, டம்மியாக சில பேருக்குப் பதவி கொடுத்து அலங்கார பொம்மைகளாக, பப்ளிசிட்டி ஸ்டண்டாக வைத்திருக்கிற மாதிரி!

சமத்துவம் கண்டுவிட்டோம் என்று சொல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்கிற மாதிரி  டம்மிப் பொறுப்பில் வைக்கப் பட்டிருந்தாலும் பதவி வரிசைப் படி எவரும் ஊகிக்க முடியாத விதத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக, ஒரு கறுப்பர்! என்று சுவாரசியமாக, ஒரு இக்கு வைத்து ஆரம்பிக்கும் இந்த நாவல், அமெரிக்க ஜனநாயகம் இயங்கும் விதத்தை, மிக நுணுக்கமாக விவரித்துச் சொல்கிறது.
 
ஒரு கறுப்பரை அமெரிக்க அதிபராக, அவருடைய கட்சி, மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? அரசியல் முதிர்ச்சி, பரஸ்பர நம்பிக்கை பிறந்து விட்டதா என்ற கேள்விக்கெல்லாம் விடை தேட, முந்தைய அதிபரின் டீம் கவலைப் படவில்லை. பெயரளவுக்கு டக்லஸ் டில்மன் அதிபர்! ஆனால் பின் சீட்டில் இருந்து முந்தைய அதிபரின் அணுக்கக் குழு, ஆட்சியை வழிநடத்த நினைக்கிறது.


கொஞ்சம் நம்மூர்  நிலவரத்தையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்ப்போம். நேரு மறைவுக்குப் பின்னால், சாஸ்திரி மறைவுக்குப் பின்னால் எழுந்த  இடைவெளியை நிரப்ப குல்ஜாரிலால் நந்தா என்ற காந்தீய வாதியைப் பயன் படுத்திக் கொண்ட  காங்கிரஸ், இந்திரா காண்டியை  பிரதமராக்கி, பேக் சீட் டிரைவிங் செய்ய முயன்ற போது, இந்திரா, நேரு குடும்பத்தில் துணிச்சல் கூட இருக்கும் என்று   எவருமே ஊகித்திருக்க முடியாத துணிச்சலுடன் கட்சியை உடைத்தார்.

ஆர்தர் ஈட்டன்! அதிபருக்கு அடுத்தபடியாக அமெரிக்க அரசியலில் அதிக அதிகாரம் கொண்ட பதவியாகக் கருதப்படும் Secretary of State! டக்ஸ் டில்மன் தங்கள் வழியில், கன்றுக் குட்டி போல நடப்பார் என்று, முந்தைய அதிபரின் அணுக்கக் குழுவுக்கு உறுதி அளிக்கிறார். அதிபரின் கட்சியும், ஈட்டனைத் தான் நம்புகிறது. எல்லோரையும் விட, இந்த டீம் பதவிக்கு வருவதற்காகத் தேர்தல் செலவுகளில் பெரும் பங்கை ஏற்றுக் கொண்ட ஒரு பகாசுர நிறுவனமும் ஈட்டனைத் தான் நம்புகிறது. ஜெயிக்கிற குதிரை மேல் பணம் கட்டியவர்கள், லாபத்தை அள்ளிக் கொண்டு போகக் காத்திருப்பதைப் போல, தங்களுக்குச் சாதகமான ஆட்கள் பதவிக்கு வருவதற்குப் பண உதவி செய்து விட்டு, சாதகமான விஷயங்களுக்காகக் காத்திருக்கிறது.

மேலோட்டமாக, வம்புதும்புக்குப் போகாத அமைதியான மனிதராக அறிமுகமாகும் டக்லஸ் டில்மன் மனைவியை இழந்தவர். இடதுசாரிகள் என்று சந்தேகிக்கப் படும் உரிமைக்குரல் எழுப்பும் குழுக்களுடன் தொடர்புள்ளவர் என்று சந்தேகிக்கப் படும் ஒரு பெண் வழக்கறிஞர், டில்மனுக்கு நெருங்கிய தோழியாக! விடலைத் தனமான, உணர்ச்சி வசப்படுகிறவனாக ஒரு மகன்,  கறுப்பினத் தம்பதிகளுக்கு எப்போதோ ஒரு முறை அதிசயமாகப் பிறக்கும் முழு வெள்ளைத் தோலுடன்! தன்னுடைய நதிமூலம் கறுப்பரினம் என்பதை மறைத்து, போலியான ஒரு அடையாளத்தில் தகப்பன், சகோதரனை விட்டு விலகி வாழும் ஒரு மகள்.

செனேட்டர் ஒருவரின் மகள் சாலி வாட்சன்! நடுவில் கொஞ்சம் மன நிலை பாதிக்கப் பட்டு குணமாகி வந்தவள், அதிபருக்கு சோஷல் செக்ரெடரியாக. ஆர்தர் ஈட்டன் மீது ஈர்க்கப் படுகிறவளாக. ஈட்டன் தம்பதிகளுக்குள் கொஞ்சம் கருத்து வேறுபாடு, அனேகமாக மணமுறிவு வரை போகலாம் என்று தெரிந்த நிலையில், அந்த இடத்தில் தன்னை வைத்துக் கற்பனை செய்து கொள்கிற பெண்ணாக.அமெரிக்க அதிபருக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் சீக்ரெட் சர்வீஸ் ஏஜன்டாகப் பணிபுரியும் வெள்ளையர் ஒருவர் அடுத்த பதவி உயர்வுக்காகக் காத்திருக்கிறார். கருப்பு இனத்தைச் சேர்ந்தவருக்குப் பாதுகாப்புக் கொடுப்பதில் கறிப்பறை ஒதுக்கி வைத்தால் அது நன்றாக இருக்காது என்பதால்,ஒரு கறுப்பருக்கு அந்தப் பதவி உயர்வு போகிறது.

இப்படி, எதிர்பாராதவிதத்தில் அதிபராகப் பதவியேற்க வேண்டி வரும் டக்லஸ் டில்மானை சுற்றி, பாத்திரங்கள் வரிசையாக அறிமுகமாகிறார்கள். பாத்திரங்கள் அறிமுகம் செய்து வைக்கப்படும் நேரத்திலேயே, அதிபர் மாளிகையை பற்றிய விவரங்கள், முந்தைய அமெரிக்க அரசியல் நிகழ்வுகளைத் தொட்டுக் கொண்டே கதை நகர்கிறது. படித்துக் கொண்டிருக்கும் தருணத்தில், நமக்கும் அமெரிக்க அரசியல், அரசு இயந்திரம் இயங்கும் விதம் அறிமுகமாகிக் கொண்டே வருகிறது.

முந்தைய அதிபர் தேர்தலில் ஜெயித்து வருவதற்கு, அமெரிக்க பகாசுர நிறுவனம் ஒன்று எக்கச் சக்கமாக செலவு செய்திருக்கிறது. அவர்களுக்கு ஆதாயம் தரும் வகையில், கறுப்பர்களுடைய நலன்களை மேம்படுத்துவது போல ஒரு திட்டம்  ஏராளமான செலவில் தயாராக இருந்து, சட்டவடிவம் கொண்டு வரும் நேரத்தில், பகாசுர நிறுவனம் ஆதரித்த அதிபர் காலமாகி விடுகிறார். அடுத்து வரும் டில்மன் இதை  ஒப்புக்குச் செயல்படுத்தப் படும் திட்டம், கறுப்பின மக்களுக்கு எந்த வகையிலும் உதவாது  என்று நிராகரித்து விடுகிறார்!

அதிபருக்கும், அரசு இயந்திரத்தின் ஆதிக்கம் செலுத்திவரும் இதர பகுதிகளுக்கும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கிறது
.அரசியலில் யுத்தம் என்று வந்து விட்டால் சாக்கடைதான்! சேற்றை வாரி வாரி வீசுவது தான்! தங்களோடு ஒத்துப் போக மறுக்கும் அதிபரை, அவருடைய சொந்த வாழ்க்கையைத் தொட்டு கேவலப் படுவதுடன், எதிர்காலமே இல்லாமல் செய்துவிடமுடியும் என்று பலவிதத்திலும் நெருக்கடி கொடுக்கிறார்கள். ஆனால், இந்த அதிபரோ, பணிந்து கொடுக்க மறுக்கிறார். ஒரு அதிபராகத் தன்னுடைய கடமையில் இருந்து கொஞ்சம் கூடப் பிறழ மாட்டேன் என்கிறார். போலித்தனமான நிவாரணங்களைக் கொடுத்து, ஒரு சமுதாயம் முன்னேறிவிடும் என்ற மாயையை எதிர்க்கிறார். சலுகைகள், இலவசங்களினால், தன்னுடைய மக்களுக்கு உண்மையான விடுதலையும் சமத்துவமும் கிடைக்காது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
 

இலவசங்கள், மானியங்கள், நலத்திட்டங்கள் என்ற போர்வையில், தங்களுடைய கல்லாவை நிரப்பிக் கொள்வதிலேயே குறியாக இருக்கும் கார்பரேட்டுகள், கார்பரேட்டுக்களின் தயவில் சொகுசாகத் தங்கள் பைகளையும் நிரப்பிக் கொள்ளும் அரசியல்வாதிகள் விரோதத்தை சம்பாதித்துக் கொள்வதற்கு இவ்வளவு  போதாதா? இன்னமும் இருக்கிறது, மீன்களுக்குத் தூண்டிலில் வைத்துக் கொடுக்கப்படும் புழுக்கள் எதற்காக என்பதை அறியாதவர்களாக, தங்களுக்கு கொடுக்கப் படும் இலவசங்கள், சலுகைகள், மானியங்கள் எல்லாம் வெறும் கண்துடைப்புத்தான் என்பதைப் புரிந்து கொள்ளாத ஜனங்களும் வெறுக்க வேண்டுமே! அதுவும் நடக்கிறது.

உள்ளூர் கறுப்பின வெள்ளையர் பிரச்சினையோடு, அமெரிக்க ரஷ்ய பனிப்போர் விவகாரமும் கதையின் கடைசியில் புகுந்து கொள்கிறது. உள்ளூர் மிட்டலுக்கு அஞ்சாத மாதிரியே, வெளியே இருந்து வரும் மிரட்டலையும் டில்மன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதும் கதையோடு சேர்ந்து வருகிறது..

அதிபர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. டக்லஸ் டில்மனுக்கு இரண்டு வழிகள் தான் இருக்கின்றன ஒன்று, நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னாலேயே பதவியை ராஜினாமா செய்து விடுவது! அல்லது, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, எதிர்கொள்வது! இரண்டில் எதைத் தீர்மானிப்பது என்பதில், ஜட்ஜ் என்று அழைக்கப்படும் ஒரு முன்னாள் அமெரிக்க அதிபர்  வழிகாட்டுகிறார். டில்மன், அதிபர் பதவியில் இருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை சந்திப்பது என்று முடிவெடுக்கிறார்.


இந்தப் பதவி நீக்கக் கோரும் தீர்மானம், இம்பீச்மென்ட் பற்றி மிக விரிவாகத் தகவல்களைசொல்லிக் கொண்டே கதைக்களம், டக்லஸ் டில்மன், கறுப்பு நிறம் ஒன்றினாலேயே இளப்பமாக, இரண்டாந்தரமாக நடத்தப் படுகிறநிலையை எதிர்த்து  எப்படி ஒரு மனிதனாக, ஆண்மையுடன் எதிர் கொள்கிறார் என்பது மிக சுவாரசியமாகப் படைக்கப் பட்டிருக்கிறது. மேன் என்று சொல்லும் போது ஆண் என்று மட்டுமல்ல ஆண்மையுள்ளவன் என்றும் ஒரு பொருள் இருக்கிறதல்லவா?

Tne Man! ஆண்மையுள்ளவன் மட்டுமே ஆணாக இருக்க முடியும்!அந்த ஆண்மை இங்கே மிக அழகாக ஒரு கதையாக விரிகிறது.

அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் என்று ஒரு பட்டியல் எழுதினால், இந்தப்புத்தகத்துக்கு முதல் வரிசையில் இடமுண்டு!




இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)